கனவெல்லாம் நீ தானே
எபிசொட்- 4
அவன் அப்படி பேசியதை சமீராவால் தாங்க முடியவில்லை . மனம் வருந்தி அழுவது போல் ஆனாள், ஆனால் அவன் முன்னாடி அழுது அவளது பலவீனத்தை அவனிடம் காட்டி கொள்ள அவள் விரும்பவில்லை அவள் அவனது அறையை விட்டு வெளியே வந்தாள். அவனுக்கும் மனது கஷ்டமாக இருந்தது . ஆனால் என்ன செய்ய அவளை பார்த்து இவள் எப்படி சொல்லலாம் என்ற கோபத்தில் பேசிவிட்டான் , ஆனால் அவனுக்கு வியப்பு யாரென்று தெரியாத பெண்ணுக்காக தனக்கு இவ்வளவு கோபம் வருமா ? . அவனுக்கு ஒரு வேலையும் ஓட வில்லை . அவன் நினைப்பு முழுவதும் அவளாகவே இருந்தாள், அவனால் வேலையில் கவனம் செலுத்த முடிய வில்லை . அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று அவனுக்கே தெரியவில்லை . அவன் நேற்று மீட்டிங் போகாததால் அவனுக்கு 10 கோடி ரூபாய் நட்டம் , அவன் 1 மாதமாக அதற்காக வேலை பார்த்துருக்கிறான் ஆனால் அவளால் நட்டம் , அவள் மீது அவனுக்கு கோபம் கூட வரவில்லை அவன் ஒரு வேலையில் இப்படி ஆனால் எவ்ளோ கோபம் படுவான் தெரியுமா அவனது ஆஃபீசியில் வேலை பார்ப்பவர்கள் அவனை பார்த்தால் நடுங்குவார்கள் ஆனால் இவன் அதற்க்கு அவன் எந்த ஒரு கோபமும் யாரிடமும் காமிக்க வில்லை . திடீர் என்று அவன் போன் மணி அடித்தது . அதில் டாக்டர் , ” விக்ரம் சார் , அவங்களுக்கு சுயநினைவு வந்துட்டு அவங்களுக்கு கட்டு பிரிக்க போறோம் நீங்க வாங்க சார் “என்று சொன்னான் . அதற்கு விக்ரம் ,” டாக்டர், நான் ஒரு 5 நிமிடத்தில் வந்துவிடுவேன் “. என்று கூறினான் . அவன் தன் வேலை எல்லாம் விட்டு விட்டு மருத்துவ மனைக்கு சென்றான் . அவன் அங்கு போன பிறகு தான் டாக்டர் அவளது கட்டை எடுக்கிறார் . அதை அவன் பார்க்கிறான் , அவள் மிகவும் அழகாக இருக்கிறாள் , அவள் கண்கள் இருக்கிறதே அது காந்தம் போல் அவனை ஈர்க்கிறது ,அவளது பார்வை ரொம்ப வசீகரமாக இருந்தது , புருவமோ கருப்பு வானவில் போல வளைந்து காண பட்டது , அவள் மூக்கு நேர்த்தியாக இருந்தது அவள் உதடு சிகப்பு ரோஜா போல் இருந்தது மொத்தத்தில் அவள் ஒரு பேரழகு , அவனுக்கு அவளை ரொம்ப பிடித்தது , அவள் கண்களை திறந்தாள் . அவளுக்கு அங்கு இருக்கும் யாரையும் தெரியவில்லை , அவளுக்கே அவள் யாரென்று தெரிய வில்லை அவள் மனமோ சங்கடம் ஆனது. தனக்கு யாருமே இல்லையா என்று அவள் வருந்தினாள் , திடீரென்று ஒரு நர்ஸ் வந்து அவளிடம் அப்படி ஒன்றும் யோசிக்காதிங்க உங்க கணவர் இங்கே நிற்கிறாரே என்றாள். அவள் அவனை பார்த்தாள், இவர் எனது கணவனா ? என்றாள் . அவன் அரண்டு பொய் இருந்தான் , இது என்ன புது கதையாக உள்ளது என்று யோசித்தான் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை , அவள் அவனை பார்த்து , ” நீங்க என்னோட கணவரோ ? ” என்று கேட்டாள் , அவனுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை . அவனுக்கு ஆமாம் என்று சொல்ல தான் ஆசை அனால் உண்மை தெரிந்தால் அவள் முன் அவன் தீயவனாக தெரிவான் என்று அவனுக்கு ஒரு பயம் வேற என்ன செய்வது என்று குழம்பினான் , அவன் தான் அவளது கணவன் இல்லை என்று சொல்ல போனான் அப்போது டாக்டர் அவனை அழைத்தார் , பதில் ஒன்றும் கூறாமல் அவன் அவரை பார்க்க சென்றான் . அவர் அவனிடம் ,” விக்ரம் , அவங்களுக்கு பழைய நியாபகங்கள் எல்லாமே மறந்துவிட்டது அவங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றார் . அவருக்கு பழசு நியாபகம் வரலாம் வராமலும் இருக்கலாம் , அவங்க இப்போது உங்கள கணவர் என்று நினைக்கிறாங்க அது அப்படியே இருக்கட்டும் , உண்மை தெரியும் போது தெரியட்டும் அது வரை அவள் உங்க மனைவியாகவே இருக்கட்டும் , சார் இது உங்களுக்கு விருப்பமா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் அவங்க உடல் இருக்கும் நிலைமையில் இதுதான் சரி . உங்களால் அவங்களை மனைவி யாக ஏற்று கொள்ள முடியுமா என்று தெரியவில்லை ஆனால் ஒருவர் நியாபக மறதியில் பாதிக்க பட்டிருக்கும் போது அவர்களுக்கு முதல் அறிமுகம் ஆகும் உறவு நன்றாக நியாபகம் இருக்கும் , இப்போ அந்த பெண்ணோட நிலை என்னவென்றால் அவளது பெயர் கூட அவளுக்கு தெரியாது , பிறந்த குழந்தை மாதிரி , அவள் மனதில் நீங்க கணவராக இருக்கீங்க இப்போ இல்லை என்று சொன்னால் அவள் என்ன அவள் திரும்பியும் அவள் சுயநினைவு இழக்கலாம் , இது உங்களுக்கு கஷ்டம் தான் , உங்க செல்வாக்குக்கு எத்தனை பேர் உங்களை மணக்க விரும்புவார்கள் ஆனால் நீங்க இவங்களை உங்க மனைவியாக ஏற்பது கடினம் தான் , ஆனால் அவங்களுக்கு ஆகா , அவங்களுக்கு எப்போ பழைய நியாபகம் வருதோ அப்போது நீங்க உண்மையை சொல்லிருங்க அதன் பின் நீங்க பிரிஞ்சு உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம் ” என்றார் . விக்ரம் வேறு வலி இல்லாமல் ஒப்பு கொண்டான் .