தாமஸ் எழுதி கொடுத்த ஸ்கேன் மற்றும் டெஸ்ட்கள் அனைத்தும் எடுத்து முடிக்கவே மதிய பொழுதை கடந்திருந்தது.
தாமஸ் இவ்வாறு இருக்கலாம் என்று கூறியதனை மறையாமல் எஸ்தர் – லிசாவிடமும் கூறி இதற்காக அவர்களை தயார்ப்படுத்தி இருந்தாள் ஜென்சி. இல்லையெனில் இருவரையுமே சமாளிப்பது கடினம் என்பது தெரியும்..!!
முதலில் பயந்தாலும் ஜென்சி கூறிய சமாதனங்களில் ஓரளவு தெளிந்து இறுதியாய் சிறுநீரக கல் இருக்க கூடாது என்ற பிரார்த்தனையும் ஒருவேளை இருந்தாலும் அதனை திடமாய் கடந்து வரவேண்டும் என்ற மனபான்மைக்கு வந்திருந்தனர்.
ஆகையால் தாமஸ் பரிசோதனை முடிவுகளை பார்த்துவிட்டு சிறுநீரக கல் தான் என்று உறுதி படுத்தியபோது நம்பிக்கை பொய்த்ததில் சிறிது ஏமாற்றமாய் இருந்ததே தவிர அதிர்ச்சியாய் இல்லை.
“எதனால தாமஸ்.. இந்த வயசுல கூட அதெல்லாம் வருமா என்ன..” என்று கவலையாய் கேட்டார் எஸ்தர்.
“இப்ப எல்லாம் எந்த நோய்யும் எந்த வயசுல வேணாலும் வரும்.. லிசாவோட ரிப்போர்ட் படி பார்த்தால் ஸூகர் அண்ட் பாஸ்ஃபேட் லெவல் இவ வயசுக்கு ரொம்ப அதிகமாவே இருக்கு.. அதனால தான் கிட்னியில் கல் உருவாகி இருக்கணும்.. நல்ல வேளை இது டயபிட்டிஸ் என்ற நிலைக்கு லிசாவை இழுத்துட்டு போல.. அது இன்னும் சிக்கல்… கிட்னி ஸ்டோன் பத்தி நீங்க கவலை பட வேண்டாம் அத்தை.. ரொம்ப சின்ன சைஸ்ல இருக்கும்போதே டயக்னைஸ் பண்ணியாச்சு.. முடிஞ்ச அளவு டேப்லெட்ஸ் எடுத்துகிறதுலையே கரைஞ்சிடலாம்… தினமும் அட்லீஸ்ட் 2-3 லிட்டர் வாட்டர் கண்டிப்பா குடிக்கணும்..
“பத்து நாளுக்கு மருந்து எழுதி கொடுத்திருக்கேன்.. முடிஞ்சதும் வாங்க.. மறுபடியும் செக் பண்லாம்.. ஒருவேளை இது சரியா வரலைனா.. லேசர் ட்ரீட்மெண்ட் செஞ்சிடலாம்..”
என்று மருத்துவனாகவும் உறவினனாகவும் ஆறுதல் அளித்த தாமஸ் இன்னும் சில அறிவுறுத்தல்கள் சொல்ல அனைத்தையும் கவனமாய் கேட்டு கொண்டபின் அவனிடம் விடைப்பெற்று வெளியே வந்தனர்.
காலையில் இருந்து இத்தனைக்கும் அமைதியாகவே இருந்த லிசாவை கண்டு தாய் – மகள் இருவர் மனதிலுமே கனிவு பிறக்க,
“என்னடாம்மா..” என்று எஸ்தர் தோள் சாய்த்துக் கொள்ள சிறு பெண் தான் அல்லவா மெல்ல விசும்பினாள்.
“பயமா இருக்கு..” என்ற தங்கையின் தலையை கோதி கொடுத்த ஜென்சி,
“ஏன் பயப்படணும்.. ஒன்னுமே இல்ல லிசா..நாம எதுவும் நடக்கும் முன்னாடியே சுதாரிச்சாச்சு.. பாரு தாமஸ் உனக்கு இன்ஜெக்ஷன் கூட போடல.. அவர் சொன்னா மாதிரியான சாப்பாடு எடுத்துக்கிட்டு மாத்திரை சரியா ஃபாலோ பண்ணுவோம்.. எல்லாம் சரியாகிடும்.. சியர் அப் பேபி.. சிரி..” என்று கூறி அவள் முகத்தில் புன்னகையை காணும்வரை விடவில்லை.
“காலைல இருந்து டெஸ்ட்ஸ் எல்லாம் எடுத்து ரொம்ப டயர்ட்டா இருக்கா.. இங்கேயே எதாவது சாப்பிட்டு அப்புறம் கிளம்பலாம்..” என்று எஸ்தர் கூறியதும் எதோ யோசித்த ஜென்சி,
“மாம்.. நீங்க போய் சாப்பிடுங்க.. நான் கொஞ்ச நேரத்தில் அங்க வந்திடுறேன்..” என்று சொல்ல அவளை அழுத்தமாய் பார்த்த எஸ்தர்,
“அந்த பையன பார்க்க போறீயா ஜென்சி..” என்று கேட்க,
“ஆமா மாம்..” என்றதும் அவர் முகத்தில் அதிருப்தி அப்படமாய் தெரிந்தது.
“எனக்கு இது கொஞ்சம் கூட சரியா படல ஜென்சி.. நேத்து அட்மிட் பண்ணும்போது போய் பார்த்த.. உயிருக்கு ஆபத்து இல்லைனு தெரியுற வரை இருந்த.. பரவாயில்லை.. அது தான் மனிதாபி மானமும் கூட.. ஆனால் இப்ப ஏன் போய் பார்க்க அவசியம் என்ன..”
“என்ன மாம் பேசுறீங்க.. நேத்து அவன் இருந்த நிலமையை நீங்களும் பார்த்தீங்க தானே.. கண் விழிச்சானா என்னானு கூட தெரியல.. நேத்து முழுக்க இரத்தம் சிந்தி அவன் இருந்த கோலம் என் கண்லேந்து மறையல தெரியுமா.. இவ்வளவு தூரம் வந்துட்டு எப்படி பார்க்காம வருவேன்..”
“உனக்கு அந்த ஜோஷ்வாவோட அறிமுகம் இருக்குன்ற விஷயமே எனக்கு நேத்து தான் தெரியும்.. என்ன நடக்குது ஜென்சி..?
அந்த பையனை அவனோட குடும்பமே ஒதுக்கி வைச்சு இருக்குனா அவனுட்ட ஏதோ தப்பு இருக்குனு தானே அர்த்தம்.. அவனோட உனக்கு எதுக்கு பழக்கம்..”
“நீங்களா மாம் பேசிறீங்க..? என்னை இதுவரை இவங்களுட்ட பேசு பேசாதன்னு எதுவுமே நீங்க சொன்னதே இல்ல.. இப்ப என்ன மாம்..!! அவங்க ஃபேமிலி ஒதுக்கி வைச்சா அது அவங்களுக்குள்ள… அதுக்கு நான் என்ன பண்ண முடியும்.. எனக்கு பார்க்கணும்னு தோணுது.. நான் பார்ப்பேன்..”
என்று பிடிவாதமாய் நின்றது சாட்சாத் நம் ஜென்சியே தான்.. ஜோஷ்வாவிற்காக தன் அன்னையோடு சண்டையிட்டு நிற்பாள் என்று சொல்லியிருந்தால் அவளே நம்பியிருக்க மாட்டாள்.
நேற்று இவர்கள் மருத்துவமனையில் கிளம்பும் சமயம் தான் ஜோஷ்வாவை ஸ்டெச்சரில் வைத்து அழைத்து வர அடிப்பட்ட இடங்களில் எல்லாம் இரத்தம் கசிந்து வழிய மயக்கத்தில் இருந்தவனை பார்த்த நொடி அவள் உடலில் ஒர் நடுக்கம் பரவியது என்றே கூறலாம்.
அது ஜோசஃப்பா ஜோஷ்வாவா என்ற குழப்பம் எல்லாம் அவளுக்கு இல்லை..
அன்னை தங்கையை மறந்தவளாய்,
“ஜோஷ்வா..” என்று அருகில் ஓடி வந்த ஜென்சி,
முகத்திலும் கைகளிலும் அடிப்பட்டு இரத்தம் சொட்டினாலும் அதனை மீறி ஜோஷ்வாவை மருத்துவரிடம் சேர்ப்பதில் குறியாய் நின்ற அனில் குப்தாவிடம் “என்னாச்சு..” என்று வினவ அந்நிலையில் அவள் யாரென்று அவனுக்கு தெரியாது ஆதலால்,
“கார் ஆக்சிடெண்ட்..” என்று மட்டும் திக்கலோடு கூறியவன் விரைந்து சென்றுவிட பதட்டத்தில் அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை.
அவர்களோடே செல்ல முயன்றவள் கையை பிடித்து எஸ்தர் தான் அவள் ‘ஜோஷ்வா’ என்று அழைத்ததை வைத்து,
“ஜோசஃபோட தம்பியா ஜென்சி..”
என்று சரியாய் கேட்க வாய் திறந்து பேசும் சக்தியின்றி ‘ஆம்’ என்று தலையசைத்தவள் கண்களில் கண்ணீர் அவளையும் அறியாமல் பெருகியது.
“கொஞ்சம் இருங்க மாம்..”
அவர் கைகளில் இருந்து தன்னை பிரித்துக் கொண்ட ஜென்சி அவர்கள் போன திசையில் ஓட அப்பொழுது தான் அவசர சிகிச்சை அறையினுள் அழைத்து செல்லபட்டான்.
அவனை உள்ளே அனுப்பிவிட்டு பிறகு அனில்குப்தாவை மற்றொரு மருத்துவர் அழைத்து செல்ல மீதம் அங்கிருந்தது இன்ஸ்பெக்டரும் இன்னும் இரண்டு காவலர்களும் தான்.
அவர்களிடம் அவள் எதுவும் கேட்க முனையாமல் அங்கேயே மௌனமான கண்ணீரோடு அமைதியாய் நிற்க அவளை பார்த்த அந்த இன்ஸ்பெக்டர்,
“யாரும்மா நீ..? ஜோஷ்வா ஜீய தெரியுமா..?” என்று ஹிந்தியில் கேட்க,
“தெரியும் சர்..” என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்திக் கொண்டவள் அங்கேயே நின்றாள். ஏன் நிற்கிறோம்..? எதற்காக நிற்கிறோம் என்பதை எல்லாம் அவள் யோசிக்கவில்லை. நகர மறுத்த கால்களை அதன் போக்கில்விட்டு சிலையாய் நின்றாள்.
இதுவரை அவனிடம் முகம் கொடுத்து பேசியது இல்லை. பார்க்கும் போது எல்லாம் எரிந்து தான் விழுந்திருக்கிறாள். ஆனால் அவனை உணர்ச்சியற்று பார்த்தபோது ஒவ்வொரு செல்லும் பதறியது ஏன் என்று அவள் யோசிக்கும் நிலையில் இல்லை.
விருப்பமாகவோ எரிச்சலாகவோ ஒருவரை பற்றி நாம் அதிகம் சிந்திக்கும்போது நம்மை அறியாமலே அவர்கள் நம் மனதிற்கு நெருக்கமானவர்களாய் ஆகிவிடுவர் என்பதே உண்மை..!!
சில மணிநேர காத்திருப்பிற்கு பின்னும் மகள் வராததால் லிசாவை தாமஸிடம் விட்டு அவளை தேடி வந்த எஸ்தர் ஜென்சி நின்ற தோரணையில் அவளை புதிதாய் பார்த்தார்.
தெரிந்த ஒருவருக்கு ஆபத்து என்றால் வருந்துவதும் கவலை கொள்வதும் இயல்பு தான் எனினும் ஜென்சியின் கண்ணீரும் நடுக்கமுமே அவரை யோசிக்க வைத்தது.
அவ்வளவு எளிதில் யாருடனும் பழகவும் மாட்டாள்.. எளிதில் மனம் இளகும் ஆளும் கிடையாது.. கண்ணீர் எல்லாம் அபூர்வமாய் அவளிடம் எட்டி பார்க்கும் ஒன்று… அதுவே எஸ்தர் மனதிற்கு நெருடலாய் தோன்றியது.
மருத்துவர் வந்து இன்பெக்டரிடம்,
“நிறைய ஃப்ரக்சர் ஏற்பட்டிருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை..” என்று சொன்னதனை கேட்ட பின்பு தான் அங்கிருந்து கிளம்பலாம் என்று கூறியவள் வீடு வந்ததும் அதனை குறித்து ஒன்றும் சொல்லவில்லை. லிசாவின் உடல்நிலை குறித்து மட்டுமே பேசினாலும் அவள் கவனமும் சிந்தனையை அடிக்கடி காணாமல் போவதனை அவர் கவனிக்காமல் இல்லை.
தற்போது தான் மறுத்தும் உறுதியாய் நிற்பவளிடம்,
“என்ன ஜென்சி..” என்று ஏதோ சொல்லவர,
“ப்ளீஸ் மாம்.. இந்த விஷயத்தில் நான் ஆர்க்யூ பண்ண விரும்பல.. நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு இருங்க.. வந்திடுறேன்..” என்று கூறிவிட்டு அவள் செல்ல
சிறுவயதில் கூட ‘இது செய்யாதே.. அது செய்யாதே’ என்று கண்டித்து இராத எஸ்தருக்கு வளர்ந்த பிள்ளையை இதுக்குமேல் என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்தார் எஸ்தர்.
**
“இன்னும் நீங்க அரெஸ்ட் பண்ணலையா சர்.. இந்நேரம் அவங்க போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் செய்தியை சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்..”
உடலில் சில இடங்களை தவிர்த்து தலை கைகள் வயிறு என அனைத்திலும் பேண்டேஜ் போடப்பட்டு வலதுகாலில் பெரிய கட்டோடு துளியும் அசையவே முடியாமல் இருந்தாலும் ஜோஷ்வாவின் பேச்சில் மிடுக்கிற்கு குறைவில்லை.
அவன் எதிரில் அஸிஸ்டென் கமிஷ்னரும் நேற்று வந்த இன்ஸ்பெக்டரும் நின்றிருந்தனர்.
“அப்படி ஈஸியா எல்லாம் அரெஸ்ட் பண்ணிட முடியாது சர்… அந்த லாரி ட்ரைவரை பிடிச்சாச்சு.. ஆனால் ‘அவன் தடுமாற்றத்தில் தெரியாம நடந்த விபத்து.. நான் மட்டுமே தான் பொறுப்புன்னு சாதிக்கிறான்… அவன் உண்மையை ஒத்துக் கொண்டதும் தான் எங்களால மேற்கொண்டு அக்ஷன் எடுக்க முடியும்..”
“விபத்து..ஹோ ரியலீ..!!! கிட்டதட்ட டூ கிலோ மீட்டர்ஸ் ரேஸ்ஸிங் மாறி ஃபாலோ பண்ணவனை நெருங்க விடாமல் வேகமா போயிருக்கோம்.. இன்னும் ஃப்யூ மினிட்ஸ் விட்டு இருந்தால் நானும் என் பி.ஏவும் இப்ப இருந்திருக்கவே மாட்டோம்..” என்றவன் தொடர்ந்து,
“என்னை கொலை பண்ண பார்ப்பாங்க.. யாரால வரும்.. எப்ப எதனாலனு எல்லாம் நேராகவே கமிஷ்னரை சந்திச்சு விளாவாரியா சொல்லியிருக்கேன்.. கம்ப்ளைன் கொடுத்திருக்கேன்.. நான் சொன்னது தான் நடந்திருக்கு.. நீங்க யார்ன்னு தேட வேண்டாம்.. இவங்க தான் தெரியும்.. அதை அந்த ட்ரைவர் வாயில் இருந்து வரவைக்க முடியாதா..!! எதுவரை காத்திருப்பீங்க.. அவன் தப்பிச்சு போற வரையுமா..?? இல்ல என் மேல அடுத்த அடெம்ப்ட் நடுக்குற வரையுமா..??? என் ஸ்டேட்மெண்ட் வைச்சு நீங்க அட்லீஸ்ட் ஒரு விசாரணை கூட பண்ணல சர்.. என்னால இதை எப்படி சும்மா விட முடியும்.. ஐ நீட் அ இமிடியட் அக்ஷன் சர்.. இல்லைனா லீகலீ இதை எப்படி ஃப்ரோசீட் பண்ணனும்னு எனக்கு தெரியும்..”
கத்தி கூச்சலிடாமல் அமைதியாக அதே சமயம் அழுத்தமாய் தன் கோபத்தை வெளிப்படுத்தியவனிடம் ஏசிபி தங்கள் தரப்பை கூறி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுக்க அந்நேரம் கதவு திறக்கபட எரிச்சலாய் நிமிர்ந்து பார்த்தவன் நிச்சயம் ஜென்சியை எதிர்பார்க்கவில்லை.
தீவிரமாய் காவல் அதிகாரிகளோடு அவன் பேசிக் கொண்டிருப்பதனை அறியாமல் உள்ளே வந்துவிட்டோமே என்ற சங்கடம் அவள் முகத்தில் தெரிய,
“ஸாரி..” என்று முணுமுணுப்போடு மீண்டும் வெளியே செல்ல முனைந்தவளை,
“ஜென்சி.. இட்ஸ் ஓகே.. கம் இன்..”
என்று அழைக்க ஒரு உந்துதலில் வந்துவிட்டவளுக்கு அவன் முகத்தில் தெரிந்த ஆச்சரியம் கலந்த குறுகுறுப்பை கண்டு வந்திருக்க வேண்டாமோ.. என்று ஒரு பக்கம் தோண்றினாலும் தாறுமாறாய் அடிப்பட்டதனால் துவண்டு இருந்தவனை காணவே நெஞ்சம் பிசைந்தது.
“உனக்கு எப்படி தெரியும்…??? நிஜமா என்னை பார்க்க தான் வந்திருக்கியா..” என்றான் வியப்பு மாறாமல்..
“நேத்து இந்த மேடம் உங்களை அட்மிட் பண்ணும்போது இங்க தான் இருந்தாங்க சர்.. அழுதுட்டே நின்னாங்க.. நைட் உங்களுக்கு ஒன்னுமில்லைன்னு தெரிஞ்சதும் தான் போனாங்க..”
தமிழில் அவன் கேட்டது புரியவில்லை என்றாலும் ஜோஷ்வாவின் முகபாவணையில் இது தான் என யூகித்து அந்த இன்ஸ்பெக்டர் தானாய் கூற அதனை கேட்டு புருவங்கள் உயர்ந்திட, “அப்படியா..” என்னும் விதமாய் பார்த்தவனின் கண்களை சந்திக்க மறுத்து,
‘உன்னுட்ட யாராவது கேட்டாங்களா இப்போ..’ என்பதுபோல் இன்ஸ்பெக்டரை ஒரு பார்வை பார்க்க வழக்கம்போல் அவனிடத்தில் அந்த சின்ன இதழ் முறுவலும் ஒட்டிக் கொண்டது.
தங்கள் வேலை முடிந்துவிட்டதால் ஜோஷ்வாவிடம் விடைபெற்று அவர்கள் செல்ல போகும்முன் ஏசிபியின் பார்வை இருவரையும் ஆராய்ச்சியாய் நோட்டமிட்டே சென்றது.
எதுவும் சொல்லாமல் அமைதியாய் அருகில் வந்த ஜென்சி அவனின் கேள்விகளுக்கோ ஆச்சரியப் பார்வைகோ பதிலளிக்க விரும்பாமல் அவற்றை ஒதுக்கி,
“வலி இருக்கா ஜோஷ்..?? எப்போ கான்ஷியஸ் வந்துச்சு.. டாக்டர் என்ன சொன்னாங்க..”
என்று கேட்டபோது ஜோஷ்வாவின் பார்வை அவளிடம் நிலைக்க வார்த்தைகள் இல்லை என்றாலும் ஆழமாய் நோக்கிய அவன் நயனங்கள் பேசிய மொழி அவள் விழிகளையும் அவனோடு கட்டிப்போட்டது.
சிகிச்சை முடிந்து காலையில் சாதாரண அறைக்கு மாற்றி நினைவு திரும்பியது முதல் தன் நிர்வனத்தின் செயல் அதிகாரியிடம் விபத்து குறித்து செய்தியை அனுப்பி வரவைத்து,
அனில் குப்தாவின் நலனை விசாரித்து வந்திருந்த அவன் குடும்பத்திற்கு செய்ய வேண்டியவையை செய்ய வைத்து, விபத்தால் நின்றுபோன தன் அலுவலக பணிகளுக்கு மாற்று கூறி,
இதோ தற்போது காவல் அதிகாரிகளுடன் பேசியது வரை அடுத்தடுத்து என அவன் கடமைகளிலே சுழன்று கொண்டிருந்ததில் அவன் நலனை பேணவோ ஆறுதலாய் தோள் தாங்கவோ யாரும் வந்து நிற்கவும் இல்லை என்பதை அவன் உணரவே இல்லை. அதனை அவன் யாரிடமும் எதிர்பார்க்கவும் இல்லை.
ஆனால் இந்நொடி ஜென்சி நேற்று இங்கே இருந்ததும் இப்பொழுது வலிகிறதா என்று கேட்டதும் ஏனோ அவனுடலில் காந்திய காயங்களை எல்லாம் தென்றலாய் வருடியது போன்றதொரு இதமளிக்க,
“அழுதியா ஜென்சி.. எனக்காக..?” என்றான். அதில் அவனின் வழமையான துள்ளல் இல்லை.கேலி கிண்டல் இல்லை. மாறாக மென்மையாய் குழைந்த அவன் குரலில் அவளுக்கு மூச்சு முட்ட,
‘இங்க வந்திருக்கவே கூடாது..’ என்று மறுபடியும் எண்ணி,
“அவர் ஹைப் பண்ணி சொன்னதுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது..”
என்று முறைக்கும்போது பழைய ஜென்சி மீண்டு இருந்தாள்.
“அதானே..” என தலையசைத்து சிரித்தவன் பின்,
“வலிக்கலன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.. தலைல இருந்து கால் வரையும் எல்லாமும் நொறுங்குனா மாதிரி வலி..!! கொஞ்ச நாளுக்கு எழுந்து நடக்கிறதே கஷ்டம் தான்னு டாக்டர் சொல்லி காலை கட்டி போட்டாச்சு.. இன்னும் எத்தனை நாளுக்கு நாலா பக்கமும் இந்த வெள்ளை சுவரை பார்த்து படுத்து இருக்கணுமோன்னு நினைச்சேன்.. கண்ணுக்கு கலர்ஃபுல்லா நீ வந்து நிற்கிற..”
சாதாரணமாய் தொடங்கி கடைசியில் தன் பாணியில் கூறி கண்ணடிக்க,
“என்ன ஆனாலும் இந்த வாய் மட்டும் உனக்கு குறையவே குறையாதா..” என்று திட்டினாலும் அதில் வேகம் இல்லை.
அதற்கும் இதழ் விரிய புன்னகையாய் அவன் பார்த்திருக்க,
“வீட்ல இருந்து யாரும் வரலையா.. முதல்ல அவங்களுக்கு தெரியுமா..?? என்றாள்.
இவனை உடன் இருந்து பார்த்துக் கொள்ள யாரும் இருப்பது போல் தோன்றவில்லை.
“தெரிஞ்சு இருக்கலாம்.. யாரும் வரல.. வரணும்னு அவசியமும் இல்ல..” என்று லேசாய் தலை சாய்த்து அலட்சியமாய் கூறியவனை கண்டு,
“இது யாரோ வேணும்னு பண்ண அக்ஸிடெண்ட் தான்.. இல்லையா ஜோஷ்வா..”
என அவள் கேட்டதற்கு அவனின் அமைதி அது தான் உண்மை என்பதை சொல்ல,
“யாரால.. எதனாலன்னு எல்லாம் நான் கேட்க மாட்டேன்.. ஏன்னா உன்னை சுத்தி உள்ள எல்லாரையும் உனக்கு எதிரியா நீ மாத்திக்கிட்டு வரேங்கிறது எனக்கே புரியும் போது.. உனக்கு புரியாமல் இருக்காதுனு தெரியும்..
உன்னை நல்லவன்னு நம்பவும் முடில.. கெட்டவன்னு ஒதுக்கவும் முடில.. ஆனால் எப்பவும் அணிச்சு இருக்கியே உன்னோட இந்த சிரிப்பும் அலட்சியமும்.. இதுக்கு பின்னாடி ஏதோ இருக்கு.. யாருக்கும் தெரியாம சாமர்த்தியமா மறைக்கிறதா நினைச்சுட்டு இருக்க..!! ரொம்ப நாள் இதை இப்படி தொடர முடியாது ஜோஷ்வா..”
என்று தீர்க்கமாய் மொழிந்தவள் விடைபெறும் விதமாய் தலையசைத்து நகர,
“அது உனக்கும் பொருந்தும் ஜென்சி..!!! உன்னுள்ள ஆழமா காயப்படுத்திய காதலை யாருக்கும் தெரியாம மறைச்சுட்ட மாதிரியும் அது உனக்கு ஒரு பொருட்டே இல்லாமல் மறந்துட்ட மாதிரியும் நீயும் தான் நடிக்கிற..!! அது மட்டும் காலத்துக்கும் தொடருமோ..” என்றான் அவளை போலவே..!!
பதிலின்றி முறைத்துவிட்டு கதவை திறக்க போனபோது தானே அது திறக்கப்பட மறுபக்கம் நின்றவரை கண்டு ஜென்சி தயங்கினாள் என்றால்,
“ஹோ மை ஜீசஸ்..” என்று சலிப்போடு கண்களை சுழற்றினான் ஜோஷ்வா.