எழிலரசி கூற கூறவே எல்லோருக்கும் புரிந்துவிட.. அவள் முடிக்கும்போது அனைவருமே எழுந்து தங்களின் மகிழ்ச்சியை அதிக சத்தத்துடன் கைதட்டி அமர..
அதில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் எழிலரசி கூறிய செய்தியில் இருக்கும்.. கட்டளையை செய்ய குறைவான நேரமும்.. பெங்களூர், ஹைதராபாத் குழுவில் உள்ளவர்களுக்கு வேண்டிய ஏற்பாடு செய்ய.. தங்களுக்கு கொடுக்கப்பட்ட இனிப்பை மட்டும் சாப்பிட்டு.. அவர்கள் அனைவரும் அந்த குழுவில் உள்ள மேனேஜரை அழைத்துக் கொண்டு உடனே சென்றுவிட்டார்கள். மற்றவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது.
எழிலரசி கைதட்டியவர்களை புன்னகையுடன் பார்த்துவிட்டு.. அடுத்த நொடி. ஓகேயா?. என முதலில் தன்னவனை பார்க்க.. அவன் தன்னவளை அள்ளி கொஞ்ச வேண்டும் என கண்ணில் காதலுடன் நின்றான்.
பின் மூன்று தம்பிகளை பார்க்க.. முகம்முழுவதும் அதிர்வு, நிம்மதி, மனநிறைவு, ஆனந்தம் என இருந்தனர்.
இதில் வேந்தனின் எழிலரசி என்று.. பெயரை கூறிப்பிட்டு விஷயத்தை முடிப்பாள் என நால்வருமே எதிர்பார்க்கவில்லை.
வேந்தன்.. எழிலரசி பற்றி எக்காரணத்தை கொண்டும் வெளியில் யாருக்கும் தெரியகூடாது என வீட்டில் உள்ளவர்கள் முற்கொண்டு கூறியிருக்கிறான். வேந்தன் பணி செய்த இடமாக இருக்கபோயின்.. இங்கே இருப்பவர்கள் அவள் கூறிய பெயரை வைத்து எதுவும் யோசிக்கமாட்டார்கள்.. ஆனால் வெளியிடத்தில் கூறியிருந்தால் சந்தேகம் வந்துயிருக்க கூடும். எல்லாம் நல்லதிற்கே என புன்னகையுடன் அருகில் வந்தவர்கள்..
” சூப்பர் முயல்குட்டி!.. ” என தன்னவளின் இதழ் பார்த்து கூற.. ‘ போடா தனுமாமா.. ‘ அவனை செல்லமாக திட்டி.. தம்பிகளை பார்க்க..
வேந்தனின் முறைப்புடனான அனுமதியுடன்.. மூவரும் தோள் அணைத்து, கைபிடித்து விடுவித்து.. ” இப்போது அறிமுகம் செய்த.. வேந்தனுடைய ப்ராடெக்ட் அனைத்தும் உன்னாக அவன் செய்ய ஆரம்பித்தது. அதை விரைவிலேயே நீங்க இரண்டுபேரும் பயன்படுத்த வேண்டும். “
வாழ்த்துக்களுடன் அவள் விரும்பியதை கொடுக்க.. அந்நேரத்தில் அவர்களின் நண்பர்கள், உறவுகள் அங்கே வந்துவிட்டனர்.
மூவரும் கொடுத்த நீளவண்ண பரிசு பெட்டியை திறந்தவள்.. அதில் அவள் விருப்பிய தங்கம், வைரம் கலந்த.. பிறந்தது முதல் போடக்கூடிய.. அஜெஸ்ட் டைப்பில் இருபெண் குழந்தைக்கு, ஒரு ஆண் குழந்தைக்கு போடுவது போல.. ‘ சிறிய செயின், வளையல், காப்பு, மோதிரம், அறைஞாண்கயிறு, ஒட்டியாணம், கொலுசு கூடவே வெள்ளி சங்கு,கொலுசு, சாப்பிட உபயோகபடுத்தும் பொருட்கள் இருந்தன. ‘
அதை பார்த்தவுடன் அழகு, ஆனந்தம், வெக்கம் என முகம்சிவந்து நிமிரும் வேலை.. தன்னவளின் முகச்சிவப்பை யாரும் பார்க்கும் முன்.. இதோ என அவளை சட்டென்று ஒரு அறைக்குள் அழைத்து சென்றுவிட்டான் அவளவன் வேந்தன்.
மற்றவர்கள் அவனின் செயல் ஏன் என புரிந்தும், புரியாமலும் பார்த்து சாப்பிட ஆரம்பித்தனர். சிலநிமிடங்களில் மற்ற பணியாளர்களும் தங்களின் மெயிலில் கூறப்பட்ட பணிகளை செய்ய சாப்பிட்டு அனைவருமே சென்றுவிட்டார்கள். இவர்கள் மட்டுமே அங்கு இருந்தார்கள்.
வதனம் எங்கும் சிவந்துயிருந்தவளை சுவரில் சாய்த்து.. தன்னவள் மேலும் சிவக்கும் அளவிற்கு.. அவள் மேல் தன் பார்வையை செலுத்தி ரசித்து முடித்தபின்.. ” முயல்குட்டி.. எழில்வேந்தன் என்ற கம்பெனி பெயரை விற்பனையில் பார்க்கும் போது.. அதை வெளிய சொல்லமுடியலனு வருத்தம் இருக்கும். ” அவனை முறைக்க..
கண்களில் முத்தமிட்டு.. ” முயல்குட்டி உன் மூலமாதான் தெரியபடுத்த வேண்டும் என்று ஆசை இருந்துச்சுடி. ஆனா அப்ப முடியாதது இல்ல.. அதனால்தான் நான் தெரியவேண்டாம் என்று முடிவெடுத்தேன்.”
கன்னத்தில் முத்தமிட்டு.. ” இப்ப நம்ம கடைக்கு எழில்வேந்தன் பேர் வைத்து என் முயல்குட்டிய.. இதுவரை ஆயிரம் தடவை சொல்ல சொல்லி கேட்டுயிருப்பேன். ஆனா இன்னைக்கு நீ கம்பெனி பெயரை சொல்லி.. வேந்தனின் எழிலரசினு சொன்னபோது.. “
அவள் உயரத்திற்கு குனிந்து.. ஒருகையால் தன்னவளின் இடையை தனக்குள் இழுத்தும்.. மறுகையை கழுத்தை தாங்கி பிடித்து.. அவனவளின் செவ்விதழ்களை சுவைத்து தன் வார்த்தையில்லா சந்தோஷத்தை கொண்டாடினான். அவனின் முயல்குட்டி முச்சிற்கு சிறிது ஏங்க.. ஒருநொடி அவகாசம் கொடுத்து மீண்டும் சில நிமிடங்கள் முத்தம் கொடுத்ததற்கு அறிகுறியே தெரியாத அளவிற்கு.. மென்மையிலும் மென்மையாக அவளின் இதழில் சுவையில் முழ்கி அவளின் உயிர் வரை சென்று மீண்டு வந்தான்.
எழிலரசிக்கு தன்னவனை முறைத்து முறைத்து கண் வலித்ததுதான் மிச்சம். அவளை கள்ளப்புன்னகையுடன் பார்த்துவிட்டு.. அவர்கள் அருகில் வைத்திருந்த நகையை காண்பித்து.. ” எப்ப முயல்குட்டி ஆடர் கொடுத்த?. ”
அவள் நேற்று நகைகடையில் நடந்தை கூற..
” போடி.. எனக்கு இப்ப வேற இடத்தில் முத்தம் கொடுத்து.. உன்னைய ஒருவழியாக்க தோனுது. அநியாத்திற்கு சோதிக்கறடி. ” அவனின் பார்வை அவளின் அங்கங்களில் அலைபாய…
அவனின் முயல்குட்டிக்கு.. தனுமாமாவின் பார்வையில் வெக்கமும், ஆசையும் ஒருங்கே தோன்றி.. அவன் உயரத்திற்கு நிமிர.. தன்னவளை அப்படியே தூக்கிக்கொண்டான். அவள் புன்னகைத்து தன்னவனின் காதில் மெல்லிய குரலில்.. ” தனுமாமா.. உங்க சோதனை காலம் முடிய ஐந்துஇரவு தான் காத்திருக்கனும். அதன்பின்ன உங்க அரசிய விடியவிடிய ஆய்வு செய்து.. ” அவள் முடிக்கும் முன்..
அவளின் முகத்தை முன் கொண்டுவந்து.. ” என் அரசி ஏற்கனவே கட்டளையிட்டு இட்ட படி.. இருக்கும் அன்னைத்து ஜென்மத்திற்கும்.. எனக்கு உன்னிடம் விடையே தேவையில்லாத ஆய்வுமட்டுமே.. விடியவிடிய இல்லடி.. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்.. எப்பவெல்லாம் தோனுதோ அப்பவேல்லாம் செய்வேன்டி என் முயல்குட்டி. ” இப்போதைக்கு இதழில் மீண்டும் சோதனை செய்ய ஆரம்பித்து.. இடம் உணர்ந்து பாவம் என விட்டான்.
அவள் முச்சுவாங்கி.. தன்னவனிடம் ஏதோ கோபமாக கூற வர.. அவளின் வாய்யை கைவைத்து மூடி.. ” முயல்குட்டியோட பசி சத்தம் அதிகமா கேட்குது. எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசலாம். ” அவளின் தலைமுடியை ஒதுக்கி.. நெற்றியில் முத்தமிட்டு அவளை வெளியில் அழைத்துவர..
அனைவரும் பாதி சாப்பிட்டு இருக்க.. புன்னகையுடன் இருவர் மட்டும் அவர்களின் செங்கொழுந்தாய் சிவந்து இருந்த முகத்தை ‘ அடப்பாவி.. உன்னைய போய் நல்லவனு சொல்லுறாங்களே ‘ என நினைத்தபடி சாப்பிட்டை தொடர்ந்தார்கள்.
அதை இருவரும் கவனிக்கும் நிலையில் இல்லை.. மகிழ்வுடன் சாப்பிட ஆரம்பிக்க.. சிலநொடிகளில் வேந்தன்.. விஸ்வா மற்றும் மூன்று நண்பர்களிடம் எழிலரசியின் பேரில் மாற்ற வேண்டிய விஷயம் பற்றி பேச..
எழிலரசி தன் அருகில் இருந்த சத்யாவிடம்.. ” ஏன்டி வரோனு கால் பண்ணல?. தீபிகா, வினோத் அண்ணா, உங்க கல்யாணம் மூன்று மாதத்தில்.. ஒரே நாளில் என்று நேற்று டேபிக்ஸ் ஆனாதால.. அண்ணாவோட ஞாபகத்தில் போன் பண்ண மறந்துட்டியாடி?? ” கிண்டலா, கோபமா என்ற குரலில் கேட்க..
‘ மற்ற திருமணங்கள் முடிவானதும்.. தாங்கள் மட்டும் தனியாக நிற்க வேண்டுமா?. என வினோத் அதிரடி முடிவு எடுத்து.. நண்பர்கள் இருவரின் ஒப்புதல், ஆலோசனையுடன் திலகனின் வீட்டிற்கு.. அவன் மற்றும் சத்யா குடும்பம், அருள்நிதி, ஈஸ்வர் காவ்யாவுடன் சென்று தங்களின் திருமணத்திற்கு அனைவரின் சம்மதம் மற்றும் நாளையும் குறித்துவிட்டனர். ‘
சத்யா எழிலரசியை முறைத்து.. ” யாரு நானு? நீதான் ஓவரா அண்ணா ஞாபகத்தில் இருப்பதா.. ரகசிய தகவல் வந்தது. காலையில் எத்தனை தடவை கால்பண்ணினேன். நீ இன்னும் போனை பார்க்கலையா?. ”
‘ தகவலா?. யாரு?. ‘ நினைத்தபடியே தன் போன்னை எடுக்க.. அதில் காலை எட்டு மணியில் அளவில் பல போன்கால்கள் வந்துயிருக்க.. அந்நேரம் தான் இருந்த நிலை.. அய்யோ என வெக்கம் வந்து.. கூறமுடியாமல் மறைத்து.. ” சாரிடி அப்ப.. ”
கன்னங்கள் சிவப்பு, கண்களில் வருத்தம் காண்பிக்கும் உயிர்தோழியை பார்த்தவள்.. ” ஹேய் எழில்செல்லம்.. எனக்கு நீ எதுவும் ஞாபகம் இல்லாம இருந்ததில் ரொம்ப சந்தோஷம் தான்.
நீ நேத்து மதியம்.. எல்லாவற்றையும் நினைத்து அழுதனு.. தர்ஷினி சொன்னதில் இருந்து.. எங்க நீ வீட்டில் போய் திருப்ப நைட் கவலைபடுவனு.. நாங்க பயந்துயிட்டு இருந்தோம். காலையில் நீங்க இரண்டு பேரும் கால் எடுக்கலனு.. திலகன்.. ரோஹித் அண்ணாக்கு கால் செய்தாங்க. திலகன் அவங்களிடம் நீங்க கால் எடுக்கலனு கவலையா கேட்துக்கு..”
புன்னகையை கையை வைத்து மறைத்து.. மெல்லிய குரலில்.. ” ம்.. அவங்க தானே.. பக்கத்து பால்கனியில்.. நான் நிற்பது கூட தெரியாத அளவிற்கு உலகம் மறந்து இரண்டுபேரும் இருக்காங்கனு கூற.. நமக்கு ஆள்கிடைத்ததுனு.. திலகனும் உங்கள.. நான் காலில் இருப்பதையே மறந்துட்டு செம்மையா ஒட்டிட்டு இருக்காங்கடி. “
சத்யா கூற கூற எழிலரசி.. திலகன், ரோஹித்தை முறைப்பதும்.. சத்யாவை பார்ப்பதுமாக இருக்க.. அதை கவனித்த இருவருமே.. ‘ என்ன?. ‘ என்பது ஒரு லுக்விட.. அய்யோ திருப்ப இரண்டுபேரும் சேர்ந்து ஒட்டினா?. பரவாயில்லை பொழைத்து போகட்டும் என ‘ ஒன்றும் இல்லை ‘ என அவள் பாவனையில் கூற.. இருவரும்.. ஒருவனை பார்த்து சிரிக்க..
‘ என்னடா?. ‘ என சிரிப்பின் திசையை பார்க்க.. அவளின் தனு அவளை முறைத்துவிட்டு.. அவளின் முழிக்கும் பார்வையில் ‘ இவ ஒருத்தி கல்யாண முடிவதற்குள் என்னைய ஒருவழியாக்கம விடமாட்டாபோல.. ‘ கொஞ்சிவிட்டு புன்னகையுடன் திருப்பினான்.
விஸ்வா சந்தோஷ் உடன் சென்றுயிருக்க.. முக்கிய டெஸ்ட் டாகுமெண்ட் சையின் செய்து வரவேண்டி இருப்பதால்.. அங்கு இருந்தபடியே ரோஹித், ராகேஷ் உடன் வேந்தனும் ப்ராடெக்ட் ரீலிஸ் செய்யும் வேலை மற்றும் தங்கள் பிற கம்பெனி வேலைகளை செய்தபடி காத்திருக்க..
சத்யா–திலகன், வினோத்– தீபிகா தன் உயிர் நண்பர்களின் திருமண பர்சேஸிற்காக கிளம்பிவிட்டதால்.. அவர்கள் சென்ற சில நொடிகளில் எழிலரசி தன்னவனின் கையை சுரண்ட.. ‘ என்னடி ‘ செல்ல கோபத்துடன் பார்க்க..
அதில் அவனவள் கோபம் கொண்டு ‘ போடா ‘ என திரும்ப.. இவளோட.. அரசியின் அருகில் வந்து.. ” முயல்குட்டிக்கு மாமா வேலை செய்த இடத்திற்கு போகனும்மா?.” தன்னவளை அறிந்து கேட்க..
‘ சோ கீயூட் தனுமாமா ‘ என்ற பார்வையை அவன் கன்னத்தில் பதித்து.. ஆம் தலையசைக்க.
புன்னகைத்துவிட்டு.. ரோஹித்திடம் திரும்ப.. இவர்களின் கூத்ததை புன்னகையுடன் பார்த்தவன்.. இருவருவரையும் அறிந்தவனாக.. ” பத்துநிமிடம் தான்டா.. சீக்கிரம் போயிட்டு வாங்க. ”
அவர்களுடைய அக்சஸ் கார்டை கொடுத்தான்.தங்களை பார்த்த ஒரே நாளில் புரிந்துக்கொண்டான் என்ற மகிழ்ச்சி புன்னகை சிந்திவிட்டு..
தன் அரசி தனக்கு முதன்முதலாக பூங்கொத்து, பரிசும் அனுப்பிய போது வாங்கிய இடமான.. நான்காம் தளத்தில் கடைசி பகுதிக்கு வந்து.. தான் அந்நேரத்தில் உணர்ந்ததை.. தன்னவளை கைபிடித்து கூறி தெரிவித்து.. பின் அவன் வேலை செய்த ஏழாம் தளத்திற்கு வந்தார்கள்.
லிப்ட்டின் வெளியே வந்தவர்களை.. வேந்தனின் குழு உறுப்பினர்கள் கைதட்டி கில்டர்பாம் வெடித்து வரவேற்றனர். ஒரு நொடி பயந்து தன்னவனை பிடிப்பதற்குள்.. அவளவன் அவளை தன்தோள்வளையில் கொண்டுவந்து.. ‘ முயல்குட்டி ஓகேயா?. ‘ பார்வையுடன் தலையசைத்தான்.. ம்.. என அவளும் பார்க்க.. பிறகு கையை பிடித்துக்கொண்டான்.
பின் தன் முன் இருந்த குழு நண்பர்களை பார்த்து.. புன்னகையுடன்.. ” இதெல்லாம் எதுக்குஆகாஷ்?. ” மற்றவர்களிடம் தன் பார்வையை செலுத்தினான்.
புன்னகையுடன்.. ” அண்ணா நீங்க கொடுத்த பல அதிர்ச்சிக்கு எங்களின் பதில்.. மற்றும் அண்ணிக்கு வரவேற்பு. ” அனு அரசியை தோள் அணைத்து கூற.. அவளும் பதில் புன்னகை புரிந்து வேந்தனை பார்க்க..
” என்ன அண்ணி.. அண்ணா வேலை செய்த இடத்தை பார்க்க வேண்டுமா?. ” ஆம் என தலையசைப்பு மட்டும் இருக்க..
சற்று நேரம் முன் அறிவிப்பு கூறும்போது நிமிர்வாக பேசியது இவளா?. அவள்? என வேந்தனின் குழுவினர் சிறிது வியப்புடன் தான் எழிலரசியை பார்த்தார்கள்.
அவளின் நாத்தனர்களும் சத்யாவின் மூலம் நடந்த அனைத்தும் அறிந்து தங்களிடம் ஏதோ ஒரு காரணத்தினால் தெரிவிக்க படவில்லை.. ஆனாலும் பரவாயில்லை. அவர்களின் காதலுக்கு வாழ்த்து கூறவே இப்படியான வரவேற்பு.
வேந்தன் தன்னவளின் ஆர்வம் கண்களில் தெரிய.. ” ஆகாஷ் இப்ப நான் வேலை செய்த ரூம்மிற்குள்போக முடியாமா?. வாசன்.. ” அடுத்து கேட்க வரும்முன்..
” வேந்தன் வாசன் லேப்பில் இருக்காரு. நீங்க வருவீங்கனு தெரியும். நான் அவரிடம் கேட்டுவிட்டேன். நீங்க போங்க. “
சரி என கூறி தன்னவளை அழைத்து செல்ல.. அவள் போகும் வழியில் இருப்பவர்களிடம் புன்னகையும்.. தனு இவ்வழியாக தானே தினமும் தன்நினைவுகளை மட்டும் சுமந்து சென்று.. அனைத்து பணிகளையும் திறம்பட செய்துயிருக்கிறான்.. என எண்ணியபடியே அவனின் TL அறையினுள் நுழைந்தாள்.
” தனு உங்களுக்கு எப்ப இன்னைக்கு நீங்க ப்ரசன்ட் பண்ண ப்ராடெக்ட் எப்ப பண்ண தோனுச்சு?. ” நாங்கள் விரைவில் பயன்படுத்த வேண்டும் என கூறியதால் வருங்காலத்தை எண்ணி மகிழ்ச்சியும்.. கூறும்போது சிறிது நாணம் கூட வந்துயிருந்தது.
யாருக்கும் தெரியாத இடத்தில் தன் அரசியை நிற்கவைத்து.. கைகளை பற்றி அவளின் சிவந்தமுகத்தை புன்னகையுடன் பார்த்துக்கொண்டே.. ” அரசி நான் ஆரம்பத்தில் வீட்டிற்கு, ஹோட்டலிற்கு செய்தது எல்லாம் நம்ம எதிர்காலத்திற்கு ஏற்றார்போல.. நான் முடிவு எடுத்து.. அவங்களிடம் சொல்லி.. எல்லோரும் கலந்துபேசி அதன்பிறகு தான் பெரிய வீடு, கடை ரெனோவேட், நிலத்திற்கு காசுகொடுத்து.. வீடு கட்டி வந்தது. பின்ன பிஸ்னஸ் பண்ண நிலம் வாங்கியது எல்லாம் நடந்தது.
மற்றபடி நான் ஊருக்கு அதிகம் போகாததால் பல குடும்ப விஷயங்கள் என் காதிற்கே வராது. வினோ கல்யாணம் கூட தேதி எல்லாம் குறித்தபிறகு தான் எனக்கு சொன்னாங்க. வினோகுழந்தை பற்றி மட்டும்.. நான் மாதமாதம் கால் செய்வதால எனக்கு ஆரம்பித்தில் தெரிந்தது. மற்றவர்களின் குழந்தை பற்றி அவங்களோட வளைகாப்பின் போது அம்மா போகனும் சொல்லுவாங்க.. அப்போதுதான் தெரியும்.
ஆனா தீபா அக்கா இரண்டாவது குழந்தை பற்றி தெரியும்போது.. நான்தான் அத்தை, அக்காவ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனேன். பிளட் ரிபோர்ட் நான் படித்த பின்னாடி தான் டாக்டரிடமே போச்சு.”
அவளின் விரலை தடவிய படியே.. ” அப்ப தான் எனக்கு நமக்கு இதுபோல எப்ப படிப்போம்?. என்று முதன்முதலில் குழந்தை பற்றிய ஆசைவந்தது. ” அவனை அவனின் அரசி முறைக்க..
புன்னகையுடன்.. ” புரியுதுடி.. முயல்குட்டியவே இன்னும் பார்க்கல.. அதுக்குள்ள குழந்தையா?. என்று தானே பார்க்குற?. ” ஆம் என கூறுவதுபோல புன்னகை மட்டும் புரிய..
அவளின் கன்னத்தை கிள்ளிவிட்டு.. ” முயல்குட்டி.. உண்மை சொல்ல வேண்டும் என்றால் அப்போ உன் நினைப்பு வரும்.. ஆனா உன்னை பார்த்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வரல.
என்னை தேடியே என் முயல்குட்டி மிக விரைவில் பார்க்க வரப்போறா என்றுதானோ!. நான் நமக்கு.. என்று மட்டும் நினைத்து ஆரம்பித்து.. நான் அதைபற்றி உன் முன்னாடி விளக்கும் கொடுத்து.. உன் கையால் நம்ம குழந்தைகளுக்காக வெளியிடனும் என்று இருக்கும்போல. அதான் நான் உன்னை பார்க்க முன்னே.. எப்போதும் என் காதிற்கு வராத எந்த விஷயமும் அன்னைக்கு நானே எல்லாம் செய்து.. நான்தான் வீட்டில் உள்ளவர்களுக்கே சொன்னேன். “
” அன்னைக்கு நைட் கிளம்பி சென்னை வந்தவுடன் மூனுபேருக்கும் இங்க இருந்துதான் கால்செய்து ஆரம்பிக்கலாம் என்று கூறி.. இப்ப எல்லாம் முடிந்து என் முயல்குட்டி கையால் தொடங்கி வைத்து.. அதுபற்றி செய்தியும் வந்துவிட்டது. “
தன் போனில் செய்தி சேனலில்.. ” EV நேச்சர் பீயூர் பியூட்டி ப்ராடக்ட் மற்றும் காஸ்மெடிக்ஸ் கம்பெனி.. தங்களுடைய புது தயாரிப்பான கர்பிணி பெண்கள், குழந்தைகளுக்கான ப்ராடக்ட் அறிமுகம் செய்துள்ளது.
மேலும் பியூட்டி மற்றும் காஸ்மெடிக்ஸ் புது தயாரிப்புகளை.. வரும் ஞாயிறு அன்று காலை அறிமுகம் செய்யபடும் என அதிகாரபூர்வமான அறிப்பை வெளியிட்டு உள்ளது. ” வந்து கொண்டுயிருப்பதையும்.. அதனால் தங்கள் கம்பெனியின் ஷேர் மதிப்பு சற்று கூடியிருப்பதையும் காண்பித்தான்.
‘ கேட்டவளிற்கு கண்ணீர் விழவா?. வேண்டாமா?. என்ற நிலையில் தன்னவனை காதலுடன் பார்த்திருந்தாள். பின் அவனுள் புதைந்து.. அவனின் இதயத்துடிப்பை சிறிதுநேரம் கேட்டுவிட்டு.. தன்னவனிடம் காதல் முத்தம் வாங்கி.. அறையை அவனின் மெல்லிய நடன அசைவுகளின் மூலம்சுற்றி பார்த்து..சில புகைபடங்களை எடுத்துவிட்டு வெளிவந்தனர். ‘
அங்கு புன்னகையுடன் ரோஹித் தங்களின் நெருங்கியவர்களிடம் பேசிக் கொண்டுயிருந்தான்.
தங்களின் வருகையை உணர்ந்து திரும்பியவன்.. ” ம்.. ரொம்ப சீக்கிரமா வந்திடீங்க. ”
” அப்படியா.. சரி வா தனு.. இன்னும் கொஞ்சம் நேரம் உள்ள இருந்துட்டு வரலாம். ” வேந்தனின் கையை பிடிக்க..
” தெய்வமே இது உங்களுக்கே ஓவரா இல்ல. பத்து நிமிடம் சொல்லியே.. அரைமணி நேரம் ஆச்சு. திரும்பவும்மா!. சரி இந்தாங்க வெள்ளி கிழமை திருமண பத்திரிக்கை கொடுக்க கொண்டு வந்தேன். ” வேந்தனிடம் கொடுக்க..
அதையே இப்போது தான் பார்க்கிறான். இருவரும் அதனை பார்த்தனர். வேந்தன் தான் வருத்தமா?. மகிழ்ச்சியா என்ற புரியாத மனநிலையில் தன்னவளிடம் கொடுத்து கொடுக்க கூறினான். அவளும் புரிந்துக்கொண்டாள்.
புன்னகையுடன்.. ” எல்லோரும் கல்யாணத்திற்கு கண்டிப்பா வரவேண்டும். ” அவர்கள் புரியாமல்.. ஆனால் புன்னகையுடன் வாங்கி அதிர்வுடன் பார்த்தனர்.
” அண்ணி நாங்க எப்படி வர?. எத்தனை நாள் லீவ் போட?. ” இவள் புரியாமல் பார்க்க..
” இல்லஇந்த நேரத்தில் லீவ் கொடுப்பாங்களானு தெரியாது. ”
” ஏன் நீங்க செய்ததுதான் முடிந்துவிட்டதது தானே?. ” வேந்தனை பார்க்க..
அவன் இன்னும் சிறிது வருத்தம் காண்பித்து நடந்ததை மெல்லிய குரலில் கூற..
கேட்டவள்.. ரோஹித்திடம் திரும்பி.. ” உங்களுக்கு இதுபற்றி தெரியுமா?. ”
தெரியும் என வேந்தனை முறைத்து தலையசைக்க.. அவர்களுக்கு கோபம் தான். வேந்தன் பாதி டெஸ்ட்.. அவர்கள் கம்பெனி லேப்பில் செய்ததால்.. தேவையில்லாத பிரச்சனை வரும் என்று கூறியதால்.. இந்த நேரத்தில் இதை பேச விரும்பவில்லை என கூறியதால் அமைதியாகி விட்டனர்.
அவளுக்கும் சிறிது புரிந்து.. ” ரோஹித்.. வாசன் தலைமையின் கீழ் டெஸ்ட் செய்து உருவான ப்ராடெக்ட் வாங்கிக்கோங்க. ஆனா அதை இந்த வாரம் இல்லாம.. இரண்டுமாதம் கழித்து ரீலிஸ் பண்ணுங்க. ”
மிகுந்த மகிழ்வுடன் புன்னகையுடன்.. ” சரி தெய்வமே. வேற கட்டளை. ”
” ம்.. இவங்க ஐந்து பேருக்கும் சம்பளம் வேண்டாம் என்று கூறி மூன்று நாட்களுக்கு லீவ் வாங்கி கொடுக்க சொல்லுங்க?. ” கோபமாக கூற..
” அண்ணி.. ” அதிர்வுடன் அழைக்க.. என்ன என பார்க்க?.
” அண்ணி நாங்க அண்ணாவிடம் சொல்லாம் என்று தான் நினைத்தோம்.. ஆனா விஸ்வா சார்.. பதினைந்து நாள் அனுமதி இல்லாம வேலை செய்ததை சொல்லிட்டா. அந்தநேரம் நீங்க விழுந்து.. அதனால அண்ணா ரொம்ப கவலையா இருந்தாரு. அப்ப ஏதாவது பிரச்சனை வந்தா?. அதான். ” ரோஹித் இருக்க தயங்கி படியே கூற..
” ம்.. இவ்வளவு யோசிக்கிற நீங்க.. அந்த பதினைந்து நாளும்.. தனு.. பயந்து பயந்து ஒன்னும் வேலை செய்யல தானே?. உங்களை கம்பெனி கேப்பில் தானே வீட்டிற்கு அனுப்பி வைத்து.. நீங்க வேலை செய்தற்கான ஓவர் டைம் சேலரி கூட வந்துயிருக்குமே. ”
ஆம் என தலையசைக்க..
” பின்ன.. அனுமதியில்லாம எப்படி இதை செய்ய முடியும் என்று யோசிக்கலையா?. ”
” எழிலரசி நாங்க அதையும் யோசித்தோம். இருந்தாலும் வேந்தன் யாரிடம் அனுமதி வாங்கினார்.. என்று கேட்ட கூடிய சூழ்நிலையில் அவன் இல்ல.. அந்த நேரத்தில் இந்த டென்சனும் வேண்டாம்.. என்று தான் நாங்க சமாளித்தோம். “
” நீங்க என்ன சொன்னாலும்.. நான் ஏதுக்கமாட்டேன் அண்ணா. வாசன் செய்தது யாருக்கும் பிரச்சனையில்லாம முடிந்துவிட்டது. வாசனிற்கு தனு.. அனுமதி வாங்கிய ப்ராடெக்ட் எல்லாவற்றையும் மேற்பார்வையிட மட்டும்தானே அனுமதி கொடுத்துயிருக்கு. நீங்க செய்த அந்தநேரத்தில் யாராக்காவது லேப்பில் பிரச்சனை வந்துயிருந்தா?. இல்ல நீங்க செய்த ப்ராடெக்ட்டின் மூலப்பொருட்களில்.. ஏதாவது பிரச்சனை என்றால்?. முதலில் தனுவை தானே கேட்பாங்க.
இதனாலதான் இப்ப திரும்ப எல்லாவற்றையும் டெஸ்ட் செய்து அப்ரூவல் வாங்க சொல்லியிருக்கிங்களா?. ” ரோஹித், வேந்தனை பார்த்து கோபமா, அதிகாரமா புரியாத குரலில் கேட்க. ரோஹித் வேந்தனை பார்க்க..
” அரசி எப்போதும் ரீலிஸ் முன் பண்ணுவதுதான். அதை நான் வாசன், ஆகாஷ் தலைமையின் கீழ்செய்ததாக தான் நான் மாற்றியிருக்கேன். “ அவனை முறைக்க..
அவனின் விரும்ப முறைப்பை செலுத்த புன்னகையுடன்.. ” அரசி நான் மாற்றி, அதை ராகேஷ் அப்ரூவல் பண்ணி.. எல்லாம் நல்ல படியா முடிந்துவிட்டது. இப்ப நீ இதை தேவையில்லாம யோசிக்காத. ஆனா நீ உன்னால தானோ என்று வருத்தப்பட்ட.. அதனால நீ சொன்ன மாதிரி இரண்டுமாதம் கழித்து ரீலிஸ் பண்ணலாம். நீங்க லீவ் அப்ளை பண்ணுங்க. அப்ரூ பண்ணுவாங்க. ” அவர்களிடம் கூறிவிட்டு ரோஹித்தை பார்க்க..
சீக்கிரம் வாருங்கள் சைகையில் கூறி சென்றபடியே.. அவர்கள் லீவ் அப்ளை செய்தால் அப்ரூவ் ஆகிவிடும். இருந்தாலும் உடனே மெயில் செய்தான்.. கூடவே ராகேஷ், சந்தோஷிற்கு.. அரசியின் கட்டளையை புன்னகையுடன் அனுப்பிவைத்தான்.
வேந்தன் அரசியை பார்த்து.. ” முயல்குட்டி நமக்காக தானே எல்லாம் செய்தாங்க. உன் தனுமாமாவிற்கு என் அரசி கூட இருந்தா.. எந்த பிரச்சனையும் சமாளிப்பேன். நம்ம கல்யாணத்திற்கு வராங்க.. சந்தோஷமா அவங்க வரனும். அவங்ககிட்ட நல்லா பேசு. ” சரி என பார்த்தவள்.
” அண்ணா.. ”
” எழிலரசி நீ கேட்டதினால் எனக்கு எந்த வருத்தமும் இல்ல. உன் வயசிற்கு நாங்க சொன்னதை வைத்தே.. வேந்தன் என்ன செய்திருப்பான்.. வாசன் செய்ததினால் இப்படி பிரச்சனை வர வாய்ப்பு இருக்குனு உடனே யோசித்து கேட்டுற.. நானும் அதே மாதிரி ஆரம்பத்த நாலு நாட்கள் கழித்து யோசித்து.. நான் வாசனிடம் வேந்தனிற்கு எந்தவித சம்பந்தம் இல்லனு கையெழுத்து வாங்கி வைத்தபிறகு தான் இவங்க எல்லோரையும் அவர் கூறியதை செய்ய வைத்தேன். நீ எதுக்கும் கவலைபடவேண்டாம். கல்யாண பொண்ணா சந்தோஷமா இரு. ” வேந்தனை நீயும் தான்டா என பார்வை இருந்தது. புன்னகை பரிமாறிக் கொண்டனர்.
அவர்கள் பத்திரிக்கை கொடுக்கும் போதே அறையினுள் தனியாக வந்துவிட்டதால் எவர்பற்றியும் கவலையில்லாமல்.. வேந்தன் ஆகாஷ் கூறியவுடன் தன்னவளை தோள்வளைவிற்கு கொண்டுவந்தவன்.. ” நிஷா நீங்கயெல்லாம் எங்க கூடவே ஊருக்கு வந்துட்டுங்க. ”
அவர்கள் இப்போது இருவரையும் முறைத்து நின்று.. ” ம்.. எல்லோரும் ஜோடி ஜோடியா இருப்பீங்க. நாங்க மட்டும் தனியா இருக்கனுமா? எங்க எல்லோருக்கும் ஜோடி இருக்காங்க. அவங்களோட நாளைக்கு நைட் கிளம்பி வரோம். ”
புன்னகையுடன்.. ” ம்.. சரி உங்க ஜோடிகளோடவே வாங்க. ”
பின் அனைவரும் வேந்தன் அறையில் சில புகைபடங்கள் எடுத்துக்கொண்டும்.. வேந்தன் வாசனிற்கு இன்று வெளியிட்டது மட்டும் போதும்.. இன்னும் புதிதாக தயாரிப்பு செய்து அதனுடன் நீங்கள் கொடுத்தது சேர்த்து ரீலிஸ் செய்யலாம் என நண்பர்கள் கூறியதாக தகவல் கூறி அவர்களுக்கும் அதை அனுப்பிவைத்து.. வாசனை பற்றிய தன் வருத்தம் மறைந்து..
மகிழ்ச்சியை மனதிற்கு கொண்டுவந்து தன்னவளுடன் தன் TL அறைக்கு விடைகொடுத்து.. பின் எப்படி மரியாதையுடன் வந்தார்களோ.. அதே மரியாதையுடன் RR ஆபிஸில் இருந்தும் விடைபெற்றான்.
வேந்தன் எழிலரசி.. ரோஹித்துடன் அவர்களின் பள்ளி தோழி கீர்த்தனா கைனகாலஜிஸ்ட் (மகளிர்மற்றும் மகப்பேறு மருத்துவர்) பார்க்க வந்துயிருக்க.. ரோஹித் அறிமுகம் மட்டும் செய்து வைத்துவிட்டு அவர்களின் தனிமையாக காரில் இருந்தான்.
வேந்தன் தன் முயல்குட்டியின் பயம், வருத்தம், வெக்கம், முறைப்பு, புன்னகையுடன் தன்னவளின் வயிற்றுவலி பற்றிய கேள்விகள்.. பின் ஸ்கேன் பார்த்து.. சற்று தெளிந்து.. பின் வருங்கால விருப்பம்பற்றி கூறி.. அதற்கான சாத்திய கூறுகள் என்ன? இருவரும் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்க ஆலோசனைகளை கேட்டுக்கொண்டான்.
” வேந்தன் நேற்று நைட் சந்தோஷ்.. உங்க விருப்பம் பற்றி சொல்லுபோது.. யாராவது கல்யாணம் முன்பே இப்படி வெளிப்படையா எல்லோருக்கும் தெரியும்படியா கூறுவாங்களா?. சும்மா சொல்லுறீங்க இல்ல.. அவன் விளையாட்டுக்கு சொல்லுறானு நினைத்தேன். ஆனா நீங்க எழிலரசிய பார்த்து சொல்லுபோது அப்படியே உங்க எதிர்காலத்தை என் கண்முன்னாடி கொண்டு வந்துட்டீங்க. ” புன்னகையுடன் அவர்களுக்கு வாழ்த்துகூறி வழியனுப்பி வைத்தாள்.
வேந்தன் எழிலரசிக்கு, தங்கைகளுக்கு சீர் வைக்க என மேலும் சில புடவைகள், நகைகள் எடுத்தான். அந்நேரத்தில் அரசி தனுவின் இடையில் சாய்ந்தவாறு.. குட்டிதூக்கம் தூங்கி எழுந்தாள். அவனுடன் இருந்து தன் நண்பன் எடுக்கும் அழகை பார்த்துவிட்டு.. அவன் பல சேலைகள் எடுத்த நேரத்தில் ரோஹித் தன்னவளிற்கு, அம்மா, அக்கா, நண்பர்களின் மனைவி இரு தங்கைகளுக்கு சேலை எடுத்திருத்தான்.
கடற்கரை அந்திமாலை பொழுதிற்கு ஏற்றவாறு வேந்தன், எழிலரசி உடைமாற்றி திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் ECR சென்று எடுத்து முடிக்க..
வேலை தவிர தங்களிடம் அதிகம் பழக்கம் இல்லையென்றாலும்.. மனதில் மிகப்பெரிய இடத்தை பெற்றுயிருக்கும்.. வேந்தன் மற்றும் தங்களின் குட்டி அக்கா எழிலரசியை.. பிரிய மனமே இல்லாமல் ரோஹித் தன் கண் மற்றும் போன் கேமிராவில் நிரப்பிக்கொண்டு.. அவர்களின் ஊருக்கு தக்க பாதுகாப்புடன் அனுப்பி வைத்தான்.