சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்று கல்லூரியில் கடைசி வகுப்பின் பொழுது விரிவுரையாளர் சீதா
“ஹலோ ஸ்டுடென்ட்ஸ், நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நீங்க எல்லாரும் ப்ராஜெக்ட் பண்ணனும். நீங்க இதை தனித்தனியா பண்ணலாம். இல்லேன்னா ரெண்டு மூணு பேரா சேர்ந்து கூட பண்ணலாம். அது உங்க இஷ்டம். ஆனா சாட்டர்டே, சண்டே ஹாலிடேஸ் ல ப்ராஜெக்ட் பிளான் ரெடி பண்ணி எடுத்துட்டு வாங்க. நான் உங்க ப்ராஜெக்ட் ப்ளான் மண்டே பார்க்கணும். என்ன பிளான், எங்க பண்ண போறீங்க, எத்தனை நாளாகும்ன்னு எல்லாத்தையும் எனக்கு நீங்க மண்டே சொல்லணும். சோ இன்னும் ஒன் வீக் தான் இருக்கு. அதுக்கப்புறம் நீங்க எல்லாரும் ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணனும். ஹாப்பி வீக் எண்ட்.” என்று கூறினார்.
“இவ்ளோ வேலையை கொடுத்துட்டு ஹேப்பி வீக் எண்ட் வேறயா?
இந்த சிடுமூஞ்சிக்கு நக்கலை பாத்தியா?”
என்று கவிதா கூற பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு மாணவி லதா வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.
இதனை கவனித்த விரிவுரையாளர் “கவிதா, லதா ரெண்டு பேரும் எழுந்திருங்க.” என….
அவர்கள் இருவரும் தயங்கியபடியே எழுந்து நின்றனர்.
“அங்க என்ன ரெண்டு பேரும் பேசி சிரிச்சிட்டு இருக்கீங்க?” என்று அதட்டலாக கேட்டார்.
“சும்மா பேசிகிட்டு இருந்தேன் மேடம்.” என்று வடிவேலு பாணியில் கவிதா கூற வகுப்பறையில் இருந்த மாணவர்கள் எல்லோரும் சிரித்தனர். விரிவுரையாளர் “சைலன்ஸ்” என்று சத்தமாக கூற அனைவரும் அமைதியானர்.
“நான் இன்ஸ்டரக்ஷன்ஸ் கொடுத்துட்டு இருக்கும்போது அங்க என்ன பேச்சு வேண்டி இருக்கு? இன்னொரு தடவை இப்படி நடந்துச்சுன்னா கிளாசை விட்டு வெளிய அனுப்பிடுவேன். லாஸ்ட் வார்னிங் ஃபார் யூ.” என்றார் மிரட்டலாக.
“ தேங்க்யூ சிஎம்.” என்று வாய் தவறி கூறிவிட்டால் கவிதா.
“என்ன சி எம் மா? என்ன சொன்ன?” என்று விரிவுரையாளர் கேட்க வகுப்பில் உட்கார்ந்து இருந்த ஒரு குறும்பு மாணவி
“அது உங்களுக்கு கவிதா வைத்திருக்கிற பட்டப்பெயர்.” என்று உண்மையை போட்டு உடைக்க…
விரிவுரையாளர் சீதா இடுப்பில் கையை வைத்துக் கொண்டு கோபமாக அவளை பார்த்து முறைத்து “சிஎம் மா அப்படின்னா என்ன?” என்று கேட்க …..கவிதா அடுத்த நிமிடம் “சீப் மினிஸ்டர் மேடம்.”
“ என்ன சீப் மினிஸ்டரா? என்ன உளர்ற? என்று மேலும் மிரட்ட…..
கவிதா “ஆமா மேடம். நீங்க சீப் மினிஸ்டர் மாதிரி கெத்தா இருக்கீங்களா. அதனால உங்களுக்கு நான் அந்தப் பெயர் வச்சிருக்கேன்.” என்று அவர் தலை மீது ஐஸ் வைக்க..
அந்த வகுப்பறையில் மீண்டும் ஒரு சிரிப்பு அலை.
“அடிப்பாவி” என்ற லதா, கவிதாவை பார்த்து முறைத்தாள்.
கவிதா அவள் பக்கம் திரும்பி கண்ணடித்தாள். அந்த நேரம் அங்கு அட்டெண்டர் வந்துவிட, சீதா அதோடு அவர்களை உட்கார சொல்லி விட்டார் இவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று உட்கார்ந்து கொண்டனர்.
“சிடுமூஞ்சிக்கு சிஎம்னு சொன்னதும் சந்தோஷத்தை பாத்தியா! இருந்தாலும் நம்ம சிஎம்க்கு பேராசை தாண்டி.” என்று மெல்லிய குரலில் கவிதா கூற வெண்மதி வாய் மீது ஆள்காட்டி விரலை வைத்து உஷ் உஷ் என்று கூறினாள். வகுப்பு நேரம் முடிந்ததும் வெண்மதி
“கவிதா நாளைக்கு நான் உங்க வீட்டுக்கு ஒரு ஒன்பது மணிக்கு வரட்டுமா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து ப்ராஜெக்ட் பிளான் போடலாம்.”
“ஒன்பது மணிக்கு நீ எங்க வீட்டுக்கு வா. அதை பத்தி எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் நான் நல்லா தூங்கிட்டு இருப்பேன். நீயும் பக்கத்துல படுத்து தூங்கு.”
“என்னடி சொல்ற?”
“சாட்டர்டே, சண்டே நான் எப்பவுமே பத்து மணிக்கு மேல தான் எழுந்திருப்பேன். உனக்கு தெரியாதா?”
“எனக்கு தெரியும். ஆனால் வேலை இருக்கும்போது சீக்கிரம் எழுந்திருக்கலாம் இல்லையா? அதனால கேட்டேன்.”
“அட போடி. பகல் முழுசும் இருக்கு. அதுல ப்ராஜெக்ட் ப்ளான் போடலாம். அதுக்கு எதுக்கு நான் என்னோட தூக்கத்தை எடுத்துக்கணும்.”
“சரி. நான் எத்தனை மணிக்கு வரட்டும்?”
“நீ பதினோரு மணிக்கு மேல வா.”
“சரிடி சோம்பேறி.“என்றாள் வெண்மதி.
அன்று மாலை வீடு திரும்பிய வெண்மதி, தாயை தேடி சென்றாள். நேற்று பேசிய பேச்சுக்கு தாய் தன் மீது கோபமாக இருப்பாளோ என்று ஒரு சின்ன பயம் இருந்தது.
“வந்துட்டியா வெண்மதி ? போய் கைகால் கழுவிட்டு வந்து சாப்பிடு.” என்று எப்போதும் போல கூறவும் அவளுக்கு நிம்மதியாக இருந்தது. வெண்மதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது லட்சுமி,
“வெண்மதி, பெரியம்மாவை பார்த்து கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனதை சொல்லிட்டியா ?”
“இல்லம்மா காலையில போய் பார்த்தேன். அவங்க வீட்டிலேயே இல்லை. இப்போ வீட்ல தான் இருக்காங்க. அவங்க அம்மா வீட்ல இருந்து வந்துட்டாங்க. சாப்பிட்டு முடிச்சதும் நீ போய் சொல்லிடு. “
வெண்மதி “சரிமா.” என்றுவிட்டு சாப்பிட்டு முடித்ததும் பெரியம்மாவை பார்த்து விஷயத்தைக் கூறினாள்.
“ஓ அப்படியா! சரி.” என்று சாதாரணமாக பதில் கூறினார்.
அவர் முகத்தில் அதிர்ச்சி அல்லது பொறாமையை எதிர்பார்த்திருந்த வெண்மதி ஏமாற்றம் அடைந்தாள்.
அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு எழுந்த வெண்மதி, தோட்டத்தில் பூக்களை ரசித்துக்கொண்டே சிறிது நேரம் நடந்தாள். பிறகு, குளித்து முடித்துவிட்டு தாய்க்கு தேவையான சில வேலைகளை செய்து கொடுத்தாள். பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு பத்தரை மணி அளவில் தன்னுடைய புத்தகப்பையை எடுத்துக்கொண்டு
“அம்மா, நான் கவிதா வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன். நாங்க ப்ராஜெக்ட் பிளான் பண்ண வேண்டி இருக்கு. அதனால சாயந்திரம் தான் வருவேன்.” என்று கூறிக்கொண்டே கிளம்பிக் கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில் அங்கு வந்து லலிதா
“வெண்மதி எங்க கிளம்புற ? இன்னிக்கி லீவு நாள் தானே?”
“ஆமாம் பெரியம்மா. நான் கவி வீட்டுக்கு கிளம்பறேன். ஒரு முக்கியமான வேலை இருக்கு.”
“என்னது கவி வீட்டுக்கு போறியா? நாம எல்லாரும் இன்னிக்கு கோயிலுக்கு போக வேண்டி இருக்கு. நீ பாட்டுக்கு வெளியே கிளம்பி போயிட்டு இருக்க ? இன்னிக்கு எங்கேயும் போக வேண்டாம். நாம எல்லாரும் சேர்ந்து கோயிலுக்கு போகணும்.”
“கோயிலுக்கு நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க. நான் இன்னொரு நாள் வரேன். இது முக்கியமான வேலை. நான் போகணும்.”
“கோயிலுக்கு போகணும்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். கொஞ்சமாவது பக்தி இருக்கா ? .சாமி குத்தம் ஆயிடும் ஒழுங்கா கிளம்பி எங்க கூட வா.” என்று குரலை உயர்த்தி பேசினார் பெரியம்மா.
அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் “என்னமா சொல்றே ? திடீர்னு கோவிலுக்கு போறேன்னு சொல்றீங்க? முன்னாடியே சொல்லவே இல்லையே?”
“இதையெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாடியா சொல்லுவாங்க ? ஒரு வேண்டுதல் இருந்துச்சு. அதான் இன்னிக்கு பௌர்ணமி இல்லையா நாம கோயிலுக்கு போய் சுவாமியை தரிசனம் பண்ணிட்டு வரலாம். எல்லாரும் கிளம்புங்க. “ என்று லட்சுமியையும் பார்த்து கூற…
ஏதோ சொல்ல வாய் எடுத்த கார்த்திகேயனை தடுத்தான் கதிர்வேலன். “ஆமாண்டா. அம்மா ரெண்டு நாள் முன்னாடியே என்கிட்ட சொன்னாங்க. நான் தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.”
“என்கிட்ட கூட சொல்லலையே ?” என்று கூறிக்கொண்டே கிருஷ்ணன் அங்கு வந்தார்.
“அது வந்து….” என்று தடுமாறினார் லலிதா.
கதிர்வேலன் நடுவில் புகுந்து “அம்மா என்னிடம் உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க. நான் தான் மறந்துட்டேன்.”
“என்னமா பத்தரை மணி ஆகுது. நாம எல்லாரும் கிளம்பி கோயிலுக்கு போறதுக்குள்ள கோயிலை மூட போறாங்க.” என்று சலித்து கொண்டான் கார்த்திகேயன்.
கதிர்வேலன் “இன்னைக்கு பௌர்ணமி. அதனால கோயில் முழுநாளும் திறந்த இருக்கும். நைட்டுதான் மூடு வாங்க. அதனால நீ பேசி இன்னும் டைம் வேஸ்ட் பண்ணாம போய் கிளம்பி வா.” என்று அவன் முதுகில் கைவைத்து கதிர்வேலன் கார்த்திகேயனை தள்ள அவன் வேறுவழியின்றி உள்ளே சென்றான்.
“ஒரு கோயிலுக்கு கிளம்புவதற்கு இந்த வீட்ல இத்தனை பேருக்கு இத்தனை கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கு.” என்று சலித்துக்கொண்டார் லலிதா.
இதற்குமேல் இவரிடம் பேசினால் கண்டிப்பாக பிரச்சனை ஆகிவிடும் என்று அமைதியானாள் வெண்மதி. உள்ளே சென்று புத்தக பையை வைத்து விட்டு அறையில் நாற்காலியில் உட்கார்ந்தாள். கவிதாவுக்கு போன் செய்து விபரத்தை கூறி அடுத்த நாள் வருவதாக சொல்லி போனை வைத்து விட்டு கோவிலுக்கு கிளம்பினாள்.
அனைவரும் கிளம்பி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்கு மணி எட்டு ஆகிவிட்டது.
“ரொம்ப கூட்டம் இன்னிக்கி கோயிலில். நான் நல்லா வீட்டில் தூங்கி ரெஸ்ட் எடுத்து இருப்பேன். ஐ அம் ரியலி வெரி டயட்.” என்று தாயை குற்றம்சாட்டும் பாவனையில் கூறி விட்டு தன் அறைக்குள் சென்றான் கார்த்திகேயன்.
“சுவாமி தரிசனம் ரொம்ப நல்லா இருந்துச்சு.” என்று லட்சுமி கோவிந்தனிடம் கூறினார்.
“ஆமாம் லட்சுமி. ரொம்ப நாளைக்கு அப்புறம் நாம எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வந்தது மனசுக்கு நிறைவா இருக்கு. வெண்மதி தான் கொஞ்சம் கோபமா இருக்கா.”
“ஏன் அவளுக்கு கோபம்?”
“ஏதோ படிப்பதற்காக கவிதா வீட்டுக்கு போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா. இப்போ போக முடியாம போயிடுச்சு. அதனால கொஞ்சம் கடுப்பா இருக்கா. “
“சரி நாளைக்கு ஒரு நாள் இருக்கு இல்ல? நாளைக்கு போய் அந்த வேலையை முடிக்க சொல்லு. பொண்ணுங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம்.”
“சரிங்க. நான் சொல்றேன்”.