நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இதுவே இந்த நாவலின் இறுதிப் பதிவு அத்தியாயம் இவ்வளவு நாட்களாக வாசகர்களாகிய நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி!!!
வெண்மதி எல்லோரையும் ஹாலிற்கு கூப்பிட்டாள்.
அனைவரும் வந்து உட்கார்ந்தனர்.
அப்பொழுது வெண்மதி “இதுக்கு முன்னாடி ஒரு தடவை நாம எல்லாரும் இதே மாதிரி ஹாலில் கூடி இருந்தோம். அப்போ நான் வருத்தத்தோடு மனசில்லாம
இந்த வீட்டை பிரிக்கச் சொல்லி சொன்னேன். இப்போ திரும்பவும் அதே மாதிரி கூடி இருக்கிறோம். ஆனால் என் மனசு நிறைஞ்சு இருக்கு. இனிமேலும் நாம இந்த வீட்ல பிரிஞ்சி வாழ வேண்டிய அவசியம் கிடையாது. நாம சேர்ந்து பழையபடி இல்லையில்லை சேர்ந்து எல்லோருமே சந்தோஷமா வாழலாம்னு நான் நினைக்கிறேன். உங்க எல்லாருக்கும் இது சரின்னு பட்டா நாம ஒத்துமையா இந்த வீட்டில் இருக்கலாம்.” என்று ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சுடன் முடித்தாள்.
எல்லோரது முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
கிருஷ்ணன் “வெண்மதி சொன்ன மாதிரி நாம எல்லோரும் சேர்ந்து ஒத்துமையா இருக்கலாம்.” என்று கூற அனைவரும் அதற்கு ஆமோதித்தனர்.
இரண்டாக பிரித்து இருந்த வீடு ஒன்று ஆனது. விஷயத்தை கேள்விப்பட்ட கவிதா விடுமுறை எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து வெண்மதியை பார்க்க வந்தாள். வெண்மதிக்கு வெட்டு பட்டதை நினைத்து வருத்தப் பட்டாலும் ஆசைப்பட்ட மாதிரியே அவள் குடும்பத்துடன் அந்த வீட்டில் வாழப் போகிறாள் என்று தெரிந்து கொண்ட கவிதா வெண்மதியை கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டாள்.
வீட்டு ஆண்கள் வேலையாட்களின் உதவியோடு வீட்டை பழையபடி மாற்றி அமைத்துக் கொண்டிருந்தனர்.
கார்த்திகேயன்
“சரி இப்போ நம்ம கிட்ட பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஸ்டவ், சோபா எல்லாமே எக்ஸ்ட்ராவா இருக்கே என்ன பண்ணுவது?” என்று யோசித்தபடி கேட்டான்.
“அதனால என்னடா மாத்தி மாத்தி யூஸ் பண்ணிக்கலாம். தேவை இல்லைனா விற்று விடுவோம். இதெல்லாம் ஒரு பிரச்சனையா வேலையை பாருடா.” என்றார் கிருஷ்ணன்.
“ஓகே” என்றபடி வேலையை முடித்தனர்.
முடித்ததும் கிருஷ்ணன் “இப்போதான் வீடு பார்க்க நல்லா இருக்கு.” என்றார் திருப்தியுடன்.
கார்த்திகேயன் “இவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம் வீட்ல நடந்து இருக்கு. நாம ஸ்வீட் எடுக்கலைன்னா எப்படி?
சித்தி உங்க ஸ்வீட்டை எடுத்துட்டு வாங்க. நாம கொண்டாடலாம்.” என்றான். இதனை கேட்ட லட்சுமி ஆர்வமாக தான் செய்து வைத்திருந்த லட்டு, ஜாங்கிரி, மைசூர் பாகு எல்லாவற்றையும் ஒரு தட்டில் வைத்து எடுத்துவந்து எல்லோருக்கும் கொடுத்தார்.
முதலில் எடுத்துக் கொண்டு கார்த்திகேயன் “ஸ்வீட் எடு கொண்டாடு” என்று கூறிவிட்டு சுவைத்தான்.
எல்லோரும் இனிப்பை சாப்பிட்டுவிட்டு அருமையாக இருப்பதாக லட்சுமியை பாராட்டினர்.
“அப்புறம் இன்னொரு சந்தோஷமான விஷயம் எனக்கு இன்கிரிமெண்ட் கிடைச்சிருக்கு. இனிமே என்னோட சம்பளம் 40,000.”
என்றாள் வென்மதி.
இதனை கேட்ட அனைவரும் மனதார சந்தோஷப்பட்டனர்.
“சூப்பர் அக்கா. நீங்க ஆசைப்பட்ட மாதிரியே நல்ல சம்பளத்தில் வேலை கிடைச்சிருச்சு. அதுவும் பாண்டிச்சேரியில் நல்ல வேலை கிடைச்சிருச்சு. எத்தனை தடவை தோற்று போனாலும் சோர்ந்து போகாம திரும்பத் திரும்ப முயற்சி பண்ணி நீங்கள் நினைத்ததை சாதித்து விட்டீர்கள். கிரேட் அக்கா. உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.” என்றான் கார்த்திகேயன்.
“உனக்கு மட்டும் இல்லடா. எங்க எல்லாருக்கும் ரொம்ப பெருமையா இருக்கு. எங்க அப்பா சொன்ன மாதிரி வெண்மதி எப்பவுமே நம்ம வீட்டு மகாலட்சுமி தான்.”என்றார் கிருஷ்ணன்.
“ஆமாம் வெண்மதி மகாலட்சுமி தான். அதனாலதான் நான் வெண்மதி வேலை செய்துகிட்டு இருக்கிற கம்பெனியை வெண்மதி பெயரில் வாங்க போறேன். இது கதிர்வேலனின் ஆசை. அதை கதிர்வேலன் வெண்மதி இரண்டு பேரும் சேர்ந்து நடத்த போறாங்க.” என்று ராகவன் கூற அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. வெண்மதி லலிதாவை திருடர்களிடமிருந்து காப்பாற்றியதால் லலிதா, கதிர்வேலன் மற்றும் ராகவன் மனம்மாறி இருக்கிறார்கள் என்று கிருஷ்ணன், லட்சுமி மற்றும் கார்த்திகேயன் நினைத்துக் கொண்டனர்.
கவிதா “ரொம்ப சந்தோஷமா இருக்கு மதி. கேரியர், பர்சனல் லைப் இரண்டிலுமே நீ சாதிச்சுட்ட. ஐ அம் சோ ஹேப்பி பார் யூ.” என்று மகிழ்ச்சியாக கூறினாள் .
“நமக்கு இன்னும் ஒரு சந்தோஷமான விஷயம் இருக்கு. என்ன தெரியுமா?” என்று எல்லோரையும் பார்த்தான் கார்த்திகேயன்.
“என்னடா? சொல்லு.” என்று கிருஷ்ணன் கேட்க அனைவரும் கார்த்திகேயனை கவனித்தனர்.
கார்த்திகேயன் “நாளையிலிருந்து நம்ம எல்லோருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கும்.” என்றான் ஆனந்தமாக.
லலிதா அவனை முதுகில் தட்ட
“எதுக்குடா லட்சுமிக்கு கஷ்டம்? நாமதான் இப்போ சமையலுக்கு ஆள் போட்டுடோமே அவளே செய்யட்டும்.” என்றார் லட்சுமி மீது அக்கறையாக .
அங்கு இருந்த அனைவருக்குமே லலிதாவின் பேச்சு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
லட்சுமி பூரிப்புடன் “அக்கா நீங்க சொன்னதே போதும். உங்களுக்கு எல்லாம் சமைக்கிறது தான் எனக்கு சந்தோஷமும் விருப்பமும். அதனால அதை என்னை செய்ய விடுங்க.” என்றார்.
“சரி உன் இஷ்டம் இந்த வீட்டில் எல்லாமே இனிமேல் அவங்க அவங்க விருப்பத்தையும் சந்தோஷத்தையும் மதிச்சி தான் நடக்கும். ஆனா அந்த சமையல்கார பொண்ணை கூடமாட உதவிக்கு வச்சிக்கிட்டு நீ கஷ்டப்படாம செஞ்சா போதும். அதுதான் உன்னோட உடம்புக்கு நல்லது. உனக்கும் வயசு ஆகுது இல்லையா லட்சுமி? உன்னோட உடம்பையும் பார்த்துக்கோ.” என்றார் அக்கறையுடன்.
வெண்மதிக்கு பார்ப்பது எல்லாம் கனவா நினைவா என்பதுபோல அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
வெண்மதி முகத்தில் பூரிப்பை பார்த்த கவிதாவுக்கும் மிகவும் சந்தோஷம் தான். “வெண்மதி எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றாள்.
“பெரியம்மா ஆனந்த கண்ணீருடன் நீங்க இவ்வளவு தூரம் மாறுவீங்கன்னு நான் நினைச்சதே கிடையாது. இதைவிட வேற என்ன எனக்கு வேணும்.” என்றாள் வெண்மதி.
அப்போது வசந்த் வீட்டுக்குள் நுழைந்தான்.
“வாங்க வசந்த். உட்காருங்க.”என்று வரவேற்றார் லலிதா .
வீட்டின் மாற்றத்தினையும் எல்லோரது முகத்தின் மலர்ச்சியையும் பார்த்து நடந்ததை ஓரளவு கணித்து இருந்தான் வசந்த். வெண்மதி பெயரில் கம்பெனி வாங்குவதையும் தெரிந்துகொண்டு சந்தோஷப்பட்டான்.
வெண்மதியை பார்த்து
“இப்போ வலி எப்படி இருக்கு மதி?” என்று விசாரித்தான்.
அவள் “இப்போ பரவாயில்லை வசந்த்.” என்றாள்.
“நீங்க எப்படி இருக்கீங்க?” என்று லலிதாவை பார்த்து கேட்டான் வசந்த்.
அவர் “கால் வலி குறைந்து விட்டது. எவ்வளவோ பரவாயில்லை . அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். உங்கள தான் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன். உங்களை வச்சுகிட்டு இந்த விஷயத்தை பேசணும்னு நினைச்சேன். நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க. உங்களுக்கு நூறு ஆயுசு.” என்று விட்டு வெண்மதியின் பக்கம் திரும்பி
“வெண்மதி நீ சந்தோஷமா இருக்கேன்னு சொன்ன இல்லையா?
ஆனால் நாங்க எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்ன்னா நீ ஒன்னு செய்யணும்.”
“சொல்லுங்க பெரியம்மா.” என்றாள் ஆர்வமாக.
“ஆனால் உனக்கு அது பிடித்திருந்தா மட்டும் செஞ்சா போதும்.” என்று அவர் புதிர் போட
வெண்மதி அவர் முகத்தை கூர்ந்து பார்த்தாள்.
பெரியம்மா தொடர்ந்தார்.
“உனக்கு சம்மதம்னா வசந்தை நீ கல்யாணம் பண்ணிக்கணும். என்ன சொல்ற?” என்று கேட்டார்.
வசந்த் அவளை ஆர்வமாக பார்த்தான்.
கவிதா வெண்மதியை பார்த்து
“நீ ஆசைப்பட்டது எல்லாமே இப்போ நடந்திருச்சு. உங்க அம்மாவும் பெரியம்மாவும் ஒத்துமையா ஆயிட்டாங்க. இனிமேலும் உன்னோட கல்யாணத்தை நீ எந்த காரணத்தையும் சொல்லி தள்ளி போட முடியாது.” என்றாள்.
வெண்மதி வசந்தை நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்க மனசுக்கு எது சரின்னு படுதோ சொல்லுங்க.” என்றான் அவள் கண்களை பார்த்து.
வெண்மதிக்கும் வசந்த் மீது நல்ல மரியாதை இருந்தது. அவனுடன் தன் வாழ்க்கையை ஒரு கணம் நினைத்துப் பார்த்த அவளுக்கு அது இனிமையாக இருப்பது போல தோன்றியது.
எனவே “எனக்கும் சம்மதம்.” என்று கூறி புன்னகைத்தாள்.
வசனந்திற்கு மிகுந்த சந்தோஷம்.அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
லட்சுமிக்கும் கோவிந்தனுக்கு தான் கேட்க வேண்டிய விஷயத்தை லலிதா. வெளிப்படையாக கேட்டு நல்ல பதிலை பெற்று தந்ததில் ஆனந்தம் அடைந்தனர் மகள் வசந்தை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்வாள் என்று நிம்மதியானர்.
“சூப்பர்” என்று கூறியபடி வெண்மதியின் கன்னத்தில் முத்தமிட்டாள் கவிதா. அப்போது கார்த்திகேயன்
“அப்படியெல்லாம் நீங்க பொசுக்கு பொசுக்குன்னு இனிமே கிஸ் பண்ண முடியாது. அதுக்கு வேற ஆள் வரப்போகுது.” என்றான் கண்ணை சிமிட்டி.
வசந்தை பார்த்தபடி சிரித்தான்.
“ போடா” என்று வெண்மதி வெட்கப்பட்டாள்.
“அடேங்கப்பா. அக்காவை பாருடா. வெட்கப்பட றாங்க. எதுக்கு கா உங்களுக்கு பழக்கம் இல்லாததை எல்லாம் ட்ரை பண்றீங்க?” என்று மேலும் சீண்டினான் கார்த்திகேயன்.
அவள் சிவந்த கன்னத்தை ரசித்தான் வசந்த்.
அப்பொழுது வெண்மதி “அம்மா அம்மா இங்க பாருங்க. இவனை. என்னன்னு கேளுங்க.” என்று குழந்தையாக மாறி சிபாரிசுக்கு அழைக்க.
“கார்த்திக் சும்மா விளையாட்டுக்கு சொல்றான்.” என்று கார்த்திகேயனுக்கு பரிந்து பேசினார் லட்சுமி.
“கவி” என்று கவிதாவை சிபாரிசுக்கு அழைக்க
அவள் “அன்னிக்கி என்னை கிண்டல் பண்ண இல்ல? இப்போ நீ அனுபவி.” என்று காலை வாரினாள் அவள்.
“எனக்கு சப்போர்ட் பண்ண இங்கே யாருமே இல்லையா?” என்று கையை விரித்து கேட்டாள் வெண்மதி.
அப்போது கதிர்வேலன்
“நான் இருக்க. என்னோட தங்கச்சியை எவன்டா கிண்டல் பண்றது? வந்தேன்னா பல்லை தட்டி கையில் கொடுத்திடுவேன்.” என்று கூறியபடி வெண்மதியின் அருகில் வந்து அவள் தோளை மென்மையாக பிடித்துக் கொண்டு நின்றான் கதிர்வேலன்.
“அடப்பாவி என்னடா இப்படி கட்சி மாறிட்ட?” என்று கேட்டாலும் கார்த்திகேயனுக்கு கதிர்வேலனின் செயல் மகிழ்ச்சியையே கொடுத்தது.
“அந்த வேலையை நீங்க செஞ்சிட்டா, நான் என்ன பண்றது?” என்று போட்டிக்கு வந்தான் வசந்த்.
“ அடே அப்பா அக்கா பக்கம்தான் எல்லாரும். நான் இப்போ எதிர்க்கட்சி ஆயிட்டேன்.” என்று வருத்தமாக பேசுவது போல பாவனை செய்தான் கார்த்திகேயன். அதனைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.
லலிதா மற்றும் கதிர்வேலனின் மன மாற்றத்தை கவனித்த கோவிந்தனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. லலிதா மனதார லட்சுமியை ஏற்றுக்கொண்டார். கதிர்வேலன் அவனது வாயாலேயே என் தங்கச்சி என்று கூறியதை கேட்ட அவருக்கு மனம் நிறைந்தது. அவரது மனம் மட்டுமல்ல அங்கு இருந்த அனைவரது மனமும் நிறைந்து இருந்தது.
இரவு வெண்மதி நடந்த எல்லாவற்றையும் பெற்றோர்களிடம் கூறினாள். .
“நீ மட்டும் தனியா இவங்க மூணு பேரையும் சமாளித்து இருக்க. எங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்லையா மதி?” என்றார் லட்சுமி சிறிது வருத்தமாக.
“நான் தனியா எதையும் சமாளிக்கல. நீங்க கொடுத்த அட்வைஸ், தைரியம் இரண்டும் தான் என்னை இதையெல்லாம் செய்ய வைத்தது.
என் மேல இருக்கிற பாசத்துல நீங்க பெரியப்பா கிட்ட சொல்ல போக, பெரியப்பாவும் நீங்களும் இவங்களையெல்லாம் வெறுத்து ஒதுக்கி விடுவீர்களோன்னு சொல்லல. அதுக்கும் மேல பெரியப்பாவோட குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும். அப்படி நடந்திருந்தால் நாம எல்லாரும் சேர்ந்து வாழனும்னு நான் ஆசைப்பட்டது நடக்காமலே போயிருக்கும்.
அதனால தான் சொல்லல. என்னால இந்தப் பிரச்சனைகளை சமாளிக்க முடியும்னு தோனிச்சு. ஒருவேளை என்னால முடியாம போயிருந்தால் கண்டிப்பா உங்ககிட்ட வந்து சொல்லி இருப்பேன்.
அப்படித்தான், என்னோட கேரக்டரை ஸ்பாயில் பண்ண பிளான் பண்ணப்ப பெரியம்மா கிட்ட நியாயம் கேட்டுட்டு எல்லார்கிட்டயும் சொல்லலாம்னு தான் நினைச்சேன்.
அதுக்குள்ள எல்லாமே தலைகீழா மாறி போச்சு.
அதுவுமில்லாம இவங்களை எனக்கு சின்ன வயசுல இருந்தே நல்லா தெரியும். திருத்தவே முடியாதுன்னு ஒதுக்குற அளவுக்கு மோசமானவங்க இல்ல.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு அடிக்கடி சொல்லுவீங்களே. அதனால இவங்க பண்ண குற்றத்தை எல்லாம் கொஞ்சம் பொருத்து இருந்து திருந்துவார்களான்னு பார்த்தேன்.
என்னோட நம்பிக்கை வீண் போகல. நான் நினைச்ச மாதிரியே இவங்க மனசு மாறிட்டாங்க. நாம எல்லாரும் ஹாப்பியா கூட்டுக்குடும்பமா இருக்க போறோம்.” என்று மலர்ந்த முகத்துடன் கூறினாள் வெண்மதி.
இந்த விளக்கத்தைக் கேட்ட பெற்றோர்களின் மனம் மகளின் சாமர்த்தியத்தையும் பக்குவத்தையும் எண்ணி மகிழ்ந்தது.
சுபம்