அந்த உயர்ந்த அடுக்குமாடி கட்டிடத்தின் நான்காம் தளத்ததில் இடம்பெற்று இருந்தது ஜாய்சிட்டி நிறுவனம்..!!
அந்த தளத்தில் நுழையும் கண்ணாடி கதவில் “ஜாய்சிட்டி..” என பொரிக்கபட்டு அதன் முதல் எழுத்தான ‘ஜெ’ மட்டும் கோணலாய் குத்தி நிற்கும் டைஸ் வடிவ சிகப்பு சதுரத்திற்குள் பெரிதாய் வடிவமைத்து இருக்க அதன் கீழே சிறிதாய் ‘ட்வெல் இன் தி நியூ வோல்ட்..’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
கதவை தாண்டி உள்ளே அலுவலகம் நடுத்தரமாய் இருந்தாலும் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த சிறு சிறு ஆர்ட் வொர்க்ஸூம் கேம் தொடர்பான படங்களும் குறிப்புகளும் அவ்விடத்திற்கு அழகு சேர்த்தது.
ஆம்..! அது ஜென்சியின் சொந்த நிறுவனம் தான். ஜென்சியின் கோரிக்கையை ஏற்று பார்த்திபன் அவளோடு கைகோர்க்க அவளின் தோழி ரேச்சலும் இவளது நிறுவனத்திலே இணைந்து கொள்ள இன்னும் நேர்காணல் மூலம் புதிதாய் சேர்க்கப்பட்ட ஐவரும் என சிறிய குழுவாய் தொடங்கப்பட்டது தான் ஜாய்சிட்டி..!!
ஜென்சி, பார்த்திபன் இருவருக்கும் தங்கள் அனுபவத்தில் கிடைத்த தொடர்புகளாலும் பழக்கங்களாலும் பிரபலமான கேம் பப்ளீஷர்களிடம் இருந்து ஆடர் கிடைக்க இந்த சிறு குழுவை கொண்டே விடாமுயற்சியோடு குறுகிய காலத்தில் இவர்கள் உருவாக்கிய கேம்ஸ் வாடிக்கையாளர்களை கவர்ந்ததால் இன்னும் புதிய பப்ளீஷர்ஸ் மற்றும் க்ளைண்ட்ஸ்களின் அறிமுகமும் கிட்ட இந்த ஒருவருட காலத்தில் வளர்ச்சிகான பாதையில் வெகு மும்முரமாய் இயங்கி வந்தனர்.
அங்கே போடப்பட்டு இருந்த நீளமேசைகளில் ஒன்றில் சுற்றி அமர்ந்து புதிய கேம்மின் வடிவங்கள் குறித்து தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தனர்.
மேசையின் தொடக்கத்தில் வெள்ளை நிற ஷர்ட் மற்றும் கருப்பு பாண்ட் அணிந்து பக்கா அலுவலக லுக்கில் நின்றிருந்தாள் ஜென்சி. கண்ணாடிக்குள் அங்கும் இங்கும் ஓடும் அந்த கண்கள் தீவிரமாய் பார்க்க, ஸ்லீவ்ஸ் முழங்கைவரை மடித்துவிடபட்டு இருக்க ஒரு கையை மேசையின் ஊன்றி மறுக்கையில் இருந்த பேனாவால் லெவல் வடிவமைப்பில் ஏதோ திருத்தம் சொல்லி கொண்டிருந்தாள்.
“எதுக்கு ரீமூவ் பண்ண சொல்றீங்க ஜென்.. ஹடில்ஸ் நிறைய இருக்க அது இன்னும் இன்ரெஸ்டீங்கா இருக்கும் இல்லையா..”
“யா.. பட் இது கொஞ்சம் க்ளம்சியா இருக்குடா.. க்ளம்சினெஸ் இல்லாமல் ஒரு க்ளியர் வியூ இருந்தால் தான் ப்ளேயருக்கு ஒரு பிடிப்பு வரும்.. அதர்வெய்ஸ் தே வில் கெட் கன்ஃபியூஸ்ட்… அதனால தான் இந்த எக்ஸ்ட்ரா அடெஸ் எல்லாம் வேணாம்னு சொல்றேன்..”
என்று விளக்கமாய் சொல்ல அதன்பின் நீக்கப்பட்ட பாகங்களை வேறு இடங்களில் இணைப்பதற்கான யோசனைகளை கலந்தாலோசனையில் நேரம் சென்றது.
எல்லாவற்றையும் தெளிவுப்படுத்திய பின்னர் தன் காஃபி கப்போடு தன் கேபினுள் நுழைந்த ஜென்சி அங்கே சீ த்ரூ களாஸ் வழி வெளியே மழை பொழிவதை கண்டதும் அதன் அருகில் சென்று சாய்ந்து நின்றவளாய் மெல்ல காஃபியை சிப்பினாள்.
மழை பெய்யும் பொழுதுகளில் எல்லாம் தனியல்பாய் அவள் நினைவுகள் அன்றைய நாளை எண்ணி பார்க்க தவறியதே இல்லை.
அந்த மின்னல் மழையோடு அவர்களின் ஊடலும் காதலும் இழைந்த அழகிய தருணத்தை மீண்டும் அசைப்போட்டபடி நிற்க அவனின் ‘ஐ லவ் யூ ஜென்சி..’யும் முதல் முத்தமும் எண்ணத்தில் தோன்றிய கணத்தில் அழகானதொரு புன்னகை பூத்தது.
அதன்பின் அவனிடம் எத்தனையோ ஐ லவ் யூ களும் எக்கசக்க முத்தங்களும் பெற்று இருந்தாலும் முதன் முறையின் தித்திப்பும் சிலிர்ப்பும் மறக்கவே முடியாதது.
அதை எண்ணி தன் வயிற்றில் கைவைத்தவள்,
“இந்த மழை எனக்கும்.. உங்க அப்பாவுக்கும் ரொம்பவே ஸ்பெஷல் பேபி… எத்தனை ஸ்ரெஸ்ல இருந்தாலும் இந்த மழையை பார்த்தால் அந்த துளிகள் மாதிரியே எல்லாம் கரைந்து போயிடும்.. தெரியுமா..”
அவர்கள் காதலின் சின்னமாய் தன்னுள் உதித்த தன் இன்னுயிரிடம் கூறினாள். மனமோ மீண்டும் அனைத்தையும் நினைத்து பார்த்தது.
****
அதனை கேட்ட கணத்தில் கண்ணீர் பெருக தாவி அவனை வயிற்றோடு கட்டிக்கொண்ட ஜென்சி கேவி அழுதாள்.
ஜென்சி தன்னை கட்டுப்பட்டுத்த நினைத்தபோதும் முடியவில்லை. அப்படி ஒரு அழுகை..!!!
அவளே உணராத ஆழ்மனதின் ஏக்கம் இன்று அவன் வாய்மொழியாய் உறுதியானதில் முந்தைய காயங்கள் எல்லாம் மறக்க ‘சட்டென்று நனைந்தது நெஞ்சம்.. சக்கரையானது கண்ணீர்..!!
அவனுள்ளே புதைந்து விடுபவள்போல் அணைத்த ஜென்சியை அவளுக்கு குறையாத உணர்வுகளோடு இறுக்கி கொண்டான் ஜோஷ்வா.
சில நிமிடங்கள் கழித்தே அழுகை தேம்பலாய் குறைய முகத்தை மட்டும் நிமிர்த்தி அவனை பார்த்தவள்,
“இப்பவும் இத்தனை வருஷம்.. நான் என்ன நினைப்பேன்னு நீயா ஒன்னு நினைச்சு என்னை தவிக்க விட்டதுக்கு உன்மேல அப்படி ஒரு கோபம் வருது.. ஆனா தாத்தா சொன்னா மாதிரி இது எல்லாத்தையும்விட நம்ம லவ் ரொம்ப பெருசு ஜோஷ்.. எதுக்காகவும் உன்னை இழக்க நான் தயாரா இல்ல..” என்றவள் கண்ணை துடைத்து,
“எனக்கு அழுகவே பிடிக்காது.. ஆனா ஒவ்வொரு தடவையும் உன்னால தான் இந்த கண்ணீரை உணர்றேன்.. ம்ச்.. போடா..”
என தலையை சிலுப்பி சொல்ல அதில் அவன் மனம் பாகாய் உருகியது.
கண்ணீர் படிந்து சிவந்திருந்த அவள் முகத்தை கையில் ஏந்தி கன்னம் துடைத்தவன் நெற்றியோடு நெற்றி முட்டி,
“எமோஷன்ஸ் அன்கண்டீஸ்ஷ்னல் ஆகும்போது கண்ணீரும் அழகு தான்.. ஆனால் எதுக்காகவும் உன்னை உடைஞ்சு போக விடமாட்டேன் ஜென்சி… டில் மை லாஸ்ட் ப்ரீத்..”
என்று மூக்கு நுனியில் சின்னதாய் முத்தம் வைத்தான்.
அதில் உதட்டில் புன்னகை பூக்க கழுத்தை குறுக்கி லேசாய் சிணுங்கியவளின் அழகு அவனை மீண்டும் மீண்டும் முத்தமிட தூண்ட கண்கள், கன்னம், தாடை என தொடர்ந்த பயணம் இறுதியாய் உதட்டில் வந்து அழுத்தமாய் நிலைக்க அங்கே இதயம் இதழ் வழியே இடமாறியது.
அவனிடம் விலகியதும்,
“பேசிட்டே இருக்கும்போது கிஸ் பண்ற.. இதுக்கெல்லாம் நான் பர்மிஷனே கொடுக்கல பார்த்துக்க..”
என்றவளுக்கு பொய்யாக கூட முகத்தில் கோபம் காட்ட முடியவில்லை. அதை உணர்ந்த அவனும்,
“நீ தான் இப்படி சொல்ற.. ஆனால் கிஸ் பண்ணும்போது உன் உதடு என்கிட்ட வேற என்னவோ சொன்னுச்சே.. இரு.. மறுபடியும் கேட்டு சொல்றேன்..”
என்று அவளை மீண்டும் நெருங்க அவன் கையை நறுக்கென கிள்ளி வைக்கவும் சிரிப்போடு விலகி அருகில் அமர்ந்தான்.
“ரொம்ப நேரமா உள்ளவே உட்கார்ந்து இருக்கோம்.. தாத்தா எதாவது நினைச்சுக்க போறாங்க.. வா வெளிய போகலாம்..”
“போகலாம் ஜென்சி.. அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு விஷயம் சொல்லு..”
“என்ன..?”
“எப்படி நான் தான் ‘ஜோ’னு தெரிஞ்சுது.. ஜோசஃப்புக்கும் இது எல்லாமே தெரியுமா..?”என அவன் கேட்க, “ட்வீட்டியால தான்..”
என்று அவள் புன்னகைக்கவும் மேலும் குழம்பினான்.
“ட்வீட்டியா..??” என முழித்தவனிடம் அன்று ஜோசஃப் வீட்டிற்கு சென்ற நிகழ்வை விவரித்த ஜென்சி,
“அப்படி உன் அருமை பெருமை எல்லாம் சொல்லும்போது தான் சொன்னான்.. நீ சும்மா இருக்கும் போதே உங்க அப்பாவை கண்டால் வேணும்னே சீண்டுவியாம்.. அதுவும் நேரா பேசாமல் ட்வீட்டியிடம் சொல்றா மாதிரி இன்டேரக்ட் எதாவது சொல்லி உங்க அப்பா டென்ஷனை ஏத்திவிடுவியாம்.. இந்த திருகுதலம் எல்லாம் நீ நல்லா செய்வேன்னு…”
என்று சிரிக்க அவன் முகத்தில் அசடு வழிந்தது.
“அது சும்மா ஜாலிக்கு பண்றது.. ஓரு கட்டத்துக்கு மேல டாட் என்மேல கோப படுறதே எனக்கு ஒரு பொழுதுபோக்கு மாதிரி ஆகிடுச்சு.. நானும் கொஞ்சம் வாண்ட்டடா தேவையில்லாமல் வம்பிழுத்து இருக்கேன் தான்..”
“தெரியுதுல.. அதனால தான் நீ உண்மையா ஒரு காரணத்தோட உங்க அப்பாவை எதிர்க்கும்போது கூட யாருக்கும் உன்னை நம்ப தோணல.. இதில் அவங்க மேல தப்பு என்ன சொல்லு..? இதுவும் நீ வேணுமே பண்றீயோனு தான் தோணும்.. அட்லீஸ்ட் நீ ஏன் செய்யிறேன்னு ரீசன் ஆச்சும் சொல்லி அப்புறமும் அவங்க நம்பாம இருந்திருந்தால் தப்பு சொல்லலாம்.. அதைவிட்டுட்டு சும்மா ஜோசஃபையோ ஆண்ட்டியையோ ப்ளேம் பண்ணாத ஜோஷ்.. இப்ப உண்மை எல்லாம் தெரிஞ்ச பிறகு ரொம்ப ஃபீல் பண்றாங்க.. அதுவும் ஆன்ட்டியை நினைச்சால் எனக்கே கஷ்டமா இருக்கு.. நீயும் உங்க அம்மாவை எவ்வளவு தேடுற என்றதுக்கு அன்னைக்கு ஹாஸ்பிட்டலில் அவங்க போனதும் நீ சிந்திய கண்ணீர் தான் சாட்சி..! அங்கிளால அவங்கள நிறையவே மனவருத்ததில் இருப்பாங்க… நீ பேசினால் அவங்களுக்கு கொஞ்சமாவது ஆறுதல் கொடுக்கும்..”
அவன் தவற்றை எடுத்து கூறும் பாணியில் மிகவும் நிதானமாய் பேச அவனும் அதை உணர்ந்துள்ளான் என்பதை முகமே காட்டியது.
எனவே மேற்கொண்டு அதை கிளராமல்,
“சோ.. ஜோசஃப் அப்படி சொல்லவும் தான் எனக்கு சந்தேகமே வந்துச்சு.. ட்வீட்டி உன்னோடது தானேனு கேட்டால் ‘அவன் அது என்கிட்டவே வராது..நான் கிட்டபோனாலே கொத்த வரும்.. ஜோஷ்வாவோட செல்ல பிள்ளை’னு சொன்னான்.. அப்போ தான் எனக்கு புரிஞ்சுது ஜோவும் அவன் இல்ல.. இந்த் கேடி தான்னு..”
என்றவள், “ உன்னை சந்திக்கும் முன்னாடி ரெண்டு தடவை அவனை பார்த்து இருக்கேன்.. இன் ஃபேக்ட்.. எனக்கு முதலில் ஃப்ரெண்ட் ஆனது அவன் தான்.. அதுக்கு அப்புறம் அவனை சந்திக்கும் சந்தர்ப்பமே அமையல.. அப்படி ஒருவேளை பார்த்து இருந்தால் அந்த வயசுலே எல்லாமும் தெரிஞ்சு இருக்கும்..அப்புறம் அவனும் உன்னை மாதிரியே அப்ராட்ல படிச்சது இன்னும் ஒரு காரணமா போயிருச்சு.. மறுபடியும் அவனை சந்திக்கும்போது அவன் என்னை தெரிஞ்சா மாதிரி தான் பேசனான்.. ஆனால் பெருசா க்ளோஸ் ஃப்ரெண்ட் மாதிரி காட்டிக்கல.. தெரியும் அவ்வளவு தான் அப்படின்றா மாதிரி நடக்கவும் எனக்கும் ஈகோ எட்டி பார்த்துச்சு.. நானும் பழசை எதுவும் பேசல.. திரும்ப ஒரு புதிய நட்பு தான் எங்கள் இடையே ஏற்பட்டுச்சு.. நான் மட்டும் பழசுக்கும் புதுசுக்கும் இடையே உள்ள வேற்றுமைய ஏற்க முடியாம அல்லாடி இருக்கேன்..”
என தன்னுடைய சுய அலசலை கூற,
“சாரி ஜென்சி.. நான் செஞ்ச ஒரு காரியத்தால உனக்கு எவ்வளவு கன்ஃபியூஷன்ஸ்..”
என்று அவன் சொல்ல,
“போதும் ஜோஷ்.. நைட் முழுக்க நிறைய சாரி கேட்டாச்சு..”
என அதை இலகுவாய் மறுத்துவிட்டு, “ஜோசஃப்ட்ட பேசும்பொது தான் இது எல்லாமே புரிஞ்சுது.. உண்மை தெரிஞ்சதும் உன்மேல கொல காண்டுல தான் இருந்தேன்.. ஆனால் ஜோசஃப் தான் என்னை கால்ம் பண்ணான்.. இதிலும் எதாவது காரணம் இருக்கலாம்.. அவனை முன்கூட்டியே தப்பா நாங்க ஜட்ஜ் பண்ணா மாதிரி நீயும் பண்ணாத ஜென்சி.. மனசுல எதுவும் வைக்காமல் அவனை நேரா போய் பார்த்து மனசு விட்டு பேசு..னு சொல்லி தாத்தாவிடம் பேசி இங்க வரைவைச்சான்..”
என்று அவள் சொல்லவும் ஜோசஃப் தன்மீது கொண்டுள்ள அக்கறையில் நெகிழ்ந்தது அவன் மனம்..!!
“முதல் நாள் உன்கிட்ட சொன்ன விஷயம்.. மறுநாள் அவன் பேசும்போது நீ தான் சொல்லி இருப்பன்னு தான் தோணுச்சு..”
“நான் எல்லாம் ஒன்னும் சொல்லல… அவன் தான் எனக்கே நிறைய விஷயம் சொன்னான்.. நீ இங்க வந்த அப்புறம் உன் பி.ஏ அனில் குப்தாகிட்ட விசாரிச்சு இருக்கான்.. அவர்கிட்ட ஒரு வார்த்தை கூட வாங்க முடியலையாம்.. கடைசியா உன் ஃப்ரெண்ட் ராமகிருஷண்னை மீட் பண்ணி ரொம்ப வருத்தப்பட்டு இருக்கான்.. அப்புறம் அவர் தான் எல்லாமே சொல்லி இருக்கார்..”
என்று எஞ்சிய ஒரு சந்தேகத்தையும் தீர்த்துவிட,
“அவனையும் ரொம்ப படுத்தி எடுத்துட்டேன் இல்ல.. ம்ச்.. பாவம் அவன்.. இப்பவும் என்னால பெரிய ஸ்ரெஸ்ல மாட்டிகிட்டான்.. டாட்க்கு தான் பிரச்சனை என்றாலும் அதை அவரே ஃபேஸ் பண்ணிக்கட்டும்னு விட்டுவிட மாட்டான்.. அவனும் இதை சரி பண்ண தான் நினைப்பான்.. ஆயிரம் தப்பு இருந்தாலும் தன் பேமிலியை எங்கவும் விட்டு கொடுக்க மாட்டான்.. அவன் ப்ளஸ்.. மைனஸ் இரண்டும் அது தான்…”என்றான் ஜோஷ்வா..!!
“சரிங்க சர்.. ரொம்ப நேரம் ஆகிடுச்சு.. தொடரும் போட்டு அப்புறம் பேசலாம்.. இப்ப நான் ஊருக்கு கிளம்புற வேலையை பார்க்கிறேன்..”
“ஹே.. அதான் சமாதானம் ஆகியாச்சே.. அப்புறமும் ஏன் கிளம்புற..”
“இது நல்லா இருக்கே.. கிளம்பாம இங்கே இருக்க சொல்றீயா.. எனக்கு வேலை இருக்கு.. நான் இப்ப போய் தான் ஆகணும்..”என்று பிகுவாய் சொல்ல,
“சரி போ.. நான் நேரா உங்க அம்மாட்ட வந்து பேசுகிறேன்..”என்றான் தோளை குலுக்கி..
“ஆஹான் சார் என்ன பேச போறீங்க..”
“நம்ம கல்யாணத்தை பத்தி தான்.. ஏற்கெனவே நிறைய நாள் வீணாக்கியாச்சு.. சட்டு புட்டுனு எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்ல போறேன்..”
“நீங்க கேட்டதும் இந்தாங்க தம்பினு என் கைய பிடிச்சு கொடுக்க போறாங்களா..?? அவங்களுக்கு என்னை தாமஸூக்கு கல்யாணம் பண்ணும் ஆசை தான் இன்னும் இருக்கு.. எப்படி கன்வீன்ஸ் பண்ண போற..!! நீ கூட என்ன சொன்ன.. “பக்கா ஜெண்டில்மேன்.. உனக்கு நல்ல பொருத்தமா..” அந்த அட்வெய்ஸை இப்ப ரீ கன்சீடர் பண்ணவா ஜோஷ்..”
என்று கிண்டல் தொனிக்க சீண்டியவளை பாவமாய் பார்த்து,
“ஏய்.. அது உன்னை வம்பிழுக்க சொன்னது.. அதெல்லாம் மனசுல வைச்சுக்க படாது..”என்றவன்
“கன்வீன்ஸ் என்ன.. மொத்தமா சரண்டர் ஆகியாச்சும் உன்னை கல்யாணம் பண்றது தான் என்னோட அடுத்த வேலை..”
என விளையாட்டாய் சொன்னாலும் அதை போலவே அடுத்த ஒரு மாதத்தில் அவர்கள் திருமணத்தை நடத்தியிருந்தான் அந்த வில்லாதி வில்லன்..!!