திருப்பூரில் மெல்லிய மழை சாரலாய் நிலவரம் இருக்க இங்கே சென்னையிலோ ஒரு தென்றல் புயலாகி இல்லை இல்லை ஒரு புயலே பூகம்பமாகி ஒருவனை சுழற்றி எடுக்க காத்து இருந்தது.
கையில் அகப்படும் பொருட்களை எல்லாம் அவள் டங்கு டங்கு என்று வைப்பது எடுப்பதிலே அவள் கோபமாய் இருப்பது புரிய மதியம் நடந்த விஷயத்தை உதயாவும் கேட்டு இருப்பாளே என்று அப்பொழுது தான் உணர்ந்தான் அவளது அன்பு கணவன்.
‘போச்சுடா…அவ அண்ணனை பத்தி சும்மா ஒரு வார்த்தை சொன்னாலே வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவா..இன்னைக்கு கொஞ்சம் அதிகபடியா வாய் விட்டேன்..என்ன செய்ய காத்திருக்காளோ…போறப்போக்கில் கொளுத்தி போட்டு தனியா இவளுட்ட சிக்க வைச்சுட்டு போயிட்டாங்களே..ஈஸ்வரா உன் பிள்ளையை காப்பாத்து ப்பா..’
என்று எண்ணி மொத்தமாய் மௌனகுருவாய் மாறிவிட்டான் உதய்.அவள் கோபத்தைவிட பதிலுக்கு தான் எதாவது பேசிவிட்டால் இன்னும் சிக்கலாகி விடுமே என்ற எண்ணத்தில்..
மதியம் செய்த உணவு இருந்ததால் அதனை சூடு செய்து இரவு சாப்பிட அவள் முறைப்புக்கும் முக திருப்பல்களுக்கும் அசையாது இருந்தாலும் ‘என் பக்கம் இருந்து யாருமே யோசிக்க மாட்டாங்களா..’ என்ற வருத்தமும் எழுந்தது.
சாப்பிட்டு அவள் அறைக்கு சென்ற பின்பும் இவன் ஹாலிலே டிவியை போட்டு அமர்ந்து விட்டான்.
ஐந்து நிமிடங்கள்…பத்து…பதினைந்து….!!
பட்டென்று கதவு திறக்கப்பட்டது.
“நீங்க செய்றது உங்களுக்கே நல்லா இருக்கா..”
“ஏன் நல்ல படம் தானே..நல்லா தான் இருக்கு…”
என்றவன் அவள் பார்த்த பார்வையில் கப்பென்று வாயை மூடிவிட்டான்.
“அதெப்படிங்க..எதுவுமே நடக்காத மாதிரி உங்களால மட்டும் இவ்வளவு கேஷ்வலா இருக்க முடியுது..”
“இப்ப என்னாகி போச்சு..”
“இன்னும் எதாவது ஆகணுமா..உங்களுக்கு அப்படி என்ன மதிண்ணா மேல வெறுப்பு..அவரை அவமானம் படுத்தணும்னே கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கீங்களா..”
“எனக்கு யாரையும் வெறுக்கணும்னோ அவமானம் படுத்தணும்னோ எண்ணம் இல்ல சரியா..!அவர் பேசுனதுக்கு பதில் சொன்னேன்..அவ்வளவு தான்..”
“அதுக்கு..இப்படி தான் பதில் சொல்வீங்களா..முகத்துல அடிச்சா மாதிரி..மதிண்னாட்ட யாருமே இப்படி எடுத்து எறிஞ்சு பேசமாட்டோம் தெரியுமா..?? நீங்க முறுக்கிட்டு நின்ன போதும் கூட எங்க அண்ணனா தான் ஈகோ பார்க்காமல் இறங்கி வந்து பேசினாங்க..அதுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுத்தீங்களா..”
“என்னிடம் எப்படி பேசுறாங்களோ அப்படி தான் என் பதிலும் இருக்கும்..” என்றவன்,
“எதுவும் வாங்க வேண்டாம்னு நான் சொன்னதையும் மீறி அவங்க இஷ்டத்துக்கு வாங்கி வைச்சாங்களே நான் எதாவது சொன்னேனா..அமைதியா தானே இருந்தேன்..என் வார்த்தையை மீறி அவங்க செஞ்சது மட்டும் ரொம்ப மரியாதையான செயலோ..” என்று சொல்லும் போது அவனுக்கும் கோபம் ஏறியிருந்தது.
“அப்போ..அதை மனசுல வைச்சிக்கிட்டு தானே அப்படி பேசினீங்க..”
“இதோ பார்..நான் மறுபடியும் சொல்றேன்..உங்க அண்ணன் பேசுனதுக்கு தான் நான் பதில் சொனேன்..சும்மா இருந்தவனை உங்க அண்ணனா வந்து தான் ஒரண்டை இழுத்தார்..”
“என்ன பேசினாங்க பேசினாங்கன்னு சொல்றீங்க..உங்களுக்கு நல்லதுதானே சொன்னாங்க…”
“எது என் ஃபுரஃபஷனை கேவலப்படுத்தி பேசுறது எனக்கு நல்லதா..? இப்ப நான் இருக்கிற இடத்துக்கு வர நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா..? ஈஸியா உனக்கு வேற வேலையே கிடைக்கலையாங்கிற மாதிரி பேசுறாங்க…ஏன்..நான் என்ன பிச்சையா எடுக்கிறேன்..”
“அண்ணா அந்த அர்த்ததில் சொல்லலை உதய்…சினிமா மேல எல்லாருக்கும் இருக்கும் பொதுவான ஒரு அப்பிராயம் தான் மதிண்ணாக்கும்..!! உங்களுக்கு டெக்ஸ்டைல்ஸ் ஃபில்ட்லையும் நல்ல திறமை இருக்கு..அதை நீங்க இன்னும் வளர்த்துக்கலாம்னு உங்கமேல உள்ள அக்கறையில் தான் சொன்னாங்க..”
“அக்கறை..!??! நான் அவர் மனைவியோட தம்பியா இருந்தப்ப இல்லாத அக்கறை..உன் புருஷன் ஆனதும் புதுசா முளைச்சிடுச்சா..அந்த ‘அக்கறை’ எனக்கு தேவையே இல்லை…”
என்றவன் மூச்சை இழுத்துவிட்டு, “வேணாம் என்னை மேல பேச வைச்சு பார்க்காத..அப்புறம் கண்டிப்பா வார்த்தையிலும் மரியாதை இருக்காது..”
என்றவன் குரலில் அதட்டலா..மிரட்டலா..தெரியவில்லை.
ஆனால் அவளால் அந்த குரலை மீற முடியவில்லை. டிவியை வேகமாய் அணைத்துவிட்டு அவளை தாண்டிக்கொண்டு அறைக்குள் சென்று படுத்துவிட்டான்.
உதயாவை கோபமும் ஆற்றாமையும் தாக்க எதுவும் செய்ய இயலாதவளாய் அவன் அமர்ந்திருந்த சோபாவில் சென்று உட்கார்ந்துக் கொண்டாள்.
கடிகாரம் முள் சுழன்று பன்னிரெண்டில் வந்து நிற்க,
“உதயா..இப்ப தூங்க வர போறீயா இல்லையா..”
என்று அவன் அங்கிருந்தே குரல் கொடுக்க,
“முடியாதுடா..”
என்று அவள் பட்டென்று சொல்லவும்,
“ஏய்..என்ன டா போட்டு பேசுற..”
எழுந்து வந்து அவன் முறைக்க பதிலுக்கு தானும் முறைத்தவள்,
“ஆமாடா..அப்படி தாண்டா..சொல்லுவேண்டா..என்னடா செய்வ..”
என்று எகிற இன்னும் முறைத்துவிட்டு, “இங்கேயே உட்கார்ந்துகோ எனக்கென்ன..”
என்று வெடுக்கென்று கூறி அவன் உள்ளே போய்விட ரயில் இஞ்சினாய் புஸுபுஸுவென மூச்சுவிட்டபடி அமர்ந்திருந்தவள் எப்பொழுது சாய்ந்தாள் எப்பொழுது கண்ணயர்ந்தாள் என்று தெரியவில்லை.
மீண்டும் உறக்கம் கலைந்தபோது சோபா அருகில் கீழே படுக்கை விரிக்கப்பட்டு அவளும் அவள் பக்கத்தில் அவனும் படுத்திருந்தனர்.அவள் தூங்கியபின் அவன் செய்த வேலையாக இருக்கும்..!!
தூங்கி எழுந்ததாலோ என்னவோ நேற்றைய கோபம் மட்டுப்பட்டு இருந்தது.அதிலும் எப்படியோ போ என்று போனவன் அப்படியே விட்டுவிடாமல் தானும் வந்து படுத்துக் கொண்டதில்,
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..”
என்று உதட்டை கோனி நொடித்துக் கொண்டாலும் கோபம் குறைய அதுவும் காரணம் தான்.
அவள் எழுந்து அமரும் போதே அவனும் விழித்துவிட தன்னையே குறுகுறுவென பார்த்தவளை கண்டு,
“குட் மார்னிங் பேபி..”
என்று விரிந்த சிரிப்போடு சொல்ல, ‘அட அம்னீசியாக்கு பொறந்தவனே..’ என்று வாயில் கைவைக்க தோன்றியது.
“என்ன பார்க்கிற..”
“இல்ல நீங்க இப்ப தான் இப்படியா..இல்ல எப்பவுமே இப்படி தானா..”
அவனை மேலும் கீழும் பார்த்து கேட்க படுத்த வாக்கிலே கால்மேல் கால் போட்டு தலையை ஸ்டைலாய் சிலுப்பி,
“ஐயா..அப்பவும் இப்பவும் எப்பவும் ஒரே மாதிரி தான்..”
என்று சொல்ல,
“இதெல்லாம் செஞ்சா எனக்கு கோபம் போயிடும்னு நினைச்சீங்களா..”
விரிப்பை சுட்டிக் காட்டி அவள் ஸ்ரிக்ட்டாய் கேட்க,
“கோபமா..எதுக்கு கோபம்..என்னாச்சு..”
என்று அப்பாவியாய் அவன் கேட்கவும் முறைக்க,
“ஹிஹி..அக்ச்சுவலி உன்னை ரூம்மிற்கு தூக்கி போக தான் ட்ரை பண்ணேன்..ஆனால் பார்…எனக்கு முன்ன பின்ன அரிசிமூட்டை தூக்கி பழக்கம் இல்ல..”
என்று அவன் வம்பிழுக்க அவள் பத்ரகாளியாய் உருமாறிவதை உணர்ந்து,
“ஆத்தா..நான் இல்ல..” என்று எழுந்து உள்ளே ஓடிவிட்டான்.
அன்று மீண்டும் ஆபிஸ் செல்ல இருப்பதால் அதன்பின் வேலைகள் பின்னிக் கொள்ள அவனோடு சண்டையிட நேரமில்லை.ஆனால் உதய் எங்கும் கிளம்பும் அறிகுறியே இல்லை.ஷூட்டிங் இருந்தாலும் இல்லை என்றாலும் டிஸ்கஷனிற்கு தவரூபனின் அலுவகத்திற்கு தினமும் சென்றுவிடுவான் என்பது அவளுக்கு முன்பிருந்தே தெரியும்.
‘ஏன்..வேலைக்கு போகலையா..’ என்று கேட்க தோன்றினாலும் ஈகோ அவள் வாயிக்கு பூட்டு போட்டுவிட்டது.அவனாக எதாவது சொல்வான் என்று பார்க்க ம்ஹூம்..எங்கே நிதானமாய் காஃபியை இரசித்து குடிப்பதில் பிஸியாக இருந்தான்.
சமைக்கும் போது அருகில் வந்து நின்றவன்,
“எதாவது ஹெல்ப் வேணுமா..” என்று கேட்க அதற்கும் மேல் வாய் பூட்டை விடுவித்து,
“ஏன்..நீங்க ஆபிஸ் போகலையா..”
என்று கேட்க நிமிர்ந்து ஒருபார்வை பார்த்தவன்,
“மதியம் தான் ஒருத்தரோட மீட்டிங்..இப்ப எந்த வேலையும் இல்ல..”
என்று தோளை குலுக்க எதையோ அவன் சொல்லாமல் விட்டு பேசுவதுபோல் தோன்றியது.
மேலே யோசிக்க நேரம் இல்லாமல் விடுமுறை முடிந்து முதல் நாள் பள்ளி செல்லும் மாணவிபோல் ஒவ்வொரு வேலை செய்யவும் சலித்த உடலையும் மனதையும் இழுத்துக் கட்டி அலுவலகம் தயாராகி வருவதற்குள் போதும் போதும் என்றானது.
உதய்யே ட்ராப் செய்வதாக கூற அவளும் மறுக்கவில்லை.அலுவலகத்தில் இறக்கிவிட்டவன்,
“ஆபிஸ் முடியும் போது டெக்ஸ்ட் பண்ணு..அதுக்குள்ள என் வேலை முடிஞ்சுருச்சுன்னா நான் பிக்கப் பண்ணிக்கிறேன்..இல்லேன்னா..கேப்ல வந்திடுவேல..?”
என்று கேட்டவனிடம் பதிலின்றி அவள் சரி என்பதாய் தலையசைத்து அவனுக்கு விடைக்கொடுக்க உம்மென்று இருக்கும் அவளை அப்படியே விட்டு செல்ல மனமே இல்லை.
“போதும் உதயா..உனக்கு இந்த அமைதி எல்லாம் செட்டே ஆகல..எங்க சிரிச்சிட்டே டாட்டா சொல்லு பாப்போம்..”
அக்ஸிலேட்டரை திருகியபடி நின்றவன் சொன்னதை செய்யாத வரை நகர மாட்டான் என்று உணர்ந்து உதட்டை இழுத்து வைத்து புன்னகைக்க முயல அதில் புன்னகையில் மலர்ந்து அவன் முகத்தை கண்டு தானாய் ஒரு அழகிய சிரிப்பு அவளிடம் தொற்றிக் கொண்டது.
திருப்தி பெற்றவனாய் விடைப்பெற்று சென்றுவிட இவள் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
திருமணம் முடிந்து தற்போது தான் வருவதால் தெரிந்தவர்கள் நலம் விசாரிக்க அனைவருக்கும் பதில் சொல்லி தன் இடத்திற்கு வரும்போது,
“உதயா டார்லிங்..”
என்று அணைத்துக் கொண்ட கல்பனாவை பார்த்ததும் அவளுக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
“என்னாஆஆ மச்சி..ஒரு ஃபோன் கால் கூட இல்ல..செம்ம பிஸி போல…”
என்று கண்சிமிட்டியவள்,
“அது சரி..யாருன்னு தெரியாத போதே மேடம் சைட்டோ சைட்டு அடிப்பீங்க..இப்ப சொல்லவும் வேணுமா..நான் எதுவும் கேட்கலப்பா..மீ பச்ச மண்ணு..”
என்று வம்பிழுக்க அவள் தோளில் ஒன்று வைத்தவள்,
“உன் மூஞ்சி..ஓடி போ..”
என்று தன் டெஸ்கில் பேக்கை வைத்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தாள்.
“என்ன நான் இல்லாமல் பிஜில ரொம்ப நிம்மதியா இருக்க போல..”
“வெறும் நிம்மதியா..உன் தொல்லை இல்லாமல் ரொம்ப சந்தோஷமாய் இருக்கேன்..தோளில் தொங்கிய வேதாளத்தை இறக்கி வைத்த ஃபீல்..”
“ஆஹான்…அப்புறம் ஏன் செல்லம், ‘இங்க இருக்கவே வெறுமையா இருக்கு..போர் அடிக்குது…பேசாம எனக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிடுங்கன்னு சொன்னீயாம்..”
“அடப்பாவி..வம்புக்கு சொன்னா அது உன் வரைக்கும் வந்திடுச்சா..இந்த அம்மா இருக்காங்களே..”
என்ற அவள் புலம்பலை கண்டுக்காது,
“இங்க பாரு கல்ப்ஸ்..உனக்கு வயசு இருக்கு..வாழ்க்கை இருக்கு…மெதுவா கல்யாணம் பண்ணிக்கலாம்..உன்னோட மூத்தவ சொல்றேன் கேட்டுக்க..”
என்று சீண்டவும்,
“மூணு மாசம் முன்னாடி பொறந்தா நீ மூத்தவளா..எனக்கு தேவை தாண்டி..”
கல்பனா நொடிக்க என்று வேலை செய்தபடி வாயடித்த தோழிகள் சற்று நேரத்தில் தங்கள் பணியில் மும்முரமாகினர்.
“காலைல அவரசமா கிளம்ப சொல்லிட்டு இங்க எதுக்குங்க அழைச்சுட்டு வந்தீங்க..எதாவது வாங்க போறோமா என்ன..?”
அந்த பொட்டிக்கை சுற்றி பார்த்தபடி வெண்பா மதியிடம் கேட்டாள்.
அவர்கள் ஊரில் இப்படி பிரம்மாண்டமாய் ஒரு பொட்டிக் இருப்பதே அவளுக்கு இப்பொழுது தான் தெரியும்.பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த அத்தனையும் புதுவிதமாய் வடிவமைத்து உயத்தரம் வாய்ந்ததாய் இருக்க மதி தன் கேள்விக்கு பதில் அளிக்காததை கூட கவனியாது அவற்றை இரசித்து பார்த்துக் கொண்டிருந்த வெண்பா,
“எவ்வளவு கலெக்ஷன்ஸ்..ஹப்பா..எல்லாமே பார்க்கவே செம்ம ரிச் லுக்ல இருக்குங்க…நாம இங்க வந்ததே இல்லையே..”
என்று சொல்ல மென்னகை புரிந்தவன்,
“இது யூஸ்வல் ஷாப்பிங் ஷோரூம் இல்ல வெண்பா..இங்க நடிகைங்களுக்கு மணபெண்களுக்கு,மேல்தட்டு பெண்களுக்காக பிரத்யோகமா வடிவமைச்சு தருவாங்க..”
என்று அவன் விளக்க, “ஓஹோ..” என்று கேட்டுக் கொண்டவள்,
“சரி..நாம ஏன் இங்க வந்தோம்..”
என்று மீண்டும் அதேயே கேட்க,
“கீதாஞ்சலிய மீட் பண்ண..இது அவங்க பொட்டிக் தான்..”
என்றதும் அவள் கண்கள் ஆச்சரியத்திக் விரிந்தது.
“உண்மையாவா..”
என்று வியக்க ஆமோதிப்பாய் தலையசைத்தவன்,
“கீதா வீட்டில் அவங்க டுவெல்த் முடிச்சதுமே கல்யாணம் பண்ணிட்டாங்க…அடுத்த ரெண்டு வருஷத்துல இன்னதுன்னு புரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடியே அவங்க ஹஸ்பெண்ட் இறந்துட்டார்..கையில் பச்சபிள்ளையோட வாழ்க்கைய தொலைச்சிட்டு நின்னபோது துவண்டு போகாம நிறைய கஷ்டத்திற்கு அப்புறம் முட்டி மோதி சின்னதா பொட்டுக்ல தான் கெரியர் ஸ்டார்ட் ஆச்சு..அப்புறமும் விடாத உழைப்பால இதை இந்த அளவிற்கு கொண்டு வந்ததோடு இப்ப வீவோக்ஸ்ல ஒரு முக்கியமான நபர்..ஸீஸ் சச்ச ஹார்ட் வொர்க்கிங் வுமன்..”
என்று தோழியை பற்றி பெருமையாய் சொல்ல அதற்குள் இவர்களை கண்டுக்கொண்ட அங்கிருந்த ஒரு பெண் அவர்களை மாடியில் கீதா இருப்பதாக கூறி அனுப்பி வைத்தாள்.
கீழ் தளம் ஷோரூமாக இருந்ததற்கு மாறாய் முதல் தளம் ஸீவிங் செய்வதற்கு ஏற்றார்போல் நவீன முறையில் அமைக்கப்பட்டு இருக்க அவற்றை ஆர்வமாய் பார்வையிட்டபடி தன்னை பின் தொடரும் மனைவியை கண்டு அவன் முகத்திலும் புன்னகை அரும்பியது.
“ஹே..வெல்கம் மிஸ்டர் & மிஸஸ் மதிவாணன்..”
என்று ஆர்பாட்டமாய் வரவேற்ற கீதா வெண்பாவை நெருங்கி நட்பாய் தோளோடு அணைத்து விடுவித்தாள்.
பொதுவான நலவிசாரிப்புகளுக்கு பின் வெண்பாவின் ஆர்வத்தை உணர்ந்து அவர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்தை சுற்றிக் காட்டினாள் கீதா.அன்றைக்கு திருமணத்தில் வெகு சாதாரணமாய் தெரிந்த கீதாஞ்சலி இன்று அவள் மனதில் பலமடங்கு உயர்ந்திருந்தாள்.
“ஆமா..நீங்க க்ளாஸ்மேட்ஸ் தானே அப்புறம் ஏன் வாங்க போங்கன்னு பேசிக்கிறீங்க…”
என்று வெண்பா கேட்க,
“எனக்கு அப்படியே பழகிடுச்சு..”
என்று மதி சிரிக்க,
“நல்லா கேட்டீங்க..மதி ஸ்கூல்லேந்தே இப்படி தான்..பசங்களுட்டே அதிகம் பேசமாட்டார்..இதில் கேர்ள்ஸ்ட்ட சொல்லவும் வேணாம்..பேசுற ஒரு சில பேருட்டையும் ‘ங்க..’ போட்டு தான் பேசுவாப்பிடி..யார் கேலி பண்ணாலும் மாத்திக்க மாட்டார்..நான் கூட ஆழிக்கண்ணன் ஐயா ஸ்கூல்ல தானே இருக்கார்..அவருக்கு பம்மிகிட்டு இந்த நடிப்போன்னு நினைச்சிருக்கேன்..போக போக தான் புரிஞ்சது…உன்ர வீட்டுக்காரர் அநியாயத்திற்கு அம்மாஞ்சி வெண்பா..அவர் மரியாதையா பேசும் போது அதுவே தான் எனக்கும் வருது..”
கீதாஞ்சலி சொல்லியதை கேட்டு அவளுக்கும் சிரிப்பு வந்தது.அவர்கள் பள்ளி பருவத்தை பற்றி மேலும் கேட்டு தெரிந்துக் கொண்டாள்.
அனைத்தையும் பார்த்தபின்பு கீதாவின் அறைக்கு வந்த போது அவர்கள் குடிக்க ஜூஸ் வந்திருக்க அதனை குடிக்கும்மாறு அவர்களை உபசரித்து,
“அவ்வளவு தான்..என்னோட குட்டி இராஜ்ஜியம்..பிடிச்சிருக்கா..”
என்று கண்சிமிட்டி கேட்க,
“நீங்க ரொம்பவே க்ரேட் கீதா..ரொம்ப எளிமையா எல்லாத்தையும் சொல்லிடுறீங்க..ஆனால் இதுக்கு நீங்க எவ்வளவு போராடி இருப்பீங்கன்னு என்னால உணர முடியுது..உங்களை மாதிரி பெண்களை பார்த்தாலே மனசுல ஒரு மனதைரியமும் உற்சாகமும் வந்து ஒட்டிக்கும் போல..எனக்கும் இப்ப அப்படி தான் இருக்கு..உங்களை பார்க்கும்போது நானெல்லாம் என்ன செஞ்சிட்டேன்னு தோனுது..”
என்று மனதில் தோன்றியதை மறையாது வெள்ளை சிரிப்போடு வெண்பா சொன்னதில் கீதாவிற்கும் புன்னகை விரிந்தது.
“என்ன மதி..என்னை பத்தி எக்கசக்கமா பில்டப் கொடுத்திருப்பீங்க போலவே..”
“உண்மையை மட்டும் தாங்க நான் பேசுவேன்..”
“ம்ஹூம்..நீங்க நினைக்கிற அளவு எல்லாம் இல்ல வெண்பா…எல்லாருக்கும் தான் பிரச்சனை வரும்..அதை சமாளிக்க எல்லாரும் தான் போராடுறோம்..எனக்கு உதவ உறுதுணையா எத்தனையோ நல்லுள்ளம் உடன் இருந்துச்சு..அதுவும் இல்லாம போராடுற பெண்களை பார்த்துட்டு தானே இருக்கோம்..அவங்களை பார்க்கும்போது நான் ஒன்னுமே இல்ல..”
என்று அவற்றை சாதாரணமாய் புறம்தள்ளிய கீதா,
“நீங்க பி.எஸ்.சி ல பேஷன் டிசைனிங் தானே படிச்சிருக்கீங்க வெண்பா..”
என்று கேட்க புன்னகைத்தவள், “மதி சொன்னாரா..?? ஆமா..” என்றவள் அப்பொழுதும் எதுவும் யோசிக்கவில்லை.
படிப்பில் அதீத தீவிரமாய் இருந்து அதனால் பட்ட கஷ்டத்தால் மேலே கடினமான படிப்புகள் எதையும் அவள் தேர்வு செய்யாமல் கலை சார்ந்த துறையை நாடி சென்றாள்.ஆனால் படிப்பு முடிந்து திருமணம்,குடும்பம் என்று ஆன பிறகு வீட்டை அலங்கரிக்கவும் தங்கள் உடையை தைத்துக்கொள்ளவும் தவிர அவற்றை பற்றி எல்லாம் அவளுக்கு சிந்திக்கவும் நேரம் இல்லை.ஆதலால் தனக்காக தான் இங்கே அழைத்து வந்திருப்பான் என்று அவளுக்கு துளியும் தோன்றவில்லை.
வெண்பாவிற்கு தான் இங்கே வந்ததன் காரணம் தெரியவில்லை என்பதை புரிந்துக் கொண்ட கீதா எழுந்து சென்று ஒரு கோப்பினை எடுத்து வந்து அவளிடம் நீட்டியவள்,
“திறந்து பாருங்க..” என்று கொடுக்க பார்த்தவள் திகைத்து தான் போனாள்.
“இ..இது…”
என்று இழுத்தவளுக்கு நொடியில் அனைத்தும் விளங்கிவிட சட்டென்று திரும்பி மதியை பார்த்தாள்.அதே புன்னகையோடு மனைவியை பார்த்திருந்தவன் கண்களால் ஆமோதித்தான்.
அவை எல்லாம் வெண்பா வடிவமைத்து வரைந்திருந்த உடைகளின் தொகுப்பு.பொழுதுபோக்கிற்கு அவள் வரைந்து வைத்திருந்ததை மதியிடம் காட்டியாதாய் கூட அவளுக்கு நினைவு இல்லை. ‘எப்படி எடுத்தான்..எங்கிருந்து இந்த யோசனை வந்தது’ என்று அவள் மனம் திகைத்து நோக்க அவளை மேலும் ஆச்சரிய கடலில் மூழ்க வைப்பது போல் பேசினாள் கீதா.
“இந்த ஃபைல் கூடவே உங்க சீ.வி ரெண்டும் என் கைக்கு வந்து அஞ்சு வருஷம் ஆகுது..ஆனால் அதற்குரிய உங்களை அழைத்துவர இப்ப தான் உங்க மதிக்கு மனசு வந்திருக்கு..”
என்று சிரித்த கீதா,
“உங்கள் வொர்க்ஸ் உண்மையாவே என்னை ரொம்பவே கவர்ந்திடுச்சு வெண்பா..இந்த sketches-க்கு உயிர் கொடுத்தால் நிச்சயம் ஒரு நியூ ட்றெண்டா மார்கெட்ல வலம்வரும்…இது நீங்க டிசெயின் பண்ணது..நீங்களே வடிவமைச்சா தான் நல்லா இருக்கும்…அதற்காக எல்லா ஏற்பாடும் நான் செஞ்சு தருவேன்..இதை ஏற்று செய்ய உங்களுக்கு சம்மதமா வெண்பா..”
என்று அவள் கேட்டபோது பேந்த பேந்தவென விழிக்கத்தான் முடிந்தது வெண்பாவால்.இன்னமும் இதனை அவளால் நம்ப முடியவில்லை.
வெண்பாவை உணர்ந்தவனாய் அவள் கையை பற்றிக் கொண்டவன்,
“வெண்பா..” என்று மென்மையாய் அழைக்கும்வரை அவள் திகைத்த தோற்றம் மாறவில்லை.
“என்ன வெண்பா…இத்தனை வருஷம் ஆச்சு..டச் விட்டு போயிருக்கும்…முடியுமான்னு யோசிக்கிறீங்களா..”
என்று வேண்டுமென்றே கீதாஞ்சலி கேட்க மெல்லியதாய் சிரித்த வெண்பா,
“தேங்க்ஸ் கீதா..தேங்க்ஸ் அலாட்..என்மேல நம்பிக்கை வைச்சு வாய்ப்பு கொடுக்கறீங்க..நிச்சயம் அதனை நூறு சதவீதம் பூர்த்தி செய்வேன்..”
என்று அவள் உறுதியாய் கூறியதில், “தட்ஸ் த ஸ்பிரிட்..” என்றாள் உற்சாகமாய்..
மற்ற விஷயங்களையும் பேசி முடித்து வெளிய வந்தபோது இதுவரை இல்லாத அளவில் புதிதாய் அவளுள் ஒர் சந்தோஷமும் உற்சாகமும் பிறந்தது.
தனக்கென ஒரு அடையாளம் உருவாக்க கிடைத்த வாய்ப்பினாலோ இல்லை தன் கணவன் தனக்காக எடுக்க நினைத்த முயற்சியினாலோ அவள் மனம் பூரித்து போனது.
காரில் ஏறிய நொடி கணவனை தாவி அணைத்துக் கொள்ள,
“ஹே..வெண்பா..என்ன..இங்க பாரு..”
என்று அவள் தோள் பற்றி தூக்க முனைத்தற்கு அவள் அசைந்துக் கொடுக்கவும் இல்லை எதுவும் பேசவும் இல்லை.ஆனால் வார்த்தைகளில் சொல்லாத பல விஷயங்களை அந்த மௌனமான அணைப்பு உணர்த்த அதன்பின் அவனும் அந்நிலையை கலைக்க விரும்பவில்லை.
சில நிமிடங்கள் முகத்தை மட்டும் நிமிர்த்தி,
“ஏன் அப்போவே சொல்லலங்க..”
என்று கேட்க,
“நிலா ஸ்கூல் போக ஆரம்பிச்சதில் இருந்தே எனக்கு இந்த எண்ணம் ஓடிட்டே தான் இருந்தது..கீதாவை பார்த்து வந்த எண்ணம்மான்னு தெரியல..ஆனால் நீ ஸெல்ஃப் டிப்பெண்டெண்டா இருக்கணும்…நான் இல்லைனாலும்…ஹே ஏன் முறைக்கிற..நிதர்சனத்தை தான் சொல்றேன்..நான் இருந்தாலும் இல்லைனாலும் நீ தளராமல் யாரையும் எதிர்பார்க்காமல் இருக்கணும்னு நினைச்சேன்…ஆனால் அதை உன்னுட்ட அப்போ பேச எனக்கு தைரியம் இல்ல..என்மேல ரொம்ப கோபமா இருந்த வெண்பா..எங்க நான் சொல்றேன்னு வீம்புக்காகவே மறுத்திடுவியோன்னு பயம்…ஆனால் எப்படியும் ஒருநாள் இதை நிறைவேத்தணும்னு மனசுல உரு போட்டுடே இருந்தேன்..இன்னைக்கு தான் நிம்மதியா இருக்கு..”
அவள் தலைகோதி மதி சொன்னபோது அவள் கண்கள் கலங்கிவிட்டது.ஆம்..காதலின் வெவ்வேறு பரிமாணத்தையும் தன்னில் உணர்த்தி தன்னை தாங்கும் கணவனின் அன்பில் அவள் கண்கள் சற்று கலங்கிதான் போனது.