தாழம்பூ வாசம் நீ…..
3
ம்.. லிங்கம் இறங்கி வரும் வழியை காணம்.. எனவே, எல்லோரும் படுக்க ஆயுத்தமாகினர். காவ்யா, முதலில் தனதறைக்கு சென்றாள். சத்தயமூர்த்தியும் அவ்வாறே கிளம்பினார்.
காமாக்ஷி மட்டும், ஹால் சோபாவில் அமர்ந்தபடியே.. மேலே.. மேலே.. பார்த்த படியே.. தன் பேத்தியின் முதுகை, தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.. லிங்கம் வருகிறானா என அவ்வபோது பார்வை மட்டும் மேலே சென்றது.
இளங்கோ.. அப்போதே.. படுக்க சென்றிருப்பான்.. காமாட்சிதான் “அம்மு.. தூக்க கலக்கத்தில் இருக்கா.. தூக்கினா முழிச்சிப்பா.. இரு தூங்கட்டும்..” என்றார். எனவே, இளங்கோ, அங்கேயே அமர்ந்து போன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால், லிங்கத்திற்கு.. நினைவெல்லாம் அவனின் ஸ்வப்னாதான். பாவம், இந்த மனதை மட்டும் அதட்டி.. மிரட்டி. அமைதிபடுத்த வழி தெரிந்திருந்தால்.. இந்நேரம் லிங்கம், ஞானியாகி இருப்பான்.. தெரியவில்லை, அதனால், இந்தியாவின் எழுதாத, அதிகார பூர்வ சட்டப்படி குடிக்க தொடங்கினான்.
அங்கேயே, தனது அறையில் இருக்கும் மினி பிரிட்ஜ்ஜில், இருக்கும் கூலிங் பீயர்ருடன் தொடங்கியது அவனின்.. துக்கம் கொண்டாடும் விழா.
அங்கே ஹாலில் காமாட்சி, இளையவன் வருவான்.. என மஞ்சள் பொடி போட்ட பாலை வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்க… இறங்கவில்லை லிங்கா.
இளங்கோ, தூங்கிவிட்ட தன் மகளை தூக்கிக் கொண்டே மேலே ஏறினான். காமாட்சி.. “டேய்.. இந்த மஞ்சள் பாலை, ஈஸ்வரன் கிட்ட கொடுத்திடுடா…” என்றார்.
மகளை ஒரு கையிலும், பாலை ஒரு கையிலும் தாங்கி… சர்கஸ்காரனாக மாறி, மேலே ஏறினான் இளா… முப்பத்தி மூன்று வயது. பொறுப்பான தலை மகன்.
அடுத்து.. அடுத்து.. என ஓடும்… சிறந்த தொழில் முனைவோன். குடும்பம், அம்மா, பெண்டாட்டி, தொழில்.. அதை விட ‘அப்பா’ என அனைத்தையும் சமாளிக்கும் பொறுப்பானவன்.
மேலே ஏறினான்.. தன் மகளுடன்.. லிங்காவின், அறையின் கதவருகே நின்று.. “லிங்கா” என்றழைக்க… “ம்…” என கலக்கமாக குரல் வந்தது..
அண்ணன் “டே.. கதவ திற” என்றார்.
ஐந்து நிமிடம் சென்றுதான் வந்து கதவை திறந்தான். ஏதோ போல் இருந்தான். பாலை தன் தம்பியிடம் கொடுத்தான்.. “இரு வரேன்” என்றவன். தன்னறைக்கு சென்று.. மகளை அவளின் அன்னை… தன் மனைவி லலிதாவிடம் விட்டான்.
அதில் விழித்துக் கொண்டாள்.. லலிதா. மகளை அனைத்து படுத்தபடியே.. தன் கணவர் வெளியே செல்லுவதை பார்த்து “எங்க.. போறீங்க” என்றாள்.
“வரேன் டி.. நீ தூங்கு…” என சொல்லி வெளியே சென்றான்.. இளா.
மீண்டும் தன் தம்பியின் அறையின் கதவை தட்ட, லிங்கம் “எஸ்.. வா ண்ணா” என்றான்.
உள்ளே செல்ல.. குப்பென.. ஏசியில் பீர் வாசனை தூக்கியது. இளங்கோவுக்கு, இவர்கள் விஷயம் யூகிக்க கூடியதாகத்தான் இருந்தது. முன்பே. ‘சரி பார்ப்போம்..’ என இருந்தான்.
இன்று, ஸ்வப்னாவின் பார்ட்டி என தெரியும், அனுப்.. அழைத்து சொல்லியிருந்தார். அத்தோடு, ஸ்வப்னாவின் திருமணம் குறித்தும் சொல்லியிருந்தார்.
எனவே, இளங்கோக்கு, தன் தம்பியை நினைத்து கவலை கொண்டான்தான். ஆனால், இப்படி வீட்டிலேயே தன் நிலையிழந்து குடிப்பான் என நினைக்கவில்லை.
இளா “டேய்… என்ன டா இது… குழந்தைங்க இருக்கிற வீட்டில் இப்படிதான் பண்ணுவியா.. என்ன டா ஆச்சு.. அவர் மேல வண்டிய ஏத்திட்டு வந்து, நீ இங்க குடிச்சிக்கிட்டு இருக்க.. அப்பா, பார்த்தா என்ன ஆகும்..” என்றான் அதட்டலான குரலில்..
கேட்க கூடாதுதான்.. தம்பியிடம்.. இந்த விஷயத்தை. ஆனால், எல்லாம் மாறிவிட்டது.. படித்து வந்தவன்.. கொஞ்சம் விளையாட்டுதனமானவன்.. மற்றபடி நல்லவன்தான்… எனவே, கேட்க கூடாது எனதான் நினைத்தான் அண்ணன். ஆனாலும், கதவை திறந்ததும் வந்த ஸ்மெல்லில் தன்னை மறந்து கேட்டுவிட்டான்.
லிங்காக்கு அந்த தயக்கம் எதுவும் இல்லை போல.. “ண்ணா.. ஏமாத்திட்டா.. என் ட்ரீமி.. என்னை ஏமாத்திட்டா… பாரு, என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டா. உனக்கு தெரியுமில்ல, நான்.. அவ கூட எப்படி பழகுனேன்னு.. இப்போ பாரு.. என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டா..” என கீழே படுத்தப் படியே புலம்பத் தொடங்கினான்.
இளாக்கு ஐயோ என்றானது.. “டேய்.. சரி சரி… பார்த்துக்கலாம்..” என ஏதோ சொல்ல வர..
மீண்டும் லிங்கா “ண்ணா.. நம் ப்ரிண்ட்ஸ் எல்லோருக்கும் தெரியும், நான் அவளை காதலிக்கிறேன்னு.. அப்புறம் யாரு ண்ணா, அவளை கட்டிக்கிறது.. “ என கேள்வி கேட்டு நிறுத்தினான்.
“எனக்கென்ன டா தெரியும்.. உனக்கு விருப்பம்ன்னு எனக்கே இப்போதான் தெரியும்” என்றான்.
“ம்கூம்… ண்ணா.. பொய் சொல்லாத… அன்னிக்கு கூட சொன்னியே.. அவ மாடலான பொண்ணு.. தள்ளி இருன்னு.. நீ, சொன்னியே..” என்றான் லேசாக சிரித்த படியே.
“தெரியுதுல்ல.. சொன்னேன்னு.. அப்புறம் ஏன் இப்படி புலம்பற.. நாளைக்கு ஒழுங்கா என் கூட கம்பெனி வர… சும்மா இருக்கறதாலதானே.. சுத்தற.. பொண்ணுங்க பின்னாடி… வந்து வேலைய பாரு..” என சொல்ல சொல்ல..
மீண்டும் லிங்கா “ண்ணா.. ஒரே பொண்ணு பின்னாடிதான் சுத்தினேன்… அவ நல்லவ ண்ணா.. அவங்க வீட்டில்தான் ஏதோ சொல்லி இருப்பாங்க.. நாம பொண்ணு கேட்கலாம் ண்ணா…” என்றான் தெளிவாக.
“டேய்… எனக்கு தெரிஞ்சது, அவ அண்ணனுக்கு தெரியாமையா இருக்கும்.. அவன், அமைதியா இருக்கான்.. இத அப்படியே விட்டுடு.. நம்ம வீட்டில் இதெல்லாம் ஒத்து வராது டா…” என்றான் பொறுமையான குரலில் அண்ணன்.
இப்போது எழுந்தான் லிங்கா.. மீண்டும் பிரிட்ஜ் உள்ளிருந்து.. இன்னொரு பாட்டில் எடுத்தான்.. அதை வெடுக்கென ஒப்பன் செய்த படியே.. “இப்போ நீ எனக்காக அவளை, பொண்ணு கேட்க மாட்டியா..” என்றான் கோவமாக.
“மாட்டேன்.. அவளுக்கு சம்மதம்ன்னா.. பேசியிருக்கலாம்… அவளுக்கு உன்னை பிடிக்கல… அப்போ விட்டுடு… அவ்வளோதான்.. இனி எதுவும் நாம செய்ய கூடாது, அசிங்கமாகிடும்” என்றான் சற்று கோவமாக இளா..
லிங்கம் “முடியாது.. எனக்கு அவ வேண்டும்.. அவ தான் வேணும்..” என்றான் சத்தமாக.. கலைந்த தலையும், சிவந்த கண்களுமாக.
“ச்சி… வெட்கமா இல்ல.. இப்படி சொல்ல.. பிடிக்கலைன்னு சொல்ற பொண்ணு கிட்ட போய் நிக்கற..” என்றான், இளா இன்னும் கோவமாக.
“ஆமாம்.. அது எப்படி என்னை பிடிக்க்லைன்னு சொல்லுவா” என்றான் ஆவேசமாக…
“இங்க படிச்சப்ப.. கூட நல்லா இருந்த, லிங்கா. உன்னை நாலு வருஷம்.. விஷயம் தெரிஞ்சிக்க அனுப்பினேன்.. நாமளாவது.. அடுத்த கட்டத்துக்கு போகலாம்.. எக்ஸ்போர்ட் பண்ணலாம்ன்னு அனுப்பினேன் படிக்க…
ஆனா நீ, அங்கிருந்து.. தோ.. தோ… இப்படி குடிக்கவும், பொண்ணு பின்னாடி சுத்தவும்தான் கத்து வந்திருக்க, அப்பா சொல்றதுதான் உண்மைன்னு நீ நடந்துக்கிற…” என்றான் ஆற்றாமையாக, கோவமாக அண்ணன்.
லிங்காக்கு, இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை “ஆமாம் ண்ணா.. அவ இல்லாமா முடியாது.. என் மேலதான் தப்பு.. அவள, நான் மனசுல நினைச்சிட்டேன்… நான் போய் அவங்க வீட்டில் பேசுவேன்.. நீ வரலைன்னா பரவாயில்லை.. விடமாட்டேன்… என் ட்ரீம்ய…” என சொல்ல..
இளா எரிச்சலாக “ச்ச்ச… லிங்கா இப்படியா.. நீ, நான் எதிர்பார்க்கலை டா… “ என்றான்.
“ஆமாம் ண்ணா.. எனக்கு அவ முக்கியம்” என்றான்.
“டேய், அதுக்காக இப்படியா.. சின்ன பையனா டா நீ.. இப்படி குடிச்சிட்டு புலம்ப… அவ இல்லைன்னா என்ன.. இப்போ.. செத்தா போயிட போற… தூக்கி போட்டு போடா.. அந்த பொண்ண…” என்றான் கோவமாக.
லிங்கம் ஏதும் சொல்லாமல்.. தன் வாயில்.. அந்த புது பீரை சரிக்க தொடங்கினான்.
இளா தொடர்ந்தான்.. “இனி, என் கூட கம்பெனிக்கு வர.. என்னால தனியா பார்க்க முடியலை.. இன்னும் இருபது நாள்தான் இருக்கு.. கனடா.. எக்ஸ்போர்ட் ஆடர் டெலிவெரி கொடுக்க…
இன்னும், அந்த டையிங் யூனிட்டோட அப்ரூவல் வரல.. அதை போய் பார்க்கணும் நானு.. அடுத்த வாரம்.. (Zolpidem) வரை, அங்க சென்னைல இருக்கனும் நானு..
நீதான் இங்க லோட் ஏத்தி விடனும்.. கடைசி நேர வேலை நடந்திக்கிட்டு இருக்கு.. GM இருப்பாரு.. அவர் கூடவே நீ, இருந்து வேலைய பாரு…
நான் நம்ம.. மினிஸ்டர பார்த்து.. அப்ருவல் பத்தி பேசிட்டு.. அங்கேயே இருப்பேன்.. ஒரு வாரத்தில் அந்த அப்ப்ருவேல் வாங்கனும் டா..
அது வரை, இங்க நீதான் பார்க்கனும்.. இன்னிக்கு இத பத்தி உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சிருந்தேன்..
அதுக்குள்ளே.. இப்படி, இழுத்து வைச்சிருக்க.. ட்ரீமியாம்… விட முடியாதாம்..
இங்க பாரு.. விளையாட்டை விடு.. இன்னியோட இந்த குடிய விடு.. ஊரை சுத்தி, அங்க.. இங்க.. புரட்டித்தான் இந்த ஆர்டர் எடுத்து செய்யறேன்.. கோடி.. கணக்குல இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன்… டா..
அவனவன், இந்த gst வந்ததுல.. அமைதியா, இருக்கறது.. மட்டும் பார்த்துட்டு இருக்கான். நான் ரிஸ்க் எடுத்திருக்கேன். அந்த மினிஸ்டரை நம்பி.. உன்னை நம்பி..
நீ என்னடான்னா.. இப்போதான் பொண்ணு.. கண்ணுன்னு.. சொல்லிக்கிட்டு இருக்க..
ஒழுங்கா வேலைய பார்க்கற.. இல்லை… நம்ம சொத்து எதுவும் உனக்கு வராது.. எல்லாம் வட்டிகாரனுக்கு போயிடும்.. புரியுதா..” என அவனை பார்த்தான் இளா.
தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை.. இன்னமும் மிதந்து கொண்டிருந்தான். தன் அண்ணனின் பேச்சுக்கள் எல்லாம், ஏதோ வயது பையனின்.. காலை நேர அலாரமாக.. அவனின் காதை அடைத்தது போல.. ஆப் செய்ய நினைத்தான் லிங்கா.
“ண்ணா… நான், என் வாழ்க்கையை பத்தி பேசறேன்… நீ பணத்தை பத்தி பேசற” என்றான், மீண்டும் தரையில் உருண்டபடி.
“டேய்.. இதுல உன்னோட வாழ்க்கையும் இருக்குடா… நம்ம எல்லோரோட வாழக்கையும் இருக்குடா…” என்றான் இப்போது இறங்கிய குரலில்.
மிதந்து கொண்டிருந்த லிங்காக்கு, தலை வலித்தது ஓயாத அலார சத்தத்தில்.. “ஏன், நீ.. ரிஸ்க் எடுத்துட்டு என்னை சொல்ற.. எனக்கு, என் ட்ரீமிக்கு அப்புறம்தான் எல்லாம்.. உனக்கு குடும்பம், குழந்தை, குட்டி.. அதான் வேலை பார்க்குற.. எனக்கென்ன.. ப்ரீ மேன்.. போ.. போ.. நான், நாளைக்கு பொண்ணு கேட்க போறேன்.. நீ சென்னை போ..
நீ உன் வேலையை பாரு.. நான் என் வேலையை பார்க்கிறேன்” என்றான் தெளிவான உளறலாக.