அமுதங்களால் நிறைந்தேன்…
19
அதிகாலை முகூர்த்தம்… இரண்டு மணிக்கே வீடு விழித்துக் கொண்டது… ஒவ்வொருவராக கிளம்பினர்.. ஆர்பாட்டமானது வீடு.. நேற்று வரை இருந்த சங்கடம் எல்லாம் நேற்றே தீர்ந்தது போல.. எல்லோர் முகமும் பளிச்சென இருந்தது.
காமாட்சி தன் மகளை விரட்டிக் கொண்டிருந்தார் “போடி அவனை பாரு கிளம்பிட்டானா பாரு” என சொல்லிக் கொண்டிருந்தார்.
காவ்யா ம்மா… எனக்கே நேரம் பத்தாது… இதில் நான் எங்க மேல போறது.. அவனுக்குதானே கல்யாணம் அவனே வரட்டும்…” என்றாள் சற்று கோவமாக…
லிங்காக்கு, நேற்று இரவு நல்ல உறக்கம்… நிம்மதியான மனநிலை.. தான், ஏதும் இடறிவிடவில்லை என்ற எண்ணமே அவனை நிம்மதியாக உறங்க வைத்து.
தெளிவான மனம் அனைத்தையும் தெளிவாக பார்க்கும் தானே… எனவே லிங்கா சீக்கிரம் எழுந்ததும்… ஒரு படபடப்பு.. வீடு சந்தோஷத்தில்.. இருக்க.. கீழே பெண்களின் சத்தம்.. ‘அம்முக்கு பட்டு… பாவாடைய போட்டியா… காவ்யா.. இத கொஞ்சம் போட்டு விடேன்… சீக்கிரம், மணியாச்சு…’ என அண்ணி, அம்மா.. தங்கையின் சத்தம்.. இனிமையாய் காதில் இறங்கியது.. ஒரு பூவின் வாசமாக.. மெல்லிசையாக அப்படியே அவனுள்…
மெல்லிய கல்யாண வாசம் வீச.. சக்தியின் நினைவு வந்தது… ஏதோ ஆண்டாண்டு காலமாக யோகா செய்து எழுந்தவன் போல முகமும்.. மனம்… ஒளிர்ந்தது அவளை நினைக்கையில்…
அன்று அவளின் கை பிடிக்கையில் உணர்ந்த அந்த நேசம், அவனுக்கு இதமாக இருந்தது… ‘இப்போது.. நான், எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல்.. அவளை பார்க்கலாம்… அந்த முகம் எப்படி வெட்கப்படுமென ரசிக்கலாம்… எல்லா ரைட்ஸுசம் உனக்கு இருக்கு டா லிங்கா… யூ ஆர்… பெர்பெக்ட்…. சக்திப்ரியா… ம்…. சக்தி…. ‘ என தன் தாடையை தடவிய படியே கண்ணாடி முன் நின்றான் புது மாப்பிள்ளை.
மனம் எப்போதும் துக்கத்தை ஏற்க… காரணம் தேடும்… நாட்கள் ஆகும். ஆனால் சந்தோஷத்தை ஏற்க.. காரணங்கள் தேவையில்லை போல… லிங்காக்கு பாரம் குறைந்ததும்.. அந்த சந்தோஷத்தை உள்வாங்கும் பாங்கு வந்ததோ… இல்லை எப்போதும் போல… எல்லாவற்றையும் தனக்கு சாதகமாக எண்ணும் பாங்கு வந்ததோ… லிங்கா… ஃபீல் ப்ரீயாக ஆகினான்.. யாருமில்லை அவனின் சிந்தனையில்… மனதில்.. என எங்கும் யாருமில்லை.
[the_ad id=”6605″]
இயல்பாக லிங்கா.. ‘சக்தி கொடு..’ என்ற சாமி பாட்டை… ஏதோ காதல் பாட்டு போல சீட்டி அடித்த படி.. குளிக்க செல்ல…
காவ்யா இப்போதுதான் மேலே வந்தாள்.. தன் அண்ணனை பார்க்க… அவன் இப்போதுதான் எழுந்தான்.. கண்ணாடி முன் நின்று அழகு பார்க்க… என எல்லாவற்றையும் பார்த்த… காவ்யா “டேய் அண்ணா, என்ன டா… படுத்தற” என்றாள்.
லிங்கா அங்கிருந்தே “போடி போடி.. வரேன்..” என்றான்.
ம்… அதை அப்படியே வந்து காவ்யா கீழே சொல்ல….
லதா சிரித்தே விட்டாள், தன் கணவனை கிண்டலாக பார்த்து. இளா தன் மனைவியை, பார்வையால் அடக்கியவன்… என்னமோ செய் என்பதாக ஏதும் சொல்லாமல் வெளியே சென்றான் காரெடுக்க.
லதா, தன் மாமனாரின் முகம் பார்க்க… அது அப்படியே தீ ஜ்வாலையின் நிறம் கொண்டது… அவருக்கு மகன் பற்றி எல்லாம் தெரிந்துவிட்டாலும்.. அவனுக்கு, அந்த பெண்ணை பற்றி ஏதும் தெரியவில்லையே என்ற கவலை.. எனவே கோவம். “இவன திருத்தவே முடியாது..” என வாய்விட்டே புலம்பினார்.
லதாக்கு லிங்காவை தெரியும்… ஏதாவது செய்து வைப்பான்.. நிச்சயம் தொடங்கி.. நேற்று வரை ஏதும் சரியில்லையே, எனவே.. லதா சத்தமாக “ஹா… லிங்கா நீங்க வாங்க நாங்க வெயிட் பண்றோம்…” என இங்கிருந்தே சத்தமாக சொன்னாள்.
மீண்டும் தன் மாமாவை பார்த்து “அத்த, மாமா.. நீங்க கிளம்புங்க.. காவ்யா தீபக்க.. கூட்டி போ.. மணியாச்சு… சக்தி கூட இரு..” என சொல்லி மற்ற எல்லோரையும் கிளப்பினாள்.
லிங்காவை அடுத்த அரைமணி நேரத்தில்.. இளா தம்பதி… அம்முவுடன் கோவிலில் சேர்ப்பித்தது.
அளவான அழைப்பே.. விடியற் காலை என்பதால் சொந்த பந்தத்திற்கு மட்டும் அழைப்பு. இதிலும் மூர்த்தி சொந்தம்தான் நிறைய. அதுவும் எப்படி பார்த்தாலும் முன்னூறு நபர்கள் வந்திருந்தனர்.. தாமுக்கும் சரஸ்வதிக்கும் அப்படி ஒரு சந்தோஷம்.
ம்… யாரையும் விட்டு தராமல்.. நின்றது மூர்த்தியின் சொந்தம். ஜெஜெவென கூட்டம்… எங்கும் மக்கள் சத்தம்.. லிங்காவை சுற்றி.. இளம் படை. மூர்த்திக்கு வரவேற்று முடியவில்லை.
இதைதானே எதிர்பார்த்தார் தாமு. அந்த மரியாதை.. கௌரவம்.. அதை தன் பெண்ணுக்கு கொடுக்க போகிறோம் என்று தான் அந்த சந்தோஷம் அவர்களுக்கு.
நேரம் சென்றது… சம்பிரதாயங்கள் முடித்து.. மாங்கல்ய தாரணம்… கையில் திருமாங்கல்யத்துடன் லிங்கா நிற்கிறான்.. மனமெல்லாம் ‘இவளுக்கு நான் சரியானவனாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் மட்டுமே.. வேறு, எல்லாம்.. எல்லாம்.. பின்னுக்கு போனது.. சக்தி என்பது மட்டுமே நின்றது.
சக்தியின் முகத்தை அப்போதுதான் பார்த்தான்.. கொஞ்சம்.. தயக்கமாகவே லிங்கா பார்க்க… அதில் சலனமே இல்லை… நிர்மலமாக இருந்தது. அதுவே, அவனுக்கு போதுமானதாக இருந்தது.. ப்ரோகிதர் “ஸ்ர்வ மங்கள மாங்கல்யே…” என மந்திரம் ஆரம்பிக்க… சக்தியை தன்னவளாக ஏற்றுக் கொண்டான் லிங்கேஷ்வர்.
பின், சாமி தரிசனம் செய்து.. ப்ரஹாரம் வலம் வந்து… பெரியவர்கள் ஆசீர்வாதம் வாங்கி… என எல்லோர் சொன்னதையும் செய்தனர் தம்பதி. அதுவரை.. லிங்காவின் இயல்பாய் சக்தியின் கையை பற்றி இருந்தான் லிங்கா. அவ்வப்போது ஆசீர்வாதம் வாங்கும் போது விட்டாலும்.. மீண்டும் நினைவாக பற்றிக் கொண்டான்.
சக்திக்கு அதெல்லாம் பெரிதாக தெரியவில்லை.. அவன் கைகளை பற்றும் போது சின்ன நடுக்கம் வரும் அவளை அறியாமலே.. நிச்சயத்தில், ஆசையாக நின்றவள் இன்று கடமையாக நின்றாள். அவனின் பிடி அன்று போல் இல்லாமல் இன்று.. சற்று இறுக்கமாகவே இருந்தது அதை அவள் உணர்ந்தாலும்.. தன்னை பாதிக்கவில்லை என நின்றாள்.
லிங்காக்கு அவளின் தளர்வு சற்று குழப்பத்தை கொடுத்தது… ‘அன்னிக்கு முன்னாடி முன்னாடி நின்னா.. இன்னிக்கு பக்கத்தில் வந்தாலும்.. கண்டுக்கல’ என தோன்றியது.. அதெல்லாம் அந்த ஷன நேரம் தான், அதன் பிறகு.. நேரமில்லை.
பெண் வீடு.. மாப்பிள்ளை வீடு சென்றனர்.. அது முடித்து, காலை உணவு.. அதன் பிறகுதான் சற்று ஒய்வு…
சக்தியின் வீட்டில் இருந்தனர் தம்பதி.. லிங்காவை சுற்றி எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். லிங்கா… சாதாரண வேட்டி.. டி-ஷர்ட் அணிந்து அமர்ந்திருந்தான். சக்தியின் வீட்டு சொந்தங்கள் ஒவ்வொருவராக அறிமுகமாகி பேசிக் கொண்டிருந்தனர். சக்தி தனதறைக்கு சென்றுவிட்டாள்.
சக்தியிடம் சொல்லிக் கொண்டு லிங்காவின் வீடு கிளம்பியது.
காமாட்சி… தன் புது மருமகளிடம்.. “சக்தி, ரெடியாகி அங்க வந்திடுங்க… அங்கிருந்து மண்டபம் கிளம்பலாம்.. ” என சொல்லி கிளம்பினார்.
சொந்தங்களுக்கு எல்லாம்.. மாலை வரவேற்பு நடக்க உள்ள, மண்டபத்தில்தான் காலை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். எனவே மதியத்துக்கு, அங்கேதான். எனவே பெண் மாப்பிளையை, சக்தி வீட்டில், விட்டு அங்கே சென்றனர் எல்லோரும்.
சக்தி உடன் ஃப்ரெண்ட்ஸ் இருந்தனர்.. கூடவே சரஸ்வதியின் உறவுகள் இருந்தனர். சாரங்கன், மாப்பிள்ளைக்கு தேவையானவற்றை செய்தே… மண்டபம் சென்றார்.
ஆனால், லிங்காக்கு அதன் பிறகுதான்.. தேவையே தொடங்கியது. முதலில் போன் சார்ஜர் தேவையாக இருந்தது.. அடுத்து ஏதாவது குடித்தால் பரவாயில்லையாக இருக்கும் போல் இருந்தது.. அங்கிருந்த உறவுகளிடம் “சக்தி, எங்க அக்கா…” என்றான் கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல்.
அவர் ஏதும் நினைக்காமல் “இதோ வர சொல்றேன்..” என சக்தியை அழைத்தார்.
சக்தி வர ‘மாப்பிள்ளை.. உன்னை கூப்பிட்டார்..’ என லிங்காவிடம் அனுப்ப… சக்தி, லிங்கா அருகில் வரவும்.. அருகில் பேசிக் கொண்டிருந்த பெரியவர்.. இங்கீதம் தெரிந்து எழுந்து சென்றார்.
[the_ad id=”6605″]
ஹாலில் அமர்ந்திருந்த தன் கணவனிடம் வந்தாள்… அவளின் கண்ணாடி வளையல் சத்தமும்.. கொலுசு சத்தமும்… அவனை, யாரோ ஒரு தேவதை நெருங்குவதை போல உணர்ந்தான். முதல் முறை சின்ன ஆசையாக திரும்பி பார்த்தான்…
ஆனால், அங்கே அப்படி ஒன்றும் இல்லை போல… அதே உணர்வுகளை துடைத்த முகமாக வந்தாள்.. சக்தி.
உடை மாற்றியிருந்தாள்.. அந்த கல்யாண பட்டு மாற்றி.. மெல்லிய ஜரியிட்ட அடர் பிங்க் நிற பட்டு கட்டியிருந்தாள். பெரிதாக ஒப்பனையில்லை.. ஆனால், முகம் லேசான பிங்க் நிறத்தில் இருந்தது, கூடவே அவளுக்கு எப்போதும் வரும் அந்த பிம்புள்… என அழகாகவே இருந்தாள்… சக்தி.
லிங்கா அவளை பார்க்கிறான்… சக்தி எதிர்பார்த்த பார்வை பார்க்கிறான்.. ம்.. ஆராய்கிறான்…. ‘கொஞ்சம் குட்டியா இருக்காளோ… ப்பா… இன்னும் மேக்கப்பா… இல்ல, கோவமா.. ம்…’ என அவளின் அந்த பிங்க் நிறத்திற்கு காரணம் தேடுகிறான்.. இயல்பாய்.
சக்தி “என்ன…” என்றாள் திடமான குரலில்.
லிங்காக்கு அவளின் திடம் பிடித்தாலும்… அந்த வெட்கம்… தயக்கம்.. என கற்பனையில் இருந்தவனுக்கு.. அதுவும் காலையிலிருந்து கற்பனையில் இருந்தவனுக்கு.. சக்தி ‘என்ன’ என்ற வார்த்தையால் மண்டையில் ஓங்கி அடித்தாள். லிங்காக்கு புரிந்தது… சக்தி ஈஸி இல்லை என.
சாந்தமான குரலில் “என் போனுக்கு… சார்ஜர் வேணும்…” என தடுமாறினான். அவளின் அந்த உறுதி தடுமாற வைத்தது.
சக்தி “ஏன்… அந்த அத்தைகிட்ட சொன்னாலே கொடுத்திருப்பாங்க..” என சலித்தபடி சொல்லியவள்.. அதை எடுக்க சென்றாள்.
எடுத்து வந்து அங்கிருந்த டீபாய் மேல் வைத்தாள்… வைத்த விதத்திலேயே தெரிந்தது அவளின் நிலை. லிங்கா “தேங்க்ஸ்” என்றவன் எடுத்துக் கொண்டு தனக்கெனக் கொடுத்திருந்த அறைக்கு சென்றான்.
தன் தவறு புரிந்தது… ‘கல்யாணத்தன்று முகத்தை பார்க்குற என்கிட்ட.. இவ்வளோதான் பேச முடியும்… அவளால்… மாத்திடலாம்… மாத்தறேன்…’ என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான்.
அதன் பிறகு வெளியே வரவில்லை அவன்.. நடுவில் ஜூஸ் கொடுத்தனர்.. யாரோ உறவில் ஒருவர் வந்து கொடுத்தார்.. அதுவரை, நல்ல உறக்கம் லிங்காக்கு.
மதியம் மண்டபத்தில் உண்ண செல்ல வேண்டும் என்றனர்..
சரியான நேரத்திற்கு லிங்கா கிளம்பி நின்றான்.. டிரைவர் வண்டியிடம் நிற்க. லிங்கா, கை நீட்டி சாவியை வாங்கிக் கொண்டான், அவளுடன் தனியே செல்லலாம் என.
அதுவும் நடந்தது… மற்ற உறவினர்கள் எல்லோரும் வேறு காரில்தான் வந்தனர்… மாமனார் அழகான தன் பெரிய… வெளிநாட்டு காரை விட்டு சென்றிருந்தார்… மணமக்களுக்காக. லிங்கா, அதனை லாவகமாக எடுத்தான்.. சக்தி அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
லிங்காக்கு… அந்த நொடி.. உண்மையாக இருந்தது.. ‘வாழ்வில் ஆயிரம் நபர்கள் வரலாம்.. ஆனால், என்னை.. ஏதோ ஒரு வகையில் நம்பி என்னருகில் அமர்ந்திருப்பவள் இவள்…’ என்ற ஒன்று இப்போது அவனை அறியாமல் தோன்றியது.. அதை தொடர்ந்து.. பழைய குப்பைகள்… ஸ்கூல், காலேஜ், ஜெர்மன்… கடைசியாக அந்த வடநாட்டு வஞ்சி… வரை.. எல்லாம் பாஸிங்தான்.. லிங்கா… இட்ஸ் ட்ரூ…’ என எங்கிருந்தோ குரல் கேட்டது.. அதில் அவனின் வண்டி… வேகமெடுத்தது.
கூடவே, அவளிடம் எப்படி பேசுவது.. என தெரியவில்லை.. ‘உரிமையாய் கூப்பிட்டால்.. திரும்பியும் பார்க்கவில்லை.. கொஞ்சம் கஷ்ட்டம் தான் போல… ஊட்டி வழி சாலையாய்.. அத்தனை ஹேர் பின் பென்ட்ஸ் டா லிங்கா… எல்லாம் சொல்லணும்… அவளின் கண் பார்த்து சொல்லணும்… லிங்கா.. சின்ன பெண்… டா, லிங்கா…’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டான் அவன்.
காரிலிருந்த ஏர் ப்ரெஷனர்… அவனை நிகழுலகுக்கு அழைத்து வர… அதனை ஆழ்ந்து சுவாசித்தவன் “ம்…. சக்திப்ரியா லிங்கேஸ்வர்…. எப்படி பீல் பண்றீங்க…” என்றான்.
சக்திக்கு அந்த அழைப்பு, குரல்… எல்லாம், அவளை திடுக்கிட வைத்து… “அஹ்… எ.. என்ன..” என்றாள்.
“ஹேய்… பதறாத… இல்ல… இப்போ நீ, மிஸஸ் லிங்கேஷ்வர்… அதான் பிடிச்சிருக்கா கேட்டேன்” என்றான்..
சக்திக்கு என்ன பதில் சொல்லுவது என தெரியவில்லை… இவன் எந்த அர்த்தத்தில் கேட்கிறான்.. தெரியலையே… எனவே சக்தி “தெரியலை…” என்றாள் தனது நிச்சய மோதிரத்தை மற்றொரு விரலால் திருப்பி விளையாடிய படியே..
லிங்கா “ம்… சரி நேரவே கேட்கிறேன்… என்னை பிடிக்குதா…” என்றான் வார்த்தை வேண்டுமானால் உடனே வந்திருக்கலாம்.. ஆனால், யோசித்துதான் கேட்கிறான்.
சக்தி அமைதியாக இருந்தாள்.. பதில் சொல்லவில்லை. அதற்குள் அவர்கள் இறங்குமிடம் வந்தது.. அவள் அவசரமாக இறங்க நினைக்க… கார் அன்லாக்கிலேயே இருக்க… அப்படியே இருந்தாள்…
லிங்கா அவளை ஆர்வமாக குறு குறுவென பார்த்திருந்தான்.. இவள் ஏதாவது சொல்வாள்.. கேட்பாள்… என ‘ம்கூம்…’ ஏதும் சொல்லவில்லை…
லிங்கா பொறுத்து பார்த்து “எனக்கு எப்போ பதில் சொல்லுவ… ம்…” என்றான்.
அதற்கும் அமைதிதான் சக்தி.
லிங்கா “என்ன விட பயங்கற அழுத்தமா இருக்க சக்தி…” என்றான்.
சக்தி இவன் புறம் திரும்பாமல் அமைதியாக இருந்தாள்..
லிங்கா “சக்தி… சக்தி… இவ்வளோ அமைதியா இருக்காத… நான் நிறைய பேசுவேன்… ப்ளீஸ்.. ஸ்பீக் அவுட் சக்தி… சொல்லு… நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…” என்றான் திடீர் காதலனாக.
சக்தி “இதுவரைக்கும் எங்க அப்பா கிட்ட மட்டும்தான் ஸ்பிக் அவுட்… மத்தபடி ஆம் கொயட் தான்… அத்தோட… எங்க அப்பா கிட்டயே பொய் சொன்னவங்க கிட்ட, நான் எப்படி பேசறது…” என்றாள்.
லிங்கா, அவளின் திமிரை ரசித்துக் கொண்டிருந்தான்.. கூடவே குழப்பம் வேறு.. ஆனாலும் அவள், சுவாரசியமாக தெரிந்தாள்… “வாட்… புரியலை…” என்றான். ’உங்க அப்பாகிட்ட நான் என்ன சொன்னேன்.. அதுவும் உன்னை பத்தி, என்ன சொன்னேன்… உனக்கு இன்னும் எங்க ரெண்டு பேரை பற்றியும் தெரியலை.. அம்மணி’ என மனதில் நினைத்துக் கொண்டான்.
சக்தி அவன் அமைதி பார்த்து “லாக் எடுங்க….” என்றாள்.
[the_ad id=”6605″]
அனிச்சையாய் எடுத்தான் “யோசிங்க… என்ன சொன்னீங்கன்னு. நீங்க இதுக்கு பதில் சொல்லுங்க.. அப்போ நீங்க கேட்டதுக்கு நான் பதில் சொல்றேன்…” என்றாள்..
லிங்கா சிரித்தான், கோவம் வரவில்லை.. ஏதோ குழந்தை ஒன்று… “பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துகள்” என புதிர் போடுவது போல் தோன்றியது அவனுக்கு… சிரித்தான்.. இறங்கிய சக்தி, அவனை பார்க்க… கையசைத்து “இங்க வா” என்றான்.
அவளும் அருகில்.. அந்த பக்கம் செல்ல… “அத பத்திதான் உன்கிட்ட பேசணும்… சோ… நான் யோசிச்சா வேஸ்ட்… அத்தோட நான் தான் ஃபர்ஸ்ட் கேள்வி கேட்டேன்.. நீதான் முதலில் பதில் சொல்லணும்… சக்தி. அதனால… நைட் வரைக்கும் டைம் எடுத்துக்கோ… ஆனா, பதில் இந்த மாதிரி… புதிர் போடாம இருக்கனும்” என்றான் அவளின் கண் பார்த்து… ஆழமாக.
சக்தி நகர நினைக்க.. அவள் புடவையை பிடித்துக் கொண்டான்… அவள் அப்படியே நிற்க.. லிங்கா இறங்கி அவளின் கைபிடித்துக் கொண்டே நடந்தான். சக்தி “என்ன இது… இப்போதான் கல்யாணம் ஆச்சின்னு எல்லோருக்கும் தெரியும்.. விடுங்க… விடுங்க…” என்றாள்.
லிங்கா “சரி… மாமா சொல்லு விடறேன்…” என்றான் விளையாட்டாய்… அவளின் கோவம், தான் கேட்டதுக்கு அவள் பதில் பேசிய விதம் எல்லாம் அவனை உசிப்பி விட்டிருந்தது… ஏதோ கொஞ்சம் விளையாட சொல்லியது போல…
சக்தி “இல்ல.. நீங்க இந்த கையையும் பிடிங்க…” என தன் இன்னொரு கையையும் நீட்டினாள்.
லிங்காவின் குசும்பு இவளுக்கு தெரியாதே “அது நைட்.. பேபி..” என்றான்.
சக்தி “விடுங்க லிங்கா” என்றாள்.
லிங்கா “அடி.. அதுக்குள்ள மாமன பேர் சொல்ற…” என்றான். சக்திக்கு இவனை புரியவில்லை.. கண்ணில் நீர் வந்தது.. அவனின் விளையாட்டு முகம் தெரியவில்லை… அவனின் உதாசின முகம் மட்டுமே மனதில் நிற்க.. இன்று காரணமாக தன்னிடம் இழைகிறான்.. என இயல்பான பெண்மை விழித்துக் கொள்ள.. சக்தி, குரல் கரகரக்க “விடுங்க” என்றாள்.
லிங்கா “சக்தி…” என ஒரு சத்தம் மட்டும் போட்டான்.. கைகளை விடவில்லை, அதற்குள் சாரங்கன்… தாமுவும்… வரவேற்பாய் நின்றனர்.. இவர்களை பார்த்து. எனவே, சக்தி அமைதியாகிவிட்டாள்.
சக்தி கண்கள் கலங்க… உணவு உண்டாள்.