அதுஒருபெரியநாய்டைகர் வேகமாக ஓடி வந்தது வந்த வேகத்தில் தன் முன்னங்கால்களை தூக்கி நின்றது . கிரி மிகவும் பயந்துவிட்டான் டைகரின் குறைப்பில் பயந்தவன் இனி இருந்தால் மிகவும் ஆபத்து என்று “சார் நான் கிளம்புறேன்” என்று கூறி சென்றுவிட்டான்.
கிரி சென்றவுடன் “வெளிய வா” என்று அழைத்தான் அப்பொழுது அந்த குட்டி வீட்டிலிருந்துஓர் அழகான பெண் இவ்வளவு நேரம் நம் டைகர் ஓடு அந்த வீட்டை பகிர்ந்து கொண்டிருந்தவள்வந்தாள்.
உடனே சாகரன் “அவன்போயாச்சு, நீ இங்கிருந்து கிளம்பலாம் “என்று கூறி தன் வீட்டிற்கு சென்று விட்டான் பெண் அவள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தாள்.
அவள் பக்கத்தில் டைகர் இவளை கடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே முறைத்தது. வீட்டின் உள்ளே இருந்து சாகரன் “டைகர்” என்று அழைத்ததும் பாய்ந்து ஓடி சென்று விட்டது. சாகரன் சமைத்த உணவை தனக்கும் டைகருக்கும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அங்கே வந்த அவள் “சார்” என்று அழைத்தாள். உடனே சாகரன் நீ இன்னும் போக வில்லையா அதற்கு அவள்” சார் நைட் நேரத்தில் நான் எங்கே செல்வது இன்னைக்கு ஒருநாள் இங்கே தங்கி இருக்கேன் சார் ,ப்ளீஸ்” என்று என்று கேட்டாள்.