தன் மகள் ஏமாற்றி திருமணம் செய்திருந்தாலும்.. வீட்டிற்கு கூட்டி போங்க என்றவுடன்.. தான் சொன்ன வார்த்தைகள் மறந்து.. திருமணத்தை ஏற்றுக் கொண்டதை போல அவர் கேட்க..
அத்திருமணத்தை வைத்து.. தன் அரசியுடனான திருமணத்தை.. தங்களை பற்றி அனைத்தும் பார்த்து தெரிந்தும்.. ஒரே நொடியில் நிறுத்த வேண்டும் என்று எவ்வளவு தைரியமாக இவர் கூறுவார்?. என்ற கோபமுடன் கேட்ட வேந்தன்.. தன்னவளிடம் ஏதோ கூறி லட்சுமி, இன்பாவின் நடுவில் அமர வைத்துவிட்டு..
” சொல்லுங்க மாமா. ஒரு கல்யாணத்தை சந்தோஷமா நடக்ககூடாதுனு.. ஒருவனை ஏமாற்றி செய்த உங்க பொண்ணு கல்யாணத்தை வைத்து.. நாங்க பெரியவங்க முன்னிலையில் நாள் பார்த்து.. நாலுமாதம் காத்திருந்து செய்ய போகும் எங்க கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறீங்க.
உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க. உங்க பொண்ணு எந்த எண்ணத்துடன் இப்ப கல்யாணம் செய்துயிருப்பானு உங்களுக்கு தெரியாது. ” அவரை போல இருக்கும் பொண்ணை தெரியாதா?. அமைதியாக இருக்க..
வருத்த புன்னகையுடன்.. ” அவ செய்த கல்யாணத்தை.. நீங்க சாதகமாகி.. வசுவை பயன்படுத்தி.. என் கல்யாணத்தை நிறுத்த பாத்துயிருக்கீங்க.?. ”
தான் நிதானமாகி.. ” உங்களுக்கு என்ன பிரச்சனை?. நான் உங்க பொண்ணுங்களை கல்யாணம்.. செய்யாம வெளியிடத்தில் வேறு பொண்ணை, அதுவும் நல்ல நிலையில் இருப்பவன் தன் பெண்கள் அனுபவிக்க வேண்டியதை யாரோ பெண் கல்யாண செய்து.. அதை அனுபவிக்க போதுவது உங்களுக்கு பிடிக்கல. அப்படிதானே?. “
இனி மறைத்து என்னவென்று.. ” ஆமாம். நான் மட்டும் இல்ல எந்த ஒரு தகப்பனும் தன் பொண்ணு நல்ல படிப்பு, குணம், வசதி, குடும்பம் இருக்க பையன திருமணம் செய்யது வைக்க விரும்புவாங்க.
அதுமாதிரி இருந்த உன்னை.. கூடவே என் தங்கை மகன். உங்க வீட்டில் உள்ளவர்களின் சம்மதத்தோட.. நீதான் என் முத்த மருமகன் என்று.. தைரியமா எல்லோரிடமும் பெருமையா சொல்லி வைத்துயிருந்தேன்.
ஆனா நீ விருப்பம் இல்லைனு ஒரே வரியில் சொல்லிட்ட. ஏன் கேட்டதுக்கு?. பதில்.. உறவுமுறையில் விருப்பம் இல்ல.. வெளியிடத்தில் இருந்து தான் பொண்ணு சொல்லிட்ட.
உங்கவீட்டிலும் எதுவும் மறுப்பு தெரிவிக்காம.. உன் விருப்பத்திற்கு சரி சொல்லிட்டாங்க. அப்பவே முடிவு செய்தேன். உன்ன விட நல்ல பையானா பார்த்து என் பொண்ணுக்கு கல்யாணம் செய்ய வேண்டும். ஆனா அது தள்ளி போய்யிடே இருந்தது.. கடைசியில் இன்னைக்கு இப்படி வந்து நிக்குது.
நீ மனைவிக்கு மனைவிக்குனு வெளிப்படையா எல்லாம் நல்லா செய்து.. என்ன மாதிரி.. கல்யாணமுறையில் பெண் இருப்பவர்களை ஏக்கம்தான் படவைக்கிற.
நீ ஏன் வேண்டானு சொன்னனு?. நானும், சுந்தரம், சுமாமி அண்ணா யோசித்துயிருக்கோம். இன்னைக்கு தான் தெரிந்தது.. உன் அப்பா முதற்கொண்டு அந்த கேள்வி எல்லோர் மனதிலும் இருக்குனு.
இன்னைக்கு வேற.. என் மனைவிக்குனு கூறி.. நீ சம்பாரித்த சொத்த.. கல்யாணம் முன்பே எழுதி வைக்கப்போற. எனக்கு எப்படியிருக்கும்!.?.
பின்ன இந்த செய்தி.. நான் நினைத்த மாதிரி மூத்தபொண்ணு கல்யாணம் தான் நடக்கல இல்ல. அதான் இரண்டாவது பொண்ணுக்கு பயன்படுத்திகிட்டேன்.
இந்த மாதிரி முடிவான கல்யாணம்.. சில சூழ்நிலையால் நின்று வேறு.. ” ஒருவருடன் முடிவாகும் என.. அவர் கூற வருவதை.. தொடர்ந்து கேட்க பிடிக்காமல்..
கல்யாணம் வேறு.. என காதில் விழுந்த அடுத்தநொடி.. ” போதும் நிறுத்தங்க மாமா. ” சற்று அதிகமாகவே கத்திவிட்டான்.
தன்னை சுற்றி இருந்தவர்களை பார்த்தான். தவறு செய்துவிட்டதை போல வேதனை, என்னடா தீர்வு???. என்பது போல அனைவரும் வருத்தம், கவலையுடன் இருந்தனர்.
மற்றவர்களை பார்த்தவாறே.. கணேஷ் மாமாவிடம்.. ” உங்களிடம்.. நான் ஏன் அப்ப விருப்பம் இல்லை என்று சொன்னேன் தெரியனும்.?.
நான் ஏன் ஆளே மாறிப்போனேன் என்று தெரியனும்?.
நான் ஏன் இப்பவே என் மனைவியாகும் அரசிக்குனு சொத்ததை எழுதிவைக்கிறேனு தெரியனும்?. இப்படி உங்களுக்கு சில தெரியனும்.
அதெல்லாம் தெரிந்துக்கொண்டு.. அதில் மனம் நிறைவு இருந்தா உங்களுக்கு அஸ்வினை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு விருப்பம் தானே?.
வசு, கமலேஷ் கல்யாணத்திற்கும் எப்போதும் பிரச்சனை பண்ணமாட்டீங்க தானே. ” அம்மா, வசு, அப்பா, மாமா அனைவரையும் மாறி மாறி பார்த்தும் கேட்க..
‘ கணேஷ் மிகவும் வருந்திவிட்டார்.. இவனிடம் சில விஷயங்கள் நீயா நானா என்று தான் செய்ய.. இப்போது சில வருடங்கள்.. பல கனவு கண்ட மூத்த மகளின் திருமணத்தை பார்க்கவில்லை, இரண்டாவது மகளிற்கு வசுவின் இரத்தம், எழிலரசியின் அழுகையில் தான் திருமணம் வேண்டுமா?. என்ற எண்ணமும், அலுப்பும் வந்துவிட்டது. ‘
” ம்.. நீ என்ன சொன்னாலும்.. இனி ஒன்னும் பண்ணமாட்டேன். எனக்கு என் இரண்டாவது பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கனும். அதுக்காக தான் நான் பண்ணியது.
உன் பிடிக்கையே !. எனக்கு சந்தேகமா இருக்கு. ஏதோ பெரிய அதிர்ச்சி தர விஷயத்தை சொல்லி எல்லோரிடமும் என்ன வரப்போகுதோ?. நான் போய் ஒரமா உட்கார்றேன். ” பெருமுச்சுடன்..
அழுகையுடன் தன் அண்ணாவின் தோள்சாய்ந்து இருக்கும் இரண்டாவது பெண்ணின் தலைதடவிலேயே ‘ சாரிம்மா ‘ என்று முகத்தை துடைத்துவிட்டு.. அவள் அருகில் அமர்ந்தார்.
அனைவரும் இப்போது ‘ அப்பாடா ‘ என சற்று தெளிந்தும்.. சித்ராவின் பக்கத்தில் அமர்ந்துயிருந்த வசு கையில் மருந்துட்டு பேண்டைடு போட்டுயிருக்க.. நந்தினி சுமதியின் தோள் சாய்ந்து இருந்தாள்.
பின் தன்னவளை பார்த்துவிட்டு.. ” நான் உண்மைய சொன்னா யாரும். என்னைய ஒன்னும் பண்ணமாட்டீங்க தானே?. ” மெல்லிய புன்னையுடன் கேட்க.
” டேய் முதலில் சொல்லுடா. இதனால எழிலரசிக்கு ஏதும் பிரச்சனை வராதே?. ” அவனின் புன்னகையினால் சிலர் கேளி மற்றும் எழிலரசிக்காக சிலரின் வருந்த குரல்கள் வர..
” பிரச்சனை வரும்மா தெரியல. ” இன்னமும் அழுதுக்கொண்டே இன்பாவின் தோள்களில் இருந்தவளை மண்டியிட்டு அவள் கன்னத்தை துடைத்துவிட்டு.. எழுந்து கைநீட்டி அழைக்க.. அவளும் கைபிடித்து எழுந்தாள்.
‘ எழிலரசி இப்ப எதுக்கு?. ‘ என குழப்பமாக பார்த்தவர்கள்.. அப்போது அவர்களின் பார்வை.. சிலர் வேகமாக உள்ளே வந்தார்களிடம் திரும்பியது.
அதில் ஒருத்தி ‘ ஏன் அண்ணா இந்நாள் இப்படி?. ‘ இன்பா பக்கத்தில் கண்கள் கலங்க அமர..
ஒருவர் வேந்தனின் கையில் சில தாள்களை கொடுத்தான். அதனை ஒருபார்வை பார்த்து விட்டு.. பின் வந்தவர்களின் முறைப்பை ஏற்று ‘ அமரு.. ‘ என கண்களால் சைகை செய்தான்.
எல்லோரையும் பார்த்துவிட்டு.. தன்னவளின் சம்மதத்தையும் பெற்று.. ” நான் இப்ப சொல்லபோவது உங்களுக்கு ஆச்சரியமா, நம்ப முடியாம கூட இருக்கலாம். ஆனா இதை நம்பிதான்ஆகனும்.
ஏன்னா?. இது என் அரசி.. அவ மேல நான் வைத்துயிருக்கும் காதலை பற்றியது. “
அனைவருக்கும் ஒரு அதிர்வை கொடுத்து. அவர்களிடம் தன்னையும், தான் முயல்குட்டி பார்த்த நிமிடத்தில் இருந்து.. அவள் மீதான காதலை பற்றி, அவளிற்காக தான் மட்டுமே செய்ய வேண்டும் என்ற உரிமை உணர்வினால் வராது.. என இப்போது வரை செய்ததை பற்றி கூறினான். அனைவரும் அதிர்ச்சி, ஆனந்தம், நம்பிக்கையின்மையுடன் கேட்டனர்.
” ஈஸ்வர் அண்ணா இங்க வாங்களே.. ” முறைப்பும், சிரிப்பும்மாக வந்தவன்..
” யோகா அக்கா திருமணம்முன் போட்ட மோதிரத்தை காண்பிக்க. ” அவன் நீட்ட.. அரசியின் கையை காட்டினான்.
” எனக்கு அக்கா போட்டுவிட்டது. ” இரண்டும் ஒரே மாதிரி இருக்கும்.. எழிலரசியின் விரலில் உள்ளதை காட்டினான்.
அதனை பார்த்தவன்.. ” டேய் அப்பவே மோதிரம் போட்டுவிட்டு தனு மாமா ஆகிட்ட போல. ” புன்னகையுடன் அரசியின் தலையை தடவி இன்முகத்துடன் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தி.. வேந்தனின் முறைப்பையும் பெற்றான்.
பின் யோகாவும் பார்த்து.. அவள் ‘ ஆம் ‘ என உறுதிபடுத்தி.. கூறி.. இவர்களின் மற்ற உறவுகளுக்கு தெரிவித்தாள்.
முதன்முதலில் மோதிரம் பார்த்திலிருந்து எழுந்த கேள்விக்கும்.. நகை வாங்கி கொடுத்தற்கும்.. விடை கிடைத்தற்கு எழிலரசியை கட்டுபிடித்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள்.
வேந்தன் தன் குடும்பத்திரை பார்த்து.. ” நீங்க ஆரம்பத்தில் கேட்டப்ப.. அரசிக்கு சரியான வயசு இல்ல. நான் அப்ப சொல்லியிருந்தாலும் நிலைமை எப்படியிருக்கும் கணிக்க முடியாது. அவ எந்த வித தொந்தரவு இல்லாம இருக்கனும் தான் நினைத்தேன்.
ஆனா மாமாவின் நினைப்பு இப்படி மாறுனு தோனல. எனக்கும் நீங்கயெல்லாம் வெளியில் சொல்லியிருப்பதா முன்னாடியே தெரியாது. அப்படி தெரிந்தா.. யாருனு சொல்லாம நான் விருப்புவதை மட்டுமாவது சொல்லியிருப்பேன்.
அதன்பிறகு அரசிய கோயில் பார்த்தது நானே நம்பமுடியாதது. உங்களிடம் சம்மதம் சொன்னபோது.. ஒரே ஊரில் நீங்களா பார்த்த.. நிறைவான வரனு எல்லோரும் சந்தோஷமா இருந்தீங்க.
அதனால அதை எப்போதும் மாற்ற விரும்பல. அரசியும் அதான் நினைத்தா. அதான் உறுதி அன்று என் விருப்பத்தை செய்வேனு மட்டும் சொல்லி அனுமதி வாங்கினேன். “
” நான் மனைவிக்கு சொல்லி.. அவளை மிஸ்பண்ணது.. பொருட்கள் வாங்கியது.. அவளுக்கு செய்யனும் நினைத்து எல்லாம் செய்தது எல்லாம் உங்களுக்கு அதிகமாவும்.. இல்ல நீங்க அதுக்கு வேற அர்த்தம் நினைத்துக் கொண்டு.. அதிலும் பிரச்சனை வரப்ப.. ஒவ்வொரு தடவை சொல்லிவிடலாமா நினைத்தும்.. பின் சிலருக்காக வேண்டானு இருப்போம்.
ஆனா இன்னைக்கு காலையில் இருந்து நடப்பது.. இப்ப மாமா எங்க கல்யாணத்தை சொன்னவுடன் இரண்டுபோரும் ரொம்பவே மனசு உடைந்துபோயிட்டோம்.
அதைவிட அரசிக்கு நான் அப்பவே சொல்லியிருக்கனும் நினைக்கிறா. சொல்லியிருந்தா.. மாமா முதற்கொண்டு என்னால யாரும் மன கஷ்டபட்டுயிருக்க மாட்டாங்க.
இப்ப எல்லாரும் என்னைய.. இவங்க கல்யாணம், சொத்து.. வைத்து வீண் பழிச்சொல்வதை அவளால ஏற்றுக்கொள்ள முடியல. அதான் இதுக்குமேல நாங்க யாருக்காகவும் எங்களை கஷ்டபடுத்திக்க வேண்டானு.. மற்றவர்களுக்காவும் இப்பவே சொல்லனும் முடிவு எடுத்துட்டோம். “
” மாமாவிடம் சிலது நானே பேசி புரியவைக்கலாம். ஆனா இப்ப அவர் இருக்கும் மனநிலையில்.. நான் சொல்லி புரிவதை விட அஸ்வின் பேசினாதான் சரியாக இருக்கும் என்று அஸ்வினை பேசும் சூழ்நிலைக்கு கொண்டு வந்தேன். அவரும் புரிந்துக்கொண்டு பேசினார். ”
வேந்தன் அவ்வப்போது எல்லோரையும் பார்த்தும் கூறிக் கொண்டுயிருந்தான்.
” நீங்க எல்லாம்.. என் வேலை வருமானத்தில் என்று நினைப்பதில்.. வாங்கிய நிலங்கள்.. வீடு கட்டியது.. வினோ கல்யாண செலவு மட்டும்..
என் பிரண்ட்ஸோட ஆரம்பித்த கம்பெனியில்.. நான் எனக்கு இரண்டு தாத்தா,பாட்டி, அம்மாச்சி அவங்க எனக்குனு கொடுத்த காசை.. முதல் ஆக போட்டு.. எழிலரசியின் பெயரை மனதில் நினைத்து.. என் பெயரில் இருக்கும் பங்கில் இருந்து வந்த பணத்தை கொடுத்து வாங்கியது தான் .
எனக்கு என் பெயரில் இருப்பதை.. அரசிக்கு கொடுக்க ஆசை. அதுவும் மனைவியாகும் முன்ன.. அதான் மாற்ற முடிவு எடுத்து.. செய்துட்டு இருந்தேன். “
தான் வைத்துயிருந்த டாக்மெண்ட்டை பெரியப்பா, மாமா என சிலரிடம் ஜெராக்ஸ் காபியை கொடுத்தான்.
” மாமாவிடமும் சரி.. எல்லோரிடமும் சொல்வது.. என்னோட ஒவ்வொரு செயல், முடிவு எல்லாம் அரசியை வைத்துதான்.. இதனை வருடமா நான் செய்தது.
அரசி இல்லையான.. மாமா மற்றவங்க நினைப்பதுபோல நான் இவனை மிஸ் செய்திடோம் என்று பொறாமைபடும் அளவிற்கு எல்லாம் இருந்துயிருக்கமாட்டேன்.
ஆனா அப்பவும் அரசிய தான் கல்யாணம் செய்யும் சூழ்நிலை வந்துயிருக்கும்.. அதுமட்டும் உறுதியா சொல்வேன். ” மெல்லிய புன்னகையுடன் கூற.. ‘ மவனே.. ‘ என சிலர் முறைக்க..
புன்னகையுடன் ஏற்றவன்.. ” மாமா அஸ்வின் கண்டிப்பா நீங்க என்னிடம் எதிர்பார்ப்பதை விட இருந்து.. சாருலதா அவ விருப்பம் போல நல்ல வாழ்க்கைய அமைய உங்ககூட துணை நிற்பான். அவர நீங்க முழுமனசோட ஏற்றுக்கொள்ளனும்.”
‘ அப்படியா டா ‘ என்ற லுக்கை கணேஷ் அஸ்வினை பார்க்க..
‘ அது.. நீங்க இப்பொழுதில் இருந்து நடந்துக் கொள்ளும் முறையை பொறுத்தது ‘ என்று வேட்டியை மடித்து.. இருகைகளை கட்டி தெனாவெட்டான பார்வை அவரிடம் செலுத்த..
இதை பார்த்த எழிலரசி நீண்ட நேரத்திற்கு பிறகு மெல்லிய புன்னகை புரிந்தாள். இதனை பார்த்த அவளவன் திரும்பி இன்பாவை அழைத்து ஏதோ கூற.. அவன் கையில் இனிப்பு பாக்ஸ்சுடன் வந்தான்.
அதனை அரசியிடம் கொடுக்க.. மெல்லிய புன்னகையுடன் வாங்கிக்கொண்டு.. கணேஷ் அருகில் சென்று நீட்டி..
” சித்தப்பா நீங்க எங்க கல்யாணத்திற்கு ” அவளின் கண்கள் அருவியாய் வர.. வார்த்தை வரவில்லை.
பின்னால் நின்ற வேந்தன் ” முயல்குட்டி அழதாத.. ” மெதுவாக கூறி.. பின்மாமாவை பார்த்தவன்.. ” சம்மதமா?. உங்களுக்கு இனி பிரச்சனையிலேயேனு கேட்குறா. “
‘ அவருக்கு சற்றுமுன் தன் நடவடிக்கையை நினைத்து சரியா?.தவறா தெரியவில்லை.. ஆனால் இவளால் தான்.. நான் இன்று இந்நிலையில் இருக்கிறேன் என வேந்தன் கூறிய பின்..
அஸ்வினும் தன் மகளிற்கு இணைதான்.. ஏன்?. தனக்கும் கூட இணைதான் என அவன் பார்வையிலேயே புரிந்தது.. மனம் நிம்மதி அடைந்தது. ‘
புன்னகையுடனே.. ” ம்.. நான் அஸ்வினை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். உங்க, வசு, கமலேஷ் கல்யாணத்திற்கு எனக்கும் விருப்பம். ”
இனிப்பை எடுத்து அரசிக்கும், வேந்தனிற்கும் ஊட்டிவிட்டும், அரசி அஸ்வினை பார்க்க, வேந்தன் வசுவை பார்க்க..
அஸ்வின் நந்தினியுடன் வந்தான். வசு கமலேஷ் அருகில் நின்றாள்.
கணேஷ் நால்வருக்குமே இனிப்பை முழுநிறைவுடன் கொடுத்தார்.. அவர்களும் தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளாலாம்.. என ஜோடியாக தான் வாங்கிக்கொண்டனர்.
சாருலதாவிற்கு எழிலரசி கொடுத்தாள். அவள் என்றும் போல ” அக்கா.. நான் ரொம்பவே பயந்துட்டேன். மாமா உங்க மேலே எவ்வளவு அன்பு வைத்துயிருக்காருனு தெரிந்தும்..
எல்லாம் அவங்க அவங்க இஷ்டத்திற்கு ஏற்றார்போல நடந்துக் கொண்டாங்க. அவர் மட்டும் உங்களை விருப்பல.. ” என்றால்?.
அடுத்த வார்த்தை அவளை கூறவிடாமல்.. இல்லை இல்லை அவள்.. அடுத்தவர் கூறி.. கேட்க கூட பிடிக்காமல்..
” சாலா.. தனு என்னை முன்னாடியே விருப்பவில்லை என்றாலும்.. நிஜ வரனாக அமைந்து.. மனைவிக்கு என்று அவர் கூறி எனக்கு செய்தது.. உண்மையாகவே நடந்துயிருக்கும். அப்பவும் இதுபோலான பிரச்சனை வந்துயிருந்தாலும்.. அவர் எல்லாத்தையும் சமாளித்து.. அவர் அரசியின் தனுவாக தான் இருப்பாரு. “
வேந்தன் மாமா.. சற்று முன் கூறியதை கேட்ட பின்னும்.. எழிலரசி கூறியது உண்மை தான் என மூளைக்கு புரிந்தாலும்.. தன்னை வைத்து.. தன் விருப்பமானவளுக்கு பிரச்சனை.. தான் என்ன செய்ய?. என தெரியாமல் இருந்த நிமிடங்களை எண்ணி.. எழிலரசியிடம் தன் பயம், மற்றவர்களின் மீதான தன் எண்ணத்தை கூறி.. அவளை அழுதபடி கட்டிக்கொண்டு சில நொடிகளாக வாய்விட்டே அழுதாள்.
அவளின் அழுகை சிலருக்கு தன் அக்காவிடம் கூட வந்ததில் இருந்து போகாதவள்.. அம்மாவின் அருகில் சொல்லாமல்.. அமைதியாக கண்ணீர் வடித்தவள்.. எழிலரசியை நினைத்து அழுவதை பார்த்து அவள் மீது வைத்துயிருக்கும் அன்பு வியப்பாகதான் இருந்து.
இதை பார்த்த கணேஷிற்கு தன்னை பற்றி மட்டுமே நினைத்தோம். இவர்களின் மனதை பற்றி நினைக்காமால் போய்விட்டோம் என.. அப்போது தன் எண்ணத்தின் தவறு புரிந்தது.
அதன்பின் கணேஷ்.. வரதராஜன், சுந்தர்ராஜன் அவர்களிடமும், ரவிந்திரன், மாணிக்கம், ராகவன், சித்ரா என தன் வயதை ஒத்தவர்களிடம் தான் பேசியதற்கு, கூறியதற்கு சமாதானம் வேண்டி.. தானே அனைவருக்கும் இனிப்பையும் வழங்கினார்.
மற்றொரு புறம் வேந்தனை பிடித்துக்கொண்டு யோகா, சுரபி போன்ற இளையவர்கள் தாங்கள்.. சந்தேகம் கொண்டு பேசியதை கூறி.. அவனை யோகா அனைவரின் சார்பாக சில அடிகள் அடிக்க.. அவன் பாவமாக தன்னவளை பார்க்க..
அவள் தன் அப்பா, அம்மா, பெரியப்பா இவர்களிடம் தான் முன்னமே கூறாத காரணத்தை மெல்லிய கண்ணீருடன் கூறி.. ‘ அதனால ஒன்றும் இல்லடா ‘ அவர்களும் கூறி.. அப்பாவின் தோளில் சாய்ந்து செல்லம் கொஞ்சிக் கொண்டு இருந்தாள்.
அவர்களிடம் ‘ உங்களிடம் பிறகு வருகிறேன் ‘ என்று சைகை செய்து தப்பித்து.. தன்னவளிடம் வந்து.. தன்னுடைய மன்னிப்பையும் வேண்டினான்.
அவனின் அத்தம்மா தான் ‘ இப்பவே என் மகளை ஒன்னும் பண்ணவிடல.. முன்னமே வந்துயிருந்தா?. ‘ மனதில் நினைக்க.
அதை படித்தவன்.. ” அத்தம்மா எப்ப வந்துயிருந்தாலும் என் அரசிக்கு.. நான் தான் எல்லாம் செய்துயிருப்பேன். “
பெரியவர்கள் அஸ்வின்– நந்தினி திருமணத்தில்.. அடுத்து என்ன?. என அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசப்போகும் வேலையில்.. தன் அரசியுடன் அவளின் பக்கத்தில் இன்பா, தன் பக்கத்தில் திலகன், வினோத்துடன் வந்து நின்றான் வேந்தன்.
” அப்பா, மாமா நான் எங்க கல்யாணத்தை பற்றி ஒரு முடிவு எடுத்து இருக்கேன். “
‘ என்னப்பா?. ‘ என அருணாச்சலம் பார்க்க..
கவலையுடன் ரவிந்திரன் பார்த்தார்.
எழிலரசி, வேந்தன் இருவரும் இன்னும் வீட்டினர் யாருடனும் வந்து பேசவில்லை. அவர்கள் தங்கள் மீது வருத்தத்தில் உள்ளார்கள் என புரிந்தது. ஆனால் அவன் தன் காதலை பற்றி கூறியதில் இருந்து.. ஒன்றை கணித்துயிருக்கிறார்.
முகம் தெளிந்து.. ” சொல்லு வேந்தா.. நாங்க எப்ப பண்ணணும்? ”
தன்னை கணித்து கேட்கும் அப்பாவை நினைத்து மகிழ்ந்தவன்.. ” நம்ம கோயில்ல.. வர ஞாயிறுக்கிழமை.. காலை பிரம்ம முகூர்த்தத்தில் கல்யாணமும்.. ஈவினிங் இங்க ரிசெப்ஷன் வச்சுலாம்ப்பா.
இன்விடேஷன் டீடைல்ஸ் பார்த்துட்டு சொல்லுங்க. நாளைக்கு ரெடியாகிடும். நான் இரண்டிற்கும் ஏற்பாடு எல்லாம் பண்ணிடுவேன். நீங்க எல்லாரையும் அழைப்பது மட்டும் பார்த்துக்கோங்க.”
தன் போனில் இருந்த மாடல் இன்விடேஷனை முக்கியமானவர்களின் போனிற்கு மெசேஜ் செய்தான். அனைத்தும் சரியாகதான் இருந்தது.
ஆனால் ஒருமாதத்திற்கு முன்னமே மாற்றியதை.. யாரும் எதுவும் கேட்கமுடியாத நிலையில் இருந்தனர்.
அவர்களின் நிலைபுரிந்து.. ” நான் என் இஷ்டத்திற்கு மாத்திட்டேனு நினைக்காதீங்க. நடந்த சில விஷயங்களால் இரண்டும்பேருமே இன்னும் நாள் தள்ளி போட விரும்பல. மத்தபடி எனக்கு வருத்தமோ, கோபமோ எதுவும் இல்ல. அதனால நீங்க கேட்க நினைப்பதை எதை வேண்டுனாலும் கேட்லாம்.
எந்த குறையும் இல்லாம முன்னாடி குறித்த தேதில்.. நீங்க எப்படி நடக்க.. நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீங்களோ.. அது மாதிரி செய்திடலாம். ஆனா எல்லாத்தையும் முறையா அழைக்கனும். அதான் கொஞ்சம்.. ” அவன் கூறிக் கொண்டுயிருக்கும் போதே..
வேகமாக எழுந்த அருட்செல்வம்.. ” வேந்தன்.. நாங்க அண்ணா, மாமானு நிறைய பேர் இருக்கோம். பிளான் செய்தா மூன்றுநாளில் முடித்துவிடலாம். அதைபற்றி கவலை படாதீங்க. நீங்க கல்யாண மாப்பிள்ளை.. நீங்களே எல்லாம் பண்ணுறேன் சொல்லுறீங்க. அதைதான் நாங்க எப்படி கேட்பதுனு பார்த்தோம். “
புன்னகையுடன்.. ” அண்ணா.. நான் ஏற்பாடு பண்ணுறேனா.. நானே.. எல்லாம் பண்ணல. ” பேசிக் கொண்டுயிருக்கும் போதே ..
நடுவில் வந்த திலகன்.. வேந்தனிடம் ஏதோ கூற.. அவன் மற்றவர்களை பார்த்தான்.
பின்.. அவர்களிடம்.. ” சென்னையில் பிரண்ட்ஸ் இருக்காங்கனு சொன்னேன் இல்ல. முக்கியமானது எல்லாம் அவங்கதான் பண்ணப்போறாங்க. அவங்க வீடியோகாலில் பேசனுமா. ” கூறிக் கொண்டுயிருக்கும் போதே..
அவர்கள் அழைப்பு வர.. நேரத்தை உணர்ந்து.. உடனே லாப்டாப்பை வாங்கி பேச ஆரம்பிக்க..
மெல்லிய புன்னகையுடன்.. ” ஹாய்.. ” ஆரம்பிக்கும் முன்..
எதிரில் இருந்தவர்கள் ” டேய்.. உன்னையவா பார்க்க இப்ப கூப்பிட்டுடோம். எங்க உன் முயல்குட்டி?. அவங்களை காமி. ” சாதாரணமாக கேட்க..
அவன் ஒரு நொடி அதிர்ந்து.. தனக்கு முன்னால் இருந்தவர்களை திருதிரு முழித்து பார்க்க.. அவர்களில் பலர் சிரித்துக் கொண்டும்.. ஒருத்தி வெக்கத்தை முறைப்பிற்குள் அடக்கியிருந்தாள். அழைப்பில் இருந்தவர்கள் அவனை மாட்டி விட்டதில் மகிழ்வுடன் பார்த்தார்கள்.
பின் அவர்களை ‘ ஏன்டா இப்படி ‘ பதில் பார்வை பார்த்தவாறு தன்னவளின் அருகில் சென்று அமர..
அவனின் பக்கத்தில் உறவினர்கள் அனைவருமே அமர்ந்துயிருந்தார்கள். இன்றைய கல்யாண பிரச்சனை முடிந்தவுடனே.. புதியவர்கள் எல்லாம் கிளம்பியிருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் மூவரையும்.. அவர்களின் பின்னால் இருந்த வீட்டின் தோற்றத்தையும் பார்த்து.. பெரும் செல்வந்தர்கள் என்பதை.. அவர்கள் கூறாமலே தெரிந்தது. மூவரின் முகம் அதனை இன்னும் அழகாக எடுத்துக்காட்டியது.
தன்னவனுடன் இத்தனை வருடங்கள் பயணித்து.. அவனை இந்நிலையில் கொண்டு வந்தவர்களை சற்று முன்பாகவே பார்த்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில்..
எழிலரசி தன் எதிரில் இருந்தவர்களை புன்னகையுடன் பார்த்து.. ” ஹாய் அண்.. ” அவள் ஆரம்பிக்க..
அவள் முடிக்கும் முன்.. அவர்களில் ஒருவன் பாய்ந்து வந்து.. ” அண்ணானு மட்டும் கூப்பிட்டுவிடாத தெய்வமே. நான் ரோஹித், இவன் சந்தோஷ், ராகேஷ். ”
அழகான புன்னகையுடன் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு.. ” நீங்க பெயர் சொல்லியே கூப்பிடுங்க. அதுதான் சரியும் கூட. “
முறைப்புடன் வேந்தனை ஒருபார்வை பார்த்துவிட்டு.. அவர்களிடம் பதில் கூறும்வேலையில்..
எழிலரசி பின்னால் இருந்து.. ” நீங்க நீங்க மூனுபேரும் EV நேச்சர் பீயூர் பியூட்டி ப்ராடக்ட் & காஸ்மெடிக்ஸ்.. நான் ப்ராஜெக்ட் செய்யும் கம்பெனியோட ஓனர் தானே?? ” நந்தினி, அஸ்வின் இருவரும் ஒருசேர கேட்க..
மூவரும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு.. அதில் சந்தோஷ்.. ” நாங்க தான் ஆனா நாங்க இல்ல. ” என அவர்கள் புரியாமல் கூற..
வேந்தன் தவிர.. அனைவரும் புரியாமல் அவர்களை பார்க்க..
” உங்க பக்கத்தில் இருக்க.. ” முடிக்கும் முன்..
அஸ்வின் ” வேந்தன் அண்ணாவா?? “
” இல்லங்க அஸ்வின் ” அப்போதும் முடிக்கும் முன்..
” என் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்.?. ”
கடுப்பானவன்.. பின்னால் இருந்த PA வை அழைத்து.. “ விஷால்.. இவன் அடுத்த கேள்வி ஏதாவது கேட்டான்.. உடனே அவனை வேலையை விட்டு தூக்குற. ” அஸ்வின் முழிக்க..
புன்னகையுடன்.. ” அஸ்வின் நான் சும்மதான் சென்னேன். உங்களை தூக்கினா நான் இல்ல எங்க தெய்வத்திற்கு பதில் சொல்லனும். “
மூவரின் பார்வையும் வேந்தனின் அருகில் இருந்தவளிடம் சொல்ல..
என்ன?.!. அனைவரும் பார்க்க..
” அஸ்வின் நீங்க சொன்ன எங்களோட சேர்த்து வேந்தன்.. எங்க நாலுபேரோட EV ப்ராடக்ட் கம்பெனியின் ஒரிஜினல் ஓனர்.. உங்க பக்கத்தில் இருக்க எழிலரசி.. எழில்வேந்தன் EV. ” புன்னகையுடன் கூறும்போதே..
திரையில் அங்கு கில்டர் பாம்., பலூன் வெடிக்கும் சத்தமும் கேட்டது.
பார்க்கும் அனைவரும் வியப்பும், ஆச்சரியமுமாக இருக்க..
வேந்தன் தன் அரசியை.. எழிலரசி வேந்தனை.. தோள்வளையில் ஒரு நொடி வைத்திருந்து.. பின் விடுவித்தும் இருக்க..