மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்த லிசாவின் கையில் சலைன் ஏறிக் கொண்டிருக்க அவள் அருகில் அழுது வடிந்த முகத்தோடு அமர்ந்திருந்தார் எஸ்தர்.
“ஏன் மாம் பயப்படுறீங்க… அதான் தாமஸ் சொல்றாரே.. டிஹைட்ரேட் ஆகிடுச்சு… உடம்புல ஸ்ட்ரென்த் இல்ல.. வீக்கா இருக்கா அவ்வளவு தான்.. ட்ரிப்ஸ் ஏறி முடிஞ்சதும் கூட்டிட்டு போகலாம்னு.. அப்புறம் என்ன..”
ஜென்சி எவ்வளவு ஆறுதல் கூறினாலும் எஸ்தர் முகம் தெளியவில்லை. லிசா மயங்கியதில் இருந்தே இப்படி தான்.. ஏதேதோ எண்ணி பயந்து புலம்பினார்.
“அப்புறம் எதுக்கு டெஸ்ட் எல்லாம் எடுக்க சொல்லணும்..? உனக்கு தெரியாது.. அவருக்கும் இப்படி தான் முதல்ல சொன்னாங்க.. எனக்கு என்னமோ படபடப்பா இருக்கு..”
என்றவரை கண்டு ஜென்சி முறைத்தாள் என்றால் லிசாவோ பாவமாய் முழித்தாள்.
“டாட்க்கு ஹார்ட் அட்டாக் மாம்.. ப்ளட் டெஸ்ட்,யூரின் டெஸ்ட் எல்லாம் எடுக்க சொன்னது சும்மா ஒரு செக்கப்காக தான்.. நீங்க எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க..”
என்று கடிந்தவளிடம், “போடி.. உன்னை மாதிரி எல்லாத்தையும் சாதாரணமா என்னால எடுத்துக்க முடியாது..”
என்று முகம் திருப்ப,
“சாதாரணமா யாரு எடுத்துக்க சொன்னா? வீக்கா இருக்கா.. என்ன மாதிரி ஃபுட் எல்லாம் எடுத்துக்கணும்னு கேட்போம்… அதை பத்தி யோசிப்போம்.. அதைவிட்டு இப்படி புலம்பிட்டே இருந்தா சரியா போச்சா..” என்றாள் ஜென்சியும்..
“சரி.. சரி… சண்ட போடாதீங்க.. என்ன கொஞ்சம் கண் அசந்துட்டேன்.. அதுக்குள்ள தூக்கிட்டு வந்து ஹாஸ்பிட்டல்ல படுக்க வைச்சுட்டீங்க..”
என்று அமர்த்தலாய் சொன்ன லிசாவை,
“சொல்லுவடி… கொஞ்ச நேரத்தில் எல்லாரையும் அலறவைச்சுட்டு.. இனி இருக்கு உனக்கு… முதல்ல நீ சாப்பிடுற ஜங் ஐட்டம்ஸ்ஸ நிறுத்தினாலே போதும்..”
என்றதும்,
“ஏது.. இதெல்லாம் ரொம்ப தவறுங்க..” என்றாள்.
“உன் வாய் அடங்காது.. இரு.. தாமஸை இன்னும் ரெண்டு பாட்டில் ஏத்த சொல்றேன்..”
என்று அவள் மிரட்டவும்,
“ஐயோ தீதி.. அதை மட்டும் சொல்லாத.. நீ என்ன சொன்னாலும் கேட்கறேன்..”
என தடாலடியாய் சரண்டராக எஸ்தர் முகத்தில் அப்பொழுது தான் பதட்டம் குறைந்து புன்னகையே எட்டி பார்த்தது.
ட்ரிப்ஸ் முடியபோவதால் அதனை நீக்குவதற்காக வெளியே வந்து செவிலியரை அழைக்க அங்கு தாமஸூம் இருந்தான்.
“ட்ரிப்ஸ் முடிஞ்சுடுச்சா.. ஓகே.. இப்ப நைட் லேட் ஆகிடுச்சு.. இன்னோர் முறை டெஸ்ட் எடுக்கணும் ஜென்சி.. நாளை வந்து எடுக்கலாம்..”
என்று சொல்லவும் அதனை ஏற்று தலையசைத்தவள்,
“தேங்க்ஸ் தாமஸ்.. டியூட்டி இல்லாத நேரத்திலும் எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து பார்த்ததுக்கு..!! லிசாவிற்கு வேற ஒன்னும் இல்லையே..” என்க,
“ஹே என்னப்பா பார்மல்லா தேங்க்ஸ் எல்லாம் சொல்லிகிட்டு.. அதைவிடுங்க… டெஸ்ட் ஏன் எடுக்க சொன்னேனா.. கிட்னி ஸ்டோன் இருக்குமோன்னு எனக்கு டவுட்டா இருக்கு அதான்..”
என்று அவன் மெதுவாய் சொல்ல அதிர்ந்தவளாய், “என்ன சொல்றீங்க தாமஸ்..”என்றாள்.
இவ்வளவு நேரம் நிதானமாய் இருந்தவளுக்கு சிறு நீரகத்தில் கல் என்றதும் பயம் அரும்பியது.
“டென்ஷன் ஆகாதீங்க ஜென்சி.. லிசாவை செக் பண்ணபோது லேசா சிம்டம்ஸ் இருந்துச்சு.. சந்தேகமா தான் சொன்னேன்.. இன்னும் கன்ஃபார்ம் ஆகல..அத்தோட கிட்னி ஸ்டோன் எல்லாம் இப்ப ரொம்ப காமன்.. க்யூரபுள் தான்.. முதல்ல டெஸ்ட் எடுத்து பார்ப்போம்.. டோன் கெட் பெனிக் ஓகே..”
என்று சமாதானமாய் பேச அரைமனதோடு தலையசைத்தாள் ஜென்சி.
அதே சமயத்தில்….!!
“உதட்டில் உந்தன் பெயர் தான்..
உடலில் உந்தன் உயிர் தான்..
நிலத்தில் நின்றாலும் நீ எங்கு சென்றாலும்
நான் உன்னை தொடர்கின்ற நிழலல்லவா..!!”
கடலோர சாலையில் மிதமான வேகத்தில் தன் காரை செலுத்திக் கொண்டிருந்திருந்தான் ஜோஷ்வா.
பாடல் வரிகளோடு மெல்ல முணுமுணுத்தபடி புன்னகை முகமாய் இருந்த தோற்றத்தை கண்டு,
‘இந்த புன்னகையின் காரணம்… இரவின் ஏகந்தந்தில் வீசும் அந்த கடல் காற்றா..?? இல்லை வேறா..’
என்று கேட்க அருகில் அமர்ந்திருந்த அனில் குப்தாவிற்கு ஆர்வம் பொங்கினாலும் அதனை வாய்விட்டு கேட்காது,
“சார்.. நான் வண்டி ஓட்டவா..”
என்பதனை மட்டும் தயக்கத்தோடு கேட்க திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து,
“ஏன்.. எங்கயாவது உன்னை கொண்டு போய் முட்டிடுவேனோன்னு பயம் வந்திடுசா..”
என்று இடக்காய் கேட்கவும்,
“அப்படிலாம் இல்ல சர்..”
என்று அவசரமாய் மறுத்தான்.
முக்கியமான இடங்களுக்கு செல்லும்போது ஓட்டுநரை தவிர்த்துவிடுவதும் இன்னும் சில நேரம் அனில் குப்தாவையும் மறுத்துவிடுவதும் அவன் வழக்கம் தான் எனினும் இன்று ஜோஷ்வா ஓட்ட,
தான் உட்கார்ந்து வருவது அவனுக்கு ஒரு மாதிரி இருக்க அதன் பொருட்டே கேட்டான்.
“சொல்றதை மட்டும் செய்.. சொல்லாதத எல்லாம் செய்ய நினைக்காத சரியா..”
என்று ஜோஷ்வா கூறும்போது தலையசைத்து ஒப்புக் கொள்வதை தவிர அவனுக்கு வேறு வழியுமில்லை.
மீண்டும் அவன் பாடலோடு மனம் செல்ல,
‘ஏ தீயே.. அழகிய தீயே…” என்று வரும்போது ஜென்சியின் முகமே நினைவில் வந்தது.
“ஆமா.. அழகான தீயே தான்.. அதுவும் என்னுட்ட பேசும்போது வார்த்தைகள் எல்லாமே ஃபயர்பால்ஸ்..” என்றெண்ணி சிரித்து கொண்டான்.
கோபமாய் பார்க்கும்போது அவள் கண்கள் காட்டும் பாவனையை எண்ணி இரசிக்காத நிமிடங்கள் இல்லை. அதற்காகவே அவளை அடிக்கடி சீண்டி பார்க்க தோண்றியது.
ஏதோ நினைத்து சிரித்தபடி வந்தவனை அனில் வித்தியாசமாய் பார்க்கவும்,
“ஸ்குரில்.. உனக்கு கேர்ள் ஃப்ரெண்டு இருக்கா..”
என்றான் கண்சிமிட்டி.. திடீரென இக்கேள்வியை எதிர்பார்க்காதவனோ,
“என்ன சர்..”
என்று விழிக்க, “சும்மா சொல்லு மேன்..” என
முஷ்டியால் அவன் தோளில் விளையாட்டாய் குத்த,
‘போற வேலை என்ன.. கொஞ்சம் கூட டென்ஷனே இல்லாம ஜாலியா பேச இவரால மட்டும் எப்படி முடியுது..’
என்றெண்ணி வியந்தான் அனில். எந்த சூழ்நிலையிலும் ஜோஷ்வாவை சூழ்ந்திருக்கும் உற்சாக அலைகள் மட்டும் குறைந்ததே இல்லை என்பதனை எண்ணி என்றும்போல் இன்றும் அவனுக்கு வியப்பாக தான் இருந்தது.
“கேர்ள் ஃப்ரெண்ட் எல்லாம் இல்லை சர்..”
“ஆஹான்.. ஒரு பொண்ணு மேல கூடவா உனக்கு ஃபீலிங்க்ஸ் வந்தது இல்ல.. நம்ப முடியலயே ராஜா.. என்ன எனக்காக பச்சபுள்ள அக்ட் கொடுக்குறீயா..”
“நிஜமா தான் சர் சொல்றேன்.. பொண்ணுங்க மேல ஆர்வம் வந்ததே இல்லைனு இல்ல.. ஆனா கமிட் ஆகிறது இம்சையா இருக்கும் சர்.. எல்லா விஷயத்திலும் தலையிடுவாங்க.. டேட்டிங்.. அவுட்டிங்னு அவங்க கூடவே சுத்தனும்.. அதுக்கெல்லாம் நேரம் இல்ல சர்..”
புருவங்கள் ஏறிட குறுஞ்சிரிபோடு சாலையில் கண் வைத்தபடி அவன் பேச்சை கேட்டு வந்த ஜோஷ்வா,
“கேர்ள் ஃப்ரெண்டே இல்லைன்ன… ஆனா நீ சொல்றதை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப அனுபவஸ்தன் மாதிரியில இருக்கு..”
என்று நக்கலாய் கேட்க, “அதான் மத்தவங்க படுற பாட பார்க்கிறேனே சர்.. இப்ப என் குறிக்கோள் எல்லாம் சம்பாத்தியம் தான்.. லைஃப்ல ஷெட்டில் ஆனதும் தான் பொண்ணு எல்லாம்..”
எனவும்,
“என்ன ஒரு நாற்பது வயசுக்கு அப்புறமா..!! போடா டேய்..”
என்று ஜோஷ் சிரிக்க என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான் அனில்.
“அந்தந்த ஏஜ்கான ஃபீலிங்க்ஸை அப்போ அப்போ தான் அனுபவிக்கனும் ஸ்குரில்.. பணம் முக்கியம் தான்.. ஆனா பணத்தை வைச்சு மத்த சந்தோஷத்தை எல்லாம் இழக்குறது முட்டாள்தனம்…!!
நொந்து நூலாகி இருக்கும்போது பிடிச்சவங்க கூட ஸ்பெண்ட் பண்ற கொஞ்ச நேரம் சந்தோஷம் அலாதியானது..!! செட்டில் ஆனதும் வாங்கி வைச்சுக்க லைஃப் பார்ட்னர் பொருள் இல்லயே.. க்ரோ டுகெதர் மேன்..”
கண்களில் பொலிவும் இதழில் குறுநகையும் என அவன் அனுபவித்து சொன்னவிதம் இரசிக்க கூடியதாய் இருக்க அனிலுக்கும் புன்னகை அரும்பியது.
இருப்பினும்,
“அப்புறம் ஏன் சர்.. நீங்க இன்னும் சிங்கிளா இருக்கீங்க…” என்ற கேள்வி நாக்கின் நுனி வரை நின்றாலும்,
‘தைரியம் இருந்தா கேளேன்..’ என்ற மனசாட்சியின் கிண்டலை உணர்ந்து வாயை மூடிக் கொண்டான்.
அதன்பின் ஜோஷ்வாவின் கார் இந்தியாவின் மிக முக்கிய சமூக ஆர்வலரும் பெரிய வழக்கறிஞரும் ஜோஷ்வாவின் பள்ளி நண்பனுமான ராமகிருஷ்ணனின் வீட்டு வளாகத்தினுள் நுழைய இவர்கள் வரவை உணர்ந்து வாசலிற்கே வந்து வரவேற்றான் ராம்.
“வெல்கம் ஜோஷ்.. எப்படி இருக்க.. குட் டு ஸீ யூடா..”
என்று உற்சாகமாய் அணைத்துக் கொண்டவன் அனில் குப்தாவை பார்த்ததும் கேள்வியாய் ஜோஷ்வாவை பார்க்க,
“ஹி இஸ் மை பி.ஏ… ஸ்குரில்.. ம்ச்.. அனில் குப்தா…”
என்று வாய் மொழியாய் கூறியவன் விழிகளோ,
‘அவனால் பிரச்சனை இல்லை…’ என்ற விதமாய் சொல்லியது.
புன்னகையோடு மரியாதை நிமிர்த்தம் அனிலோடு கைகுலுக்கிய ராம் இருவரையும் உள்ளே அழைத்து சென்றான்.
சில நிமிடங்கள் ஸ்நேகமாய் அளவளாவியபின்,
“எல்லாம் ஃபைன்னா ஜோஷ்..”
என்று அர்த்ததோடு ராம் கேட்க,
“பக்காவா..” என்று சிரித்தவன் அனிலிடம் மடிகண்ணியை வாங்கி கடகடவென இயக்கி வந்த விஷயத்தை விவரிக்க தொடங்க நிமிடங்கள் சில மணி நேரங்களாய் கடந்த பின்பும் அவர்களின் பேச்சு வார்த்தை மிக மும்முரமாய் தொடர்ந்தது.
“இது போதுமா ராம்..”
“போதுமா வா… அசத்திட்ட போ.. எப்படி ஜோஷ் இவ்வளவு நுணுக்கமா டீட்டெய்ல்ஸ் எடுத்த..!!உண்மையாவே எல்லாம் ரொம்ப தெளிவா இருக்கு… கண்டிப்பா இதை வைச்சு நாம நினைச்சதை செஞ்சுடலாம்..”
என்று அவன் சொல்லவும், “இனி உன் கையில் தான் எல்லாம் ராம்.. புரியும்னு நினைக்கிறேன்..”
என்று ஜோஷ் பூடகமாய் கூற,
“உன் உழைப்பை வீணாக்க மாட்டேன் ஜோஷ்..நான் பார்த்துக்குறேன்.. கவலைய விடு.. நினைச்சது எல்லம் நடக்கும்..”
என்றான் நம்பிக்கையோடு..
“ஓகே டா.. நான் கிளம்புறேன்..”
என்றவன் விடைபெற்று எழும்போது,
“அப்புறம் ஜோஷ்.. இப்போவாவது உன் லயனஸ் உன்னை தேடி வந்தாச்சா..”
என்று ஆழமாய் கேட்கவும் நிமிடத்தில் அவன் கண்ணில் வந்துபோன வலியை அடுத்து அவன் இதழ் சிந்திய சிரிப்பின் அர்த்தம் ‘ஆம்..’ என்பதா ‘இல்லை..’ என்பதா என்று ராமுக்கும் புரியவில்லை. நமக்கும் புரியவில்லை.
வெளியே வந்ததும் சாவியை அனிலிடம் கொடுத்துவிட்டு மறுபுறம் ஏறி அமர்ந்த ஜோஷ்வாவின் அமைதி அசாதாரணமாய் இருந்தது. வேறு உலகத்தில் இருப்பவன் போல் அவன் கவனம் இங்கேயே இல்லை.
கார் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் அனில்,
“சர்.. நான் ஒன்னு கேட்கலாமா..” என்றான் மிகுந்த தயக்கத்தோடு..
‘கேளு..’ என்பதனை வாயால் கூறாமல் கையால் சைகை செய்தவன் அதேபோலே தான் இன்னமும் அமர்ந்திருக்க,
“இல்ல சர்.. ராம் சார்ரோட இந்த மீட்டிங் ஹைலீ கான்ஃபிடென்ஷியல்.. ஆனால் நீங்க என்னை கூட வைச்சுட்டு பேசுனீங்க.. இந்தளவு என் மேல நம்பிக்கையா சர்..”
என்று அனில் கேட்டதும் தான் அவனிடம் பார்வையை திருப்பினான்.
“நம்பிக்கையா…? நான் என்னோட நிழலையே நம்ப மாட்டேன்.. உன்னை நம்புவேன்னா…” என்று நக்கலாய் கூறியவன்,
“தலைவன்னா தட்டிக் கொடுக்கவும் தெரியணும்.. தட்டி வைக்கவும் தெரியணும்.. அது எப்படினு எனக்கு தெரியும்..”
என்று சொன்னது புரிந்தும் புரியாமலும் குழம்பினான் அனில்.
ப்ளேயரின் இசை மட்டுமே ஒலிக்க பாதி தூரம் சீராய் சென்ற காரின் பின்னே தொடர்ந்து வந்த லாரியினை முதலில் இருவருமே கவனிக்கவில்லை.
சற்று தூரம் சென்ற பின்பே அதனை கவனித்த அனில் அது தங்களை குறி வைத்தே வேகமாய் வருவதுபோல் தோன்ற அடுத்து நடக்க இருப்பதை நொடியில் உணர்ந்து சுதாரித்தவன் காரை ஒடித்து வலதுபுறம் வேகமாய் திருப்ப கட்டுபாடின்றி அங்கிருந்த சுவரில் மோதி நின்றது.
“ஹே.. யூ ### இடியட்…”
நிற்காமல் இவர்களை கடந்து சென்ற வாகனத்தை கண்டு கத்திய அனில்,
“சர்.. ஆர் யூ ஓகே..” என்று ஜோஷ்வாவிடம் பதட்டமாய் வினவினான்.
வேகமாய் திரும்பியதால் விண்டோவில் இடித்துக் கொண்டதில் இரத்தம் துளிர்த்தாலும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் பெரிதாய் அடி ஏதும் படவில்லை.
நெற்றியை பிடித்துக் கொண்டு பரவாயில்லை என்னும் விதமாய் ஜோஷ் தலையசைத்தான்.
“வேணும்னே டார்கெட் பண்ணி வந்தா மாதிரி இருக்கு சர்.. ஜெஸ்ட்ல தப்பிச்சோம்..”
என்று பதட்டமாய் சொல்லவும் அவன் முகம் யோசனையாய் மாற சுற்றும் முற்றும் பார்த்தான். அவ்விடத்தின் ஆள் அரவமற்ற சூழல் இன்னும் பல விஷயங்களை அவனுக்கு உணர்த்தியது.
“என்னடா இன்னும் இந்த மாதிரி எதுவும் கிளம்பலையேன்னு நினைச்சேன்.. ஆரம்பிச்சாச்சா…”
என ஏளன சிரிப்போடு தனக்குள்ளையே முணுமுணுத்தபடி அலைபேசியை எடுத்து ஏதோ செய்ய,
“நான் வண்டில என்ன டேமெஜ்னு பார்க்குறேன் சர்..”
என்று இறங்க முற்பட்டவனை தடுத்து,
“வேணாம்.. இத்தோட விட மாட்டானுங்க.. நீ வண்டிய மூவ் பண்ண ட்ரை பண்ணு.. இங்கேந்து கிளம்பணும்.. குவிக்…”
என்று சொல்ல அனிலுக்கு இன்னும் பதட்டமானது. கைகள் தடுமாற அவசரமாய் செயல்பட முயன்றாலும் அடிப்பட்ட கார் ஒத்துழைக்க மறுக்க மீண்டும் மீண்டும் முயற்சித்த பின்பே இயங்க வேகமாய் ஓட்டினான்.
ஆனால் மீண்டும் சில அடிகள் சென்றதும் வந்த மற்றொரு கனரக வாகனம் இவர்கள் சாலையில் ஓரமாகவே வந்தாலும் ஜோஷ்வா அமர்ந்திருந்த பக்கம் உரசியே வர எவ்வளவு முயன்றாலும் நடப்பதை தடுக்க முடியவில்லை.
முன்னும் பின்னுமாய் கொஞ்ச நேரம் நடந்த மோதலின் முடிவில் அந்த வண்டி சற்று வேகமாய் இடிக்கவும் காரின் ஓட்டம் தடுமாற அதில் உடைந்த கார் கதவு ஜோஷ்வாவின் கால்களை பலமாய் தாக்கியது. கண்ணாடியில் மோதி அனிலுக்கும் அடி தான்..!
அதற்கும் மேல் என்ன நடந்திருக்குமோ ஜோஷ்வாவின் கைகாரியத்தில் அங்கே சைரன் சத்ததோடு வந்து சேர்ந்தது போலீஸ் ஜீப்.
சைரன் சத்தம் கேட்டதுமே சுதாரித்த அவ்வண்டி அங்கிருந்து வேகமாய் நகர்ந்துவிட கார் அருகில் வந்ததும் இறங்கிய இன்ஸ்பெக்டர் அடுத்த செக்போஸ்டிற்கு அலர்ட் கொடுத்துவிட்டு இவர்களை நெருங்கி வர அவரை பார்த்தபடியே ஜோஷ்வாவின் கண்கள் மயக்கத்தை தழுவியது.