வேந்தன் தன் மடியில் தூங்கிக் கொண்டுவரும் தன் முயல்குட்டியை ரசித்தபடி.. பல இனிமையாக பாடல்களை கேட்ட வண்ணம் வந்தவன்.. என இருவரும் இப்போது எழிலரசியின் வீட்டின் முன் அவர்கள் வந்த கார் நின்றது.
இடைபட்ட இரண்டு நாட்களில் வேந்தன் கூறியது போல அனைத்தும் மிக வேகமாக நடந்தது. அவர்கள் கோயில் சென்று வந்து.. நேரில் சென்று அழைக்க வேண்டியவர்கள், யார் யார் எங்கு போக?. என பட்டியல் போட்டுயிருக்க.. திருச்சி, கரைக்குடியில் இருந்து உறவினர்களுக்கான உடைகள், மீதி பத்திரிக்கை வந்துவிட அதன் வேலை ஆரம்பமானது.
வினோ மாலை திருச்சி சென்றவள்.. காலையே கிளம்பி வீடு வந்துவிட்டாள். நடந்தை கூற.. சித்ராவையும், அமைதியாக இருந்த குடும்பத்திரையும் விஸ்வநாதன் கேள்வி கேட்க தவறவில்லை. வேந்தனின் முடிவு பற்றி தெரிந்ததும் வினோவை தேற்றதான் நேரம் ஆனது.
குழந்தைகள் வேந்தனின் அத்தை ராஜி, எழிலரசி பெரியம்மா பார்வதி, அத்தை அம்பிகா பொறுப்பில் இருக்க.. பெயிண்ட் அடிக்கும் வீடுகளில் உள்ளவர்கள் எழிலரசி வீடு, பெரியப்பா, மாமா வீடு, ராகவன் வீடுகளில் இருந்து.. மகள், மகன்களுடன் இனிமையாக கழித்த பிடியே மகள்கள்! தங்களை அழகுபடுத்தக்கொண்டும்..
அம்மாக்கள்! வாங்க வேண்டிய சீர்வரிசைகளை பட்டியல் இட்டு.. அவற்றை வாங்க திருமணமானஆண்கள்.. தங்கள் நண்பர்கள் மற்றும் மணமகன்களின் நண்பர்களை அழைத்து வேண்டியவைகளை வாங்கி வைத்தனர்.
இதற்கு நடுவில் ஒருமணி நேரம் போன், லாப்டாப்பில் இருந்து டிவியில் இணைத்து.. வேந்தனின் ப்ராடெக்ட் பற்றிய விளக்கம்.. வேந்தன், எழிலரசி அவற்றை அறிமுகம் செய்து வைக்கும் போது விழுந்த பூமழை, போட்டோக்கள்.. பத்திரிக்கை அழைப்பு என ஒவ்வொன்றுக்கும் இளையவர்கள் கைதட்டியும்.. லட்சுமி, பாட்டிகள் என சிலர் வேந்தனை நினைத்து மகிழ்ந்து கண்கலங்கி விட்டனர்.
பின் அதை செய்தி சேனலை பார்த்து பிரம்மிப்பும் அடைந்தனர். ஆனால் இப்போது வேந்தனின் பணம், சொத்து பற்றி எண்ணம் குறைந்து.. இவற்றில் எல்லாம் எழிலரசியின் மீதான காதல் மட்டுமே தெரிந்து.. அதில் மட்டும் சிலர் எழிலரசி மீது பொறாமை கொண்டனர்.
அனைவரும் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தனித்தனியாக செல்ல வேண்டாம் என பஸ் எடுத்து.. முதலில் வேந்தன் குடும்பத்தினர் அனைவரும் கிளம்பி.. எழிலரசி வீட்டில் இருக்கும் மற்ற அனைவரையும் அழைக்க பஸ் வந்து நிற்க.. இது பற்றி தெரியாத வேந்தன்.. அவற்றின் பின்னால் வந்த வேந்தன் வந்த கார் வழி வேண்டி மெல்லிய ஹாரன் கொடுக்க.. தூங்கி எழுந்தவன் சில நிமிடங்கள் முன்தான் இன்பாவிற்கு கால்செய்திருக்க.. அரசியை எழுப்ப.. அவள் இறங்க தயார் நிலையில் இருக்க.. பஸ் சிறிது நகர்ந்து கார் அரசியின் வீட்டின் முன் நின்றது.
அனைவரும் கிளம்பி இருப்பார்கள் என நினைத்துயிருக்க.. வாசலில் நின்றபவர்களை எதிர்பார்க்கவில்லை. அரசி வேந்தனை பார்க்க.. என்னடி என புருவதை ஏற்றி இறக்க.. ஒன்றும் இல்லை என அவள் மொழியில் கூற.. புன்னகையுடன் அவளின் கைபிடித்த படியே முதலில் வேந்தன் இறங்க.. பின்னால் அரசி இறங்கினாள். கிளம்பி நின்றவர்கள் கூட இவர்களை இப்படி எதிர்பார்க்கவில்லை.
அரசி அடர்மஞ்சள், கடல்நீல வண்ணம் கலந்த லாங்கவுன், வேந்தன் லைட்புளூ ஜீன்ஸ் , கடல்வண்ண அடர்பச்சைஷர்ட் அணிந்தவர்கள் புன்னகையுடன் இறங்கியவர்களை ஒரு நொடி அழகு!. என பார்த்து வியந்து..
இவர்களால் தானே.. தங்கள் அனைவர் வீடுகளிலும் எதிர்பார்க்கா நல்ல நிகழ்வுகள் நடக்கிறது.. இன்னும் பல உள்ளன என நினைத்தபடி.. புன்னகை முகமாக பார்த்து.. நாயகி பாட்டி கூறி ஆரத்தி எடுத்து வரவேற்க..
அந்நொடி முடிவு செய்து யாரும் எதிர்பாராத விதமாக.. சட்டென்று தன் அரசியை அள்ளிக்கொண்டு காதலனாக அவளை மயக்கும் புன்னகை மன்னாக தன்னவளின் வீட்டினுள் நுழைந்தான்.
அனைவரும் ஒருநொடி அதிர்ந்து.. பின் தங்களுக்காக தானே இத்தனைநாள் அவனின் உணர்வுகளை வெளிபடுத்தாமல் இருந்தான். அவன் அரசி மற்றும் மற்றவர்களின் எந்த கவலையும் இன்றி.. இப்போது அவன் விருப்பியதை செய்யட்டும் என சிலர் புன்னகையுடன் பார்க்க.. சிலர் முறைப்பு பார்வை செலுத்த.. அனைத்தையும் புன்னகையுடன் ஏற்று ஹாலில் தன்னவளை இறக்கிவிட்டான்.
அவளோ அவனை கிள்ளி.. முறைத்துவிட்டு அனைவரையும் காண முடியாமல் தன் அறைக்கு ஓடிவிட்டாள். முன்னாடி போ பின்னால் வருகிறேன்.. என்ற புன்னகையை காண்பித்து மற்றவர்களை பார்த்தான்.
” அப்பா.. நாலு ஜோடியோட கல்யாண, ரிசெப்ஷன் டிரஸ், மற்ற சேலைகளும் இருக்கு. கோயிலுக்கு எடுத்துட்டு போகவேண்டும் என்றால் எடுத்து வைத்துக்கோங்க. ” மற்றவர்களை பார்த்து கூறிவிட்டு..
காரில் இருந்து இன்பாவுடன் காரில் அவனுடன் வந்தவர்கள்.. வாங்கிய அனைத்தும் எடுத்து வந்து.. பூஜை அறையின் முன் வைத்துவிட்டு..
” வேந்தன்.. வீட்டில் ஆட்கள் இருக்கனும்மா?. ”
” ம்.. இரண்டு பேரும் இருங்க. 10மணிக்கு வந்துட்டுவோம். அதன் பிறகு கிளம்புங்க. ”
யோசனையுடன்.. ” ரோஹித் ஏதும் சொல்லவில்லையா?. ” இல்லை என பார்க்க..
” ம்.. வேந்தன்.. உங்க கல்யாணம் முடிந்து.. ஒருவாரம் உங்க வீட்டிலும் எல்லோர் வீட்டிலும் கொஞ்சம் எல்லாம் செட்டாகவும் வரை நாங்களும்.. இன்னும் பத்துபேர் இங்க தான் இருப்போம். ”
எல்லோரும் பதட்டநிலை மற்றும் அனைவரின் சேமிப்பில் வாங்கிய விலைமதிப்பு மிக்க பொருட்கள் இருக்கிறது. எல்லோரையும், எல்லாவற்றை பொறுப்பாய் பாதுகாக்க ஆள் வேண்டும் என நினைத்து இந்த ஏற்பாடு என அவனுக்கு புரிந்து புன்னகையுடன்.. ” ம்.. தேங்க்ஸ்” அவரை மெல்ல அணைத்துவிடுவிக்க..
அவரும் அதனை புன்னகையுடன் ஏற்று.. ” வேந்தன் எங்கள நாங்க பார்த்துப்போம். அதற்காக நீங்க எதுவும் செய்யவேண்டாம். எல்லோரும் எல்லாம் கல்யாணத்தையும்.. கல்யாண வேலைகளை பதட்டப்படாம பண்ணுங்க. இன்னும் ஆட்கள் வேண்டும் என்றாலும் சொல்லுங்க. “
சரி என கூற.. அவர்கள் சென்றுவிட.. மற்றவர்களை புரிகிறாதா என பார்வை செலுத்தினான்.
” சரி சரி நீ பார்த்து போதும்.. நாங்க கல்யாண உடைகள் மட்டும் எடுத்துட்டு கோயிலுக்கு கிளம்புகிறோம்.. நீங்க சீக்கிரம் கிளம்பி டீயும் ஆப்பமும் இருக்கு சாப்பிட்டு.. இன்பாவோட வாங்க. ” புன்னையுடன் சரி என கார்த்திக் மாமா, அப்பா, அம்மா, அத்தம்மாவை ஒர்பார்வை பார்த்து.. தங்களின் பேக் எடுத்துக்கொண்டு தன்னவள் அறைக்கு சென்றான்.
சித்ராவிற்கு வருத்தம் இன்னும் போகவில்லை. அவனை போல சில நல்லது நடக்க சிலவற்றை இழந்து ஆகவேண்டும் என நினைத்தது.. தன் மகள்கள் இருவர் மற்றும் இன்னும் நெருங்கிய உறவுகளாய் ஆனா அனைவருடன் முன்பு இருக்கும் புன்னகை முகமாக கோயிலுக்கு செல்ல பேருந்தில் அமர.. மற்றவர்களும் அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டும் என கோயிலை நோக்கி சென்றார்கள்.
இன்று தன்னவள் அறையில் புது தெம்புடன், தங்களுக்கு இருந்த சிறு குறையும் நீங்கி.. ஆயிரம் யானை பலம் பெற்றவன் போல நுழைய.. அவனவள் அப்போதுதான் குளியல் அறையில் இருந்து வெளி வந்தாள். அவன் கண்களுக்கு தன்னவளின் முகத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. வந்தவன் தன் அரசியை தூக்கி முகத்தை பார்த்த வண்ணம் சில சுற்றுகள் சுற்றி.. நெற்றி முட்டி கண்கள் முடி நின்றான்.
கன்னத்தை பிடித்திழுத்து.. ” தனுமாமா கோயிலுக்கு நேரம் ஆச்சு. ” அவளின் இதழில் விரல்வைத்து..
” முயல்குட்டி இப்ப என் மனசு எவ்வளவு சுதந்திரமா இருக்கு தெரியுமா. உன் கிட்ட என் காதலை சொன்னது ஒரு சந்தோஷம் என்றால்.. மற்றவர்களிடம் சொன்னது நிம்மதியா இருக்குடி.
அதைவிட என் முயல்குட்டி இனி கத்தி சொல்லுவா.. தனுமாமா என்னைய விரும்பி கல்யாணம் செய்யபோறாருனு. சொல்லுவியாடி?. ” கண்களை திறந்து தன் முயல்குட்டி கண்களை பார்க்க..
கண்கள் சிறிது கலங்கி.. ” ம்.. “ வார்த்தைகள் இல்லை. என்றும் போல் தன் நிம்மதியில்.. அவன் நிம்மதி அடையும் அவன் முகத்தை பார்த்து மட்டும் இருந்தாள்.
அந்த நொடிவரை காதலனாக இருந்தவன்.. தன்னவள் இருக்கும் தோற்றத்தை அப்போதுதான் உணர்ந்து.. ‘ அய்யோ முயல்குட்டி ஏன்டி இப்படி?. தூக்கும் போதே சொல்லமாட்டியாடி?. கண்ணமூடிட்டு முயல்குட்டிய இறக்கிவிட்டுட்டு ஓடியே போயிரு. இல்ல நீ காலி. ‘
நினைத்தை போலவே சத்தமில்லாமல் இறக்கி.. வெளியே சென்று ” முயல்குட்டி அறைமணி நேரத்தில் இங்கு இருந்து நாம்ம கிளம்பி இருக்கவேண்டும். ” கூறியபடியே இன்பா அறைக்குசென்றான்.
தன்னவன் அமைதியாக இறக்கிவிட்டு வெளிய போய்.. கூறி சென்றதில் குழம்பியபடியே தன் ஈரகூந்தலை பிரித்து டிரையால் காய வைக்கும் போது தான் இரவு உடை சட்டையில் மேல்பட்டன்கள் போடாமல் இருந்ததை பார்த்தாள். நீண்ட நேரம் குளியல் அறையில் நிற்காமல்.. சீக்கிரம் கழட்டி மாட்ட அவன் பழகிவிட்டது தான்.
அடிப்பட்டதில் இருந்து குளித்து வெளிவரும் போது அவன் தான் இருப்பான். அப்போது மட்டும் இன்பாவை விடுவதில்லை. அந்நேரத்தில் தான் பார்த்து.. இல்லை அவனே மாட்டி விட்டுயிருக்கிறான். ஆனால் அவனின் பார்வை இருநாட்களாக வேறாகியிருப்பதால்.. ‘ அய்யோ எழிலரசி.. இப்படியே இப்படியேவா தனுமாமாவிடம் பேசின?. ஓ.. அதான் மாமா அமைதிக்கு காரணமா?. சோ கீயூட் தனு!. ‘ மகிழ்ச்சியும், வெக்கபுன்னகையுடன் தனு கூறிய நேரத்தில் கிளம்பி இருக்க.
வேந்தன் இன்று முதன்முறையாக முன்னெச்சரிகையாக கதவை தட்டினான்.
” இதோ அண்ணா. ” கதவை இறக்க.. அங்கே அவளவன் பட்டு வேஷ்டி சட்டையில் கையில் பூவுடன் முறைத்தபடி உள்ளே வந்தான்.
புன்னகையுடன்.. ” என்ன என் தனுமாமா.. இன்னைக்கு பொண்டாட்டி ரூம்மிற்குள் கதவை தட்டிட்டுவராரு?. ” அவனை இழுத்து ஊஞ்சலில் அமரவைத்து.. அவனுள் புதைந்து கேட்க..
” வேணாடி.. இன்னும் நாலுநாள் அடக்க ஒடுக்கமா இருக்கனும் பார்க்குறேன். நீ.. “
அவனின் வாய்முடி.. ” நான் என்ன பண்ண நீ பழகிவிட்டது. நீ தூக்குவனு எதிர்பார்க்கல. ஆனா ரொம்ப அடக்கஒடுக்கமா இருக்கேனு மட்டும் சொல்லாத. தேத்து நீ ரிசாட்டில் பண்ண வேலையெல்லாம்.. ” அவள் வாயை முடி..
காதில் உதடுஉர.. ” நம்ம குழந்தைகள் அங்க இருக்க போறாங்கனு.. நீ வளைகாப்புபாடல் பாடியதில் இருந்து கொடுக்க வேண்டும் என நினைத்ததுடி. ஒரே ஒரு முத்தம் தானே கொடுத்தேன். ”
அவன் அவள் மணி வயிற்றில் கொடுத்த ஒருமுத்தமே பல முத்தத்திற்கு ஈடான உணர்வை தந்தபோது அவனின் ரோமம் அங்கு விளையாடியது ஞாபகம் வந்தது. இருவரின் நினைவுகள் சேர்ந்து.. இவரின் முகம் மிக அருகில் பல உணர்வுகளை காண்பிக்க.. சில நொடிகள் ஒருவரை ஒருவர் ரசித்து பின் நெற்றி முத்தம் கொடுத்து கிளம்பி கீழே வந்தார்கள்.
இன்பாவுடன் சேர்ந்து திலகன், சந்துரு இருந்தனர். திலகன் இன்பாவை ஒரு பார்வை பார்த்து டிரைவர் இருக்கையில் அமர.. சந்துரு முன்னாலும், அரசி இருபக்கமும் வேந்தன், இன்பா அமர்ந்தார்கள். நேரம் குறைவாக இருந்ததால் காரில் செல்லும்போது குடிப்பதற்கு ஏற்றவாறு டீ, பலகாரம் எடுத்து வந்ததை இருவரும் சாப்பிட்டு முடிக்க..
வேந்தனின் பக்கம் திரும்பிய இன்பா.. ” மாமா நீங்க எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லையா?. ”
ஒருநொடி புரியாமல் பார்த்தவன்.. பின் அவனை முறைத்து ‘ இல்லை ‘ என தலையசைத்து.. தன் நண்பர்களுக்கு வீட்டிற்கு வந்து.. கோயிலிற்கு சென்று கொண்டுயிருப்பதை தெரிவித்தான்.
” என்ன முடிவு தனு?. ” அவன் கூற.. அவனின் வருத்தம், கோபம் புரிந்தது.
இன்பாவிடம் திரும்பியவள்.. ” இப்ப என்ன ஆச்சு ண்ணா?. “
இன்பா.. பின்பக்கம் பார்க்கும் படியாக உட்கார்ந்துயிருந்த சந்துருவை பார்க்க.. இருவரும் அவனை பார்த்தனர்.
” மாமா.. ரவி அப்பா பெரிய வீட்டின் ஹாலை பிரித்து அப்பா, அம்மா ரூம், தாத்தா பாட்டி இருப்பது போலனு இரண்டு ரூம்.
மாடியில் இன்பா தங்கி இருந்த ரூம்மை.. வசுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொண்டு இருக்கு. பெயிண்ட் வேலையும் சேர்த்து நாளை காலை எல்லாம் முடிந்துவிடும். ” எழிலரசி அதிர்வுடன் தனுவை பார்க்க..
” சரி அதனால என்ன இப்போ?? ” திலகன் வழியில் இருந்த டீ கடையின் முன் வேகமாக நிறுத்தினான்.
” டேய் அறிவோட தான் பேசுறியா?. அப்பாவிற்கு எவ்வளவு வருத்தமும், உன்னக்காக யோசித்து இருந்தா.. அவர் அன்னைக்கு வீட்டிற்கு போனவுடனே சந்துரு கால் செய்து இப்படி பண்ணச் சொல்லியிருப்பாரு.
அதவிட வினோ எல்லாவற்றையும் கேட்டு.. எல்லார் வீட்டிலும் இன்று வீடு நிறைய ஆட்கள் இருப்பாங்க.. நம்ம வீட்டில் இரண்டு கல்யாணம் இருந்தும்.. யாரும் அந்த வீட்டில் இருக்க போறது இல்லைனு.. யார்கூடவும் சரியாவே பேசல.. ஒழுங்க சாப்பிடவே இல்லையாமா. ”
தன்னவனை பார்த்தவள்.. இரண்டாவது கூறிய செய்தியில் அதிர்ந்து இருக்க.. ” அண்ணா எங்க கல்யாண சடங்கு எல்லாம் அந்த வீட்டில் தான் நடக்கும். நேரம் ஆகுது நீங்க காரை எடுங்க.” மற்ற மூவருமே வேந்தனை பார்க்க..
அரசியின் கைபிடித்து.. ஆம் என மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தான்.
கண்ணாடியில் எழிலரசியை பார்த்த திலகன்.. ” எழிலரிசி இதை யாருக்காக சொன்ன?. ”
தன்னவனின் கைபிடித்து புன்னகையுடன்.. ” எங்களுக்காக. ” வேந்தனை பார்க்க.. மெல்லிய புன்னகையுடன் பார்க்க.. அவன் தோளில் பட்டும்படாமல் சாய்ந்தாள்.
அவளிற்கு ரவிந்திரன் ஒரு முடிவு எடுத்து.. எல்லாம் ஏற்பாடுகளை செய்யும் போது வசுந்தராவின் திருமண சடங்களையும் அங்கு செய்ய கூறமுடியவில்லை.
ஆனால் தன்னவனின் முடிவை மாற்றமுடியுமே.. நடந்த சம்பவங்களால் இருவருக்கும் அதிக வருத்தம் என்றாலும்.. தன்னவனின் பலவருட எதிர்பார்ப்பில்.. எல்லா திருமண சடங்குகளும் அங்கு நடக்கவேண்டும் என்பதும்தானே. அதனை பற்றி பல கனவுகள் கண்டுயிருப்பானே. இந்நாட்கள் என்றும் திரும்ப வராதே.
எண்ணிக்கொண்டு இருந்தவளின் தலைதடவி.. ” அரசி ” நிமிர்ந்து அவனை பார்க்க..
புன்னகையுடன்.. ” இப்போதும் என் எண்ணத்தில் மாற்றம் இல்ல.. ” புரியாமல் பார்த்தவள்.. பின் புரிந்து.. ” தனு ” விழிவிரித்து பார்க்க..
‘ போடி ‘ என பார்த்து புன்னகையுடன் திரும்பியவன்.. செய்தி வினோவிற்கு உடனே தெரிவிக்கப்பட்டது. பின் போன் செய்து சில கட்டளைகளை பிறப்பிக்க..
திலகன் திரும்பவும் காரை நிறுத்தி.. அவனை முறைத்தானா?. புன்னகைத்தானா?. என்ற புரியாத பார்வை செலுத்தி..
‘ அவர்கள் கிராமத்து சொந்தங்கள் சேர்த்து.. சுற்றியுள்ள பல ஊர் மக்களும் கும்பிடும் சிவன்கோயிலின் கும்பாபிஷேகத்தில் குடும்பத்துடன் பங்கேற்று இறைவனின் ஆசிபெற்று.. இருவர் பெற்றோர்களிடம் ஒப்புதலுடன் கோயிலில் அனைவர் முன்னும் நெற்றி குங்குமம் இட்டு.. இருவரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என வேந்தன் தன் அரசியுடன்.. தங்களுக்காக கட்டிய வீட்டில் இருவரும் ஒன்றாக கால்பதித்தனர். ‘
வேந்தன்.. வினோவிற்கு செய்தி அனுப்பும் போதே.. தன் முடிவுவையும் தெரிவிக்க.. வினோ, விஸ்வநாதன் முதலில் அதிர்ந்தாலும்..
பின்னர் வேந்தன் எல்லாம் முறையாக நடக்க வேண்டும்.. இருவரின் பெற்றோர்கள் மற்றும் தங்களுக்காக இத்தனை வருட தன் காதலை மறைத்து.. தான் இப்படி தான் என கூறியும்.. மனம் வருந்தும் படியான நிகழ்வுகள் நடந்துவிட்டது.
இனி அவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என சில நிமிடங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?. என இருவரும் பேசி முடிவு எடுத்து.. பின் மற்றவர்களை போனை காண்பித்து பின் அவன் சொன்ன செய்தியை அனுப்பினார்கள்.
அந்நேரத்தில் ஐவரும் அவர்களுடன் கும்பாபிஷேகத்தில் கலந்துவிட்டனர். வேந்தன் சென்ற தடவை.. அவளை பார்க்கும் சிலமாதங்களுக்கு முன் பார்த்து. அடுத்து தன்னவளுடன்.. அவளை தன்பாதங்களில் நிறுத்திக்கொண்டான்.
வேந்தன் கடுகுஎண்ணெய்கலர் சட்டை, பட்டுவேஷ்டி. எழிலரசி உடல்பகுதி லவெண்டர்கலர், பாடர் கடுகுஎண்ணெய் கலர் பாடரில் மெருன்நிற சரிகை, சரிகை கலரில் சேலை முழுவதும்.. பூக்கள் வடிவங்கள் இருக்கும் பட்டுசேலை.. பூக்கள் வடிவ ஆரம் மற்றும் கற்களால் ஆன ஜிமிக்கி, தலைநிறைய மல்லிகை என தம்பதிகள் போலவே வந்தனர்.
இளையவர்களில் தம்பதிகள் ஆகப்போகும் பெண்கள் தர்ஷனி தவிர தங்கள் இணைகளை முறைக்க.. வேந்தன் அருகில் நின்ற கமலேஷ் ” டேய் நீ எப்படிடா எழிலரசி வீட்டில் இருந்து வேஷ்டி கட்டிட்டு வந்த?. “
தன்னவள் கை பிடித்து ஆர்வமாய் பார்த்திருந்தவன்.. இதனை கேட்டு முறைத்து.. ” என்னடா கேள்வி இது?. புரியல?. “
பின் இவனோடு சேர்த்து பேன்ட் சட்டையில் இருந்த அஸ்வின், பார்த்திபன் அவர்களின் இணைகள் தன் தங்கை, நந்தினி, மேகாவை பார்த்தவன் புரிந்து..
புன்னகையுடன்.. “டேய் இந்த இரண்டுமாதத்தில் அரசி சேலை கட்டி முக்கியமான நிகழ்ச்சிக்கு போகும் போது.. அவவீட்டில் இருந்து பல நாள் அங்கு இருந்து கிளம்பியிருக்கேன். தர்ஷினி என்னை கவனித்து தெரிந்து கதிரவனிடம் சொல்லி.. பாரு எவ்வளவு மங்களகரமா வந்துயிருக்காங்க. ” எழில் முன்னால் இருந்த இருவரும் கேட்டு புன்னகைத்தனர்.
அவர்கள் நேற்று பேசும்போது வேந்தன் கண்டிப்பா கட்டுவார் என்றும்.. அதிகம் கட்டி பழக்கம் இல்லாத அவர்கள் கூட்டத்தில் முடியாது எனவும்.. வேந்தனிற்கு இங்கு துணிகள் இருக்காது என நினைத்து வர..
இவர்களோ இவ்வளவு குழப்பம், பிரச்சனையிலும் தங்களை தம்பதிகளாய் தெரியும் அளவிற்கு வந்து நிற்கிறார்கள்.
தீர்த்தம் தெளிந்து ஆசிர்வாதம் பெற்று அனைத்தும் முடிந்த பின் ஒன்றாக இருந்தது போதுதான் செய்தியை பார்த்து பெரியவர்கள் ஒன்றும் கூற முடியாத நிலையில் இருந்தார்கள்.
சித்ரா அந்த வீட்டில் எப்படியேனும்.. அனைத்து சொந்தங்கள் வீட்டிற்கு வந்து ஒரு கல்யாண சடங்காவது.. நடந்தால் சரி என மனநிலையில்.. எதுவும் கூறவில்லை.. ஆனால் பிடிவாதமாய் இருப்பவனின் மேல் இருந்த தன் வருத்தத்தை முகத்திலும் காட்டவில்லை.
பின்னர் அனைவரும் கோயிலினுள் சென்று.. எல்லோர் முன்னிலையில் வினோ கொடுக்க.. இருவரும் இருவரின் மெல்லிய கலங்கிய கண்களை பார்த்தவாறு முதலில் வேந்தன் தன் அரசிக்கு.. குங்குமம்,மஞ்சள் வைத்துவிட.. அரசியும் தன் தனுமாமாவிற்கு குங்குமம், சந்தனம் வைத்துவிட்டாள்.
பின் அனைவரும் காலை உணவு சாப்பிட்டு.. இன்று எழிலரசி வீடு தவிர மற்ற நால்வர் வீட்டிலும்.. முகூர்த்தக்கால் ஊன்றல், முளைப்பாலிகை போடல், பந்தல் அமைத்தல் பணி ஆரம்பிக்க படுவதால்..
மற்ற வீடுகளில் இருந்தவர்கள் அவரவர் வீடுகளில் இறங்கிக் கொண்டும்.. அவர்களுடன் உறவினர்கள் தேவைக்கு ஏற்ப அங்கு சென்றார்கள்.
வேந்தனின் வீட்டு உறுப்பினர்கள் முதலில் வசுந்தராவின் திருமணத்திற்காக பெரிய வீட்டில் அனைத்தும் ரெடியாக இருக்க சடங்குகள் ஆரம்பிக்கபட்டது.
வேந்தன் சென்னையில் இருந்து வந்த காரை வரச்சொல்லி பெரிய வீட்டில் செய்யும் சடங்குகள் நேரத்தை கணக்கீட்டு.. வினோ, விஸ்வநாதன், பாட்டி, எழிலரசியின் அப்பா, அம்மா, இன்பா கோயிலில் இருந்து வேந்தன் வீட்டிற்கு வந்தனர்.
அங்கு பெரியவீட்டில் இருந்து அனைவரும் அங்கு இருந்தார்கள். தன் அரசியின் வருகையை முன்னிட்டு.. புதுப்பெலிவுடன் இருக்கும் வேந்தனின் வீடு இப்போது பூக்களால் அலங்கரிக்க பட்டிருந்தது.
இவனின் அதிரடியிலும், அரசியின் மீது காட்டும் அன்பிலும் என்றும் போல் இப்போதும்.. ஆனால் புரிந்து வியப்பு, பொறாமையுடன் பார்த்தார்கள்.
வேந்தன்.. தன் அரசியுடன் காரில் இருந்து வீட்டினுள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தன்ஜென்மம் ஈடேற போகிறது என்ற உணர்வில் இருவரும் வாசலில் நிற்க.. யோகா ஆரத்தி எடுக்க.. சாந்தி பூஜை அறைக்கு கூட்டிச்செல்ல.. இருவருமாக விளங்கேற்றினர். ஹாலில் ஐந்து நிமிடம் அமர்ந்தவர்கள்.. இங்கும் இன்றைய சடங்குகளை செய்ய ஆரம்பித்து.. சிறப்பாக முடித்தனர்.
எழிலரசி வீட்டினர், ரவிந்திரன், விஸ்வநாதன், திலகன் வரும்போது சத்யாவை அழைத்து வந்திருந்தான். அவளும் மட்டும் இருக்க..
மற்றவர்கள் அன்றைய மதியம் கணேஷ் வீட்டில் மணமகன், மகளுக்கு செய்யும் அத்தை, மாமா, அக்கா, தங்கை முறையினர் உணவு செய்து கொடுத்தல்.. சடங்கு இருப்பதால் செய்வதற்காக சென்றுவிட்டனர். இவர்கள் சாப்பிடும் நேரம் சென்றால் போதும்.
எழிலரசி அன்று மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் பார்த்த.. தன்னவனின் வீட்டில் தான் இப்போது இருக்கிறோமா?.!. என.. பலமுறை தனுமாமாவை கன்னத்தை பிடித்திழுத்து அவனின் கன்னத்தை சிவக்க வைத்து உறுதிபடுத்திக் கொண்டாள்.
அவனோ அதை விரும்பி ஏற்று தன்னவளை சமையல்மேடையில் அமர வைத்து.. அவள் கண்ணில் தெரியும் மகிழ்ச்சியை பார்த்தபடி அனைவருக்கும் பால்பாயசம் செய்துக் கொண்டுயிருந்தான்.
‘ வீட்டின் நுழைவாயில் சிறிய, பெரிய கதவு அதை தாண்டி.. மிக அழகான தோட்டம்.. அதன்பின் வீட்டின் தொடக்கம் ஐந்து படிகள் ஏறி வரவேற்பு திண்ணை முதல்.. உள்ளே ஹால், முற்றம், சமையல்அறை, சாப்பிடும் பகுதி , கீழே மூன்றுஅறைகள், முதல்மாடியில் சிறிய ஹாலுடன் கூடிய நான்குஅறைகள் , இரண்டாம் மாடியில் மலர்களின் நடுவில் ஊஞ்சல் என அனைத்து இடங்களும் தேவைக்கு ஏற்ற அளவில்.. அழகாக, நேர்த்தியாக, முன்பு இருந்த கலர் தான் அடிக்க கூறியதால்.. சிறிது பெயிண்ட் வாசனை மட்டும் இருக்க பெற்று அழகும், செழிப்பு, பழமை,நவீனம் கலந்துயிருந்து.. தங்கள் எழிலரசியின் தனு வீடு. ‘