“அதுக்கு…”, என்று சொல்லி கொண்டே அவன் மேலே கையை வைத்தாள் பஞ்சு
“இவ என்ன செய்றா?”, என்று நினைத்து கொண்டு அமைதியாக நின்றான்.
அவனுடைய உடையை கழட்டி கொண்டிருந்தாள் பஞ்சு.
“ஏய் பிராடு, என்ன டி பண்ற?”, என்று சிரித்து கொண்டே கேட்டான் ஆதி.
“ஹ்ம்ம் உங்களுக்கு சோப்பு போட போறேன் மாமா”, என்று சிரித்தாள் பஞ்சு.
“உன்னை குளிக்க வைக்க வந்தா நீ என்னை குளிக்க வைக்கிறியா? அப்புறமா ரெண்டு பேரும் சேர்ந்தே குளிக்கலாம்”, என்று சொல்லி கொண்டே அவளை கைகளில் அள்ளினான் ஆதி.
“ஹ்ம்ம் மாமா ஈரமா இருக்கு பாவாடை”, என்று சிணுங்கினாள் பஞ்சு.
அவளை கட்டிலில் விட்டு விட்டு, அவள் மேல் படர்ந்தவன் “ஈரமா இருந்தா, அதை எதுக்கு போட்டுருக்க?”, என்று கேட்டு கொண்டே ஒரு போர்வையை எடுத்து தங்கள் மேல் மூடினான்.
சிரித்து நேரம் கழித்து, அவன் மார்பில் தலை சாய்ந்து படுத்திருந்தாள் பஞ்சு. ஈரமாக இருந்த அவள் கூந்தலில் வாசம் பிடித்து கொண்டிருந்தான் ஆதி.
அவன் செய்கையில் கூசி சிலிர்த்தது அவள் தேகம்.
“மாமா”
“ம்ம்”, என்ற படி இன்னும் இறுக்கினான் ஆதி.
அவனுடன் இழந்தவள் “மாமா”, என்று மறுபடியும் அழைத்தாள்.
“எதுவோ பேச போகிறாள்”, என்று புரிந்து கொண்டு அவள் கழுத்து வளைவில் இருந்து எழுந்து, அவள் முகம் பார்த்தான் ஆதி.
“என் மேல கோபம் போய்ட்டா மாமா?”
“கோபம் போகாமலா இப்படி கொஞ்சிட்டு இருக்கேன். வாழ்க்கைன்னா என்ன? காதல்ன்னா என்னனு புரிஞ்சிக்கிட்டாலே போதும் வர்ணா. என்னைக்குமே நீ படிக்கலை அப்படினு குறைவா நினைக்க மாட்டேன். நான் ரொம்ப படிச்சிருக்கேன்னு திமிராவும் நினைக்க மாட்டேன். உனக்கும் சேத்து நான் படிச்சிருக்கேன்னு தான் நினைப்பேன்.
உனக்கு தெரியாததை சொல்லி கொடுப்பேன். ஆனா, நீ உன் மனசில் நினைவு வச்சிருக்குறது எல்லாமே என்னோட காதலை மட்டும் தான். கொஞ்சம் இல்லடி உயிருக்கு உயிரா உன்னை விரும்புறேன். நீ மொத்தமும் எனக்கு சொந்தம்னு நம்புறேன். உன்னை உன்னோட செய்கையை எல்லாமே ரசிக்கிறேன் வர்ணா.
அம்மா எப்பவுமே சந்தோசமா இருக்கணும்னு நினைப்பாங்க. ஆனா அப்பா இருந்த வரைக்கும் அவங்க சிரிச்சதே இல்லை. அதுக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேர் மட்டும் எப்படி சிரிச்சிட்டு இருக்க முடியும் சொல்லு. நீ வந்த பிறகு தான் எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. அப்புறம் சீனி பூவு, மொத்த குடும்பமா நிம்மதியான வாழ்க்கை வாழுறேன் டி.
அதுவும் பூவு பண்ணுற சேட்டை, அவ கிட்ட சீனி மாட்டிகிட்டு முழிக்கிறது செம சிரிப்பா இருக்கும். வாழ்க்கையே வண்ணமயமானதா இருக்கு வர்ணா. இது எல்லாமே உன்னால தான். ஆனா ஒன்னும் மட்டும் இனி செய்யாத வர்ணா”
“என்ன மாமா?”
“யாராவது கூப்பிட்டா, ஓடுறேன்னு சொல்லி என்னை கீழே தள்ளி விட்டுட்டு ஓடாத. நீ ஓடுனாலே நான் கீழ விழுந்து கிடக்கிறேன்”, என்று சிரித்தான் ஆதி.
“போங்க மாமா”
“அப்புறம் வர்ணா, உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நினைச்சேன். நாங்க உங்க வீட்டுக்கு வந்துருந்தப்ப, எதுக்கு டி சிகரெட் குடிச்சிட்டு இருந்த?”
“ஐயையோ அதை நீங்க எப்ப பாத்தீங்க?”
“அதை அன்னைக்கே பாத்தாச்சு. பதில் சொல்லு”
“அது சிகரெட் இல்லை மாமா. பீடி”
“எந்த கழுதையோ? எனக்கு அந்த வாடையே பிடிக்காது”
“அது சும்மா குடிச்சு பாத்தா எப்படி இருக்கும்னு தோணுச்சு. பூவு வேற உன்னால முடியாது முடியாதுனு சொல்லிட்டே இருப்பாளா? அதான்”
“இனி இப்படி ஒரு விபரீத முடிவு எல்லாம் எடுக்க கூடாது வர்ணா. ஏன்னா இது என்னோட உதடு”, என்று சொல்லி கொண்டே அவள் மீது கவிழ்ந்தான் ஆதி.
அவன் முதுகில் அவள் கைகள் பதிந்தது. அவளை வளைத்து பிடித்தவனின் கைகள், எல்லை மீற ஆரம்பித்தது. அவன் தொடுகையில் கரைந்தே போனாள் பஞ்சவர்ணம்.
சில வருடங்களுக்கு பிறகு….
“வேலை முடிஞ்சிட்டா சீனி? வீட்டுக்கு கிளம்பலாமா?”, என்று
கேட்டான் ஆதி.
“ஹ்ம்ம் போலாம் டா. இன்னைக்கு என்ன கூத்து நடக்குதோ?”, என்றான் சீனி.
“தெரிஞ்ச விஷயம் தான? நான் நம்ம பிள்ளைங்களை வச்சி அவங்களை கவுக்கலாம்னு பாத்தா, குட்டிஸ் ரெண்டையும், நம்ம தலைல கட்டிட்டு இன்னும் ஆட்டம் போடுறாங்க. எல்லாத்துக்கும் காரணம் அம்மா தான் டா. ஓவரா சேட்டை பண்ண ரெண்டு பேருக்கும் சொல்லி கொடுக்குறா”
“நீ சும்மா இரு டா ஆதி. அம்மாவை திட்டாத. அம்மா பாவம். எல்லாம் பூவு தான் காரணம். ராங்கி ரங்கம்மா”
“நீ என்னைக்கு அம்மாவை திட்டிருக்க? சரி வா போலாம்”, என்று நடந்தான் ஆதி. அவனுடனே வந்தான் சீனி.
இருவரும் வீட்டுக்கு வந்தார்கள்.
வீட்டு வாசலில், ஆதியின் மகன் அர்ஜுனும், சீனியுடைய மகள் கீர்த்தனாவும் கன்னத்தில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
“என்ன டா இது? ரெண்டு பேரும் இப்படி உக்காந்துருக்காங்க?”, என்று கேட்டான் சீனி.
“இரு கேட்டா தான் தெரியும்”, என்று சொல்லி விட்டு தன் மகன் அருகே அமர்ந்தான் ஆதி.
“அஜூ குட்டி என்ன டா, பாப்பா கூட வெளியே உக்காந்துருக்க?”, என்று கேட்டான் ஆதி.
“அப்பா, உள்ளே சித்தி, அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க. பாட்டி உக்காந்து கை தட்டிட்டு இருக்கா. மூணு பேரும் ஒரே அட்டகாசம். பாட்டு சத்தத்தில் காது வலிக்குது. அதான் நானும், கீர்த்தி பாப்பாவும் இங்க வந்து உக்காந்துட்டோம்”, என்றான் அர்ஜுன்.
“ஐயையோ உங்களையுமா மூணு பேரும் இப்படி கொடுமை படுத்துறாங்க? உங்க அம்மா சரியே இல்லை டா. நாம வேற அம்மா வாங்கிறலாம் சரியா டா அஜூ குட்டி”, என்றான் ஆதி.
“ஐ ஜாலி புது அம்மா”, என்று குதித்தான் அர்ஜுன்.
“எனக்கும் எனக்கும்”, என்பதை சொல்ல தெரியாமல் “நேக்கும் நேக்கும்”, என்று கத்தினாள் கீர்த்தனா.
“பாத்தியா டா சீனி, நான் இவங்களை வச்சு நிறைய பிளான் போட்டிருந்தேன் டா. பாத்தா பிள்ளைகளையும் படுத்துறாங்க. இப்ப எதுக்கு டேன்ஸ்? எந்த போட்டியில் கலந்துக்க போறாங்களாம். எல்லாத்துக்கும் காரணம் இந்த சகு தான்”, என்றான் ஆதி.
“அம்மாவை சொல்லாத டா, எல்லாம் அந்த பூ வேலையா தான் இருக்கும்”, என்று அர்ஜுனை தூக்கி கொண்ட சீனி. “உங்க சித்தி தான முதலில் ஆடுனா?”, என்று கேட்டான்.
“ம்ம் ஆமா, பாட்டி போர் அடிக்குன்னு சொன்னா. சித்தி தான் டான்ஸ் ஆடுமான்னு கேட்டாங்க. அம்மா தான் பாட்டு போட்டு விட்டாங்க”, என்று சொன்னான் அர்ஜுன்.
“பாத்தியா டா நான் சொன்னேன்ல?”, என்று சொன்னான் சீனி.
அர்ஜுனை சீனி தூக்கி இருந்ததை பார்த்து “ஆதிப்பா தூக்கு”, என்று ஆதியிடம் கையை நீட்டினாள் கீர்த்தி.
அவளை தூக்கி கொண்ட ஆதி “இவங்க அட்டகாசம் தாங்கலை டா கதவை திற. என்ன கூத்து செஞ்சிருக்காங்கன்னு பாப்போம்”, என்றான்.
“ம்ம்”, என்று சொல்லி கதவை திறந்தான் சீனி.
திறந்தவுடன் “டண்டணக்கா நக்கா நக்கா”, என்ற பாடல் வீட்டையே அதிர வைத்தது. அங்கே ஆடி கொண்டிருந்தார்கள் இருவரும். கையை தட்டி ரசித்து சிரித்து கொண்டிருந்தாள் சகுந்தலா.
“குத்தாட்டம்ன்னா அப்படி ஒரு குத்தாட்டம் டா ஆதி”, என்று சொன்னான் சீனி.
“ஆமா நீ இதை ரசிக்க வேற செய்”, என்று சொல்லி கொண்டே பாட்டை நிறுத்தினான்ஆதி.
ஆதியின் கைகளில் இருந்து இறங்கி, சகுந்தலா மடி மீது அமர்ந்து கொண்டாள் கீர்த்தனா.
சீனியின் கைகளில் இருந்து இறங்கிய அர்ஜுன், நேராக பஞ்சு அருகில் சென்று அவள் சேலையை பிடித்து இழுத்தான்.
“என்ன அஜ்ஜு பாப்பா?”, என்று கேட்டாள் பஞ்சு.
“என்னை பாப்பா சொல்லாதம்மா”, என்று சிணுங்கினான் அர்ஜுன்.
“போடா அப்படி தான் சொல்லுவேன்”, என்று வம்பிழுத்தாள் பஞ்சு.
“அப்ப போ. நீ எங்களுக்கு வேண்டாம். நாங்க வேற அம்மா வாங்க போறோம். அப்பா சொல்லிட்டாரு. எங்களுக்கு புது மம்மி கிடைக்க போறா. அப்படி தான பா? எ பார் ஆப்பிள் சொல்லித்தராம, எ பார் அணில்னு சொல்லி தாரா பா. இந்த அம்மா வேண்டாம்”, என்று சொன்னான் ஆதி.
“டேய் மச்சான் ஓடிரு டா, உன் வாரிசு போட்டு கொடுத்துட்டான்”, என்று அலாரம் கொடுத்தான் சீனி.
“அங்க பாரு, உன்னோட மகளும் அங்க உண்மையை உளறிட்டு இருக்கா. நீயும் தப்பிச்சிக்கோ சீனி”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குள் ஓடியே போனான் ஆதி. அவன் பின்னே விரட்டி போனாள் பஞ்சு.
“என்ன சொல்றான்?”, என்று திரும்பி பார்த்தான் சீனி. அங்கே “நேக்கும் புது மம்மா”, என்று கூவி கொண்டு அர்ஜூனுடன் ஆடி கொண்டிருந்தாள் கீர்த்தனா.
“எங்க நம்ம ஆளை காணும்?”, என்று நினைத்து கொண்டே தலையை திருப்பினான் ஆதி.
அங்கே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வந்த பூவு, “ஏன்யா, பிள்ளைக கிட்ட புது அம்மா கொண்டு வரேன்னா சொல்லிருக்க. இரு இப்ப பாரு கச்சேரியை”, என்று சொல்லி கொண்டே அவன் தலையில் அபிஷேகம் செய்தாள்.
“ஏய் பூ குட்டி, விட்டுரு டி. மச்சான் தெரியாம சொல்லிட்டேன்”, என்று சமாதான படுத்த வந்தான் சீனி.
“அர்ஜுன் அந்த கிரிக்கெட் பேட்டை எடு, உங்க சித்தப்பா மேல விளையாடுவோம்”, என்று சொன்னாள் பூங்கோதை.
“ஐயையோ என் மேலயா?”, என்று அலறி கொண்டே ஓடினான் சீனி. அதை பார்த்து குழந்தைகள் சிரித்தார்கள்.
“பூவு, இன்னைக்கு சீனிக்கு ஒத்தடம் கொடுக்கணும். அது வரைக்கும் அவனை விட்டுறாத”, என்று சொன்னாள் சகுந்தலா.
“உங்க ஆசிர்வாதத்துக்கு தான் வெயிட்டிங் அத்தை. இதோ போறேன்”, என்று சொன்னவள், அவர்கள் அறைக்குள் சென்றாள்.
பாத்ரூமுக்குள் இருந்து தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தான் ஆதி. பஞ்சுவை காணவில்லை. “அப்பாடி அவ வரலை. எதுக்கும் எங்கயாவது இருக்காளான்னு பாப்போம்”, என்று நினைத்து கொண்டு அவர்கள் அறையில் பார்த்தான்.
“ஐயா ஜாலி இல்லவே இல்லை”, என்று நினைத்து கொண்டு, கட்டிலில் அமர்ந்தவன் அடுத்த நொடி அலறினான்.
கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்த பஞ்சு, அடுத்த நொடி அவன் மீது ஏறி அமர்ந்து அவனை கும்மினாள்.
“ஆ விடு டி”
“விடுறதா? புது அம்மா கொண்டு வர போறியா? கொன்னுருவேன் டா. எவ்வளவு திமிரு?”, என்று சொல்லி மேலும் அடியை போட்டாள்.
“ஐ ஜாலி ஜாலி. அப்பா மேல ஏறி இன்னைக்கு விளையாட போறோமா?”, என்று கூவி கொண்டே உள்ளே ஓடி வந்தான் அர்ஜுன்.
“டேய் அஜ்ஜு குட்டி அம்மா என்னை அடிக்கிற டா. அப்பாவை காப்பாத்து டா”, என்று கெஞ்சினான் ஆதி.
அப்போது “அர்ஜுன் இங்க வா”, என்று அழைத்தாள் சகுந்தலா.
ஓடி போய் விட்டு திரும்பி வந்த அர்ஜுன் “அம்மா அப்பாவை கை வச்சி அடிக்காத. இதை வச்சு அடி. பாட்டி கொடுத்து விட்டா”, என்று சொல்லி பூரி கட்டையை கொடுத்தான்.
“கொடு டா அஜ்ஜு பாப்பா”, என்று சொன்னவள் அதை வாங்கி அடிக்க போனாள்.
“உங்க சித்தப்பா எங்க டா?”, என்று கேட்டான் ஆதி.
“அங்க சித்தி அடி பின்னிட்டு இருக்காங்க. அதை பார்த்துட்டு தான் இங்க வந்தேன்”, என்று சிரித்தான் அர்ஜுன்.
“அர்ஜுன் பாட்டி கிட்ட சாக்லேட் கொடுத்திருக்கேன். அதை வாங்கி நீயும், கீர்த்தி பாப்பாவும் சாப்பிடுங்க”, என்றான் ஆதி.
“ஐ சாக்கி சாக்கி”, என்று ஓடினான் அர்ஜுன்.
“அர்ஜுன்”, என்று அழைத்தான் ஆதி.
“என்ன அப்பா?”
“கதவை வெளிய பூட்டிட்டு போ. அப்பா சொல்லும் போது தான் திறக்கணும் சரியா?”
“ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி விட்டு அர்ஜுன் ஓடிய பிறகு, அடிக்க வந்து பஞ்சுவின் கைகளை பற்றி கொண்டவன், அவளை கீழே தள்ளி அவள் மேலேயே படுத்தான்.
அவன் கைகளுக்குள் சிக்கிய பஞ்சு “மாமா என்னது இது? இந்த நேரத்தில் எந்திரிங்க”, என்று சத்தமே வராத குரலில் சொன்னாள்.
அவள் கழுத்தில் முத்தம் பதித்தவன், “விடுறதுக்கா பிடிச்சிருக்கேன்?”, என்று சொன்ன ஆதி தன் வேலையை ஆரம்பித்தான்.
அவன் தொடுகையில் அவனுடன் இழைந்த பஞ்சு, அடிக்க வந்ததையே மறந்தாள். இவர்களின் காதல் மலர்ந்து கொண்டே இருக்கும்…..
காதல் மலர்ந்தது…. முற்றும்!!!