கணேஷ் கேட்ட அடுத்த ஒருமணி நேரத்தில் ஹோட்டலின் ஏசி பகுதியில்.. எழில் வீட்டினர் சென்றுயிருக்க.. வேந்தனின் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர்.
” கணேஷ் உனக்கு இப்ப என்ன விஷயம் தெரியனும் ?. ” மாணிக்கம் யார் யார் இருக்குகிறார்கள் என்று ஒருமுறை பார்வையை செலுத்திவிட்டு கேட்டார்.
” மாமா.. எனக்கு உங்க தங்கை கணவர் அடிப்படையில்.. “
அவரின் பேச்சை இடைமறித்து.. ” கணேஷ் நீ என்ன கேட்க நினைக்கிறாய் என்பதை நேரடியா கேளு. இத்தனை பேர் இங்க இருக்க.. நீ கேட்கிற அப்படினா முக்கியமானதா தான் இருக்கும். யாரை வைத்தும் பேச வேண்டாம். ” தன் தங்கை சுமதியை ஒருபார்வை பார்த்து மாணிக்கம் கேட்க.
” ம்.. சரி மாமா. எனக்கு, சுவாமிநாதன், சுந்தரம். எங்களுக்கு உங்க இரண்டுபேரோட தனித்தனியான சொத்து விவரமும், வேந்தன் கல்யாணத்திற்கு தன் விருப்பபடி.. எழிலரசிக்கு எல்லாம் செய்வேன் என்று சொல்லியிருக்கான். அவன் என்ன செய்யபோறானு?. கேட்டு சொன்னா நல்லாயிருக்கும். ”
” ஏன் இப்பவே உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்று விளக்கமா சொல்லு?. அதன் பிறகுதான் நான் சொல்லமுடியும். வேந்தனிடம் கேட்க முடியும். ”
கணேஷ்.. சுந்தரத்தை ஒரு பார்வை பார்த்து.. ” அது வந்து மாமா. சுந்தரம் பையன் ராஜேஷை பிடித்திருந்து சம்மதம் சொல்லி.. அவனிற்கு கல்யாணம் முடிந்து பிஸ்னஸ் ஆரம்பிக்க பணம் உதவி செய்வதா சொல்லியிருக்காங்களா. அதுக்கு முக்கிய காரணம் காவ்யா நல்ல சொத்து உள்ள குடும்பத்தில் இருக்கா.. அதே மாதிரி நம்ம பொண்ணு காவ்யாவிற்கு சமமா எல்லாம் மதிக்கனுனா.. நாம்ம நகை, கல்யாணம் செய்வதுகூட இதை செய்யாத நல்லா இருக்குனு நினைப்பாங்க போல.
அதோட வித்யாவை அவங்க பையனுக்கு கேட்கலாமானும்.. அவங்களுக்கு சரினா அடுத்தடுத்து வைக்கலாம் நினைக்கிறான். ”
” சரி.. தாராளமா பண்ணட்டும். ஆனா இதில் உங்களுக்கு என்ன தேவைனு?. எனக்கு இன்னும் புரியல. ”
” அது வந்து மாமா. அவங்க முதற்கொண்டு.. பொது சொத்தா நாங்களும் நினைப்பது.. நீங்க இருக்க வீடு, ஹோட்டல், கிராமத்தில் இருக்கும் நிலம், வீடு. எனக்கு தெரிந்தவரை உங்களுக்கு, ஈஸ்வருக்கு, ரவி மாமா, வேந்தன் நாலு பேருக்கும் இந்த பொதுவிலிருந்து வரும் வருமானம் நாலுபங்கா போகுதுனு.
அந்த வருமானத்தில் உங்களுக்கு தனியா எதுவும் இல்ல. ஈஸ்வர் மாப்பிள்ளைக்கு இரண்டு வீட்டோடு கூடிய நிலம் மதுரையிலும், திருச்சியில் நிலம் மட்டும் இருக்கு. ரவிமாமாக்கு தனியா இப்ப வேந்தன் ஆரம்பித்துயிருக்கும் வியாபாரம், அது இருக்கும் கடை நிலம், ஃபேக்டரியும் நிலமும் எல்லாம் இருக்கு. ” ஏதாவது கூறுவார் என எதிர்பார்த்து அமைதியாக..
” நீ முழுசா சொல்லிமுடி கணேஷ். “
” இதில் இப்ப சுந்தரத்திற்கு பிரச்சனை என்னனா?. வேந்தன் கல்யாணத்திற்கு என்று தானே செய்றேனு எழிலரசிக்கு அவன் கொஞ்சம் அதிகமே உடை, நகை செலவு செய்யுறான். இப்ப இந்த கடை ஆரம்பித்து கூட அந்த பொண்ணிற்காக தான். இப்படி செய்வதால தன் பொண்ணு முத்த மருமளா இருப்பதால்.. அந்த பொண்ணை இப்போதில் இருந்தே எல்லோரும் உயர்வாவும், தன் பொண்ணை யாரும் மதிக்க மாட்டாடோங்களோனு நினைக்கிறான்.
ஈஸ்வர் மாப்பிள்ளையிடம் வேந்தன் மாதிரி செய்யுங்கனு சொல்ல முடியாது. ஆனா தான் செய்யலாம். அதனால இன்னும் நகை போடலானு நினைக்கிறான். காவ்யாவிற்கு எவ்வளவு செய்வதா நினைக்கிறானே. அதையும், முன்ன செய்ததையும் வித்யாவிற்கும் செய்வேனு இன்னைக்கு கேட்கும் போது சொல்லனும் மா. அதான் காவ்யாவிற்கு செய்றேன் என்று உங்களிடம் மற்றவர் முன்ன தெரிவிக்கனும் நினைக்கிறார். “
மாணிக்கம்.. ஈஸ்வரை பார்க்க.. அவனிற்கு இந்த பேச்சே பிடிக்கவில்லை. இது காவ்யாவின் எண்ணம் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் நடக்கிறது என்பதால்..
தான் எதிலும் தலையிடவோ, கேட்கவோ கூடாது.. ஆனால் அப்பா தன்னிடம் கேட்பதற்காக.. நீ எண்ணமோ செய்துகொள் என தன் மனைவியை பார்க்காமல்.. கண்முடி சம்மதம் தெரிவிக்க..
மகனின் மனம் புரிந்த மாணிக்கம்.. அவர்கள் கூறியதை பற்றி மறுப்போ இல்லை.. சம்மதத்தை வாய் மொழியாக கூறாமல்.. யாரையும் பார்க்காமல் ‘ சரி ‘ என தலைமட்டும் ஆட்டி..
” அப்புறம்?? “
ஏதாவது கூறுவார் என அதற்கு பதிலும்.. அவர்களையும் தன் மகளிற்கு நகைபோட வைக்க வேண்டும் என சுந்தரமும், மாலதி நினைத்திருக்க.. இருவரும் ஒருவார்த்தை கூட பேசாமல் வெறும் தலையசைப்பில் முடித்து.. தங்களோடு காவ்யாவையும் சேர்த்து புறக்கணித்து அவளையும் சற்று கதிகலங்க வைத்தனர்.
” ரவி மாமாவிற்கு.. ”
அவர் ரவியை பார்க்க.. அது ‘ அவனை பார்த்து கூறு. ‘ என்பது போல இருந்தது.
பின் கணேஷ் திரும்பி ரவியை பார்த்தபடி.. ” வேந்தன் தனியா ஆரம்பித்து இருப்பது எல்லாம் சொந்த காசு என்பது போல அவன் சொல்லிட்டு இருக்கான். பெரிய தொகையுள்ள இரண்டும் தனியா வாங்க முடியாது.. உங்களுக்கும் அதில் பங்கு இருக்குனும்.. அதனால வினோ, வசுவிற்கு எல்லாவற்றிலும் உரிமை இருக்குனு நினைக்கிறோம். இருக்கா?. “
ரவிந்திரன் சித்ராவை பார்த்தார்.. தன் அண்ணாவின் பேச்சிற்கு மறுப்பு கூறாமல் அமைதியாக இருக்க.. தனக்கும் அது தெரிய வேண்டும் என்றுயிருக்க.
பெருமுச்சு விடுத்து.. ” கணேஷ் மாமா.. வேந்தனிற்கு நான் அண்ணபூரணி உணவுபொருட்கள் கடை இருக்கும் இடம் மட்டும்.. வேந்தன் நாங்க இருக்கும் வீட்டின் நிலத்திற்கு உண்டான பணத்தை சித்ராவிடம் கொடுத்து விட்டு.. இரண்டுபேர் பெயரில் மாற்றியதற்கு பதில.. நான் இப்ப செய்தது.
மற்றபடி அவன் ஆரம்பித்துயிருக்கும் எதற்கும் என் காசு எதுவும் கொடுக்கல. அதனால யாருக்கும் அதில் பங்கு இல்ல.. அத்தோட எழிலரசியிடம்.. எங்க அண்ணா ஆரம்பித்துனு உரிமையும் கொண்ட முடியாது.. கூடாது. ” அனைத்திற்கும் அனைவருக்கும் இப்போதே விளக்கமும், தன் முடிவையும் கூறினார்.
” அப்ப எதுவும் யாருக்கும் சம்பந்தம் இல்ல. வேந்தன் அதை அவனா என்னவேணாலும் பண்ணலாம் அப்படிதானே. ” சின்னத்தை மறைத்து கேட்க..
” ஆமாம். ” இறுதியாக கூற..
“அப்ப வேந்தன் கல்யாணத்திற்கு அந்த பொண்ணுக்கு செய்வேனு ஏற்றுக்கொண்டது மட்டும் இல்லாம.. கல்யாணத்திற்கு முன்பே அவன் பெயரில் இருக்கும் எல்லா சொத்தையும் அந்த பொண்ணிற்கே எழுதி வைக்கப்போறது உங்களுக்கு தெரியுமா?. “
ஒரு நொடி அதிர்ந்து.. ” என்ன வேந்தன் சொத்த எழுதி வைக்கப்போறானா?. ”
” ஆமாம். உங்க மாப்பிள்ளை விஸ்வநாதன் தான்.. எல்லாம் ஏற்பாடு செய்யுறாறு. நாங்க இப்ப இவ்வளவு கேட்க காரணமும் இது தான். ”
அந்த இடமே சுவாரசியமாக கேட்டுக் கொண்டுயிருந்தவர்கள்.. இப்போது அதிர்ச்சியுடன் வேந்தன் எழிலரசியின் மீது கோபத்துடனும், பொறாமை உணர்வுடன் அடுத்து என்னவென்று?. பார்த்திருக்க..
யோசித்தவர்.. ” எனக்கு தெரியாது. ஆனா இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவன் சம்பாரித்தது.. அவன் மனைவியா வரப்போற.. ” பேச விடாமல்..
” ஏங்க.. நீங்க இப்ப இதை புரிந்துதான் சொல்லவரீங்களா?. ” மகனின் மீது கோபமும், எழிலரசியுடன் முதன்முதலில் போட்டி உணர்வு ஆரம்பித்தது.
” சித்ரா.. நான் புரிந்துதான் பேசுறேன். நீ நான் எதை புரிந்துக் கொள்ளலைனு சொல்லு?. ”
ஏதும் தவறு இருந்தால் தன் மகனிடம் புரிய வைக்கலாம் இல்லையா.. அதனால் தன்மையாகவே கேட்டார்.
” வேந்தன் இப்படி செய்வதை பார்த்தா?. இதை பார்க்கும் போது கல்யாணம் ஆகாபோகும் பொண்ணுகளுக்கும்.. தனக்கு வரப்போறவரிடம் எதிர்பார்ப்பு ஜாஸ்தியாகும். அதை பண்ணலனா இருவருக்கும் பிரச்சனை. ”
” அதனால அவன் நினைப்பதை செய்யகூடாதுனு சொல்லவரியா?. இல்ல பண்ணுவதை யாருக்கும் தெரியாம பண்ணணும் சொல்லவரீயா?. ”
” இதுவரை அவன் நினைத்தை செய்ததே போதும். இத்தனை நாள் செய்ததற்கே காவ்யா வீட்டில் நகை போடுறேனு.. கல்யாணமாகி பத்துவருடத்திற்கு பிறகு இதுதான் காரணம் என்று சொல்லி செய்றாங்க. அப்ப பார்த்துக்கோங்க அவன் செய்ததின் விளைவை. ”
புன்னகையுடன்.. ” அது.. தான் பொண்ணு முத்தமருமகளா இருக்கா.. அதனால எல்லோர் முன்ன உயரவா இல்ல சமமான தெரியனும் என்கிற எண்ணத்திலும்.. அவர் பெண்ணுக்கு கவரவ குறைச்சல் வந்து விடக்கூடாது என்று நினைப்பதால் செய்யுறாரு.
அவர் நகை செய்ய நினைப்பது.. வேந்தன் செய்வதினால் மட்டும் வந்துயிருக்காது. இதே மாதிரி எழில்மருமக வீட்டில் அவங்க செய்து இருந்தாலும்.. இந்த நகை செய்யும் விஷயம் நடந்துயிருக்கும். என்ன இப்படி வெளிபடையா தெரிந்துயிருக்காது.
மற்ற பெண்ணுங்க வேந்தன் செய்வது போல செய்யனும் ஆசைப்பட்டா.. அந்த பசங்க எழிலரசி மாதிரி இருக்கனும் யோசிப்பாங்க. நீ சொன்னது போல அவங்க யோசிக்கிறோனு உன்னிடம் வந்து யாராவது குற்றம் சொன்னா.. நீ எழிலரசி மாதிரியா இருக்கியானு கேளு?. பாரு. அவங்க எழிலரசியா இருந்தாலோ.. இல்ல தன்னை மாத்திக்கிட்டா. அந்த பசங்க வேந்தன் மாதிரி மாறிவிடுவாங்க. இதனால அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. அவ்வளவுதான். ”
” அப்ப அவன் எழிலரசிக்கு யாருக்கும் சொல்லாம.. தெரியாம.. சொத்தை.. ”
எழுந்தவர்.. “இங்கபாரு சித்ரா.. கணேஷ் மாமா சொத்தை பற்றி வாய்வழியா தான் சொன்னார். வேந்தன் பண்ணிட்டானு சொல்ல. பண்ண போறதாத தான் சொல்லுறார்.
எனக்கு வேந்தன் மேல நம்பிக்கை இருக்கு. அவன் இதை பற்றி தேவையான நேரத்தில் பேசுவான். அப்படி பேசலைனா கூட ஒருகாரணம் இருக்கும். அதை பற்றி நான், அண்ணா, ஈஸ்வர் யாரும் ஒருவார்த்தை அவனிடம் கேட்கவும் மாட்டோம், தடுக்கவும் மாட்டோம். “
” நீங்க யாரும் கேட்கமாட்டாடிங்க.. அப்ப நான் கேட்கலாமா?. நீங்க எதையும் கூறவோ, தடுக்கவோ கூடாது. ” மற்ற இருவரை பார்த்தும் கேட்க.
” நீ அவனிடம் கேட்கலாம். ஆனா அவன் உனக்கோ இல்ல மற்றவர்களுக்கு.. உங்களுக்கு சாதகமான பதில் கூறலைனா.. திருப்பி எங்களிடம் யாரும் வரக்கூடாது. ” கணேஷ், சுவாமிநாதன் இருவரையும் சேர்த்து பார்த்து கூற..
” கண்டிப்பா நாங்க உங்களிடம் வரமாட்டோம். ” மூவருக்கும் சேர்த்து கணேஷ் கூறினார்.
அவனிற்கு தெரிந்தே ஆகவேண்டும். தான் ஒன்று நினைத்து.. இந்த பூமிபூஜையில் இருந்து.. இத்தனை நாள் அமைதியாக இருக்க. வேறு ஒன்று இருப்பதில் விருப்பவில்லை. தனக்கு சாதாகமாக ஒரு முடிவு எடுப்பதற்கு ஒரு தெளிவு வேண்டும்.
அதற்கு முழுவிவரமும்.. அவன் வாயாலே தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனால தன் தங்கை மற்றும் அண்ணாவை போன்றவருக்கும் சேர்த்தே.. அவரின் ஒப்புதலுடன் கூறினான்.
” ம்.. சரி. ” ரவி உடனே வேந்தனிற்கு கால் செய்ய..
” சொல்லுங்க மாமா. தனு கார்.. ” எழிலரசி எடுத்துயிருப்பதால் அவர் சமாளித்து வைக்கலாம் என.. ” எழிலரசி.. ” அடுத்து கூற வர..
அதற்குள் போன்னை வாங்கி ஸ்பிக்கரில் போட்டு.. ” எழிலரசி.. இப்ப நீங்க நேரா ஹோட்டல் மாடிக்கு வாங்க.. ” அதிகாரமாக சித்ரா கூற..
அவரின் குரல் ஏதோ உணர்த்த.. அவள் அதைவிட.. ” அங்க யார் யார் இருங்காங்க அத்தை?. ” அவரிடம் கேட்டுவிட்டு.. ” தனு இறங்காதீங்க. ” அதுவே சொன்னது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று.
அவளின் குரலில் தெரிந்த மாற்றத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.
” எல்லோரும் இருக்கோம். எங்களுக்கு வேந்தனிடம் பேசனும். மேல வாங்க. ” குரலில் மாற்றம் இல்லாமல் கூற..
” எங்களுக்கு என்றால்?. அங்க இருக்க எல்லோரும்.. தனித்தனியா தனுவிடம் கேள்வி கேட்க போறாங்களா?. இல்ல.. ” மருமகளின் பேச்சில் ரவிக்கு புன்னகை அரும்பியது.
தான் அம்மா, மாமியார் என அதிகாரமாக பேசவே சித்ரா ஸ்பீக்கரில் போட.. அதுவே இப்போது எதிராக மாற..
அதில் வெகுண்ட சித்ரா.. ” அவன் ஏன் பையன் அவனிடம் நான் கேள்வி கேட்கனும். அவனை.. ” அவரை தொடர விடமால்.
” அத்த தனு உங்க பையன் மட்டும் இல்ல.. எனக்கு கணவனா வரப்போறவரு. நீங்க கேள்விகேட்கலாம்.. அதற்கு அவர் பதில் சொல்வதில் நான் தலையிடமாட்டேன். ஆனா அவரை நீங்க மற்றவர்கள் முன்னாடி கேள்வி கேட்கபதையோ.. தனு பதில் சொல்வோ நான் விடமாட்டேன். உங்களையும் அனுமதிக்கமாட்டேன். ” காலையில் நடந்ததுபோல இனி நடக்ககூடாது என்பதற்காக அழுத்தமாக கூற..
என்ன பதில் கூற என அவர் முழிக்க.. அவர் இருக்கும் நிலை உணர்ந்து.. எழிலரசியே.. ” அத்த அங்க இருப்பவங்க எல்லாம் கடை திறப்பு விழாவிற்கு அழைப்பின் பேரில் வந்தவங்க. அவங்களை நான் ஒன்னும் செய்ய சொல்லக்கூடாது. தனுவிடம் நீங்களும், யார் யார் அவரிடம் என்ன கேள்விகேட்க நினைத்தாலும்.. நாம்ம பெரிய வீட்டிற்கு போய்.. “
இதுவரை அமைதியாக இருந்தவன்.. கடைசி வரியில் ஏக்கத்திற்கும் கடுப்பாகி.. அவளிடம் இருந்து வாங்கியவன்.
” அம்மா இருங்க ஐந்துநிமிடத்தில் வரோம். ” பதில் எதிர்பார்க்காமல் போன்னை வைத்தவன்.
கோபத்துடன் முறைப்பவளிடம்..” முயல்குட்டி என்னால அங்கயெல்லாம் இப்போதைக்கு வரமுடியாது. “
கோபமாக.. ” தனுனு.. ”
கிறக்க குரலில்.. ” முயல்குட்டி நீ வேணும்டி. ” அவளின் கழுத்தை பார்த்து கூற..
கோபத்தில் சிவந்துயிருந்த முகம்.. அவனின் கண்கள் கூறிய தேவையில் கோபம் அனைத்தும் அடங்கி.. உணர்வுகள் எழுந்து சிவந்துயிருக்க.. பார்வையை ஹோட்டல் மற்றும் இனிப்பகம் பக்கம் திரும்ப.. அங்கு காரின் வெளியே வந்து.. கதவை திறந்து வைத்து.. கண்களில் கள்ளம் நிறைந்து அழைக்க..
‘ இவன ‘ புன்னகையுடன் வேந்தனின் அரசியாக வெளிவர.. இதனை மாடியில் இருந்து சிலர் எரிச்சலுடன் பார்த்தபடிதான் இருந்தனர்.
அப்போது தான் இன்பா, சந்துரு, கமலேஷ், சாருபாலா இறங்கி.. கமலேஷ் அருகில் வந்தவன்.. ” வேந்தன் அப்பா மாடியில்.. ஏதோ?. ”
” போகலாம் வாங்க.. “
தன்னவளுடன் சென்றவன் அனைவரையும் பார்க்க.. பெரியம்மா கலங்கியும்.. அம்மா ஏதோ சாதித்துவிட்ட பார்வையும், மற்றவர்களில் சிலர் நக்கல், எள்ளல் பார்வை இருக்க..
யோசித்தவன்.. தன்னவளின் போன் பேச்சை.. ” அப்பா அரசி பேசும்போது ஸ்பீக்கரில் இருந்ததா?. ”
” ம்.. அம்மா தான்.. ” அவர் சடங்கடமாக கூற..
அதில் வருந்தி.. ” சரி விடுங்க ப்பா. அரசி ரொம்ப டையாடா இருக்கா. அதான் சாய்ந்திரம் கிளம்பும் முன்ன.. தூங்கி எழுந்தா நல்லாயிருக்கும். அதான் பெரியவீடு வரைக்கும் அவளை அலைய வைக்கவேண்டாம் என்று இங்கயே வந்தோம். ” தன்னவளை யாரும் அவ்வளவு பேசினாய்.. என்ற பார்வைக்கு பதில் அளித்தான்.
யாரையும் பார்க்காமல் அப்பாவிடம் கூறியபடியே அவளை இன்பா, சந்துரு உடன் ஓரமாக உட்கார வைத்து.. அவளிற்கு ஜூஸ் சொன்னது வர.. அதை கொடுத்து விட்டு.. அப்பாவின் அருகில் வந்துஅமர்ந்தான்.
” ம்.. சொல்லுங்க அம்மா. என்ன பேசனும்?. ” வேந்தனாக கேட்க..
அவனின் நடவடிக்கையில் கோபத்தின் அளவு அதிகரித்து.. அதனை சத்தத்தில் காண்பித்தார்.. ” வேந்தா நீ உங்க கல்யாணத்திற்காக எழிலரசிக்கு என்ன செய்வதாக இருந்தியோ.. அதை இனி செய்ய வேண்டாம். செய்த வரை போதும்.
பின்ன நீ இது உன் பெயரில் இருக்கும் எல்லாவற்றையும்.. எழில் பெயரில் மாற்ற போகிறாயாமே.. அதையும் நீ பண்ணகூடாது. ” இதை நீ கண்டிப்பாக செய்தாக வேண்டும் என்பது போல கூற..
பொறுமையாக கேட்டு.. ” ஏன்?. ”
” காரணம் சொல்லமுடியாது வேந்தா. நீ செய்றேன் சொன்னப்ப நான் காரணம் கேட்டனா?. ” அடுத்து கூறுவதற்கு முன்..
” ம்மா.. நான் காரணம் சொல்லிதான் செய்வேனு சொன்னேன். சரி அதற்கு முன்ன.. நான் எழிலரசி பெயருக்கு மாற்ற பேவதா யார் உங்களிடம் சொன்னா?. ”
அதை அண்ணாவிடம் கேட்டவில்லையே.. இருந்தாலும் அண்ணாவை கூறியதை கூறவேண்டாம் என நினைத்து.. ” யார் சொன்னா என்ன?. மாத்த போறதானே?. ”
” ம்.. மாற்றுவது உறுதிதான். ஆனா அதில் சில வேல இருப்பதால்.. எல்லாம் முடிந்த பிறகு தான் சொல்லனும் இருந்தேன். ஆனா அதுக்குள்ள இந்த நல்லசெய்திய.. இந்த நல்லநாளில் யார்?. எல்லோருக்கும் தெரிய படுத்தியவர்களை பற்றி தெரிந்தா.. அவங்களுக்கு பரிசு கொடுக்கலாம் அதற்காக தான். ”
அவனின் பார்வை அங்குயிருந்த விஸ்வநாதன் ஆபிஸில் பணிபுரியும் தாமரையின் தம்பி அருண், சுவாமிநாதனை பார்த்து திரும்பியது.
” நான் பண்ணகூடாது சொல்லுறேன். நீ உறுதினு சொல்லுற. சரி நீ அப்படியே செய்வதாக இருந்தா.. அதில் வினோ, வசுவிற்கும் கொஞ்சம் பங்கு இருப்பது போல எழுது. ” உடன் இருந்த இருவரையும் பார்த்து கூற..
இருவரையும் பார்த்து கூற.. கட்டு கடங்காத கோபத்தில் எழ முயல.. ரவி கையை அழுத்த.. தன்னை நிலைபடுத்தி.. ” ஏன்? ”
அவனின் கோபம் புரிந்தாலும்.. தன் மகள்கள் புகுந்த வீட்டில் மதிப்புடன் சிறப்பாக இருக்க.. “ மனைவியா வரப்போற எழிலரசிக்காக கடையே ஆரம்பித்து இருக்க.. உன் தங்கச்சிகளுக்கு நீ சம்பாரித்து வாங்கியதில்.. கொஞ்சம் உரிமை கொடுக்க மாட்டாடியா?. ”
” மாட்டேன். இது மனைவிக்காகனு நான் பண்ணுவது. இதில் இரண்டுபேருக்கும் எந்த உரிமையும், பங்கும் கிடையாது. ” அழுத்தமாக, பிடிவாதமாக, உறுதியாக கூற..
அவனின் பேச்சில் மாணிக்கம் முதற்கொண்டு அனைவரும் அதிர்ந்தனர்.
” ஏன்டா.. இப்ப வரப்போற பொண்ணுக்காக நீ சம்பாரித்ததை கல்யாண முன்னமே எழுதுவ.. ஆனா உன்கூட பிறந்த தங்கைகளுக்காக.. அதில் கொஞ்சம் பங்கு எழுதிவை.. என்றால் எழுதமாட்டியா?. ”
” அம்மா. நான் சம்பாரித்தில் இருந்து அவங்களுக்கு, அவங்க பசங்களுக்கு அண்ணன், மாமா என்ற முறையில் நகை, பொருள், வேறு தேவை என்றால்.. எல்லாம் செய்வேன். ஆனா என் சம்பாத்திய சொத்தில் முழுஉரிமையும்.. மனைவியான என் அரசிக்கு மட்டும்தான். ”
” இந்த அளவு ஏன்டா நீ.. ”
” முன்ன சொன்னமாதிரி சுயநலமா இருக்கேனு சொல்லவரீங்களா?. ”
வேந்தன் கூறியதும் மிகவும் அதிர்ந்த ரவி.. அவன் கையை பிடித்து.. ” வேந்தா இந்த பேசு.. இத்தோட போதும். ”
” ஏங்க போதும்?. நீங்க தான் தலையிட மாட்டேனு சொல்லிட்டு.. ” தொடரவிடமால்.
கோபத்தை அடக்கி.. ” நீ அவனை சுயநலமா இருக்கேனு சொன்னீயா?. ” கடுமையாக கேட்க..
ரவிந்திரனின் இவ்வளவு கடுமையான முகத்தை இதுவரை சித்ரா பார்த்தது இல்லை. ஆனாலும் மகள்களை எண்ணி.. ” ஆமாம். அவன் எதையும், யாரை பற்றி யோசிக்காமா?. நான் நினைப்பதைதான் செய்வேனு இருப்பதால சொன்னேன். ”
” என் பையன் யாருக்காக நினைக்கனும்.. யோசிக்கனும். தன் பொண்ணு தான் உயர்வா இருக்கனும் என்று நினைபவர்களுக்காகவும், அவன் பத்து வருடமா சம்பாத்தித்தை கேட்பவர்களுக்காகவும் யோசிக்கனுமா?.
ஏன் நீயும் அவர் தங்கைதானே.. எல்லார் முன்னாடியும் என் பையன அண்ணாவும், தங்கையும் கேள்வியும், கேட்டு சொல்லுங்கனு கேட்டீங்கள..
உன் அண்ணா இதுவரை அவர் சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தில் இருந்து இதுவரை உனக்கு என்ன எழுதி கொடுத்துயிருக்காருனு சொல்லு?. ” இக்கேள்வியை கணேஷ் முதல் யாரும் எதிர்பார்க்கவில்லை. சித்ராவும் எனக் கூற அவர் கலங்கி நிற்க..
” ரவி என்னடா நீ ” தன் தங்கைகாக வந்த ராகவனை தடுத்து..
” மாமா நீங்க உங்க தங்கைகாக எதுவும் சொல்லாதீங்க. வேந்தன் செய்வதால இந்த மாதிரி கேள்வி வருனு எனக்கு தெரியும். ஆனா இன்னைக்கு அவங்க இரண்டு பேருக்கும் எவ்வளவு முக்கியமான நாள். அதைகூட பார்க்காம என்ன வார்த்தை.. என் பையன பார்த்து சொல்லிருப்பா. இனி என் பையன், மருமகளிடம் யாரும், யாருக்காவும் பேசக்கூடாது. பொண்ணுகளுக்கு செய்ய நான் இருக்கேன். என்னோட சேர்ந்து நான் சொல்வதை அவங்க இரண்டுபேரும் செய்வாங்க. “
அங்கு இருந்தவர்களை பார்த்தவன்.. ” இங்க பாருங்க.. வேந்தன் அவன் விருப்பத்தை சொல்லிட்டுதான் செய்றான். விருப்பத்திற்கு அளவுனு எதுவும் கிடையாது. நீ இவ்வளவு தான் பண்ணவேண்டும்.. அவ்வளவுதான் பண்ணு என்று சொல்ல முடியாது. அவன் விருப்பத்தில் யாரும் தலையிடாதிங்க. ”
கணேஷ், சுவாமிநாதனை பார்த்தவர்.. ” அண்ணாவுக்கும் எனக்கும் ஐந்து பேரும் ஒன்னுதான். இதுவரைக்கும் ஐந்துபேருக்கும் ஒன்னுதான் செய்துவரோம். ஒருசிலது மட்டும்தான் காலத்திற்கு ஏற்றமாதிரி கொஞ்சம் அதிகமா, தனியா செய்யும் சூழ்நிலையும் வந்துயிருக்கும்.
மற்றபடி அவங்க தானா தன் அறிவால் முன்னேறி.. அதனால தேவைக்கு ஏற்ப அவங்க விருப்பத்திற்கு அவர்களா வாங்கிய சொத்துதான். இதில் நீ இத செய்துதான் ஆகனும் என்று சொல்லமுடியாது.. நாங்க சொல்லகூடாது. அது அவங்க விருப்பம்தான். இதனால அவன தப்பா நினைக்காதீங்க. “
அனைத்தும் விளங்கியதால்.. கணேஷ் என்ன யோசிக்கிறார் என புரியாமல்.. அமைதியாக இருப்பதை பார்த்த சுமாமிநாதன்.. மச்சான் என்பதால் அவர் எப்படி வேண்டுமானாலும் மாறுவார். ஆனால் தான் அவ்வாறு இருக்க முடியாது என எண்ணியவர்..
” சம்பந்தி நாங்க தெரிந்துக்கொள்ள கேட்டோம். ஏன்னா குடும்பத்தில் கல்யாணம் செய்யப்போறோம் என்றால் குடும்பத்தை பற்றி விசாரிப்பாங்க. அவங்க தப்பா புரிந்துக்கொண்டு.. நாள்ள பின்ன தெரிந்தவுடன்.. நாங்க ஏமாத்திவிட்டோனு சொல்லிவிட கூடாது பாருங்க.
சிலது நீங்க வருந்தி சொல்வதில்.. முத்த மருமகள்– இளைய மருமகள். மக– மருமகள் மதிப்பு பற்றி.. கண்டிப்பா யோசித்துதான் ஆகனும். நீங்க அதை பெரிதா எடுத்து எங்களை தப்பா எடுத்துக்காதீங்க. ” கணேஷ் தங்களுக்காக பேசியதால் அவரையும் உள்அடக்கி அவரின் சார்பாகவும் பேசினார்.
ரவிந்திரன் வார்த்தை எதுவும் கூறாமல்.. மெல்லிய புன்னகைமட்டும் புரிந்து.. சரி என தலையாட்டினார். சில நொடிகள் அமைதி நிலவ..
ஒருசிலரை தவிர அனைவரும் சாதாரணமாகி ராஜேஷ் உறுதி செல்லும் ஏற்பாடு நடைபெற்றது. வயதானவர்கள் முன்பே வீட்டிற்கு சென்றுயிருக்க.. சிலர் அங்கேயே இருக்க.. சிலர் மட்டுமே வீட்டிற்கு.. சரியான நேரத்திற்கு வந்துவிடுவோம் என கிளம்பிவிட்டனர்.
வீட்டிற்கு வந்ததும் இருவரும்.. இருவரிடத்திலும் தஞ்சம் புகுந்து.. தங்கள் வேதனை அனைத்தும் மறந்துவிட்டு..
எழிலரசி லைட்ஆரஞ்சு, பிங்க்வண்ணம் கலந்த சேலை தங்கநிற பிளவுஸ், மெல்லிய ஒப்பனை, வேந்தனின் முதல்பரிசு லட்சுமிஉருவ காசு, வைர,மரகத கல் நெக்ஸ் அணிந்தும்.. வேந்தன் புளூஜீன்ஸ், கடல்பச்சை வண்ண சட்டை அணிந்து புதுபொலிவுடன் பாலாவின் அழைப்பை ஏற்று ஹோட்டலிற்கு வந்தார்கள்.
பின்னர் சில நிமிடங்களில் ராஜேஷ் உறுதிக்கு இரண்டு வேன்களிலும், வேந்தன், எழிலரசி மட்டும் காரில்.. பகவலனின் அந்திசாயும் பொழுத்தை ரசித்தப்படி சென்றனர்.
அழகான வீட்டையும், புது உறவினர்களின் நட்பை பெற்று ராஜேஷ்– அஞ்சலியுடன் உறுதிசிறப்பாக நடைபெற்றும்.. பாலா– வித்யாவின் திருமண பேச்சில் பாலா தனக்கு சிலவருடங்கள் கழித்துதான் திருமணம் செய்ய விருப்பம் என அவன் தெளிவாக தெரிவிக்க.. சரி என பேச்சு அத்துடன் முடிந்து.. பின் உணவு உண்டு என இனிமையாக இரண்டுமணி நேரம் கடந்துயிருந்தது.
இயற்கையை ரசித்தபடி இதமான மனநிலையில் சென்றவர்கள்.. வரும்போது அழுகை, பதட்டம், படபடப்புடன் வந்தார்கள்.