அமுதங்களால் நிறைந்தேன்…
9
இளங்கோவின் முகம், அந்த அழைப்பை பார்த்து கோவத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது…
இளா, இலகுவாக அமர்ந்திருந்தான்.. இப்போது. ஏதோ, பேச்சும் சுவாரசியமாக செல்லும் போது.. சட்டென அவனின் முகம் இருண்டது அந்த அழைப்பில். நான்காவது ரிங்கில்.. லிங்கா, விளையாட்டை விடுத்து.. அம்முவை.. காவ்யாவிடம் கொடுத்து விட்டு, அண்ணின் போனை பார்த்தான்.
அமைச்சரின் P.A தான் அழைக்கிறார் என தெரிந்தது. சட்டென தானே போனை எடுத்து கொண்டு அந்த பக்கம் சென்று.. ஆன் செய்தான்.. “ஹெலோ… இளங்கோ சாருங்களா..” என ஒரு பொறுப்பான குரல்.. கேட்கவும்.. சுதாரித்தான் லிங்கா…
“இல்லைங்க… அவங்க தம்பி பேசுறேன்.. சொல்லுங்க சார்..” என அவனும் பதிலுக்கு பொறுப்பாக பேச..
P.A பொறுப்பாக “இல்லை இப்போதான் அமைச்சர் வந்தார்.. அந்த டாகுமென்ட் கொண்டு வந்தா…. இன்னிக்கே முடிச்சிடலாங்க… உங்களுக்கு மட்டும்தான் இன்னிக்கு அப்பாயிமென்ட்.” என நிறைய தகவல்களை சொல்லி PA பேசிக் கொண்டிருந்தார்.
லிங்கா இடை மரித்தான் “இல்ல, சர்… நாங்க இப்போ ஹோஸ்பிட்டலில் இருக்கோம்… வீட்டுக்கு வந்திட்டு அத பத்தி பேசலாமா சர்” என்றான்.
PA என்ன.. ஏது.. என விசாரித்தார்.. லிங்கா பதில் சொல்லவில்லை.. “இல்ல இப்போ அவசரம், நான் அப்புறம் கூப்பிடுறனே..” என பொறுப்பாக, தன்மையாக பேசினான்.
“சரிங்க..” என சொல்லி போனை வைத்து விட்டனர் அவரும்.
அதன்பின் லிங்காவிற்கு யோசனை.. எதற்கு இப்போது இந்த அமைச்சரின் அழைப்பு என சிந்தனை சென்றது அவனிடம்.
பின் லிங்கா, தனது போனை எடுத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.. தாமோதரனுடன்… நீண்ட நேரம். உள்ளே வரும் போது.. முகம் தெளிவாக இருந்தது லிங்கத்திற்கு.
[the_ad id=”6605″]
இளங்கோ “என்ன சொல்றாங்க” என்றான்.
“ஒண்ணுமில்ல… ஏன் இவ்வளோ கோவம்… ஏன் அலட்டிக்கிற.. நான் பார்த்துக்கிறேன்..” என்றான் சின்ன புன்னகையை முகத்தில் ஒட்டி.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த தீபக்.. “சித்தப்பா.. நாம எப்போ ட்ரெஸ் எடுக்க போறோம்..” என்றான்.
லிங்காக்கு இப்போது வேலையிருப்பதால் “இன்னிக்கு.. உங்க கூட தாத்தா வருவார்.. கிளம்பு போ… காமாட்சி…” என்றான் சத்தமாக தன் அன்னை கிட்சனில் இருப்பதால்..
அன்னை “என்ன டா… இங்க வா.. எனக்கு வேலையிருக்கு.. உன் வெட்டி அரட்டைக்கு நான் ஆளில்லை… “ என்றார் மாப்பிள்ளை அரவிந்த் வருவதால்.. காலை உணவுக்கு தாயாராகிக் கொண்டிருந்தது அந்த பெரிய சமையறையும்… காமாட்சியும்.
லிங்கம் “போ… சும்மா சமைச்சிகிட்டே இருக்காத.. ஒருநாள் வெளிய சாப்பிடுங்க… கிளம்புங்க எல்லோரும்… போங்க.. போங்க.. அண்ணி நீங்களும் போயிட்டு வாங்க… உங்க ஆத்துகாரர நான் பார்த்துக்கிறேன்… கிளம்புங்க எல்லோரும்“ என்றான் விளையாட்டு குரலில்..
லலிதா, தயங்கி தன் கணவனை பார்க்க.. லிங்கா இடை புகுந்தான் “அண்ணி.. இன்னிக்கு இங்க ஒரு மீட்டிங்.. நீங்க கிளம்புங்க… நிம்மதியா போயிட்டு, சுத்திட்டு.. தேவையானத வாங்கிட்டு வாங்க… இது எப்போவாது தான், கிடைக்கும் மிஸ் பண்ணாதீங்க” என்றான் இலகுவான குரலில்.
காமாட்சி “ டேய் மாப்பிள்ளை வரார்… காலை உணவு இங்கதான்.. அதுவரை பேசாத போ…” என சொல்லி தன் வேலையை பார்க்க தொடங்கினார்.
ஸ்வீட் வெளியிலிருந்து வாங்கி வர பணித்திருந்தார்… பூரி, வடை.. பொங்கல் என மாப்பிளையின் வரவுக்காக அங்கு எல்லாம் தயாராகிக் கொண்டிருந்தது..
காமட்சி இப்போது புலம்ப தொடங்கினார் “அவங்க வீட்டில் என்ன சொல்றாங்களோ… சாப்பிட சொல்லுவாங்களோ.. மாட்டாங்களோ… நீ அவர் கிட்ட போன் செய்து கேளேன் ஈஸ்வரா… ஒரு வார்த்தை கேட்டு சொல்லேன்… “ என்றார் புலம்பலாக…
பின் தானே “வேணாம்.. டா, நீ ஏதாவது பேசிட போற… நான் பார்த்துக்கிறேன்…” என்றார் தானே பேசிய படியே…
லிங்கா சிரித்தான், தன் அன்னையின் அருகில் வந்தான், மூடியிருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தான்… “ம்மா… இதெல்லாம் உனக்கு செய்ய தெரியும்னே… இப்போதான் எனக்கு தெரியுது… எத்தனை வெரைட்டி… ப்பா. நீ சரியான ஆளும்மா… மாப்பிளை ன்னு சொன்ன உடனே… எப்படி பம்பரமா சுத்துற…” என சொல்லி வடையை கையிலெடுத்தான்.
அன்னை “வேண்டாம் டா… என் சாப்பாட சாப்பிட்டுதான் இப்படி.. திடு திடுன்னு வளர்ந்திருக்க… கூடவே இந்த வாயும். எப்படிதான் உன் வாய, வரவ சமாளிக்க போறாளோ..” என திட்டலில் தொடங்கிய வார்த்தை… கடைசியாக கவலையில் முடிந்தது அன்னைக்கு.
லிங்கா “காமாட்சி.. நீயே… இவ்ளோ பேசற… அப்போ நான் பேச கூடாதா…” என்றான் சிரித்த படியே.
அன்னை “போடா, மாப்பிள்ளை வந்து சாப்பிடணுமேன்னு இருக்கு… எனக்கு. நீ வாயடிக்காத… கிளம்பு…” என்றார் பரபரப்பாக.
அங்கிருந்த லலிதா “அத்த… அரவிந்த் தம்பி அதெல்லாம் சாப்பிடுவாங்க… நீங்க கவலை படாதீங்க… “ என்றாள் தன் கை வேளையில் கவனமாக. இப்படியாக நேரம் சென்றது.
அடுத்து அரவிந்த் வந்தார்.. காலையில் அவருக்கு உணவு பரிமாறி.. காவ்யாவை அவருடன் அனுப்பிட்டு வீடு பரபரப்பானது. அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லோரும் கிளம்பினர்.
@$@$@$@$@$@$@$@$
அவர்கள் அந்தபக்கம் சென்ற உடன், இந்த பக்கம் தாமு உள்ளே வந்தார்… இளங்கோ என்ன என்பதாக லிங்காவை பார்க்க.. “நான் தான், வர சொன்னேன்… உன்னை பார்க்க வரேன்னு சொன்னார், அதான்..” என்றான் ஒன்றுமில்லா குரலில். ஆனால், அவர் வந்த நோக்கம் அது மட்டுமில்லை என்பது இருவரின் பேச்சில் தெரிந்தது.
தாமு “எப்படி இருக்கீங்க இளங்கோ சர்…” என்றார்
[the_ad id=”6605″]
லிங்கா “என்ன அங்கிள், இன்னும் சர் சொல்லிகிட்டு… இளங்கோ சொல்லுங்க போதும்” என மிகவும் இயல்பாக பேசினான்.
அதன்பின் மெல்ல மெல்ல பேச்சு.. தொழில் குறித்து சென்றது. காலையில் இவர்கள் பேசியதை எல்லாம் தாமுவும் சொல்ல.. இளங்கோ தன் தம்பியை முறைத்தான்.. ஆனாலும் தம்பி அசரவில்லை.. இப்போது அந்த P.A பேசியது வரை சொன்னான்.
அதை தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பதை இவன் சொன்னானா.. இல்லை, அவர் வாயிலிருந்து வந்ததா என தெரியவில்லை… மொத்தத்தில், லிங்கா… தாமு, என்ற மனிதனை கைக்குள் போட்டிருந்தான். ஏதேதோ சொன்னான் எல்லாவற்றுக்கும் அவர் தலையாட்டினார்.. இல்லை, அந்த முடிவுடன்தான் வந்தாரா.. என சந்தேகம் இளங்கோக்கு.
லிங்கா மிக நுட்பமாக எல்லாவற்றையும் சொன்னான் அவரிடம்.. இளங்கோக்கு இவன் எப்படி இத்தனை நாள் தள்ளி இருந்தான் தொழிலிருந்து என தோன்றியது. மெல்ல மெல்ல பேச்சுகள் முடிந்தது.
லிங்கா “சாரி அங்கிள்.. என்ன சாப்பிடுறீங்க கேட்கவேயில்லை… சொல்லுங்க அங்கிள்…” என்றான் இலகுவான குரலில்.
தாமு “ஏதாவது சர்க்கரை இல்லாமல் கொடுப்பா” என்றார் அவரும் சிரித்த படியே..
அதன்பின் அவர், தனக்கு.. சுகர் வந்த கதையை பேசிக் கொண்டிருந்தனர்.. அப்போது தாமு “இந்த சுகர் வந்தாலும் வந்தது.. என் பொண்ணு.. ரொம்ப கெடுபிடி பண்றா… தம்பி. எல்லாத்துக்கும்.. ரூல்ஸ்… எப்போதும் கஞ்சி.. சிறுதானிய சாப்பாடுன்னு.. கொல்லுது பிள்ளை என்னை…” என இன்பமாக சலித்துக் கொண்டார்.
லிங்கா ஆர்வமாக “அப்படிதான் அங்கிள் ஒரு ஆள் வேண்ணும் உங்களுக்கு.. இல்லைன்னா.. நீங்களெல்லாம் சொல் பேச்சு கேட்பீங்களா” என்றான் இயல்பாய்.
லிங்காவின் பேச்சு உற்சாகம் தர மேலும் தாமு தன் பேச்சை தொடங்கினார் “என்னவோ தம்பி, இந்த விளையாட்டு பொண்ண பத்திதான் கவலையே.. எனக்கும், அவங்க அப்பானும். எங்க பொண்ணு… நல்ல குடும்பத்தில் நல்ல வாழ்க்கை வாழணும்ன்னு ஆசை.. எல்லாத்துக்கும் அந்த பண்ணாரி அம்மாதான் துணையிருக்கணும் ” என.. எதார்த்தமாக.. ஆரபித்தவர்.. வேண்டுதலாக முடித்தார்.
லிங்காவிற்கு எங்கோ பொறி தட்டியது.. சட்டென ஒரு பிடிப்பு கிடைத்தது.. இது இப்படி.. இங்கே.. என ஏதேதோ… ஒரு வட்டம்.. சதுரம்.. என எல்லா உருவமும் வந்து போனது அந்த ஷன நேரத்தில்.
பின் ஆர்வமாக பேசினான்.. லிங்கா. இன்னும் ஏதேதோ கேட்டான்.. சின்ன சிரிப்புடனே தங்கள் பெண் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் தாமு.
பின், குடிக்க ஏதோ கொண்டு வந்தார்கள்.. குடித்து முடித்து விடை பெற்று கிளம்பினார் தாமோதரன்.
அவர் சென்றதும் இளா.. கேள்விகளால் குடைந்து விட்டான் தம்பியை. ஆனால், எதற்கும் பிடி கொடுக்காமல் அமைதியாக, தன் இரு கைகளையும் விரித்து சோபாவில் உல்லாசமாக அமர்ந்தான். தன் அண்ணின் கேள்விகளை காதிலேயே வாங்கவில்லை… ‘எனக்கு தெரியும் நீ கேட்பேன்னு’ என்ற ப்பாவமாக… அமர்ந்திருந்தான்.
இளா “டேய், பதில் சொல்லுடா.. இப்போ ஏண்டா… அங்க போற, அதான் அந்த மினிஸ்டரே வாரன் இல்ல.. இப்போது எதுக்கு புது பிரச்சனை..” என்றான் கோவமான குரலில்.
இப்போதுதான் பதில் வந்தது “ண்ணா.. அவன் சொல்லி நாம நடக்க கூடாது… நம்ம கொடுத்த காச வாங்கிகிட்டு நமக்கே… எப்படி, எப்படி… தண்ணி காட்டிட்டான்… விட மாட்டேன் ண்ணா… விடவே மாட்டேன்… “ என்றான் வன்மமான குரலில்.
இளங்கோ “டேய்… இதென்ன.. விடுவியா… அதான் எல்லாம் சரியாகிடுச்சில்ல…” என தலை தாழ்ந்து சொல்ல…
லிங்காவின் மனம், தன் அண்ணனின் தலை தாழ்ந்ததும் சற்று கோவமானான் “ஏன்… நீ ஏன் சங்கட படுற.,… நான் பார்த்துக்கிறேன்..” என்றான் பெரியவனாய்.
“இளங்கோ “ச்சு….” என்றார் சலிப்பாக…
லிங்கா ஆழ்ந்த மூச்செடுத்து “ண்ணா… எனக்கு ஒரு வேலை செய்ய டா” என்றான் யோசனையோடு…
இளா “எ… என்ன செய்யணும்…” என்றான் ஒரு மாதிரி பார்வை பார்த்த படியே.
லிங்கா, தன் அண்ணன் அமர்ந்திருந்த ஷோபாவின் அருகில் கீழே வந்து அமர்ந்தான்….
அண்ணன் “ஏன் டா” என்றான்.. எங்கையோ டூர் போக போறான் போல.. அதான் ப்பவ்யம் என நினைத்தான் அண்ணன்… பழைய லிங்காவை கருத்தில் கொண்டு… விவரம் புரியாமல்..
“அது… எ… எனக்கு அந்த தாமு சார் பெண்ணை பேசி, கல்யாணம் செய்து வைக்கிறீயா…” என்றான் அலட்டாத குரலில்.
இளாக்கு இவன் என்ன சொல்லுகிறான் என முதலில் புரியவில்லை.. போன வாரம் இவன் இருந்த நிலை கண் முன் வந்தது இளங்கோக்கு. ஒரு வேலை எப்போதும் போல வேலையாடுகிறானோ.. என தோன்ற.. தம்பியின் முகத்தை ஆழமாக பார்க்க…
லிங்கா “என்ன எப்படியோ பார்க்கிற… என்ன இப்போ… நான் கல்யாணம் செய்துக்க கூடாதா” என்றான்.
இளா… பார்வை மிகவும் கோவமாக மாறியது “ஏன் டா… போன வாரம் ஒரு பொண்ணு, இந்த வாரம் ஒரு பொண்ணா… அதை வெட்கமில்லாமல் என்கிட்டே வேற கேட்கிற…” என்றான் முடிந்த வரை மரியாதையான வார்த்தைகள் சொல்லி.
லிங்கா அதற்கெல்லாம் அசராமல் “இங்க பார் அண்ணா… அது வேற… அவ வேற… ஆனா, இதுதான் உண்மை… இ.. இப்போதான் தெரியுது.. நீ பேசு வீட்டில்.. இல்ல, நான் பேசவா… கொஞ்சம் சீக்கரம் செய்.. செய்வியா” என்றான் லிங்கா தன் அண்ணன் முகத்தை கூர்ந்து பார்த்தபடி…
இளங்கோக்கு எப்போதும் வழி மாறி யோசிக்க தெரியாதே தவிர… தன் தம்பியை தெரியுமே… அந்த ஸ்வப்னாவை பற்றி பேசும் போதே… குழைந்து நெளிந்த தன் தம்பியை தெரியுமே இளங்கோக்கு. அத்தோடு காதலின் வலி தெரியுமே இளாக்கு.. அதை இப்போது முழுதாக அனுபவித்து கொண்டிருக்கிறேனே.. அப்படியிருக்க… அதற்குள் எப்படி அவனது ட்ரீமியை மறக்க முடியும் அவனால்… அது பொய்யா.. இல்லை இது பொய்யா… ஒரு சந்தேகம் தோன்றியது அண்ணனுள்.. தம்பியை ஆராய்ச்சியே பார்த்தான் அண்ணன்.
லிங்காக்கு தடுமாறியது உள்ளம்… கண்கள் அண்ணனின் பார்வையை சந்திக்க முடியாமல்.. தவறு செய்யும் மாணவனாய் தலை தாழ்ந்தான். ஆனால் அதெல்லாம் அந்த ஒரு நொடிதான்.
தாமு வந்து பேசி சென்ற போது.. அதாவது தன் பெண்ணை பற்றி பேசிய போது தோன்றிய வட்டம், சதுரம் எல்லாம் கண் முன் வந்தது.. அப்போ, நான் செய்வது சரிதான் என்ற திமிர் வந்தது அவன் கண்ணில்.. இப்போது நிமிர்ந்து அண்ணனை பார்த்தான் துணிவாய்.
இளங்கோ “என்ன டா.. என்ன யோசிக்கிற…” என்றான்
லிங்கா “நமக்கு இப்போ.. பாவ புண்ணியம் பார்க்க நேரமில்லை ண்ணா” என்றான்
அண்ணன் ”டேய் உனக்கு அடுத்தவங்க உணர்வுகளோட விளையாட உரிமையில்ல டா… அத்தோட.. இது நம்மோட கஷ்ட்டம்… நாமதான் பார்க்கணும்.. எதுக்கு அடுத்தவங்கள.. இதுக்குள்ள இழுக்கற..” என்றான் தலையில் கை வைத்துக் கொண்டு…
லிங்காவிற்கு அந்த கேள்வி எல்லாம் புரிகிறது, ஆனால்… இந்த பெண்.. தாமு.. அவர்களின் பலம்.. எல்லாம் கண் முன் வர.. அதை விட மனமில்லை லிங்காவிற்கு.
எனவே லிங்கா “ஏன், எனக்கு எப்படி இருந்தாலும் கல்யாணம் ஆகத்தானே போகுது.. அது, இதுவா இருந்திட்டு போது… ஏன் நான் மனசு மாறவே மாட்டேனா…” என்றான் கோவமாக.
இளாக்கு, இப்போது லிங்காவின் கேள்வி புரிந்தது.. ஆனால்.. இத்தனை வருடம் வாழ்ந்த… தன் வாழ்வும் நினைவு வந்தது. இளாக்கு இப்போது மறுபிறவியே.. ஆனால் அந்த மறுபிறவி எவ்வளவு ஆழமானதாக இருக்கிறது.. எத்தனை கோணத்தை காட்டுகிறது.. என ஒவ்வன்றாக இந்த இரண்டு நாளில் பார்க்கிறானே…. அத்தோடு.. தான் நேசிக்கும் பெண்ணின் அச்ச பார்வை… நியாயமான கோவம்… நிராகரிப்பு… என எல்லாவற்றையும் இந்த மறுபிறவியில் உணர்கிறானே… அதே போல.. அந்த பெண்ணுக்கு இவனின் நிலை தெரிந்தால்… இவன் மணந்த சூழல் தெரிந்தாள்… அந்த வாழ்க்கை நரகம் தானே… என தம்பிக்காக மனம் வருத்தம் கொண்டது..
[the_ad id=”6605″]
இளா “எல்லாம் மாறும்… இதே நிலை தொடராதுதான்… ஆனா, அது எனக்கு இப்போதான்… இந்த ரெண்டு நாளாதான் புரியுது. அத்தோட… இப்போ எல்லோரும் எனக்கு அ… அன்னியம். முன்னாடி மாதிரி எதுவும் இ…இல்லை.. லிங்கா… எப்போதும் எல்லாம் ஒரே மாதிரி இருக்காதில்ல…” என்றான் தன் மனைவியின்.. செய்கையில் வருத்தம் கொண்டு..
பின் தன்னை மீட்டுக் கொண்ட குரலில் இளா.. “உனக்கு இது இப்போ புரியாது… நீ அவசர படாத லிங்கா… இப்போதான் ஒன்னு ஒண்ணா நாம சரி பண்றோமே…” என்றான் பொறுமையான குரலில்.
லிங்கத்திற்கு எரிச்சல்தான் வந்தது தன் அண்ணின் பேச்சில்… GM சொன்ன கணக்கெல்லாம் கேட்டு தலை சுற்றிக் கொண்டிருந்தது.. முந்தின நாள் முழுவதும்.
அத்தோட.. இந்த மாத முடிவில் வட்டி என்ற பெயரில் கட்ட வேண்டிய தொகை.. அதை தவிர… சம்பளம்… இப்படி நிறைய… கணக்குள்.. அத்தோடு தங்கையின் திருமணம்… என்ற பெரிய விழா.
இதெல்லாம் இப்போது.. தாமு என்ற… சாரி… சக்தி என்ற பெண் ‘ஜிடி’ (அலாவுதீன் பூதம்) மூலம் சரியாகும் எனில் நான் ஏன் இழக்க வேண்டும்… இதில் பெண் வீடாய் அவர்களுக்கே மாற்று கருத்து இருக்காது எனும் போது… இவன் ஏன் பயம் கொள்கிறான் என எரிச்சல்…
அத்தோட அப்பாவிற்கு தெரியாமல் அண்ணன் செய்த செயல்கள் எல்லாவற்றையும் நேர் செய்யவே இந்த ஜென்மம் முடிந்து விடும் போல… இதில் இவன் வேறு… முதலில் இருந்து ஆரம்பிக்க சொல்லுகிறான்… எனக்கு பொறுமையில்லை.. அதற்கு அவசியமும் இல்லை…’ என பிசினஸ் என்ற ஒரு சூதாட்டத்தில் தன்னை மெல்ல மெல்ல நுழைத்துக் கொண்ட புதிய சகுனியாக மாறினான் லிங்கா.
லிங்கா “ண்ணா… உண்மையை சொல்றேனே… எல்லோருக்கும் எப்போதும் எல்லாம் சாதகமாக இருக்காது… இருக்கம் போதே எடுத்துக்கணும்…
ண்ணா… எனக்கு இப்போது தாமுவும்… அவருடனான பழக்கமும் வேண்டும்… அது உறவாக மாறினால் எனக்கு இன்னும் அதிக பலம்…
அதுதான்… சொல்றேன்.. நீ வேற எதையும் யோசிக்காத… நீ அப்பா கிட்ட பேசு… நீ என்ன சொன்னாலும் சரி… நான் விரும்பறேன்னு சொல்லு, இல்ல அவங்க கேட்டாங்கன்னு சொல்லு… ஏதோ ஒன்னு… எனக்கு அந்த பெண்ணை கல்யாணம் செய்து வை…
[the_ad id=”6605″]
தாமு அங்கிள்ல நான் பார்த்துகிறேன்.. நம்ம காவ்யா கல்யாணத்துக்கு முன்ன… எனக்கு கல்யாணம் ஆகணும்.. சரியா… எனக்கு வேற வழி தெரியலை… என்னால முதலிலியிருந்து ஆரம்பிக்க முடியாது… விட்டத பிடிக்கணும்… அவ்வோதான்.“ என்றான் அதட்டலாக, உரிமையாக.. கொஞ்சம் திமிராக சொன்னான்… இல்ல, கேட்டான்… இல்ல, மிரட்டினான்… எப்படியோ ஒன்று.. லிங்கா, என்ற விளையாட்டு மனிதன்.. பிசினஸ் சகுனியாக இந்த ஷணம் தெரிந்தான் இளாக்கு.
“எனது உனதென்று…
எதுவும் இங்கு கிடையாது…
விதிகள் உடையாமல்…
விடைகள் கண்ணில் தெரியாது…
அடிமேல் அடி வைத்து…
மெதுவா மெதுவா நடை போடு…
முடிவும்.. ஆரம்பம்..
மீண்டும் தொடங்கு… முதல் பாட்டு…”