வேந்தன் ஸ்பிக்கரிலிருந்து மாற்றி.. அரசியிடம் பேசிவிட்டு போனை வைக்க மனம் இன்றி.. காதில் வைத்துக் கொண்டே வீட்டின் வெளித் திண்ணையில் வந்து அமர.. அரசி வேந்தனை முதல்முறை பெயர் சொல்லி.. ” தனு..” என்ற அழைப்பு இனிமையாக காதினுள் செல்லும்போது.. அதனுடன் ‘ நீங்க எந்த ஸ்கூல்ல படிச்சிங்க??.. ‘
” ஏன்?.. அரசி.. ” தன்னை கண்டுபிடித்து விட்டாளா? என்ற ஆவல்!.
‘ அரசி என்னவென்று சொல்வாள். அது தவறாக இருந்தால்.. இருவர் மனமும் சடங்கடப்படும்.. வேண்டாம்.. இன்னும் நாளை நன்றாக யோசித்து அவரிடம் கேட்கலாம். ‘
” அது.. எனக்கு ஒரு விஷயத்தில் சின்ன சந்தேகம். நான் இன்னும் நன்றாக யோசித்து உங்களிடம் கேட்கிறேன். ”
புன்னகையுடன் ” சரிம்மா.. ஈவினிங் வீடியோகால் பார்க்கலாம்.. வைக்கட்டுமா?.. “ யோசி முயல்குட்டி.. உனக்கு ஞாபகம் வரவில்லையெனில் நான் உனக்கு நினைவுப் படுத்துகிறேன்.
” ம்ம்… வைக்கனுமா?.. வைக்கட்டுமா?.. “அவர்கள் இருவரும் கிட்டதட்ட அறைமணி நேரமாக பேசிக்கொண்டு இருந்தனர். ஆனாலும் அவள் மனதிற்குதான் வைக்கும் எண்ணம் இல்லைபோல..
‘ வேந்தனோ வைக்கதான் வேண்டும் முயல்குட்டி.. இப்போதே எல்லோரும் நீ இவ்வளவு பேசுவாயா?.. உன்னை எனக்கு முன்பே பழக்கம் இருக்குமோ?.. என என்னை சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது எதையும் யாரிடமும் சொல்வதற்கு மனம் சம்மதிக்கவில்லை. நேரில் பார்க்கும் போது.. தன் மனதில் இருப்பதை உன்னிடம் பகிர்ந்து.. அதன்பிறகு உன் அனுமதியுடன் வேண்டுமானால் மற்றவர்களிடம் கூறலாம்.. உனக்கு விருப்பம் இல்லையெனில் நம் நினைவுகள் நம்முடனே என்றும் இருக்கும். ஆனால் இப்போது போனை வைக்க வேண்டும் முயல்.. சாரிடா. ‘
” அரசி நான் இன்னும் சாப்பிடல. ” முடிக்கவிடாமல்..
” நீங்க இன்னும் சாப்பிடலையா?.. போய் சாப்பிடுங்க. வீடியோ கால்ல பார்க்கலாம். வைக்கிறேன். “
வேந்தன் ” சரிடா.. “
‘ சிறிதுநேரம் இருவரும் போனை கையில் வைத்து பார்த்துக் கொண்டு இருந்தனர். அதில் தாங்கள் கோயிலில் சில மணிநேரம் முன்பு எடுத்துக் கொண்ட புகைபடம் இருந்தது. அந்த புகைபடத்தை யாரேனும் பார்த்தால் தாங்களும் இவர்களை போல இருக்க வேண்டும் என நினைக்க தூண்டும் அளவிற்கு அதில் அவர்கள் இருவரும் புன்னகையுடன்.. தன்னவன்.. தன்னவள்.. என்ற பார்வையுடன் இருக்கும்.. அழகாக மனதிற்கு இதம் அளிக்கும் புகைப்படம். அரசி அதனை பார்த்துக்கொண்டே சுகமாக அவன் மடியில் படுத்து உறங்குவது போன்ற உணர்வுடன் ( இப்பவாவது பழையஞாபகம் வருமா?..) உறங்கிவிட்டாள்.’
வேந்தன் புகைபடத்தை பார்த்தபடி அமர்ந்து இருந்திருக்க.. அப்போது ஒருவர் அவனை முதுகில் அடித்தவுடன் தான் நிகழ்காலத்திற்கு வந்தான். ‘ எவன்டா அது?.. என் முயல்குட்டியுடன் தான் இருக்கும் புகைபடத்தை பார்க்கவிடமால் தன்னை இடையூறு செய்வது.. ‘ என்று பார்வையுடன் திருப்ப அங்கு எவன் இல்லை எவள்..
வேந்தனுடைய சிறிய தங்கை வசுந்தரா நின்றுக் கொண்டு இருந்தாள். ‘அம்மா சாப்பிட அழைத்துவர சொல்லி இருப்பார்கள் ‘ என அவன் எண்ணிக் கொண்டு இருக்கையிலேயே.. அவன்கையில் இருந்த போனை வாங்கி.. இல்லை.. இல்லை பறித்துக் கொண்டு ஒடிவிட்டாள்.. வீட்டின்உள்ளே தங்களின் குடும்ப உறுப்பினர்களை நோக்கி.. ” அம்மா.. அக்கா.. மாமா” அழைத்துக்கொண்டே..
‘ வேந்தன் போச்சு இந்த வசும்மா போய் எல்லார்கிட்டையும் காண்பிக்க போகுது.. ஏற்கனவே நாங்க போன் பேசும்போது கூடவே கேட்டதில்.. அதுக்கே என்ன?.. கேள்வி வரப்போகுதோ.. அதல இந்த போட்டோ வேற.. ம்.. வேற என்ன பண்ண?.. சமாளிப்போம்.. என் முயல்குட்டிக்காக இதக்கூட பண்ணமாட்டான இந்த வேந்தன் ‘ என்று தன்னை தயார் படுத்திக்கொண்டு உள்ளே சென்றான். ‘
ஹாலில் அக்கா, மாமாக்கள், தங்கைகள், கமலேஷ், நண்பர்கள் ஆகியோர்.. டீவி பார்த்துக் கொண்டு இருக்க.. வசு கொண்டு சென்ற போன் அக்கா யோகா மற்றும் தங்கை வினோதினி கையில் வைத்து பார்த்திருப்பதை பார்த்து.. இப்போது வாங்க முடியாது என வேறவழியின்றி..சமையல் அறை நோக்கி மெதுவாக சென்றான்.
அங்கு உணவு பதார்த்தங்கள் அனைத்தையும் சூடு செய்து.. தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டு இருந்த சித்ரா.. ” சீக்கிரம் வந்து சாப்பிடு வேந்தா.. ரொம்ப நேரம் ஆச்சு. பிறகு நாம்ம பேசா வேண்டியத பேசி.. செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்குப்பா.”
மெல்லிய புன்னகை உதித்து.. வேந்தன் சரி என தலையசைத்து.. வேற எதுவும் கூறாமல் அமைதியாக அம்மா சமைத்த உணவை இரசித்து ருசித்து.. மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு கொண்டு இருந்தான்.
காலையில் இதே இடத்தில் சாப்பிட்ட வேந்தனிற்கும்.. அதேநாள் மதியம் சாப்பிடும் வேந்தனுக்கும் 6 என்ன 60 வித்தியாசம் சொல்லும் அளவிற்கு இப்போது வேந்தனின் மனநிலை இருந்தது. அம்மாவின் சாப்பாடு.. மனம் முழுவதும் தன்னை ஆட்சி செய்ய வரப்போகும் அரசி.. தன் திருமணத்தை பற்றிய பல கனவுகள்.. அதனை நல்ல முறையில் நடத்திடவேண்டும் என்று அதற்கு எல்லாவிதத்திலும் ஒத்துழைப்பு தரும் தனக்கு விருப்பமானவர்கள் அவன் முன்னாள் அமர்ந்துயிருந்தனர். அனைத்தையும் உணர்த்து.. மகிழ்ந்து உணவு சாப்பிட்டு முடித்து ஹாலில் தன்முதல் தங்கை வினோதினின் கணவர் விஸ்வநாதன் அருகில் போய் அமர்ந்தான்.
” போட்டோ எல்லாம் சூப்பரா இருக்குடா.. நான் பார்த்தப்ப அவ்வளவு பதட்டத்தோட இருந்த எழிலரசியா இது?.. அப்படினு இருக்கு தம்பி. ”
முயல்குட்டிய என்கூட சாதாரணமாக பேச வைக்க நான் பட்டபாடு எனக்கு தானே தெரியும்.. மெல்லிய புன்னகையுடன்.. ” அக்கா.. அரசிக்கு அவங்க வீட்டல வரம் பார்க்க ஆரம்பித்தே போன வாரம் தானாம். கொஞ்சம் நாள் எடுக்கும் நினைச்சுயிருந்தாங்களா.. திடீர்!.. என நான் பார்த்துயிருக்கவும் பதட்டம் ஆகிட்டாங்களா. மத்தபடி ஒன்னும் இல்லையாம். இப்ப பேசுனத.. நீங்களும் தான் கேட்டிங்களே.. ரொம்ப பதட்டபடுற பொண்ணு மாதிரியா பேசினா?.. ”
” பதட்டபடாமா அண்ணி பேசுனதையும் கேட்டோம்.. உங்களை பதட்டபட வைத்ததையும் பார்த்தோம். ”
புன்னகையுடன் ” ம்ம்.. வசு நீங்கயெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்திங்கள அதனால் தான். “
” அதவிடுங்க அண்ணா.. அண்ணி பேசுனப்ப எவ்வளவு தெளிவா பேசுனாங்க. உங்க எண்ணம்.. வீட்டல இருப்பவர்களின் எண்ணத்தையும் உங்களிடம் சொல்லி.. அதேசமயம் அவங்க விருப்பத்தையும் உங்கிட்ட பகிர்ந்து கொண்டாங்க. அண்ணி ரொம்ப நல்லா பேசுறாங்க.. நல்லா பழகுவாங்கனு நினைக்கிறேன்.. அவங்கள எப்ப பார்ப்போம் என்று இருக்கு!. அண்ணா நீதான் இனிமேல ஒழுக்க நடந்து கொள்ளனும்.. எல்லாம் நல்லபடிய முடிய வேண்டும் அண்ணா. ”
எனக்கும் தான் வினோ.. எப்ப என் முயல்குட்டிய பார்ப்போம் என்று இருக்கு.. ” ம்ம்.. எனக்கும் அரசி பேசுனது வியப்பாதான் இருக்கு. எல்லோரோடையும் நல்லா பழகுவானு தான்.. நானும் நினைக்கிறேன்.. பார்க்கலாம். ஆனா இப்பவே அரசிக்கு சப்போட்யெல்லாம் என்னை விட அதிகமாக இருக்கு. “
“ அண்ணியா.. நீங்களானு.. இன்னைக்கு நீங்க பண்ணினதை வைத்துப்பார்க்கும் போது.. அண்ணிக்கு தான்பா நாங்க சப்போட் பண்ணுவோம். ”
” அரசிக்கு தான் சப்போட் என்றால்.. அப்ப உங்களுக்கு கிப்ட் எதுவும் வேண்டாம்.. அப்படிதானே. ”
” அப்ப எங்களுக்கு கிப்ட் வாங்கி தரமாட்டிங்க. இருங்க நான் இப்பவே அண்ணிக்கு கால்பண்ணுறேன். ” வேந்தனுடைய போன் அவளிடம்தான் இருந்தது.
பதறி.. ” நான் எப்பமா?. கிப்ட் வாங்கி தரமாட்டேனு சொன்னேன்?.. எந்த கிப்ட் வேண்ணும்.. இல்ல எதுவும் வேண்டாமானு தானே நான் கேட்டேன் வசுமா?. ”
” அப்படிவாங்க வழிக்கு.. நாங்க யோசிச்சு சொல்லுறோம்..” அக்கா.. தங்கைகள், அண்ணி நால்வரும் யோசிக்க, கதை அடிக்க என தனியாக ஒரு ஷோபாவில் சென்று அமர்ந்து கொண்டனர்.
தனியாக அமர்ந்து பேசியிருந்த ஆண்களில்... ” என்ன வேந்தா?. குடும்பஸ்தன் ஆவாவதற்கு எல்லாத தகுதியும் வந்துயிருச்சுப்போல.. அண்ணினு எழிலரசி பேர சொன்னவுடன் அப்படியே மாத்தி பேசுற. “
” கமலேஷ்.. அவன் எழிலரசி.. பேர சொன்னவுடன்.. மாத்தி மட்டுமா பேசுறான்?. அவங்களை பார்த்ததில் இருந்தே.. ஆளே ஒரு மார்க்கம்மா தான்டா இருக்கான். இது நம்ம வேந்தன் தானா?. இல்ல வேறு யாரும்மா?.. என்று எனக்கு சந்தேகமாக இருக்குடா..”
” ஆமான் டா வினோத்.. எனக்கும் அதே சந்தேகம் தான்.. நேத்து வரைக்கும் கல்யாண பண்ணிக்கபோற பொண்ணப்பற்றி ஒரு பக்கத்திற்கு பேசுவான். இப்ப இருக்க காலகட்டத்தில கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஆண்.. பெண் இருவருக்கும் 3 வயதுக்குள்ள இருந்தா ஒரே வயது மாறி உணர்வு இருக்கும்.. இது சில நேரங்களில் புரிதல் இருந்தாலும்.. பல நேரங்களில் இருவருக்கும் ஈகோ பிரச்சனை வரும். அது கல்யாண வாழ்க்கைக்கு சிறந்துல்ல என்றும்.. 7 வயதுக்கு மேல போனா.. ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது போல இருக்கும்.. என்று அவனுக்குனு ஒரு லாஜிக் வைத்துக் கொண்டு.. கல்யாணத்திற்கு கண்டிஷன்.. “
நண்பன் திலகன் தன்னை பற்றி கூறிக் கொண்டுயிருக்கும் போதே..” டேய்.. டேய்.. யாருடா?.. என்னை பற்றி இந்த மாதிரி ஒரு வதந்திய கிளப்பினது. நான் எப்படா?.. எனக்குனு என்று சொன்னேன். கமலேஷ்- வசுந்தரா கல்யாணம் பற்றி பேசும் போது பொதுவா கல்யாணம் செய்துக் கொள்ளும் ஆண், பெண் இருவருக்கும் இப்படி வயது வித்தியாசம் இருந்தா!.. இன்னும் நல்லாயிருக்கும் என்று.. தான் டா! சொன்னேன். அதவிட டேய்.. நான் என் கல்யாணத்திற்கு என்று எந்த கண்டிஷனுமே போடலையே டா. ” பதறி எழுந்து கூற..
” அப்படியா!.. ” என அங்குயிருந்தவர்கள் ஒரு சேர கேட்டனர்.
” ஆமாம்.. என்னை நம்புங்க. ” பெண்களை சேர்த்தும் ஒருபார்வை பார்த்து கூறினான்.
” ம்.. இத்தனை நாளா.. அன்னைக்கு நீ பேசியதை கேட்டு.. நாங்க இப்படி தான் நினைத்தோம்!.. அதனால எப்படியும் இவன் கல்யாணத்திற்கு பொண்ணு பார்க்க ஒரு நாலு இல்ல ஐந்து வீட்டுக்கு போவோம்.. அங்கு இவன்கூட போனா.. அப்படியே அங்க இருக்க பொண்ணுகள பார்க்கலாம்.. எனநினைத்தேன்.” என்று கமலேஷ் கூறிக் கொண்டு இருக்கும் போதே அங்கு வந்தாள் அவனின் வருங்கால மனைவி.. வேந்தனின் தங்கை வசுந்தரா.
அங்கு வசுந்தரா அனைவருக்கும் அம்மா.. பெரியம்மா செய்த மாலை டீயுடன் வர.. அப்போது தன் வருங்கால கணவன்.. அங்கு இருக்கும் பொண்ணுகள பார்க்கலாம் என நினைத்தேன் எனக் கூறும்போது வர..
“ அண்ணாக்கு பார்க்க போகும் போது.. என்ன?.. யாரை?. பார்க்கலாம் நினைச்சிங்க?. ” அவனிடம் கேட்டுக் கொண்டே.. அவனை தவிர மற்றவர்களுக்கு டீ கப்பை கொடுத்தாள்.
” அது.. அது வந்து தாரா.. உங்க அண்ணாக்கு பார்க்க போகும் போது.. கல்யாணம் ஆகாத பொண்ணு யாராவது அங்க இருந்தா.. அந்த பொண்ணுங்கள.. நம்ம வினோத் இல்ல திலகனுக்கு பார்க்கலாம் என பேசிக் கொண்டு இருந்தோம் தாரா.. எனக்கு நீ டீ கொடுக்கல. பரவாயில்ல விடு.. நீ டீ குடிச்சியா?. குடிக்கவில்லை எனில் என்னோட டீயை சேர்த்து நீயே குடிச்சுடும்மா.. ” இன்னும் அவளிடம் எதை எதையோ உளறி.. சமாளித்து அவளை அனுப்பி வைத்தான்.
‘ அங்கு இருந்தவர்கள் பொங்கி வரும் சிரிப்பை கட்டுபடுத்திக் கொண்டு இருந்தனர்.. பேச்சின் இடையே வசுந்தரா வந்தால்.. முன் பேசியதை அனைவரும் மறந்தே போய்.. மற்றவர்கள் அனைவரும் அவர்களை பார்த்து புன்னகைத்து கொண்டே டீயை பருகியிருந்தனர். ‘
மெல்லிய புன்னகையுடன் வேந்தன் ” வினோத் இங்க கமலேஷ் கமலேஷ்னு.. ஒரு மானஸ்தன் இருந்தான்.. அவனை பார்த்த.. ” சுற்றி முற்றிப்பார்த்து.. வினோத்தை பார்த்த படி கேட்க..
புதினான வேந்தனை பார்த்த கமலேஷ்.. டேய் டேய் என்னிடமேவா.. உன்னைய இந்த இடத்தவிட்டு ஓட விடுறேன் பாரு..
” வேந்தா.. காலையிலிருந்து எழிலரசிக்கு கணவனாக போற நீயே.. அவங்க பேர சொன்னவுடன் அப்படியே மாத்தி பேசுற.. நான் வசுந்தராவிற்கு கணவனாகி இரண்டு வருடம் ஆச்சுடா.. நாங்க இது மாதிரி நிறைய பார்த்து இருக்கோம். ”
வேந்தனை பார்த்துக் கொண்டே..” டேய் திலகா, வினோத் உங்களுக்கு எழிலரசி வீட்டுபக்கத்தில் பூக்கடை வைத்துயிருப்பவர்களை யாரையாவது தெரியும்?.. அத ஏன் கேட்குறனா?. எனக்கு தெரிந்தபையன்!.. அங்க இருக்க ஒரு இடத்துக்கு அவனே போயி இல்ல.. அவன் கொடுக்கும் பூவதான் வைக்க வேண்டும் என கண்டிஷன் போட்டு இருக்கான்.. அதான். ”
புரியாமல்.. ” எனக்கு தெரியாது டா ” இருவரும் ஒருசேர கூற.. கமலேஷ் ‘ சரி ‘ என்று தலையை ஆட்டினான்.
வேந்தன்.. கமலேஷ் தன்னிடம் கூறியதை.. ஒருநொடி முயல்குட்டியை நினைத்து.. முறைப்பும் புன்னகையுமாக கேட்டிருந்தவன்.. நண்பர்களிடம் எழிலரசியின் வீட்டுக்கு பக்கத்தில் பூக்கடை தெரியும்மா.?. என கேட்டபோது உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.. தெரிந்த பையன்.. அவன் ல்லை அவன் கொடுக்கும் பூவதான் வைக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கான் என்று கேட்டவுடன்.. டீ குடித்திருந்த இருந்தவன் அதிர்ந்து.. ‘ உனக்கு எப்படிடா?.. தெரியும்?. ‘ கண்களால் அவனை பார்க்க..
கமலேஷ் அவனிடம் குனிந்து யாரும் கேட்காதவாறு.. ” நீ பூ வாங்கி கொடுத்துவிட்டு ஒரு பைக் மேல சாய்ந்து உட்கார்ந்து இருந்தியே.. அது என்னோடது தான். இதவிட ஒரு சூப்பர் நியூஸ் என்னனா?.. உன் மச்சான் இன்பாவும்.. இதை கேட்டுயிருக்க வாய்ப்பு அதிகம் நினைக்கிறேன். ”
‘ வேந்தன் இன்பாவும், கமலேஷ் கேட்டனர் என்றவுடன்.. முயல்குட்டியிடம் தான் ஆசையாக கூறியதை இருவரும் கேட்டுயிருக்கிறார்கள் என்று.. சிறிது வெக்கம் வந்தாலும்.. அதனையே அவன் சாதகமாக பயன்படுத்த எண்ணினான். ‘
திருப்தி புன்னகையுடன் ” அப்படியா!.. கமலேஷ். என் மச்சான் இன்பாவிற்கும் தெரியுமா?.. அப்பாடி!.. இப்பதான் எனக்கு ரொம்ப மனம் திருப்தியா இருக்குடா. எனது விருப்பம். என் இரண்டு மச்சானுக்கு தெரிந்துவிட்டது. அதனால் என் வேலை சுலபமா.. நல்லபடியாக முடிந்துவிடும். இனி நான் வாங்கி கொடுக்கும் பூவை நீங்க யாராவது போய் உங்க தங்கச்சிக்கிட்ட போய் சேர்த்துவிடுவிங்க. இப்பவேந்தன் ஹப்பி டா.” கமலேஷ் அவனை ஓட வைக்கலாம் என நினைத்தான்.. ஆனால் அவன் தான்அந்த இடத்தை விட்டு ஓடவேண்டும் போல இருந்தது.
அந்நேரம் ஓய்வு எடுக்க சென்ற பெரியவர்கள் வந்தனர். அவர்களின் புத்துணர்ச்சிக்காக இவர்களும் சர்க்கரை இல்லாத டீ மற்றும் வேக வைத்த பருப்புவகைகளை சாப்பிட்டனர். பிறகு அடுத்து என்ன பண்ண வேண்டும்?.. என பேச ஆரம்பித்த போது.. சித்ரா அவர்களிடம் வேந்தனும்…எழிலரசி இருவருடரான.. போன் கலந்துரையாடலில் சில தகவல்கள் மற்றும் எழிலரசி.. கூறிய தன்னுடைய விருப்பம் மற்றும் வேண்டுகோளையும் கூறினார்.
பிறகு அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவர்களிடம் காண்பித்தார். தாத்தா.. பாட்டிகள் அவர்களின் ஜோடிப் பொருத்ததை ஆசைதீர பார்த்தனர்.
ரவிந்திரன் வேந்தனை பார்த்தார்…வேந்தனும் பார்த்தான். பிறகு ” அப்பா.. ” அழைத்தவன்.. எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து..
” அப்பா.. இன்னைக்கு என்னால நடந்தது எல்லாம் நல்லதுக்கு தான் நான் நினைக்கிறேன் ப்பா.. அதனால எனக்கு பல நல்ல விஷயங்கள் தான் நடந்து இருக்கு. எல்லாரும் தப்பா எடுத்துக்காதிங்க. நான் உறவுமுறை உள்ளவர்களோட திருமணம் பற்றி நீங்க என்கிட்ட பேசும் போது.. என் எண்ணத்தையும், விருப்பத்தை தெரிவித்தேன். ஆனா உங்க எல்லாரோட மனநிலைய.. நான் ரொம்ப யோசித்து கிடையாதுனே சொல்லாம்..
எப்போதும் போல கல்யாணத்திற்கு எல்லா பெற்றோர் போல நீங்க கேட்கும் போது நான் என்னோட விருப்பத்தை சொன்னேன். நீங்களும் அதன்பின்ன யாரும் ஒன்னும் சொல்ல.. அதனால நானும் என் வேலை.. ஹோட்டல், அடுத்து ஆரம்பிக்க நினைக்கும் உணவுப்பொருட்கள் தயாரிப்பு பிஸ்னஸ் அப்படியே இருந்துட்டேன். ஆனா எழிலரசி சொல்லும் போதுதான் ரொம்ப ஆழமான.. எல்லோரோட மனநிலை சம்மந்தப்பட்ட விசயமும் இருக்கு என்பது எனக்கு புரியது. அதனால நீங்க பெரியவங்க கலந்து பேசி.. எப்படி பண்ண வேண்டும்?. என்று நினைங்கிறிங்களோ!.. அப்படியே பண்ணுங்க. “
” வேந்தா.. அதனால ஒன்னும் இல்லப்பா. இப்ப உன் விருப்பத்தோட.. மருமகளோட விருப்பத்தையும் சேர்த்து நிறைவேற்ற போறோம். எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் தான். நாங்க பார்த்துக் கொள்கிறோம். “
” சரிங்க ப்பா.. ” தன் அறைக்கு சென்றுவிட்டான்.
வேந்தன் சென்றவுடன் அனைவரும் அடுத்த செய்ய வேண்டியவற்றை கலந்து ஆலோசித்தனர். பிறகு ரவிந்திரன்.. எழிலரசியின் அப்பா அருணாச்சலத்திற்கு போன் கால் செய்தார்.
” ஹலோ சம்பந்தி.. நான் ரவிந்திரன் பேசுறேன். ” ஆரம்ப பேச்சுகள்.. “ சம்பந்தி.. நாங்க.. ஞாயிறுக்கிழமை ஏற்கனவே முடிவு செய்தது போல பெண் பார்க்கும் சடங்கிற்காக வருகிறோம்.. அதனை கூறியே அனைவரையும் அழைத்துவிடலாம். ஆனால் நாங்கள் வந்து.. எழிலரசியை பார்த்த உடன் முடிவு செய்தை போல அன்றைக்கே உறுதி செய்கிறோம் எனக்கூறி அன்றைக்கே.. உறுதி நிகழ்ச்சியை நடத்திவிடலாம் தானே?. “
அருணாச்சலம் “ அப்படியே செய்துவிடலாம்.. சம்பந்தி.. ” தங்களின் சம்மதத்தை தெரிவித்து.. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பற்றி பேசி.. மகிழ்ச்சியுடன் போன்னை வைத்தனர்.
மாலை 7.30மணி.. எழிலரசி அவள் தோழி சத்யா மற்றும் தன் சித்தி மகள் தங்கை பிரியதர்ஷினியுடன் வெளியில் வந்துயிருந்தவள்.. ” தர்ஷினி.. வாங்குறத வாங்கியாச்சா. இன்னும் எவ்வளவு நேரம் தான் ஆகும்?. இன்னும் சாப்பிட்டு வேற போகனும். நேரம் ஆகுது சத்யா.. அம்மாட்ட சீக்கிரமா வரேன் சொல்லியிருக்கேன். இன்பா அண்ணா வரமாதிரி இருந்தா பரவாயில்ல.. “ சீக்கிரம் வீட்டிற்கு சொல்ல வேண்டி கெஞ்சி கொண்டு இருந்தாள்.
” என்ன எழில் நாம்ம ஏற்கனவே இன்னைக்கு வெளியில் வர முடிவு செய்திருந்தது. எவ்வளவு பிளான் போட்டு இருந்தேன்?.. அதிசயம்மா இன்னைக்கு நீ தூங்கி.. அதனால லேட்டா வந்தது நீ. அவ்வளவு தான் முடித்துவிட்டோம். நீதான் உனக்கு ஒன்னும் வாங்க மாட்ட.. எங்களுக்கு பார்த்து எடுத்துக் கொடு.. சீக்கிரம் வேலை முடியும். ” என்று சில பல அணிகலன்களை வாங்கிக் கொண்டுயிருந்தாள்.
“அக்கா நீ ரொம்ப பெரியம்மாவிற்கு பயந்த மாதிரி.. எங்களை அவசரபடுத்தாதீங்க. அதெல்லாம் சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம். ” என தங்கையும் நிதானமாக பொருட்களை தேர்ந்தெடுக்க..
தங்கையை முறைத்து.. அவர்களுக்கு தேவையானதை அவளும் எடுத்துக்கொடுத்து.. ஒரு வழியாக அவர்களது தேவையான பொருட்களை வாங்கி முடித்துவிட்டு அவர்களது பிடித்த மாலை நேர.. சிற்றுண்டி கடைக்கு வந்தனர்.
அந்த சிற்றுண்டி கடை சாலையின் ஓரத்தில் அமைந்து இருக்கும். அவர்களது பள்ளித் தோழியின் அப்பா கடை. அதனால் கடையின் பக்கத்தில் நின்று கொண்டு விரும்பிய சிற்றுண்டிகளை வாங்கி.. நன்றாக கதை அடித்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு கிளம்புவர். இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக தோழிகள் மட்டுமே வருவர். அவர்கள் இதுபோல வெளியில் வரும்போது இங்கு வந்து.. அதன்பிறகு தான் வீட்டிற்கு வருவார்கள் என்பது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும்.
மூவரும் கையில் வைத்துக் கொண்டு சாப்பிட்டுயிருந்தனர்.. ” இப்ப சொல்லுங்க மேடம்.. நேத்து வரைக்கும் கல்யாணம்.. மாப்பிள்ளை என்று எதை பற்றியும் பேசாம.. கூறாம இருந்துட்டு.. இப்ப என்னடானா!. மாப்பிள்ளையை பார்த்தேன்.. பேசினேன்.. சம்மதம் சொன்னேன். அப்படினு ஒருவரில.. போன்ல சொல்லுற.. என்ன நடந்தது?.. ஒழுங்கா எல்லாத்தையும் இப்பவே சொல்லுற. “
” சொல்லுறேன்.. சொல்லுறேன். ஆனா இங்க இல்ல.. நாளைக்கு வீட்டுக்கு வா.. சொல்லுறேன். ”
” அக்கா.. அப்ப மாமாவோட போட்டோவாவது காமிங்க. ”
” நாளைக்கு வீட்டுக்கு வா தர்ஷினி.. இப்ப என்னால எதுவும் சொல்ல முடியாது. ”
” ஏதோ ரகசியம் பாதுகாப்பது போல பாதுகாக்கற.. வீட்டுக்கு வந்து கேட்டுக்கிறேன். அட்லிஸ்ட்.. அவங்க எப்படி இருப்பாங்க?.. என்றாவது சொல்லேன் டி. ” தோழி கூறியதற்கு.. ஆமாம் என்பது போல தர்ஷினியும் தலையை ஆட்டினாள்.
சொல்லாமா விடமாங்க போல என நினைத்து..” எப்படி இருப்பாங்க தெரியும்மா?.. என்னை கம்பேர் பண்ணும் போது உயரம் கொஞ்சம் அதிகமா.. உயரத்திற்கு ஏற்ற எடையா.. மாநிறத்திற்கு அதிக கலரா இருப்பாங்க இப்போதைக்கு அவ்வளவுதான். அப்புறம் நேர்ல வரும்போது பார்த்துக் கொள்ளுங்க. “
” இப்படி சொன்னா.. எப்படி அக்கா ??.. யாரையாவது அடையாளம் காட்டு.. க்கா..” என்று தங்கை கூற.. அவளை முறைத்து.. பதில் கூறவரும் போது..
” ஹேய் எழில்.. அங்க நிக்கிறார் பாருடி.. அவரை மாதிரி இருப்பாங்களா?.. “
தன் அக்கா போலான இன்னொரு அக்கா சத்யா கூறியவுடன்.. தர்ஷினி ஆவலுடன் வேகமாக திரும்பி பார்க்க.. பார்த்துவிட்டு.. ” அக்கா.. எனக்கு சத்யா அக்கா கைகாட்டினவர்.. இங்கேயே பார்ப்பது போல இருக்கு க்கா. ” என்று ஒருவித பதட்டதுடன் கூற..
தர்ஷினி கூறியதும் எழிலரசியும் திரும்பி பார்க்க.. பார்த்தது பார்த்த படியே நின்றாள். இவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தவன்.. இவர்களை பார்த்து புன்னகைத்தான். பிறகு லேசாக கையை ஆட்டி.. ‘ ஹாய் ‘ சைகை செய்தான்.
சத்யாவும்.. தர்ஷினியும் பயந்துவிட்டனர். அவர்களுக்கு வம்பை விலைக்கொடுத்து வாங்கிவிட்டோமா?.. என்று தோன்றியது. இருவரும் பார்த்துக் கொண்டு இருந்தபோதே.. அவன் அவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.