இங்கு, இளங்கோ.. உறங்கவில்லை.. உணர்வில்லை நிலையில் கம்பெனியிலேயே இருந்து கொண்டான்.. இரவு.
வீட்டிலிருந்து சத்தியமூர்த்தி, போன் செய்து கேட்க “இல்ல ப்பா.. கடைசி நேர வேலை.. காலையில் வந்திடுவேன் ப்பா” என்றான். இது புதிதல்ல.. பழக்கம்தான்.. இளங்கோ வீட்டில். எனவே ஒன்றும் நினைக்கவில்லை.
காலையில்… செந்தில் சார் வந்துதான்.. ‘இளங்கோவை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்..’ அப்போதும் ஒன்றும் சொல்ல முடியாமல்.. முகத்தில் சிந்தனை ரேகை கொண்டுதான் வெளியே வந்தான் இளா.
காலையில் உள்ளே சென்ற தொழிலாளர்கள்.. எதிர் வந்த இளாவை, பார்த்து.. எப்போதையும் விட அதிகாமாக சிரிக்க முயன்றனர். தொழிலாளர்கள் முகமெல்லாம் சந்தோஷத்தின் சாயல்.. இந்த வாரத்தில் போனஸ்.. எப்போதும் சம்பளத்துடன் சேர்த்து தருவர்.. இவர்கள் கம்பெனியில் மட்டும். எனவே, அந்த சிரிப்பு… அது… அத்தனை அழகாக இருக்கும்.. அந்த புன்னகை. ஒரு தயக்கமாக, அதே சமயம்.. உரிமையாக இருக்கும் அவர்களின் முகங்கள். எப்போதும் அதை இளா கவனித்திருக்கிறான்.. ஆனால், இந்த முறை.. அது சற்று பயத்தை தந்தது அவனுக்கு.
லேசான தலையசைப்புடன் வெளியே வந்தான் இளா. காரெடுத்து வீடு நோக்கி வந்தான்.
[the_ad id=”6605″]
முடிந்த அளவு.. விசாரித்து ஆகிற்று… இன்னும் காஞ்சிபுரத்தில்தான் மினிஸ்டர் இருக்கிறார் என தகவல் சொன்னார் செந்தில். அதனாலே கிளம்பி வந்தான் வீட்டிற்கு.
வீடு வந்ததும் பிள்ளைகள் இருவரும் அப்பாவிடம் தாவியது.. லிங்கமும் இல்லை.. இளங்கோவும் வீட்டிற்கு வராததால்.. பிள்ளைகள் இரண்டும் வாடி போயிற்று. வந்தவுடன் பெண்தான்.. “ப்பா.. பா..” என ஆயரம் முறை அழைத்து.. ஏதேதோ.. கதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தாள் மழலையில்.. இப்போதுதான் தவழ ஆரம்பித்திருந்தாள்.. எனவே, குறும்பு ஆதிகமாகியது இப்போது.
தீபக் கேட்கவே வேண்டாம்.. “என்.. ஹோம் வொர்க்.. சரியா சொல்லி தரல காவ்யா… பாப்பா என் நோட்டை கிழிச்சிட்டா” என யூனிபோர்ம் அணிந்த படியே தந்தையிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தான்.
சாதாரண நேரமாக இருந்தால்.. காவியாவிடம் பஞ்சாயத்து சென்றிருக்கும்.. லலிதாவை ஏதாவது கேள்வி கேட்டு.. அதில் சிரித்து… என வீடே சற்று.. நேரம் அல்லோப்பட்டிருக்கும்.
இன்று, தன் மகனின் குற்ற பத்திரிக்கைக்கு, ஏதும் பதில் தராமல்.. ஏதோ சிந்தனையில் இருந்தான் இளா. பார்த்த, பெரியவர்கள் மூவருக்கும் நைட் வேலையில் அசதி என புரிந்தது..
எனவே, லலிதா “வா… தீபக்.. அப்பா.. வேலை முடிச்சி இப்போதான் வந்திருக்காங்க.. அப்புறம் பேசுவாங்க… தூங்கி எழுந்து” என சொல்லி தன் மகனை அங்கிருந்து நகர்த்தி அழைத்து சென்றாள். அதுவும் தன் தந்தையை பார்த்த படியே சென்றது உண்பதற்கு.
காமாட்சி.. “வா, இளா.. சாப்பிட்டு போய் படு..” என்றார்.
ஆனால், இளங்கோவை அமர விடவில்லை.. போன் கால்ஸ் வந்து கொண்டே இருந்தது. மணி எட்டரை.. ‘இப்போதே தொடங்கி விட்டதா ‘ என ஆயாசமாக வந்தது இளாக்கு.
பொறுமையாக பேசிக் கொண்டிருந்தான்.. நேரம்தான் சென்றது.. இன்னும் அமர்ந்த இடம் விட்டு எழவில்லை.. ஆனால், அவனின் பேச்சு எல்லாம், கடன் குறித்ததாகவே இருந்தது.
சத்தியமூர்த்தியின் காதில் இது அவ்வபோது விழ செய்தது.. ஆனால், பெரியதாக எடுக்கவில்லை அவர்.. ‘எத்தனை சொத்துகள்.. எவ்வளவு பெரிய கம்பெனி.. என்ன ஆகி விட போகிறது’ என சற்று அசால்ட்டாக இருந்தார்.
‘பிசினஸ், என்றால் இப்படி.. கடன், வட்டி, நிலுவை, இழுத்தடிப்பு எல்லாம் இருக்கும்தான். அதுவும் இப்போதிய உலகில் இது சர்வ சாதாரணம்.. என் பிள்ளை பிழைத்துக் கொள்ளும்..’ என தன் போல் குளித்து… பூஜை முடித்து.. பேத்தியுடன் விளையாடி.. காலை உணவை முடித்துக் கொண்டு.. ஒரு பழைய சிநேகிதரை சந்திக்க கிளம்பினார்.
அவர் வெளியே கிளம்பினாலே, காலை.. பத்து மணி.. என நினைவில் கொள்ளலாம். அது சத்தியமூர்த்தியின் பழக்கம். இன்றும் கிளம்பிவிட்டார்.
லலிதா.. குழந்தையை குளிக்க வைத்து.. மீண்டும் அவளுக்கு ஏதாவது கொடுக்கலாம் என வந்தால்.. இன்னமும் முன்புற தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தான் கணவன்.
தன் அத்தையிடம் “த்த… சாப்பிட்டாங்களா…” என்றாள்.
“இல்லையே… அதுக்குதான் மாவை அப்படியே வைச்சிருக்கேன்.. இன்னும் வரல.. போனையும் வைக்கல… பேசிக்கிட்டே இருக்கான். மணியாகுது.. சின்னாத்தா வேற வந்திடும்.. வேலைய பார்க்க. இவன, இன்னும் காணோம்” என ஒருபாடு புலம்பி விட்டு, தனக்கொரு காப்பியுடன் ஹாலில் சென்று அமர்ந்தார்.
லலிதா.. குழந்தைக்கு ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தாள் ஹாலுக்கு. இன்னமும்.. இளா வரவில்லை. கிட்ட தட்ட இரண்டு மணி நேரமாக பேசுகிறான்.. இன்னும் தீரவில்லை.
மனைவியை லேசாக பயம் தொற்றியது.. சாதனாவை தன் அத்தையிடம் கொடுத்துவிட்டு, தன் கணவரிடம் சென்றாள்.. ‘சாப்பிடுறீங்களா’ என சைகையில் ஏதோ கேட்டாள்.
இளா வயிற்றை தடவிய படியே.. ‘அப்புறம்’ என செய்கை செய்தான். வந்துவிட்டாள் உள்ளே.. ஆனாலும், மனமெல்லாம் தன்னவனிடமே இருந்தது.
அதன்பிறகு, வேலை அவளை இழுத்துக் கொண்டது.. மதிய உணவை சமைத்தனர், இரு பெண்மணிகளும். பிள்ளை, காவ்யாவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.
[the_ad id=”6605″]
இளா, மேலே சென்றுவிட்டான். நடுவில் ஒரு ஜூஸ் மட்டும் கொடுத்து வந்தாள் மனையாள். உறங்கவெல்லாம் இல்லை.. ஏதோ பேச்சு மட்டும் சென்றது போனில்.
மாமானார் மதியம் ஒரு மணிக்கு வந்தார்.. இளாவும், அப்போதுதான் தாயாராகி வந்தான்.. கீழே. சற்று தெளிவாக இருந்தான் போல.. முகம் அப்படிதான் சொன்னது.. சத்தியமூர்த்தி பார்த்து விட்டு அமைதியாக இருந்து கொண்டார்.
இளாவும்.. தன் மகளிடம் சற்று நேரம் விளையாடிவிட்டு.. அமர்ந்திருந்தான். காமாட்சி “சாப்பிடு டா… மணியாச்சு.. காலையிலையும் சாப்பிடல… வா…” என்றார். ஏதோ பெயருக்கு உண்டு வந்து அமர்ந்தான், போன் பேசியபடியே.
லலிதாவிற்கு அவனின் நிலை.. ஏதோ போல் இருக்க.. அருகில் வந்தாள்.. பக்கத்தில் அமர்ந்து “என்னாச்சுங்க… ஏன், உடம்பு ஏதும் முடியலையா” என்றாள்.
போனை அப்போதுதான் வைத்திருந்தான்.. இளா. தன் நெஞ்சில் கை வைத்து, தேய்த்த படியே.. “ஒண்ணுமில்ல டி.. ஏதோ.. ஒத்துக்கல.. நெஞ்சு எரிச்சலா இருக்கு..” என்றான்.. மனைவியை பார்த்த படியே.
“இருங்க..” என்றவள்.. உள்ளே சென்று மோர் எடுத்து வந்தாள். லலிதா “தூங்கி எழுந்தாலே.. போதும்ங்க, சரியாகிடும்.. நைட் வேலை.. இப்பவும் போன் பேசிக்கிட்டே இருக்கீங்க.. அதான்… தூங்கி எழுந்து, கம்பெனி போங்க” என்றாள்.
“இல்ல ப்பா… வேலை இருக்க டா… நான் வரேன்” என்றவன் கிளம்பிவிட்டான்.
#$#$#$#$#$#$#$#$#$#$#$#
அங்கு, காத்திருப்பு மட்டுமே.. லிங்காவிற்கும்… பொறுமைக்கும்… எட்டா தூரம்தான். ஆனால், அண்ணனின் சங்கடத்தில் எல்லாம் பின்னுக்கு போனது, பொறுமையாக அமர்ந்திருந்தான் இரண்டாவது நாளாக.
மாலை நான்கு மணிக்குதான் தகவல் வந்தது.. ‘மினிஸ்டர்.. கட்சியின் மூத்த உறுப்பினர் இறந்துவிட்டார்… டெல்லியில். எனவே.. இப்போது மாலை ஏழு மணி விமானத்தில் டெல்லி செல்கிறார் அமைச்சர்..’ என தகவல் வர.. யோசிக்க கூட இல்லை.. சம்பத்தும், லிங்காவும் ஏர்போர்ட் சென்றனர்.
ஆனால், அமைச்சரை பிடிக்க முடியவில்லை. அவர் முன்னமே கிளம்பிவிட்டிருந்தார். தகவல் இவர்களுக்கு லேட்டாக வந்தது. இரண்டு நாள் காத்திருக்கும் படி உதவியாளர்.. சொன்னார். ‘நாளை மறுநாள் வந்து விடுவார்’ என்றார்.
லிங்கா.. செந்திலிடம் “நான் அங்கு போகிறேன்.. டெல்லி போய் பார்த்து வருகிறேன்..” என சொல்ல…
அதை கேட்டுக் கொண்டிருந்த அமைச்சரின் உதவியாளர்.. வந்து “இல்ல ங்க.. அங்கையெல்லாம் யாருக்கும் பார்க்க அனுமதி கிடையாதுங்க.. போனாலும் வேஸ்ட்” என்றார் பொறுப்பாய்.
என்ன செய்வது.. எல்லாம் நினைத்த நேரத்தில் நடக்க இதென்ன சினிமாவா… அமைதியாக சென்னையிலேயே இருந்தான் லிங்கா.
இளங்கோக்கு, இந்த இரண்டு நாளும்.. பையரிடமிருந்து போன்.. இப்போது அனுப்பினால்தான், அவர்களின் விற்பனைக்கு சரியாக இருக்கும்.. என்பது அவர்களின் விண்ணப்பம்.
முன்பே தேதி சொல்லி.. எல்லாம் முடிவானது.. நம்மை போல்.. அவர்கள் டிலே என்பதை ஏற்பதில்லை.. மொத்த ஆடரையும் கான்செல் செய்து விடுவர். எனவே பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான் இளா. மொத்த பிரஷர்.. இந்த இரண்டு நாட்களாக அவனுக்கு.
வீட்டிற்கு சென்றான்.. உண்டான்.. வந்தான்.. அத்தோடு.. வங்கி, பைனான்ஸ் காரர்கள்.. வட்டி கேட்பவர்கள் என எல்லோருக்கும் பதில் சொல்லி சொல்லியே தனது ஒவ்வொரு நிமிடத்தையும்.. காலில் இரும்பு குண்டுடன் கடந்தான்.. இளா.
லிங்கம், இன்றுதான் தன் அண்ணிடம் பேசினான் “ண்ணா… எப்படி இருக்க.. கிளம்பிட்டேன்.. ண்ணா, அம்மா சொன்னாங்க.. உடம்பு சரியில்லை… சரியா சாப்பிடலன்னு… என்னாச்சு.. ” என்றான் லேசான அக்கறை குரலில்.
“ம்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல டா… நாளைக்கு எத்தனை மணிக்கு வர சொல்லி இருக்காங்க…” என்றான்.
நேரத்தை சொன்னான் லிங்கம்.. இன்று அது கையெழுத்து ஆகவில்லை எனில்.. அவ்வளவுதான்.. ஆடர் கான்செல் ஆகும். எனவே இளா, தன் தம்பியிடம் “கண்டிப்பா.. இன்னிக்கு முடிச்சிடு டா… எங்கையும் விட்டுடாத” என்றான்.
தம்பி போனை வைத்த உடன் மினிஸ்டர் PAக்கு அழைத்து பேசினான்.. இளா. அவரும் “இன்று கண்டிப்பாக முடிந்து விடும்.. அப்புறம் அந்த 5 மறந்திடாதீங்க” என்றார் அவரும் காரியத்தில் கண்ணாக.
ஆனால்.. நேரம் இவர்களுக்கு பகையாக இருக்கும் போது யாரை நோவது.. மதியம் தாண்டியும், மினிஸ்டர் டெல்லியில் இருந்து கிளம்பவில்லை சென்னைக்கு.
எப்போதும் போல உதவியாளரே பதில் சொன்னார்.
அரசாங்க வேலை.. ஏன் வரவில்லை என கேள்வி எழுப்ப யாருக்கும் அதிகாரம் இல்லை. குறிப்பாக.. வேண்டி நிற்பவர்களுக்கு அதிகாரமே கிடையாது.
[the_ad id=”6605″]
லிங்கம், அண்ணனுக்கு அழைக்க.. போன் எடுக்கவில்லை இளா. செந்தில்தான் பேசினார்.. ‘வெயிட் பண்ணுங்க’ என சொல்லி வைத்தார்.
இளாக்கு.. என்ன நடக்கிறது என புரிந்தது.. ஆனாலும், ஒன்றும் கேட்கவோ, பேசவோ முடியாத நிலை. எனவே, “செந்தில், அந்த 5c… எடுங்க… பாதிய கேஷ்ஷா எடுங்க..” என்றவன் நெற்றியை தட்டி யோசித்தான்.
“கூப்பிடுங்க ஜெகனை… “ என்றான். அக்கௌன்ட்ஸ் இன்சார்ஜ் அவர்.
“அந்த பினாமி பேரில் போட்டு விடுங்க… ஜெகன். எப்படி சொன்னாரு.. பாதி.. கேஷ்.. ஒரு பகுதி.. அந்த பினாமி, இன்னொன்னு.. ப்ராப்பர்ட்டி… அப்படிதானே… ஏற்பாடு பண்ணுங்க… ஜெகன். சீக்கிரம்.. அந்த ஆளு.. முத்து செல்வன்.. போன் நம்பர் இருக்குல்ல… கூப்பிடுங்க.. பினாமிய… நமக்கு இவங்களை விட ஆடர் முக்கியம்… போகட்டும் போடுங்க… இருக்கிற அமௌண்ட்ட..” என்றான் இளா.
கூடவே GMமை பார்த்து “ இப்போது.. தொழிலாளர்களை சமாளிக்கணும்… ம்… என்ன செய்ய.. வருஷமெல்லாம் உழைச்சவங்கள… காக்க வைக்கணும்…. ம்…” என்றான் நெற்றியை தட்டிய படியே.
‘வாழினும்.. சாவினும்.. வருந்தி போய் வீழினும்.. நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் விடாது பற்றுதல் வேண்டும்… எல்லோரும் சொல்லுவது.. ஆனால் விதிக்கு யார்.. மறுமொழி.. சொல்லுவது.