அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் பொழுது மிகவும் சோம்பலாய் விடிய ஏற்றி கட்டிய கொண்டை, கருப்பு டீ-ஷர்ட் மற்றும் த்ரீ போர்த் பேண்டில் பக்கா வீட்டு லுக்கில் இருந்தாள் ஜென்சி.
தாங்கள் மூவர் மட்டுமே என்பதால் வீட்டு வேலைகளுக்கு ஆள் வைக்க எஸ்தர் விரும்புவதில்லை. பெரும்பாலான வேலைகளை அவரே செய்திடுவார் என்றாலும் மகள்கள் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் அவர்களையும் வேலைகளை கவனிக்க வைப்பார்.
அவ்வாறு தற்போது மூவரின் துவைக்க வேண்டிய துணிகளை எல்லாம் சேகரித்து ஜென்சி வாஷிங் மிஷினில் போட்டு கொண்டிருக்க எஸ்தருடன் சமையலறையில் உதவிக் கொண்டிருந்தாள் லிசா.
அன்னை கொடுத்த வெங்காயங்களை உறித்த அறிந்துக் கொடுத்தபடி அதனால் ஏற்பட்ட கண் நமச்சலால் சகிக்க முடியாமல்,
“ஒரு டாடிஸ் லிட்டில் ப்ரின்சஸ்ஸ.. வருங்கால சி.ஏ முடித்த அக்கௌண்டண்ட்ட இப்படி சமைக்க வைக்கிறது எல்லாம் ரொம்ப தப்பு மாம்..”
மூக்கை உறிஞ்சு பாவம்போல் சொல்ல,
“அக்கௌண்டண்டோ ஐஏஸோ வயிறுன்னு இருந்தால் சாப்பிட தானே போற..!! அதுக்கு சமையல் தெரியணும் லிசா..”
என்றார் அவரும் சளைக்காமல்… அவர்கள் சம்பாஷணை வெளியே ஜென்சிக்கும் கேட்க தங்கையை எண்ணி சிரித்துக் கொண்டாள்.
“நீங்க தான் சொல்லிகணும்.. என் ஃப்ரெண்ட்ஸுக்கு எல்லாம் ஹாட் வார்ட்டர் கூட வைக்க தெரியாதாம்.. அவ்வளவு செல்லமா வளர்க்குறாங்க… நீங்க என்னான என்னை ஃப்ரீயாவே விடுறது இல்ல.. எப்ப பாரு அதை செய்.. இதை செய்னு..”
தங்கையின் முணுமுணுப்பு சமையலறைக்கு வெளியே இருந்த ஜென்சிக்கே கேட்டது. அன்னை இதற்கு என்ன பதில் சொல்வார் என்று அறிந்ததால் மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினாள்.
“உன்னை எப்பவுமா வேலை பார்க்க சொல்றேன்.. ஃப்ரீயா வீட்டில் இருக்கும்போது தான் செய்ய சொல்றேன்.. இதையும் நானே செஞ்சு முடிக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆக போது..?? ஆனால் நீங்க இதுக்கும் பழகணும்னு தான் சொல்றது…
அதென்ன இந்த காலத்து பிள்ளைகளுக்கு சமைக்க தெரியாது,வீட்டு வேலை செய்ய தெரியாதுன்னு சொல்றதை ஒரு பெருமையா வைச்சு இருக்கீங்க.. அப்போ அதை செய்றது கௌரவ குறைச்சலா…?
இண்டிப்பெண்டெண்ட் லைஃப்னு பக்கம் பக்கமா பேசுறீங்க தானே.. இதுவும் உங்களோட அடிப்படை தேவை தான்..!! இதுக்கு மட்டும் அடுத்தவங்களை சார்த்து இருக்கலாமா..??”
“போங்க மாம்.. காலைலே லெச்சர் கொடுக்காதீங்க… எனக்கு என்ன கவலை.. இப்ப நீங்க இருக்கீங்க.. பின்னாடி நல்ல சமைக்க தெரிஞ்ச பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டா போதும்…”
என்று குறும்பாய் சொல்லி, “ஜோசப் ப்ரோ மாதிரி ஒருத்தரை…”
என்று கண்சிமிட்ட அவள் தோளிலே ஒன்று வைத்தார்.
“பேச்சை பாரு.. வாயாடி..” என்றுவிட்டு அவர் வேலையை தொடர அவள் சொன்னதனை கேட்ட ஜென்சி,
“ம்க்கும்.. ஜோக்கு கிட்சன் எங்க இருக்குன்னே தெரியாது.. உதாரணம் சொல்ற ஆள பாரு..”
என்றெண்ணியவளுக்கு சட்டென நேற்று ஜோஷ்வா செய்தி பார்க்க சொன்னது நினைவில் வந்தது.
நேரத்தை பார்க்க அது பத்தரையை தாண்டிக் கொண்டிருந்தது.
‘அவன் சொன்னா உடனே செஞ்சுடுவோமா..’
என்ற அலட்சியமும்,
‘அப்படி என்னவா இருக்கும்..’ என்ற ஆர்வமும் ஒருங்கே எழ சில நிமிடங்கள் கடந்தபின் அலட்சியத்தை ஆர்வம் வென்றுவிட வாஷிங் மெஷினை இயக்கிவிட்டு டிவியை நோக்கி சென்றாள்.
பொதுவான ஒரு செய்தி சேனலை தேடி போட்டுவிட அதில் எதோ ப்ரஸ் மீட்டிங் ஒன்றின் லைவ் ரெக்காடிங் ஓடிக் கொண்டிருக்க மாற்ற நினைக்கும்போது தான் அந்த ப்ரஸ்மீட் ‘நியூட்ரியல்’ தொடர்பானது என்று புரிந்தது.
பேட்டிக் கொடுப்பது ஃபினிக்ஸின் சி.ஈ.ஓ தான். பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்கு தடையின்றி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.
‘நியூட்ரியல் குழந்தைகளுக்கு கொடுக்க பாதுக்காப்பான உணவு அல்ல.. உங்க பார்முலாவே பொய்யானதுனு கருத்தை பெரும்பாலானவர்கள் நம்பும் இந்த சமயத்தில் நீங்க, ‘நியூட்ரியல்..’ புது பொழிவோடுனு ரீலான்ச் செய்றீங்க… உங்க மேல இருக்க குற்ற சாட்டை பற்றிய உங்கள் கருத்து..’
‘பொய்யா..??? எங்க ப்ராடெக்ட் கொடுத்தால் குழந்தைங்க அதிவேகமா வளர்ந்திடுவாங்க… நாலு வயசுலையே எட்டு வயசு பிள்ளையோட புத்தி கூர்மை வந்திடும்.. இப்படியான வாசகத்தோடான போலியான ஒரு பிம்பத்தை கொடுத்து மக்களை ஏமாற்றுவது இப்ப பலர் செய்றாங்க.. ஏன்னா குழந்தைகள் வளர்ச்சியும் புத்தி கூர்மையும் வயசு ஏற, ஏற தானாவே வளர கூடிய ஒன்று.. அது ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம்.. ஆனால் அதை எந்த டிரிங்க்ஸூம் கொடுத்து தான் கொண்டு வரணும்னு அவசியம் இல்ல… ஆனால் அது மாதிரி நாங்க எப்பவுமே சொன்னது இல்லை.. அதுவே எங்க நேர்மைக்கு தக்க சான்று தான்..”
குழந்தைகளுக்கு தேவையானது ஊட்டசத்து மட்டுமே தான்.. பெரியவங்க நாம சாப்பிடுற எல்லா உணவையும் குழந்தைகளுக்கு கொடுத்திட முடியாது.. ஆனாலும் அவங்களுக்கு அந்த ஊட்ட சத்துகள் வேணும் என்பதால் தான் சத்தான தானியங்களையும் பழங்களையும் நாங்க பவுடர் வடிவில் உற்பத்தி செய்கிறோம்..”
‘சர்.. நீங்க தான் தவறு எங்கமேல இல்ல.. ரிட்டைலர்ஸ் ஸ்டோரேஜ் சிஸ்டம் சரி இல்லைன்னு சொன்னீங்க.. இப்ப நீங்களே உங்க ப்ராடெக்ட் பாங்கிங் மாற்றிமைச்சுட்டோம்னு சொல்றீங்க.. இதன் மூலம் அப்ப தவறு உங்க பக்கம்னு ஒத்துக்குறீங்களா..’
‘கண்டிப்பா இல்லை.. இப்பவும் எங்க கருத்தில் நாங்க உறுதியா இருக்கோம்.. ஆனா சந்தேகம்னு ஒன்னு வந்த பிறகு அதில் மக்கள் ரிஸ்க் எடுக்க கண்டிப்பா யோசிப்பாங்க.. மக்களை அப்படி ஒரு குழப்பதில் ஆழ்த்த ஃபினிக்ஸ் விரும்பல.. அதனால் தான் இந்த மாற்று ஏற்பாடு.. காட்போட்,பால்தீன் கவரைவிட க்ளாஸ் பாட்டில் ரொம்பவே பாதுகாப்பானது.
இட்ஸ் கம்ப்ளீட்லீ ஆர்டைட்ஸ்.. ஸோ பூச்சு மொய்ப்பு போன்று பொய் குற்ற சாட்டு வைக்க கூட வாய்ப்பு இல்ல.. அதற்கான சான்று..”
இன்னும் கேள்விகளும் அதற்கான பதில்களும் தொடர்ந்துக் கொண்டே போனது. பேசியது சீ.ஈ.ஓ என்றாலும் அவரை பின்னிருந்து முழுவதும் இயக்குவது ஜோஷ்வா தான் என்பது அவளுக்கு புரிந்தது.
‘நியூட்ரியல்’ எல்லா விதத்திலையும் தரமானது என்பதனை உணர்த்தும் வகையில் இருந்தது அவரது பதில்.. இறுதியில் பாலிவுட்டின் மிகபெரிய நட்ஷத்திரம் ஒருவர் மூலம் நியூட்ரியல் கான புது விளம்பரம் லான்ச் செய்ததோடு அந்த கானொலி முடிந்தது.
எந்த மீடியா மூலம் அவர்கள் பெயர் கெட்டதோ அதன்வழியே நியூட்ரியலின் பெருமைகளை பேச செய்து அதில் விளம்பரமும் கொடுக்க வைத்த அவன் சாமர்த்தியத்தை எண்ணி ஜென்சியால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
இதனை நடத்திக் காட்டுவதற்குள் எத்தனை பிரச்சனைகளும் அழுத்தங்களும் சூழ்ந்து இருக்கும் என்று புரிய இந்நிலையில் நேற்று தன் வீட்டில் வந்து நின்று உப்பிற்கு பெறாத ‘தன் ஒருதலை காதல் கதையை சொல்லும்படி கேட்டு நின்ற பாங்கினை என்னவென்று எடுத்துக் கொள்வது..!!!
ஜோஷ்வா பற்றி நினைத்தாலே அவளுக்கு புரியாத புதிராக தான் தோன்றியது.. ஏதோ அவனிடம் இருக்கிறது.. அவன் பேச்சில் செயலில் பின்னால் ஏதோ மறைந்திருப்பது போல் அவள் உள்ளுனர்வு ஊந்தியது.
மூன்று முறை மட்டுமே பார்த்த ஒருவனை பற்றி ஏன் இந்த அளவிற்கு யோசித்து மண்டை காய்கிறோம் என்று உணராமல் யோசனையில் உழன்ற அப்பொழுது ஏதோ வேலையாய் எஸ்தர் அங்கே வரவும்,
“மாம்.. ஜோசஃப்பும் அவன் தம்பியும் ட்வின்ஸாம்.. உங்களுக்கு தெரியுமா என்ன..”
சாதாரணமாய் மெல்ல வினவ, “ட்வின்ஸா..??!”
என்று ஆச்சரியமாய் கேட்டவர்,
“எனக்கு தெரியாதே ஜென்சி.. உண்மையாவா சொல்றா..”
என்றார் வியப்பு மாறாமல்..
“ம்ச்.. ஆமா மாம்.. நானே சமீபத்துல ஒருநாள் எதர்ச்சையாய் அவன் தம்பிய பார்க்க நேர்ந்தது.. அப்போ தான் தெரியும்.. சரி.. நமக்கு தான் தெரியல.. அப்பாக்கு கூடவா மாம் தெரிஞ்சு இருக்காது..?”
என்று அவள் சந்தேகமாய் கேட்க யோசித்த எஸ்தர்,
“அப்பாக்கு தெரிஞ்சு இருக்கும் ஜென்சி.. இது சொல்ற அளவுக்கு முக்கியமா அவருக்கு பட்டிருக்காது…” என்றவர்,
“எங்க?? அந்த பையன் வளர்ந்தது முழுக்க தேவிப்ரியா அக்காவோட அப்பா வீட்ல தான்.. நாலு பேரு கூடுற விழாக்களுக்கு கூட வந்ததும் இல்ல.. யாரும் பார்த்ததும் இல்ல.. அப்புறம் எப்படி தெரியும்..”
என்ற வரை தான் அதனை பற்றிய சிந்தனை எஸ்தருக்கு..!!
“சரி… இன்னைக்கு சாய்காலம் சுஸானா அண்ணி வீட்டுக்கு போகணும்னு சொன்னேன்.. மறந்திடலல…”
என்று அவர் சொன்னதும் ஜோஷ்வா பற்றிய யோசனை பின்னுக்கு போக,
“மாம்…” என்று எரிச்சலாய் கத்தினாள். சுஸானா தாமஸின் அன்னை.
“ஏண்டி கத்துற…”
“நான் தான் வேணாம்னு சொல்றேன்ல.. நீங்க மறுபடியும் மறுபடியும் அதே சொல்றீங்க…”
“சுஸானா எனக்கு அண்ணி முறை.. சின்ன வயசுல நாங்க எல்லாம் ஒன்னா மன்னா இருந்தவங்க.. கல்யாணம்,குடும்பம்னு ஆனதும் தான் தொடர்பு விட்டுபோச்சு.. இத்தனை வருஷம் கழிச்சு தேடி வந்து பொண்ணு கேட்டது அந்த பழக்கத்துல தான்… நீ வேணாம்னு சொன்னதும் நானும் அதை சொல்லிட்டேன்.. அத்தோட அந்த விஷயம் முடிஞ்சுடுச்சு.. நான் உன்னை ஃபோர்ஸ் பண்ணேனா இல்லைல…
இப்ப அவங்க பையனோட கொஞ்ச நாள் இருக்க வந்திருக்காங்க… பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. ஒரு பேமிலி கெட்டூகெதர் மாதிரி இருக்கட்டுமேன்னு அவ்வளவு வற்புறுத்தி கூப்பிடுறாங்க.. போகாம இருந்தால் நல்லாவா இருக்கும்… அதனால மொறண்டு பண்ணாம கிளம்புற வழிய பாரு..”
என்ற அன்னையை முறைக்க மட்டும் தான் முடிந்தது.
தாமஸிற்கு விருப்பம் இருக்கிறது என்று அறித்து அதற்கு அவள் திட்டவட்டமாய் மறுத்த பின்பும் மீண்டும் இந்த சந்திப்பு நிகழ்வது அவளுக்கு பிடிக்கவில்லை.
இருவருக்குமே தேவையில்லாத சங்கடமாய் இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது. ஆனால் தன் அன்னை இப்பொழுது தான் விட்டுபோன பாச பயிறை வளர்க்க நினைக்கிறாரே என்று எரிச்சலாய் எண்ணிக் கொண்டே,
“வர வர ரொம்ப பிடிவாதம் பண்ணுறீங்க மாம்..”
என்று அவள் சொல்லவும், “உன்னையும் உன் தங்கச்சியையும் வைச்சு மேய்க்கணுமே.. வேற என்ன பண்றது..”
என்று அவர் அமர்த்தலாய் சொல்லிவிட்டு சென்றார்.
****
சாலையில் சீறி பாய்ந்த அந்த காரின் பின் இருக்கையில் சீட்டில் தலைசாய்த்து அமர்ந்திருந்தான் ஜோசஃப்.
அவன் முகத்தில் தெரிந்த அந்த சோர்வும் டென்ஷனும் சில காலமாய் முகத்திலே நிலையாய் படிந்துவிட்டது. அவன் கடைசியாய் சிரித்து பேசியது எப்பொழுது என்று கேட்டால் கூட அவனுக்கு நினைவில் இருக்காது. அனைத்திருக்கும் காரணம் ஒருவன் மட்டுமே..!! ஜோஷ்வா..!!
நித்தமும் அடுத்து அவன் என்ன செய்வானோ என்று அவனையே கண்காணிப்பதும் அதனை குறித்தே யோசிப்பதும் அந்த குடைச்சல்களை சரி செய்ய போராடுவதும் என அவனோடான இந்த போட்டாபோட்டி வாழ்க்கையை வெறுத்தான் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் பதிலுக்கு ஜோசஃப் செய்யும் விஷயங்களை அவன் அனாசியமாய் கடந்துவிடுவது இன்னும் டென்ஷனையே கொடுத்தது.இன்றும் அது போல தான்..!!
எந்த பத்திரிக்கையாளர்கள் அவனை கிழித்தார்களோ அவர்கள் மூலமே இலவச விளம்பரம் கொடுத்ததுபோல் ஒரு ப்ரஸ்மீட்..!!!
அதனை எண்ணி பல்லை கடித்தவனாய் அலுவலகம் வந்ததும் யாரோடும் பேசும் விருப்பமின்றி வேக நடையோடு தன் அறைக்குள் நுழைய அங்கே அவனின் மொத்த டென்ஷனும் உருவம் பெற்று சாவகாசமாய் அவன் இருக்கையிலே அமர்ந்திருந்தது.
“ஹாய் சகோ…”
சுழல் நாற்காலியில் சாய்ந்தமர்ந்திருந்த ஜோஷ்வாவை கண்டதும்,
“நீ எதுக்குடா இங்க வந்த.. உன்னை யாரு உள்ள விட்டது..”
கோபமாய் அவன் அருகில் வர,
“சில் சகோ… எட்டீ உள்ள என்னை வரவிடாம தடுக்க யாருக்கு துணிவிருக்கு..”
என்று அசால்ட்டாய் சொன்னவன்,
“எப்படியும் என்னால இப்ப ரொம்ப கடுப்புல இருப்ப.. அதான் புண்பட்ட மனசை ஆதிட்டு போலாம்னு வந்தேன்..”
என்று சிரித்து இன்னும் அவன் கோபத்தை ஏறிவிட்டான்.
“என்னை கொலகாரன் ஆகாம இங்கிருந்து கிளம்பு..”
“ச்சே.. ச்சே.. அந்த அளவுக்கு எல்லாம் நீ போக மாட்டே.. பாரு இப்ப கூட எவ்வளவு சில்லியா எனக்காக ப்ளான் போட்ட.. நெக்ஸ்ட் டைம் நா இன்னும் எதிர்பார்க்கிறேன்.. இதெல்லாம் பத்தாது..நல்ல பெருசா செய்யணும்… சரியா..? எப்படினு உனக்கு நான் சொல்லி தரவா..?? ம்ச்.. ம்ச்.. என்ன தான் எனக்கு நீ அண்ணன்னு ஊரே சொன்னாலும்.. யூ ஆர் மை லிட்டில் ஃப்ரோடா.. உலகம் தெரியாமலே உன்னை வளர்த்திட்டாரே உங்கொப்பா..”
என்று மேலும் வெறுப்பேற்றியவன் மீது ஆத்திரம் பொங்க தாவி அவன் சட்டையை பிடித்தான்.
“உன்னை எதுவும் பண்ண மாட்டேன்னு நினைக்கிற… கொன்றுவேன் ராஸ்கல்..”
என்று உறும நிதானமாய் அவன் பிடியை விலக்கி,
“நீ எல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்ல சரியா..!!! நடக்குறது எல்லாமே எனக்கும் டாட்க்கும் தான்.. இப்படி ஹைப்பிச்சில் கத்திட்டு திரியாம… நீ விலகி நின்னு வேடிக்கை பாரு… இடைல வந்து வீணா வாங்கி கட்டிக்காத..”
என்று சொன்னவன் கண்களிலும் முதன்முறையாய் அத்தனை அழுத்தமும் தீர்க்கமும் நிறைந்திருந்தது.
“அப்பா வேற நான் வேற கிடையாது…”
என்றவன், “எதை நினைச்சு நீ இப்படி எல்லாம் செய்றேன்னு தெரியாது.. ஆனால் பெத்தவங்களை கஷ்டப்படுத்தி வேடிக்க பார்க்கிற.. இதுக்கெல்லாம் ரொம்ப அனுபவிப்ப ஜோஷ்.. ரொம்ப வருந்துவ..”
என்று சொல்ல அதற்கு நக்கல் சிரிப்பு ஒன்று தான் ஜோஷ்வாவின் பதிலாய் வந்தது.
“சரி வருந்திட்டு போறேன்.. இப்ப வழியவிடு.. போ..”
என்று அவனை தாண்டி செல்ல முனையும்போது,
“நேத்தி ஜென்சி வீட்ல உனக்கு என்ன வேலை.. உனக்கு எப்படி அவளை தெரியும்..”
என்ற அவன் கேள்வி தடுத்து நிறுத்தியது.
“ஹோ இந்த வேலை வேற பார்க்குறீயா..!! பின்னால ஆள் விட்டு பார்க்கிறது… அதனால உனக்கு நயா பைசா ப்ரோஜனம் இல்ல… என் பின்னால் சுத்துறதுக்கு பதிலா வேற நல்ல வேலை எதாவது பாக்க சொல்லு.. சரியா..”
அவன் தோளில் கைப்போட்டு சொல்ல சிலுப்பி அவன் கையை தட்டிவிட்டவன்,
“ஜென்சி.. என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்.. என்னை வைச்சு அவளிடம் எதாவது ஃப்ளே பண்ண நினைக்காத… நீ பார்க்கிற மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாது அவ..”
என்று சொல்ல,
“உனக்கு வெறும் ஃப்ரெண்ட் தான் சகோ.. ஆனால் எனக்கு..”
என்றவன் முகத்தை நாணிகோணி பாவணை பிடித்ததில் ஜோசஃபிற்கு இரத்தழுத்தம் ஏற,
“டேய்…” என்ற அவன் ஆத்திர விளிப்பை அலட்சியம் செய்து,
“எங்களுக்குள்ள என்னவா வேணாலும் இருக்கலாம்.. நேத்தி மட்டும் இல்ல.. அதுக்கு முன்னாடியும் நாங்க மீட் பண்ணிருக்கோம்.. நான் தொல்லை பண்ணினா என்னை பத்தி உன் ப்ரெண்ட் உன்னுட்ட எதாவது சொல்லி இருப்பா தானே..??? ஆனால் இல்லையே..!!! தட்ஸ் இட்.. புரிஞ்சுக்கோ…”
என்று கண்சிமிட்டி சத்தமின்றி அவன் தலையில் குண்டை போட்டு சென்றுவிட,
“என்ன சொல்கிறான் இவன்..” என்று அதிர்ந்து நின்றுவிட்டான்.
‘ஜென்சி அப்படி எல்லாம் ஈஸியா யாரிடமும் ஏமாற்ற ஆள் இல்லையே… இவன் என்னை ரிவெஞ் எடுக்க தான் அவளிடம் எதோ ப்ளான் பண்றான்.. அதுவும் இவனை பத்தி சொல்லியும் இருக்கேன்.. அப்புறம் இவனை சந்தித்ததை ஏன் சொல்லல… அவன் சொல்றா மாதிரி..”
என்று எண்ணி எண்ணி தலை வெடித்தான். சில மணி நேரங்கள் அந்த சிந்தனையே அவனை சுழற்றி அடிக்க அவளிடமே கேட்டுவிடுவது என்று அவளுக்கு அழைத்தான்.
அந்நேரம் தான் ஜென்சி குடும்பத்தோடு தாமஸின் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
ஜோசஃப் அழைக்கவும் ஏற்று,
“ஹாய் ஜோசஃப்..” என்று அவள் பேசும்போதே,
“நீ ஜோஷ்வாவை மீட் பண்ணியா ஜென்சி.. நேத்து ஏன் அவன் உங்க வீட்டுக்கு வந்தான்..”
என்று அவசரமாய் கேள்விவர முதலில் திகைத்து பின்,
“உனக்கு எப்படி தெரியும் ஜோ..”
என்று கேட்க,
“அப்போ மீட் பண்ணிருக்க.. நீ ஏன் என்னுட்ட சொல்லல ஜென்சி..”
என்று அவன் ஆயாசமாய் கேட்க, ‘நீ சொல்ல வேண்டியதை சொல்லி இருந்தால்.. நான் ஏண்டா அவனுட்ட மல்லுகட்டுறேன்..’ என்று மானசீகமாய் தலையில் தட்டிக் கொண்டாள்.
“நீ மட்டும் எல்லாம் சொல்றா மாதிரி.. நீங்க ட்வின்ஸ்னு என்னுட்ட நீ மட்டும் சொன்னியா..”
தான் மொக்கை வாங்கியதன் வெளிபாடாய் அவள் கேட்க,
“சொல்லணுமா.. உனக்கு தெரியும்னு நினைச்சேன்.. ஏன் உனக்கு தெரியாது..?”
என்று ஆச்சரியப்பட்டான் ஜோசஃப். உண்மையில் அவளுக்கு தெரியும் என்று தான் நினைத்தான். அவள் தந்தைக்கு தெரியும் என்பதால் அவளுக்கு தெரியாமல் இருக்கும் என்றே தோன்றவில்லை.
“அப்போ நான்னு நினைச்சு அவனுட்ட பேசிட்டியா.. வீட்டுக்கு ஏன் வந்தான்..?”
என்னவென்று அவனிடம் சொல்வாள். உன்னை நான் காதலித்த கதையை கேட்கிறான் என்றா..??? ஒருமுறை காதலை சொல்ல போய் தான் ஜோஷ்வாவோடு பிரச்சனையாகி போனது. இனி நிச்சயம் ஜோசஃபிடம் சொல்லும் யோசனை இல்லை. எனவே என்ன சொல்றது என்று அவள் தடுமாற அதற்குள் அவன் சிந்தனை பல திசையில் சென்றது.
“இங்க பாரு.. ஜென்சி.. அவன் சரி கிடையாதுன்னு சொன்னது பொண்ணுங்க விஷயத்திலும் தான்..!! ரொம்ப நல்லவன் மாதிரி பேசுவான்.. அதை நம்பி ஏமாந்திடாத..”
என்று அவன் சொல்ல அதன் அர்த்தம் புரிந்து காண்டான ஜென்சி,
“ஏண்டா படுத்துற.. அப்படிலாம் எதுவும் இல்ல.. அவன் ஒரு லூசு…அதை பத்தி கேட்காத விடு.. நான் அவசரமா கிளம்பிட்டு இருக்கேன்.. அப்புறம் பேசுறேன்..”
என்று அழைப்பை துண்டித்தவள் “இவனுங்களுட்ட மாட்டிக்கிட்டு..” என்றெண்ணி பெருமூச்சு விட்டாள்.