ஆருயிரே மன்னிப்பாயா !
வாழ்க்கையோட ஒவ்வொரு தருணங்களிலும் அன்பு இருக்கும் அந்த அன்பு காதலாக வெளிப்படும் , காதல் இல்லாத வாழ்க்கையே இல்லை எல்லாருடைய வாழ்க்கையிலும் காதல் இருக்கும் அதை அனுபவிக்காதவர்கள் தான் பலர் . உண்மையான காதலை புரிந்து கொள்ளாமல் வாழ்பவர் பலர் . அந்த காதல் புரியும் போது நம்ம காதலிச்சவங்க நம்ம கூட இருக்க மாட்டாங்க. அந்த நொடி நம் வாழ்க்கை எப்படி இருக்கும் . அப்போது நாம் அவர்களிடம் சொல்ல இருக்கும் வார்த்தை ஆருயிரே மன்னிப்பாயா !
எபிசொட்-1
அரவிந்த், ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன் . அவனுடைய பெற்றோருக்கு அவன் ஒரே பையன் . அதனால் அவனுக்கு அவன் வீட்டில் ரொம்ப பாசம் அதிகமாக கணிப்பார்கள் . அவன் தான் அவர்களது பிசினஸ்யை கவனித்து கொண்டான் . அவன் அனாதை ஆசிரமத்திற்கு மிகவும் உதவுவான் . தன்னிடம் இருக்கும் எல்லாத்தையும் தானம், தர்மம் செய்வான் . அவன் சம்பாதிக்கும் மொத்த சொத்துக்களையும் அவன் வாரி இறைப்பான் . அவனது பெற்றோர் சம்பாதித்தது என்ன எல்லாமே அவன் தானம் தர்மம் செய்வான் அதனால் கிடைக்கும் புண்ணியத்தை எண்ணி மகிழ்ச்சி அடைவான் . அவன் ரொம்ப நல்லவன் . அவனது பெற்றோருக்கு இதில் துளி கூட விருப்பம் இல்லை . அவன் தானம் செய்கிறான் பரவாயில்லை ஆனால் அவன் சம்பாதித்தது மொத்தமும் இப்படி செய்தால் அவனுக்கு வருங்காலத்தில் என்ன செய்வான் அவன் பிள்ளைகளுக்கு அவன் என்ன சேர்த்து வைப்பான், இப்படி இருந்தால் கூடிய சீக்கிரம் நாம் பிட்சை எடுக்க வேண்டி தான் என்று எண்ணினார்கள், அவனது செயல்கள் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது அவன் சம்பாதிர்பதற்கு அவன் நினைத்தால் மிக பெரிய வணிகர் ஆகலாம் கோடிகளில் புரளலாம் ஆனால் இவனோ தானம் செய்து இப்படி வாழ்கிறான் என்று வேதனை கொண்டார்கள் . இதற்கு என்ன வழி என்று யோசித்தார்கள் . அவனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவன் இதை எல்லாம் விட்டுட்டு அவன் குடும்பத்தை பார்ப்பான் , இந்த மாதிரி இவன் தானம் செய்ய அவள் சம்மதிக்க மாட்டாள் அவனும் ஒழுங்காக குடும்பம் பிள்ளைகள் என வாழ்வான் என்று எண்ணினார்கள் . அவனிடம் அதை பற்றி பேசினார்கள் . அவனோ அவனை தானம் தர்மம் செய்ய விட மாட்டார்கள் என்று கல்யாணமே வேண்டாம் என்று முடிவு செய்துள்ளான் , அவனது பெற்றோரிடம் இதை பற்றி ஒன்றும் சொல்ல வில்லை அவனது பெற்றோர் அவர்கள் சாகும் முன் அவனுக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணினார்கள் . அவனோ இந்த மாதிரி ஒரு எண்ணத்தில் இருந்தாஅவன் அப்படி இருக்கும்போது எப்படி இவர்களால் அவனுக்கு கல்யாணம் நடத்த முடியும் . அவனுக்கு ஒரு வாழ்நாள் ஆசை . அவன் ஒரு இலவச பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என்பதும் ,அதில் எல்லா பாடமும் படிக்கலாம் என்பதும் , மருத்துவம் முதல் கலை அறிவியல் வரை , சட்டம் , பொறியியல் , என்ன எல்லாவற்றையும் அந்த பல்கலைக்கழகத்தில் இலவசமாக கொடுக்க வேண்டும் என்பது அவன் ஆசை அவனது மொத்த வருமானமும் சம்பாத்தியமும் இதற்காக தான் . மேலும் ஒரு இலவச மருத்துவமனை , பள்ளி என நிறைய பண்ண வேண்டும் என்பது அவனது கனவு அதற்காக தான் ஓடி ஓடி உழைக்கிறான் அதற்காக தான் பல இடங்களில் உதவி தொகை வாங்கி கொண்டுஇருக்கிறான் அவற்றை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வான் . இந்த கனவில் அவன் கல்யாணம் செய்தால் அவன் கனவு என்ன வாகும் , அவன் சமுதாயத்திற்காக இவ்ளோ பெரிய முடிவு எடுத்து உழைக்கிறான் , அவனிடம் அது செய்ய பணம் உள்ளது அவன் அரசாங்க அனுமதிக்காக தான் காத்து கொண்டிருக்கிறான் , அவன் வாழ்க்கையில் சம்பாதித்த மொத்தத்தையும் அதற்காக இறைக்க அவன் தயாராகி உள்ளான். அவனது பெற்றோர் இதற்கு சம்மதிக்க விஅவனது பெற்றோருக்கு ஒரே பயம் இவன் கிறுக்கன் மாறி இதெல்லாம் பண்ண மொத்தமும் போயிரும் , இவன் உலகம் தெரியாம இருக்கான் . இவன் இவ்ளோ நல்லது பண்ணுகிறான் ஆனால் இவனை கொல்லவும் எத்தனை பேர் இருப்பார்கள் இவனுக்கு பெரிய பெரிய ஆட்களோடு பகை கூட வரலாம் ஆனால் இவன் சொன்னதை கேட்க மாட்டிக்கிறான் என்று அவன் பெற்றோர் வருந்தி கொண்டு தான் இருக்கிறார் . ஆனால் ஒன்று ஒரு பெண் அவன் வாழ்வில் வந்தால் அவன் மாறிவிடுவான் என்று அவர்கள் நம்பினார்கள் .
ஒரு நாள் அவன் அரவரவாமாக வீட்டுக்கு வந்தான் அவனுக்கு அரசங்கமிடம் இருந்து அனுமதி கிடைத்து விட்டது என்று , அவன் அப்பா அவனிடம், “நீ என்னவும் பண்ணிக்கோ எனக்கு கவலை இல்லை , ஆனால் நீ இந்த பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்றால் நீ கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லணும் இல்லை என்றால் உனக்கு பணம் கிடையாது பணம் அனைத்தும் என் பெயரில் உள்ளது நீ செய்ய நினைக்கும் ஒவொன்றுக்கும் நான் கையெழுத்து போட வேண்டும் நீ கல்யாணம் பண்ண சம்மதிகளை என்றால் உனக்கு என் பணம் கிடையாது” என்று கூறினார்.