பெரிய மன்னிப்பு மன்னிச்சுருங்க,..அதாவது பாருங்க கொரானா லாக்டவுன்ல WFH. இதுல, டிஃபன், காபி டீ பலகாரம், கபசுரகுடிநீர், மதிய சோறு, நைட் டிஃபன்னு ஒரு மினி சரவணபவன் ரேஞ்சுக்கு இறங்கி வேலை பார்க்கற இடைவெளியில அந்த “ஒன்றில் நில்லாயோ?” நிக்காம ஓடிப் போயிருச்சு.. அப்படியும் மீறி எடுத்து வச்சா ஒரே அழுவாச்சி கதையா வருது( ஒரு வேள நான் depression la இருக்கேனோ?). குடும்ப கதைன்னு ஆரம்பிச்சு ஒரு நாலு எபி வரைக்கும் நல்லா கொண்டு போய் அதை அப்படியே கொலை களமா மாத்தி, என்ன எழுத வந்தேன், எதை எழுதறேன்னு எனக்கே தெரியாம சொதப்பிட்டேன்.
அதனால கொஞ்சம் மைண்ட் வேல செய்யல.. கொரானா symptom oh என்னவோ…
அதனால என்னவாம் இப்பன்னு திட்டாதீங்க… சோ, என்னை நானே ஹேப்பியா வச்சுக்க, ஒரு சின்ன ஹேப்பி காதல் கதையை எழுதலாம்னு வந்திருக்கேன்( இதாவது எழுதுவியான்னு கேட்கறீங்க)… உங்க bad words தப்பே இல்ல…எனக்கு மினி எருமைமாட்டுத் தோல் தான்.சோ, அவளவா affect பண்ணாது.
இதுல ஒரே ஒரு நல்ல விஷயம் என்னன்னா இந்தக் கதை இனிமே எழுதப் போறதில்லை (அப்பறம்ம்ம்ம்ம்ம்ம் இதும் அரைவேக்காடா?)… ஐ மீன். ஏற்கனவே ¾ எழுதி முடிச்சுட்டேன்னு சொல்ல வந்தேன்.. ரெண்டு நாளைக்கு ஒரு எபி குடுக்கலாம்னு…
சரி, மன்னிச்சுட்டீங்கன்னு நம்பறேன் (நல்ல உள்ளங்களேன்னுலாம் கூவியிருக்கேன்…)… கதையைப் பத்தி ஒரு சின்ன intro. ஒரு hero , இல்ல ரெண்டு ஹீரோ (எவன் ஹீரோன்னு கடைசில நீங்க சொல்லுங்க), ஒரு காதல், ஒரு நட்பு அப்பறம் ஒரு கெத்து ஹீரோயின்(நாம அப்படித்தானே எழுதுவோம்), அவளோ தாங்க கதை. வழக்கமான அதே புளிச்ச மாவு தான், பட் தோசைக்கல் புதுசு…சுடற இடம் புதுசு… கொஞ்சம் நெய், பொடி, மசாலான்னு போட்டு மொறு மொறுன்னு சூப்பர் காரசட்னியோட ப்ரெசண்ட் பண்ணறேன்… ஒ.கேவா…