மனமென்னும் கார்மேகத்தில் மட்டுமே பொத்தி பொத்தி அமிழ்ந்திருந்த ஒர் உண்மை இன்று மின்னலாய் பளீச்சென்று உடைக்கப்பட்டதால் இருவரின் உணர்ச்சிகளும் கட்டுகடங்காமல் மாரியென பொழிந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
மறுநாள் கண்விழித்தபோது தலைசுற்றுவது போல் இருக்க படுக்கையை விட்டு எழ விரும்பாமல் சோர்வோடு புரண்டு படுத்தாள் ஜென்சி. மழையில் தொப்பலாய் நனைந்ததனாலோ இல்லை அதிகம் உணர்ச்சிவசப்பட்டதனாலயோ இரவு முழுவதும் காய்ச்சலினால் அவதிப்பட்டாள்.
மருத்துவர் வந்து பறிசோதித்து இன்ஜெக்ஷன் போட்டது, ரெமி தாத்தாவும் ஜோஷ்வாவும் தவிப்போடு பேசிக்கொள்வது என அனைத்தும் செவியில் ஏறினாலும் கருத்தில் பதியவில்லை. பாதி இரவு வரை தூக்கமும் இல்லாமல் அரை மயக்கத்திலே சென்றது. ஆனால் ஜோஷ்வா அவள் விரலோடு தன் விரல்களை பின்னிக் கொண்டு ‘சாரி ஜென்சி’ என்பதையே ஜெபம்போல் சொல்லி ஏதேதோ புலம்பி தீர்த்தது மட்டும் இப்பொழுதும் நினைவில் நின்றது.
அவன் பிடித்திருந்த விரல்களை நீட்டி மடக்கி பார்த்திருந்தவளுக்கு நேற்று அவன் முகத்தில் அப்பியிருந்த வேதனையும் தவிப்புமே கண்முன் விரிய,
‘காதால் கேட்டு இருந்தால் தான் என்ன.. என்ன காரணமாக இருக்கும் என தன்னிடம் தானே கேட்க வேண்டும்.. அவனாய் ஒரு முடிவிற்கு வந்து தன்னை திட்டம்போட்டு ஏமாற்றிவிட்டாய் என சொல்லிவிடுவானா.. அவ்வளவு தானா நான் அவனுக்கு..’ இன்னமும் அவள் மனம் ஆரவே இல்லை.
அவன் மறைத்த விஷயத்தை அவனாக பேசாத வரை தான் கேட்கவே கூடாது என்ற உறுதியான முடிவில் தான் நேற்று வரையிலும் இருந்தாள். சட்டென்று எதற்கும் உணர்ச்சிவசப்படும் ரகமில்லை அவள். நிதானமாய் எதையும் அணுகும் குணம் கொண்டவள்.. ஆனால் நேற்று அவன் அலைபேசியில் பேசியவை தான் அவளை நிதானமிழக்க செய்தது. அந்த கோபத்தில் தன்னையும் மீறி அவன் மீது தனக்குள்ள நேசத்தை, காதலை,ஏக்கத்தை,எதிர்ப்பார்ப்பை என அனைத்தையும் கொட்டி தீர்த்துவிட்டாள்.ஆனால் இப்பொழுதோ,
‘சொல்லியே இருக்க கூடாது.. அவன் தன்னை ஜோ என்று வெளிப்படுத்தவே விருப்பல.. அதை அவன் ஒரு விஷயமாகவும் மதிக்கல.. ஆனா தான் தான் அவனையே எண்ணி உருகி இருக்கோம்னு அப்படமாய் உளரி கொட்டி.. ம்ச்.. இப்ப அவனோட பரிதாபமோ.. இல்ல இவ இப்படி ஆசை வைக்க காரணமாகிட்டோமே என்ற குற்றவுணர்வோ எதையும் என்னால சகிக்க முடியாது.. ஹோ காட்.. ரியலீ எம்பேரிஸீங்..’
என ஒரு பக்கம் தன் செயலை எண்ணி நொந்து போனாள். உடனே இங்கிருந்து தன் வீட்டிற்கு செல்ல வேண்டும்போல் இருந்தது.
‘இதையே நினைச்சு பைத்தியமாகும் முன்னாடி.. இங்கிருந்து கிளம்பனும்..’
என எண்ணியவளாய் மெல்ல எழுந்தமர்ந்தவள் அருகே டேபிளில் இருந்த தன் அலைபேசியை கைநீட்டி எடுத்தாள்.
அவள் அலைபேசியில் மூழ்கியிருந்தபோது கதவு திறக்கப்பட அறைக்குள் வந்தனர் ரெமிஜியஸூம் ஜோஷ்வாவும்..
தாத்தாவை தொடர்ந்து பின்னால் அமைதியாய் வந்தவனின் எப்பொழுதும் பொலிவோடு இருக்கும் முகம் டல்லடிக்க தலைகலைந்து கண்கள் சிவந்து சோர்வாய் இருக்க ‘அவனுக்கும் உடம்பு சரியில்லையோ’ என யோசித்தாள். தன் கோபத்தையும் மீறி அவனை இப்படி பார்க்கும்போது ஏதோ பிசைந்தது.
அவளையே வைத்தவிழி வாங்காமல் பார்த்தபடி அவன் சற்று தள்ளியே கைகட்டி நின்றுவிட அவள் அமர்ந்திருப்பதை கண்டு ரெமி,
”எழுந்துட்டீயா ஜென்சிமா..” என்ற வினாவோடு அருகில் வந்தவர் அவள் நெற்றியில் கைவைத்து காய்ச்சல் விட்டு இருப்பதை உணர்ந்து, “கர்த்தருக்கு நன்றி..” என்று பெருமூச்சு விட்டவராய்
“உன்னை பேச்சு மூச்சு இல்லாமல் பார்க்கவும் எப்படி இருந்துச்சு தெரியுமா..? கொஞ்ச நேரத்தில் பயம் புடுத்திட்டீயே ஜென்சி..”
என்று கனிவும் கவலையுமாய் சொல்ல,
“மழைல நனைஞ்சதுல கொஞ்சம் ஃபீவர் ஆகிடுச்சு தாத்தா.. இப்ப பாருங்க.. லேசா டிஸ்ஸினெஸ் இருக்கு.. அவ்வளவு தான்.. மத்தபடி ஐம் கம்ப்ளீட்லீ ஆல்ரைட்..”
அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாய் புன்னகைக்க முயன்றாள். ஆனாலும் மனதின் வாடல் முகத்தில் அப்படியே தெரிந்தது.
அதனை உணர்ந்து இருவரையும் ஒரு பார்வை பார்த்தவர்,
“ரெண்டு பேரும் வளர்ந்த பிள்ளைங்க.. உங்க பிரச்சனையை நீங்களே பார்த்துபீங்கனு தான் இதுவரை எதிலும் நான் தலையிடல.. ஆனா நேத்து நீங்க ரெண்டு பேரும் நின்ன கோலத்தை பார்க்கும்போது அது தப்போன்னு தோணுது..” என்றவர்
“இல்ல தாத்தா..”
என ஏதோ சொல்ல வந்த ஜென்சியை தடுத்து ஜோஷ்வாவிடம்,
“எப்பா பெரிய மனுஷரே.. பெரிய பெரிய வேலை எல்லாம் பண்றீங்க.. ஆனால் கொண்டவள் மனசை நோக வைக்க கூடாதுன்னு தெரியலல.. நேத்து உன்கிட்ட போன்ல பேசிட்டு வைச்சதும் ஜென்சி முகத்துல தெரிஞ்ச வலியும் வேதனையும் இன்னமும் என் கண்ண விட்டு மறையல..” என்று கடினமாய் சொல்ல அவனால் பதில் சொல்ல இயலவில்லை.
“உங்களுக்குள்ள பிரச்சனை என்னவா வேணாலும் இருக்கட்டும்.. அதையே பிடிச்சுகிட்டு இன்னும் எத்தனை நாள் கடத்த போறீங்க. போதும்டா.. அதிலே சுத்தி சுத்தி இனி வர வாழ்க்கையையும் கெடுத்துகாதீங்க.. நீங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சு இருக்க நேசம் எல்லாத்தையும் விட பெருசு.. அதுக்காக எதை வேணும்னாலும் மறக்கலாம்.. மன்னிக்கலாம்.. அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்..”
என்று பொதுவாய் சொல்ல அது இருவர் உள்ளும் தாக்கத்தை கொடுத்ததோ..!! அவர்கள் பார்வை ஒரே நேரத்தில் மற்றவரை சந்திக்க சட்டென்று பார்வையை விலக்கி கொண்டாள் ஜென்சி.
அதற்கும் மேல் பேச்சை வளர்க்காமல்,
“உடம்பு சரியில்லாத பிள்ளைய உட்கார வைச்சு லெச்சர் கொடுக்கிறேன் பார்..”
என லேசாய் தலையில் தட்டிக் கொண்டவர்,
“நீ போய் ஃப்ரெஷப் ஆகு ஜென்சி.. உனக்கு சாப்பிட எடுத்துட்டு வரேன்..”
என்று கூறி வெளியேற இப்பொழுது அவனும் அவளும் மட்டுமே..!!
எதுவும் சொல்வானோ.. மறுபடியும் சாரி ஜென்சியை ஆரம்பிப்பானோ.. வேணாம்.. அவன் ஒன்னும் பேச வேண்டாம்.. அவன் எந்த விளக்கம் கொடுத்தாலும் என்னால ஏத்துக்க முடியாது… என எண்ணவோட்டம் ஓடினாலும் அவன் இருப்பதையே கவனிக்காதவள் போல் பார்வையை எங்கோ வைத்து உட்கார்ந்திருந்தாள்.
செவி மட்டும் அவனிடம் நிலைகொண்டிருக்க அவனோ ஆழ்ந்த பார்வையோடு நின்றவன் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றுவிட ஏமாற்றமடைந்தது அவள் மனம். காரணமே புரியாமல் கோபமும் எரிச்சலும் பெருகியது.
அவளுக்கு என்ன வேண்டும்.. என்ன எதிர்பார்க்கிறாள் என அவளுக்கே புரியவில்லை. கடுகடுப்போடு எழுந்து அவள் குளியலறையில் புகுந்து கொண்டாள்.
மீண்டும் வந்தபோது உடல் சற்று தெளிவானதில் வயிறு பசியை உணர்த்தியது.
டேபிள் அருகே வைத்திருந்த தண்ணீரை குடித்துவிட்டு கட்டிலில் சோர்வாய் அவள் சாய்ந்தமர்ந்த நேரம் கையில் அவளுக்கான உணவு ட்ரேவோடு உள்ளே வந்தான் ஜோஷ்வா.
‘‘இவன் கிட்ட இப்ப கேட்டேனா.. எனக்கு வந்து சாப்பிட தெரியாது பார்..’ என அதுக்கும் முரண்டியது ..!! அவள் இருக்கும் மனநிலையில் அவன் என்ன செய்தாலும் குற்றமாக தான் தோணியது.
அவனை குறுகுறுவென அவள் முறைத்து பார்க்க,
“நேத்துல இருந்து சாப்பிடாதது.. செம்ம பசில இருப்ப.. சாப்பிட்டு பொறுமையா என் கூட சண்டை போடலாம்.. ஓகேவா..”
அவனுக்கும் ஜலதோஷம் பிடித்ததால் கரகரத்த குரலில் சொல்லி அவள் அருகில் ட்ரேவை வைத்தான்.
அவள் அப்பொழுதும் நகராமல் முறைப்போடே அமர்ந்திருக்கவும் கண்களை சுருக்கி,
“ப்ளீஸ் ஜென்சி.. நா இருக்கிறது பிடிக்கலைனா சொல்லு வெளியே போயிடுறேன்.. ஆனா சாப்பாட்டை மறுக்காத..”
என்று கெஞ்சலாய் சொல்ல மேலும் பிகு பண்ண முடியாமல் பசி கிள்ளியது.
எனவே தட்டை எடுத்து அவன் கொண்டு வந்திருந்த இட்லியை வைத்து சாப்பிட அவனும் நாற்காலி ஒன்றை இழுத்து போட்டு அமர்ந்து விட்டான். இத்தனைக்கும் அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவன் பார்வையோ அவளிடமே இருக்க பொறுத்து பொறுத்து பார்த்தவள்,
“இப்படி குறுகுறுன்னு பார்த்தால் என்ன அர்த்தம்.. நான் சாப்பிடுறதா.. வேண்டாமா..”
என்று முதல் முறையாய் வாய் திறக்க அதில் மலர்ந்த புன்னகையை அடக்கி,
“சாரி.. சாரி..” என உடனே திரும்பினாலும்,
“பட்.. என் கண்ணு என் பேச்சை கேட்க மாட்டுதே..”
என தனக்குள் முணுமுணுத்தது அவள் காதில் விழாமல் இல்லை. ஆனாலும் கண்டு கொள்ளவில்லை.
நேரம் செல்ல உண்டு முடித்ததும் அவன் பேசும்முன் அவளே,
“நான் மும்பை கிளம்புறேன் ஜோஷ்.. இப்பவே..”
என்று தீர்க்கமாய் சொல்ல அதுவரை அவன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.
“இந்த நிலமைலயா.. என்ன விளையாடுறீயா ஜென்சி..”
சற்று கோபமாகவே கேட்க அவளும் அசரவில்லை.
“என்ன இந்த நிலமைலயா..? நான் ஒன்னும் படுத்த படுக்கைல இல்ல ஜோஷ்வா.. நேத்தே போக வேண்டியது.. ஆனால் நீ ஒரு அக்கியூஷேசன் வைக்கும்போது அதை தப்புனு உணர்த்தாம போக கூடாதுனு தான் இருந்தேன்.. அதை மட்டுமே பேசியிருக்கணும்.. தேவையில்லாததை எல்லாம் ஏதேதோ உளரிட்டேன்.. ம்ச்.. திருப்பி அதை கொண்டு எந்த விளக்கமும் வேண்டாம் ஜோஷ்.. நேத்து நடந்த எதையும் நான் திரும்ப யோசிக்க கூட விரும்பல..” அவன் விழி நோக்காமல் மரத்த குரலில் கூறினாள்.
“உளரல்..?” ஆழமான பார்வையோடு கேள்விபோட்டு நிறுத்தி,
“நீ உளரல்னு சொல்ற அந்த விஷயத்தை உன் வாய்ல இருந்து கேட்க மாட்டேனான்னு ஏங்கி எத்தனை நாள் தூக்கமில்லாம தவிச்சு இருக்கேன் தெரியுமா ஜென்சி..”
என்றவனை சட்டென்று நிமிர்ந்து பார்க்க அன்றைய வலியும் வேதனையும் அப்பட்டமாய் பிரதிபலிக்கும் அவன் முகம் கண்டு அதிர்ந்தாலும் அடிப்பட்ட மனம் அவனை நம்ப மறுத்தது.
அவள் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவனாய்,
“நான் பொய் சொல்லி இருக்கேன் தான்.. ஆனா பொய் மட்டுமே சொல்லுவேன்னு இல்ல ஜென்சி.. உனக்கு கொடுத்த ப்ராமிஸை என் உயிர் உள்ள வரை கடைப்பிடிப்பேன்..”
தீர்க்கமாய் சொன்னவன், “சமந்தமே இல்லாமல் எதுக்காக உன்னை சுத்தி சுத்தி நான் வரணும்.. உன் லவ் ஸ்டோரி சொல்லுனு நச்சரிகணும்..! ஏன்னா.. என் மனசுல அடிச்சுகிற அந்த விஷயம் உண்மையா இருந்திடாதா என்ற எதிர்பார்ப்பு மட்டும் தான் ஜென்சி..”
என்று கூறி கண்களை உருட்டி மூச்சை இழுத்து விட்டான். ஏனோ அனைத்தையும் உள்ளே அடைத்து வைத்த நெஞ்சம் ஒரே மூச்சில் கொட்ட முடியாமல் விம்மி தவித்தது.
அவனின் அசைவுகளை திகைத்த விழி மாறாமல் உள்வாங்கி அவள் முழிக்க,
“தப்பு என் பேர்ல இருக்கலாம் ஜென்சி.. ஆனால் என் பக்கம் எடுத்து சொல்லவும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம்ல.. உன்கிட்ட நிறைய பேசணும்.. நீ போனால் பின்னாடியே உன்னை தேடி வந்து நிற்பேன் தான்.. ஆனால் அதுவரை காத்திருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரகம் தான்.. ப்ளீஸ் ஜென்சி..”
உயிரை உருக்கி வார்த்தைகளால் வடிப்பதுபோல் ஏக்கமும் காதலும் ததும்பி வழியும் அவனிடத்தில் காதல் கொண்ட மங்கையவளால் மறுத்தும் கூற முடியுமோ..!!
“என் டீனேஜ் முழுக்க இங்கேயே தான் செலவழிச்சேன் ஜென்சி.. பொதுவா எனக்கு மும்பை வரவே பிடிக்காது.. ஆனாலும் சில தவிர்க்க முடியாத ஃபங்ஷன்களுக்கு அப்பா கட்டாயப்படுத்தி வரவைப்பார்.. அப்படியொரு தடவை ஒரு பார்ட்டிக்காக வந்த போது தான் முதல் முறையா உன்னை பார்த்தேன்.. எப்பவும் என் கண்முன்னால நடக்கிறா மாதிரி என்னுள்ள பதிஞ்சு இருக்கு ஜென்சி..”
தன் இதயத்தை கைவைத்து சொல்ல அது எப்பொழுது என்று அவளுக்கும் புரிந்தது.
“என்னை மாதிரியே அந்த இடத்துக்கும் தனக்கும் சமந்தமே இல்லாத மாதிரி நீயும் உட்கார்ந்து இருந்த.. வொய்ட் ஃப்ராக்.. செம்ம பப்லீயா.. பாவமான லுக்கோட ஒரு பொண்ணு… என் பார்வை முழுக்க உன்மேல தான் இருந்துச்சு.. பட் நீ யாருனே தெரியல.. ரொம்ப தயக்கத்துக்கு அப்புறம் தான் உன்கிட்ட பேச வந்தேன் ஜென்சி.. ஆனா நான் பேசும் முன்னாடி நீயே என் தெரிஞ்சா மாதிரி பேசவுமே எனக்கு புரிஞ்சுடுச்சு நீ என்னை ஜோசஃப்னு நினைச்சு பேசுறேன்னு.. நான் அவன் இல்லைனு தெரிஞ்சா பேசுவியா தெரியல.. அதனால் தான் என்னை நான் அறிமுக படுத்திக்கவே இல்லை.. உன்கூட பிரியவே முடியாத அளவு ஒரு பாண்டிங் எனக்கு உருவாகும்னு புரிஞ்சு இருந்தால் கண்டிப்பா என்னை ஜோஷ்வான்னு சொல்லாமல் இருந்திருக்க மாட்டேன்..”
அதற்கு இன்னமும் வருந்துகிறான் என்பது அவனின் முகத்தில் தெரிந்தது.
“எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ்.. ஆனால் யூ ஆர் சம்திங் ஸ்பெஷல்… அதனால தானோ என்னவோ அப்பா கட்டாயத்திற்கு வந்தது போய் உனக்காகவே மும்பை வர ஆரம்பிச்சேன்.. அது அப்பாவுக்கு ஒரு பொண்ணோட சுத்துறேன்னு இன்பர்மெஷன் போகி வீட்ல சண்டை எல்லாம் வெடிச்சுது.. அதெல்லாம் என்னை கொஞ்சமும் அசைக்கல..”
என்று அன்றைய நினைவில் சிரித்தவன்,
“ஆனா நான் ஜோசஃப் இல்ல ஜோஷ்வான்னு எனக்கு சொல்லவே தோணல.. பேருல என்ன இருக்குனு அந்த வயசுல அதை நான் பெருசா எடுக்கல ஜென்சி.. கெனடா போகும் முன்னாடி தான் முதல் முதலா உறுத்தலா இருந்துச்சு.. சொல்லலாமா வேணாமானு ஒரு குழப்பத்துலே இருந்து கடைசிய சொல்லாமலே போயிட்டேன்..
கெனடா போனதும் படிப்பு, ரிஸர்ச்னு என்னோட வாழ்க்கை பாதையே மாறிடுச்சு.. தவம் மாதிரி இருந்தேன்.. ஆனால் அடிமனசுல உன்னை பத்திய உறுத்தல் இருந்தேட்டே இருக்கும்.. உனக்கு உண்மையை சொல்லி இருக்கனும்னு தோணிட்டே இருந்துச்சு… அப்ப சின்ன விஷயமா தெரிஞ்சது அப்புறம் ரொம்ப பெரிய தப்பா தெரிஞ்சுது ஜென்சி..
ஜோசஃபை ஒரு தடவை பார்த்து நீ பேசியிருந்தா நான் ஜோசஃப் இல்லை ஜோஷ்வானு கண்டு பிடிச்சு இருப்பனு நினைச்சேன்.. அப்ப நீ எவ்வளவு தூரம் ஹர்ட் ஆகியிருப்ப.. அது ரொம்ப கில்டியா இருந்துச்சு.. என்னை வெறுத்தே இருப்பன்னு நினைச்சு நினைச்சு மருகினேன் ஜென்சி.. இந்த சிந்தனை வந்தஅப்புறம் என்னால என்னோட ரிஸர்ச்ல கூட காசேன்ரெட் பண்ண முடியல.. ரொம்ப டிப்ரெஸ்டா இருந்தேன்..
உன்னோட வெறுப்பு என்னை எவ்வளவு தூரம் அஃப்க்ட் பண்ணும்னு உணர்ந்த போது தான் எனக்கு உன்மேல இருக்கிறது நட்பை தாண்டிய உணர்வுனு புரிஞ்சுது.. என் வாழ்க்கைல உன்னை தாண்டி வேற பெண்ணை நான் யோசிச்சது கூட இல்ல.. அது புரியவே எனக்கு பத்து வருஷம் ஆகிடுச்சு..
அதை உணர்ந்தபோது எவ்வளவு சந்தோஷப்பட்டேனோ அதே அளவு வலியும் அனுபவிச்சேன்.. உன்கிட்ட எந்த முகத்தை வைச்சு காதலிக்கிறதா சொல்லுவேன்… உன் காதலை பெற எனக்கு தகுதி இல்லைனு என் மனசுல ஆழமாய் பதிஞ்சிடுச்சு ஜென்சி.. ஆனால் என் காதல் உண்மை.. நீ நிஜத்தில் என்கூட இருக்க மாட்டேன்னு முடிவுக்கு வந்ததாலோ என்னவோ நிழலாய் எப்பவும் உன்னை என்கூடவே உணரனும்னு நினைச்சேன்.. அந்த எண்ணத்தோட விளைவு தான் இந்த டாட்டூ..”
“காதல் சில நேரங்களில் நம்மையே அறியாமல் கிரேஸியா சில விஷயங்களை செய்ய வைக்கும்னு கேள்வி பட்டு இருக்கேன்.. ஆனால் உணர்ந்தது இந்த டாட்டூல தான்.. எனக்கு பிடிக்காத உனக்கு பிடிச்ச டாட்டூவை போடனும்னு தோணுச்சு.. யோசிக்கவே இல்ல உடனே குத்திட்டேன்.. “
“லயனஸ்..??”
அவள் தன்னையும் மீறி கேள்வியாய் பார்க்க பெரிதாய் புன்னகைத்து,
“நியாபகம் இருக்கா ஜென்சி.. ஒரு தடவை உன்னை என்னோட ட்விட்டீனு சொன்னதுக்கு நீ அஞ்சு அறிவா இருந்தாலும் அதில் நான் சுப்பிரியர்னு சொன்ன தெரியுமா.. அப்போ எனக்கு தோணினது லயனஸ் தான்.. யூ ஆர் மை லயனஸ்.. மை ப்ரேவ் குவீன்.. அதனால தான் இந்த லயனஸ்..”
என்று சொல்லவும் முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழ ஸ்தம்பித்த நிலையில் அவனின் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கி கிரக்கிக்க முயன்றாள். கனவிலும் நினைக்காத விஷயங்களை இன்று கேட்கும்போது உள்ளம் உவகை கொள்ள கண்கள் ஏனோ கலங்கியது.
“காலம் என்னை மறுபடியும் மும்பைலையே கொண்டு வந்து நிறுத்துச்சு.. உன்னை எப்படி பேஸ் பண்ணுவேன்னு மலையளவு எனக்கு தயக்கம் இருந்தாலும் மறுபடியும் உன்னை பார்க்கனும்னு ஆசை கடலளவு இருந்துச்சு.. நான் வந்ததும் உன் சம்பந்தமா கேள்விபட்ட முதல் விஷயம் ஜோசஃப்பும் உன்னையும் இணைச்சு வந்த காஸிப் தான்..
நேத்து நீ சொன்ன தெரியுமா.. அதே மாதிரி தான்.. கண்ணு முன்னால என் காதலி எனக்கு இல்லைனு உணர்ந்த தருணம் எவ்வளவு கொடுமை தெரியுமா… வாழ்க்கைல எனக்கு எதுவுமே நிலைகாது போலனு நினைச்சு எல்லாமே வெறுத்துடுச்சு ஜென்சி.. நீ அவனை காதலிக்கிறனு புரிஞ்ச அப்புறம் உன்னை சந்திக்கிறதில் அர்த்தமில்லைனு பட்டுச்சு.. நீ சந்தோஷமா இருக்கனும்னு தான் உன்னை தேடி வரவோ பார்க்கவோ முயலல..
ஆனால் ஜோசஃப்புக்கு கல்யாணம் ஆன போது எனக்கும் பெரிய ஷாக்…!! உன்னை விரும்பிட்டு அவன் ஏன் இன்னோர் பொண்ணை கல்யாணம் பண்ணினான்னு.. சத்தியமா ரொம்ப துடிச்சு போனேன் ஜென்சி.. காதல் தோல்வி.. அந்த வலியை முழுசா அனுபவிக்கிறவன் நான்.. அதே வலி உனக்கும் ஏற்பட்டதை என்னால தாங்கவே முடியல.. ஏன் நம்ம விதி மட்டும் இப்படி இருக்குனு நினைக்காத நாளே இல்ல..
ஆனா விதி போடும் கணக்கு எல்லாமே விசித்திரம் ஆனது..!!! மிராகில்ஸில் எனக்கு நம்பிக்கை வர காரணமே நம்மோட மறுசந்திப்பு தான்…!! இட் வாஸ் ப்யூர்லீ அ மிராகில்..!!
முதல் முறை எப்படி சந்திச்சோமோ அதே மாதிரி இத்தனை வருஷம் கழிச்சும் சந்திச்சோம்.. மறுபடியும் என்னை ஜோசஃப்னு நினைச்சு நீயே வந்து பேசின.. அதுவும் அன்னைக்கு நீ சொன்ன விஷயம்.. கனவுல கூட நினைச்சது இல்ல.. இப்படி ஒன்னு நடக்கும்னு..”
கண்களில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் உதட்டில் விரிந்த சிரிப்புமாய் ஜோஷ்வா சொல்ல அன்று அவன் எவ்வாறு உணர்ந்திருப்பான் என்பதை தற்போது அவளுள்ளமும் உணர்ந்தது.
சற்றும் முன்னிருந்த கஷ்டங்களும் காயங்களும் எல்லாம் கானல் நீர்போல் கரைந்து காணாமல் போக கருவில் மட்டுமே சுமந்த குழந்தையை முதன் முறை கையில் ஏந்தும் பரவசநிலை போல் தங்கள் காதலை முதல் முறை ஒருவருக்கொருவர் உணரும் உணர்த்தும் தருணமாய் நெகிழ்ந்திருந்தனர்.
“உனக்கு இன்னமும் ஜோ நான் தான்னு தெரியலனு புரிஞ்சப்போ தான் நீ என்ன தான் ஜோசஃப்னு நினைச்சு லவ் பண்ணியோனு ஸ்பார்க் ஆனது… அப்படியும் இருக்குமோனு தோணினதுல இருந்து அதிகபடியான சந்தோஷத்திலும் பயத்திலும் என் நிம்மதி மொத்தமா பறிபோச்சு..
ஏன்னா நீ ‘ஜோ’ வை காதலிச்ச பட்சத்தில் இத்தனை வருஷம் உன்னை நம்ப வைச்ச பாவத்திற்கு என்னாலே என்னை மன்னிக்க முடியாது.. அந்த பயம் எனகுள்ள இருந்துட்டே இருந்துச்சு..
அதை தெரிஞ்சுக்க தான் உன்னை தேடி தேடி வந்து லவ் ஸ்டோரி கேட்டேன்.. ஆனால் அதை பத்தி நீ ஒரு வார்த்தை கூட சொல்ல மறுத்துட்ட.. கேட்டு கேட்டு களைச்சு போனது தான் மிச்சம்.. அதுவும் ஹாஸ்பிட்டலில் நீ சொல்ல முடியாதுனு கோபமா சொல்லிட்டு போனது அப்புறம் மறுபடியும் அதை கேட்கும் எண்ணமே வரலை.. விருப்பமே இல்லாத உன்னை சுத்தி சுத்தி வந்து டார்ச்சர் பண்றோமோனு தோணுச்சு..அதான் விலகினேன்.. பட் அகெய்ன்.. என் வாழ்க்கைல மிராகில்..!!!
இந்த குன்னூர் ட்ரிப்ல..!!! என் ஜென்சி.. என் கூடவே இத்தனை நாள் தங்கியிருந்தது.. அதுவும் உனக்கு என்னை பிடிக்காதுனு நினைச்ச என் எண்ணத்தை பொய்யாக்கி என்னை பத்தியே நிறைய நிறைய நீ யோசிச்சு இருக்க தேடியிருக்கனு தெரிஞ்சபோது.. ஐம் அவுட் ஆஃப் தி வோல்ட்.. அப்போவே முடிவு பண்ணேன்.. பாஸ்ட்ல நீ யாரை காதலிச்சு இருந்தாலும் பரவாயில்லை..
இப்போ உன் மனசுல இருக்கிறது நான் மட்டும் தான்.. அது போதுனு நினைச்சேன்.. அந்த நம்பிக்கை வந்ததும் தான் என் மனசு திறந்து எல்லாமும் சொன்னேன்.. முழுசா சொல்லி முடிக்கும் முன்னாடி நீ தப்பா புரிஞ்சிகிட்டு கோபமா போயிட்டே..
மறுநாள் எல்லா உண்மையையும் சொல்லி உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணும் எண்ணத்தோட வந்த எனக்கு நீயும் ஜோசஃப்பும் பேசுறது கேட்டு சத்தியமா உடைஞ்சு போயிட்டேன் ஜென்சி.. என்னவோ எனக்கு மட்டும் எல்லாமே தப்பா நடக்கிறா மாதிரி.. ஏன் எனக்கு மட்டும் சந்தோஷம் நிலைக்கவே மாட்டேங்குதுனு.. என்னால.. என்னால தாங்கவே முடியல.. அதை பத்தி மேல யோசிக்ககூட முடியாம என் மூளையே ஸ்தம்பிச்சுடுச்சு..”
கடைசி வரியில் தொண்டை அடைக்க வலியோடு சொல்லும் ஜோஷ்வாவை வாரி அணைத்து ஆறுதல் சொல்ல அவளுள்ளம் துடித்தது.
சில நொடிகள் பேச முடியாத திணறினாலும் தன்னையே மீட்டவனாய் எழுந்து நின்று,
“தெரியாம பண்ணிட்டேன்னு சொல்ல மாட்டேன்.. ஆத்திரத்தில் புத்தி பேதலிக்க நடந்துகிட்டது என் தப்பு தான்.. ஸாரினு ஒரு வார்த்தை எந்த காயத்தையும் மாற்றாதுனு தெரியும்.. ஆனால் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்ட நிம்மதியே போதும்.. இவ்வளவு தான் ஜென்சி என் மனசு.. இனி நீ என்ன முடிவு எடுத்தாலும் மனபூர்வமா நான் ஏத்துப்பேன்..”
என உறுதியாய் சொல்லி நகர முற்பட்டனால் தன்னையே ஊடுருவும் அவளின் கலங்கிய விழியை தாள முடியவில்லை.
அமர்ந்திருந்தவளின் பின்னந்தலையில் கைகொடுத்து தன்னருகில் இழுத்து நெற்றியில் அழுத்தமாய் தன் முதல் முத்ததை பதித்தவன் திகைத்து நோக்கிய அந்த கண்களோடு கலந்து,
“ஐ லவ் யூ ஜென்சி..” என்றான் காதலாய்..!!!