கனவெல்லாம் நீ தானே
எபிசொட்-11
அவன் அவளை உடை எடுக்க அழைத்து சென்றான் . அவளை அவனது காரில் ஏற்றி டிரைவர் வேண்டாம் என்று தானே ஓட்டினான். அவள் அவன் பக்கத்தில் உள்ள இருக்கையில் உட்காந்தாள் . அவள் வெளிய பார்த்து கொண்டு வந்தாள். அவன் அவளை பார்த்தான் . அனன்யா என்று அழைத்தான் . அவள் அவனை திரும்பி பார்த்தாள். அவன் அவளிடம் உங்களை பற்றி சொல்லுங்க என்றான் . அவள் அவனிடம் ,” எனக்கு ஒன்னுமே நியாபகம் இல்லை , நான் என்ன செய்வது ” என்றாள். அவன் அவளை பாவமாக பார்த்தான் . அவளிடம் , ” அனன்யா பழைய விசியத்தை விடுங்க இப்போ தான் பிறந்திருக்கிங்க என்று நினைச்சுக்கோங்க . புதுசா நிம்மதியா வாழுங்க ” என்றான் . அவள் அவனிடம் , ” அப்போ பிறந்ததும் எனக்கு கல்யாணம் ஆகி விட்டதா ” என்று அவனை பார்த்து சிரித்தாள் . அவனுக்கும் சிரிப்பு வந்தது . அவன் அவளிடம் , ” அனன்யா நீங்க என்னை கணவராக ஏற்க வேண்டாம் , ஒரு நண்பனாக ஏற்றுக்கோங்க . எப்போது உங்களுக்கு என்னை கணவராக நினைக்க தோன்றுகிறதோ அன்று நாம் நம் வாழ்க்கையை தொடங்கலாம் . அது வரை நான் உங்களை மனைவி என்று நெருங்க மாட்டேன்” என்றான் . அவள் அவனிடம் , ” விக்ரம் , நான் ஏற்றுக்கொண்டாலும் ஏற்காவிட்டாலும் நீங்க என்னுடைய கணவர் தான் ஆனால் உங்களோடு ஒரு மனைவியாக வாழ எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் . நான் என்னை பக்குவ படுத்தி கொள்ள ” என்றாள் . அவன் அவளிடம்,” உங்கள் விருப்பம் என்னை உங்களது தோழனாக ஏற்றுக்கொள்ளுங்கள் . அதுவே எனக்கு போதும் ” என்றான் . அவள் அவனை பார்த்து புன்னகைத்தாள் . மனதுக்குள் , ( விக்ரம் மிகவும் நல்லவனாக இருக்கிறான் தன்னை இவ்ளோ காதலிக்கிறான் என்று அவனை பற்றி பெருமையாக நினைத்து கொண்டாள்). அவனிடம் அவள் , ” விக்ரம் காரில் கொஞ்சம் பாட்டு வைக்க முடியுமா ?” என்று கேட்டாள். அவன் அவளிடம் , ” இது உங்க கார் என்று நினைத்துக்கோங்க என்னை மூணாவது மனிதராக நினைக்காமல் உங்கள் நண்பனாக நினைத்துக்கோங்க என்னிடம் சகஜமாக பேசுங்க ” என்றான் . அவள் அவனிடம் , ” என்னை நீங்க வாங்க னு கூப்பிடாதிங்க நீ வா னு கூப்பிடுங்க ” என்றாள் . அவனும் தன்னை அப்படியே கூப்பிடுமாறு கூறினான் . அவள் சிரித்தாள் . அவனிடம் , ” நீ வாங்கி வந்த பூங்கொத்து ரொம்ப அழகா இருந்தது உன்னுடைய விருப்பம் ரொம்ப நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன் ” என்றாள் . அவன் அவளிடம் , ” நன்றி அனன்யா , உன்னுடைய விருப்பம் எப்படி என்று தெரியவில்லை , இன்று துணி கடையில் தெரியும் . நீ விலையை பற்றி யோசிக்காத உனக்கு என்ன வேணுமோ எவ்ளோ வேணுமோ எடுத்துக்கோ உனக்கு வாங்கி தர நான் இருக்கிறேன். ” என்றான் .அவள் அவனிடம் , ” விக்ரம் , நீ என்ன அவ்ளோ செல்வம் உடையவனா. உனக்கு கோடிகள் என்றாள் சாதாரணமா ” என்று அவனை கேட்டாள் . அவன் அவளிடம் , ” ஆமா அனன்யா , நீ கவலை படாத சம்பாதிக்க தான் நான் இருக்கிரேனே” என்றான் . அவள் அதிர்ந்தாள் . அவனிடம் , ” தன் குடும்பம் எப்படி பட்டது பணக்கார குடும்பமா இல்லை மிடில் கிளாஸ் அ என்று கேட்டாள் ” அவனுக்கு என்ன சொல்ல வென்று தெரியவில்லை . திரு திரு என்று முழித்தான் . அவள் அவனிடம் , ” சொல்ல தோன்றவில்லை என்றால் சொல்ல வேண்டாம் ” என்றாள். அவள் அவனிடம் , ” என்னுடைய விருப்பம் எல்லாம் ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு மாறி தான் இருக்கு , நான் யோசிப்பது கூட அப்படி தான், அப்போ நான் மிடில் கிளாஸ் அ தான் இருக்க முடியும் . உன்னை பார்த்தால் மிகப்பெரிய செல்வந்தன் போல இருக்க எப்படி என்னை காதலித்தாய் எங்கு என்னை சந்தித்தாய்” என்று கேட்டாள் . அவன் விழி பிதுங்கி நின்றான் அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை . அவன் அவளிடம் , ” நாம் முதலில் உடை வாங்குவோம் அதற்கு பிறகு வீட்டுக்கு பொய் பேசிக்கலாம்” என்றான் .
அவளும் தலை ஆட்டினாள் . பின் கடையும் வந்தது . அவள் கையை பிடித்து உள்ள கூட்டிட்டு போனான் . அது ஒரு அழகிய பிரம்மாண்டம் ஆனா கடை . அவனை உள்ள எல்லாரும் வரவேற்றார்கள் . அவனுக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து அவள் பூரிப்பு அடைந்தாள். அவனிடம் , ” விக்ரம் கலக்குற போ உனக்கு இவ்ளோ மரியாதையை யா ” என்றாள் . அவனும் சிரித்து கொண்டு உனக்கும் மரியாதையை தருவாங்க என்றான் அவளிடம் . அவளும் புன்னகைத்தாள் .
அவன் உடை எடுக்கும் இடத்திற்கு கூட்டிட்டு போனான் . அவளிடம் என்ன வேண்டும் ஆனாலும் எடுத்து விட்டு தன்னை அழைக்குமாறு கூறி கொண்டு ஒரு இடத்தில் அமர்ந்தான் . அவள் அவனிடம் , ” விக்ரம் , நீ எதுக்கு இங்க வந்த இதுக்கு என்ன டிரைவர் ஓடவே அனுப்பி வைக்கலாமே நீ இப்படி வந்து உட்கார வீட்டிலே இருக்கலாமே ” என்று கூட்டத்தில் கத்தினாள் . அவன் அவளிடம் , ” அனன்யா , ஏன் இப்படி கத்துற இது பொது இடம் , கொஞ்சம் மெல்ல பேசு என்று அமைதியாக சொன்னான் ” . அவள் அப்போது அவனிடம் தலை குனிந்து நின்று தன்னை மன்னிக்கும் மாறு வேண்டினாள் . அவன் புன்னகைத்து கொண்டு , ” பரவாயில்லை அனன்யா , நீ என் மனைவி உனக்கு எல்லா உரிமையும் இருக்கு ஆனா பொது இடத்தில் கொஞ்சம் பார்த்துக்கோ ” என்று அன்பாக சொன்னான் . அவன் அவளிடம் தானும் வருகிரேன் என்றான் . அவனும் அவளோடு பொய் துணி எடுக்க போனான் அவள் கை நீட்டும் அனைத்தையும் வாங்கினான் . அப்போது திடீர் என்று அவன் போன் மணி அடித்தது . அதில் டிடெக்ட்டிவ் , அனன்யா பற்றி விசாரிக்க நியமித்தனர் . அவளிடம் விடை பெற்று கொண்டு , அவனிடம் பேசினான். அவன் விக்ரமிடம் அனன்யா பற்றிய முழு விபரமும் உங்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கிறேன் என்றான் . அவனும் சரி என்று போனை கட் செய்து அவளிடம் போனான் .
தொடரும் …………………..
please like and comment my story …………