தாழம்பூ வாசம் நீ…..
6
கனவுகள் பல சமயம் நமக்கு புரிவதே இல்லை.. இல்லை அறிந்து கொள்ள நாம் முயல்வதேயில்லை போல.
‘யாரோ என்னை மிதிக்கிறார்கள்.. ஆனால், என் நிலை மாறவில்லை.. ஏதோ உடல் வலிக்கு மென்மையாய் அழுத்தி.. ஆறுதல்.. சொல்லுவது போலவே உள்ளது..
ஹ… ஹா…. ம்.. நெஞ்சில் அழுத்தாத.. இந்த தோளில்… ஐயோ.. மூக்கில் அழுத்தாத… என எண்ணம் படர… ஏதோ.. ஜல் ஜல் என சத்தம் மட்டும் கேட்டது இளாவின் காதில்.
ராமாயணத்தில், கும்பகர்ணனை எழுப்புவதாக ஓர் பாடல்.. அதில்.. கும்பகர்ணனை போர் காரணமாக.. இப்போது எழுப்புவர்… பெரிய பெரிய மேளம்.. தாளம்… நாயனம்.. குதிரை படை, யானை படை எல்லாவற்றையும் வைத்து, கொண்டு எழுப்பிக் கொண்டிருப்பார்.
அப்போது கும்பகர்ணனின் காது வழியாக ஒருவன் வெளியே வருவானாம்.. அங்கிருந்த மற்றொருவன் அதற்குள் அவசராம நுழைகிரானாம்… அப்போது உள்ளே செல்பவன் கேட்கிறானாம்.. “என்ன டா ஏன்.. இவ்வளோ அவசரமா போறேன்னு….” அதற்கு வெளி வருபவன்.. “என்னோட அங்குசத்த உள்ள விட்டு வந்திட்டேன்.. அது இல்லாமல் என் யானை அடங்க மாட்டேங்கிது” என்றானாம்…
அதை கேட்க கூட நேரமில்லாதவன் உள்ளே சென்றான்.. அப்போது “நீ ஏன் போறேன்னு கேட்கிறானாம்..” அதற்கு அவன் “நீயாவது அங்குசத்தை விட்ட, நான் யானையையே.. விட்டு வந்திட்டேன் அதான் தேட போறேன்னு” சொன்னானாம்.. இது கற்பனைதான்… ஆனால், எவ்வளோ பெரியது… அது கும்பகர்ணனின்.. வலிமையை பறைசாற்றும் பாடல்.. அதை விட கம்பனின் வலிமையை சொல்லும் பாடல்… யானை ஒன்று உள்ளே இருப்பதை அறியாமல் உறங்கும் கும்பகர்ணன் போல.. தன் மகள், தன் மீது நடந்து கொண்டிருப்பது தெரியாமல்.. படுத்திருந்தான் இளங்கோ.
இப்போது சிந்தனை வர பெற்றது போல.. “நீ ஏறு டா அம்மு.. ம்.. அங்கதான் நல்லா குதி.. குதி..” என லிங்காவின் குரல் கேட்க…
தன் அன்னையின் குரல் “டேய்.. ஏதாவது ஆகிட போகுது டா… விடு டா, ஈஸ்வரா…” என லேசாக சோர்ந்த குரலில் சொல்வது கேட்க.
கரு விழி தன் இருப்பை உணர்த்த, அசைய.. அதற்குள் “என்ன பண்றீங்க.. அவர் பேஷன்ட்.. ஏதோ விளையாடுறீங்க.. சார், குழந்தையை தூக்குங்க.. தூங்குங்க சார்..” என நர்ஸ் அதட்ட… சரியாக கண் விழித்தான் இளா.
லிங்கம், அந்த நர்சிடம் லேசாக சண்டை போட்டான் “யாரு.. இவன் பேஷன்டா.. அப்போ நாங்க… நேற்றிலிருந்து அவஸ்த்தை பட்டது நாங்கதான்.. இவனுக்கு என்ன.. நல்லாதானே ரெஸ்ட் எடுத்தான்..
அதான், டாக்டர் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டாரில்லா…
இவ குழந்தை.. இன்னும் நடக்கவே ஆரம்பிக்கல… அது ஒன்னும் பண்ணாது அவன… அப்போவாது எந்திரிக்கிரானான்னு பார்க்கலாம்.. கும்பகர்ணன்… நிம்மதியா தூங்கறான்.” என்றான் சரியான ஏற்ற இறக்க குரலில், லிங்கா.
[the_ad id=”6605″]
நர்ஸ் “அவர் தூங்கல, மயக்கத்தில் இருக்காரு.. நீங்க வாங்க.. எல்லோரும் வெளியே வாங்க..” என சொல்ல.. இளாவின் கை உயர்ந்தது..
லிங்கா, அசால்ட்டாக “தோ.. எழுந்திட்டான்… நீங்க போய் டாக்டர கூப்பிடுங்க…” என்றவன் நர்ஸை துரத்தி விட்டு தன் அம்முவிடம் “அம்மு.. நெஞ்சிலேயே மிதிடா… ம்… தைய.. தைய.. தைய்யா.. தைய்யா… தக்க தைய்யா… தைய்யா… தைய்யா… ம்.. அப்படிதான் மிதிடா…” என சொல்ல… ஜல் ஜல் என மணி கொலுசுகள்.. ஒலிக்க… சித்தப்பாவின் பாட்டுக்கு, தாளம் தப்பாமல்… அம்முவும் தன் தந்தையை பார்த்து சிரித்த படியே.. தன் தந்தையின் நெஞ்சில் நடனம் ஆடிக் கொண்டிருந்தாள்.
காமாட்சி, அருகில் வந்து.. மகனின் தலையை கோதிய படியே.. கண்ணீர் சிந்தினார்.. “ வலி பராவயில்லைய்யா… ப்பா…” என்றார் கரகரப்பான குரலில். லிங்கா, நிற்கவில்லை அங்கு.. வெளியே தன் அண்ணியுடன் வந்து அமர்ந்து கொண்டான்.
தங்கை, தந்தை, தீபக்.. என எல்லோரும் இளாவின், அருகில் நின்றனர். அதற்குள் டாக்டர் வந்தார். எல்லோரும் வெளியே வந்தனர். அமைதியாக மருத்துவர் சோதனை முடித்து, வெளி வரும் வரை.. அமைதிதான் எல்லோரிடமும்.
வந்தவர் நல்ல விதமாக சொன்னார்.. ‘கை காயம் மட்டும் ஆற வேண்டும்..’ என்றார்.. ‘அது, நல்ல துரு பிடித்த கத்தி என்பதால்.. இரண்டு நாள் இங்கேயே இருக்கட்டும்.. கொஞ்சம் புண் சரியானதும்.. அனுப்புறேன்.. தண்ணீர் பட கூடாது’ என்றார் மருத்துவர். பயப்படும் படி ஒன்றுமில்லை என்றார்.
மீண்டும் எல்லோரும் அறைக்கு சென்றனர். அண்ணி, லிங்கா, அம்மு தவிர எல்லோரும் உள்ளே சென்றனர்.
இளா, உதடு காய்ந்து சோர்ந்து போய் படுத்திருந்தான்.. உயிர் தப்பிய வலி கண்ணில் அப்பட்டமாய் தெரிந்தது. தன் குடும்பத்தாரின் முகத்தை பார்க்கவே முடியவில்லை அவனால்.. கண்ணில், கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது தன்போல். (ஆயிரம் தற்கொலைக்கு சமம்.. உயிர் பிழைப்பது)
சத்தியமூர்த்தி “விடு டா… எல்லாம் பார்த்துக்கலாம்.. GM பேசினார்… என்ன இப்போ ஆகிட போகுது.. நீ மனச அலையவிடாத.. தேறி வா… எதுவும் நினைக்காம.. அமைதியா ரெஸ்ட் எடு….
லிங்கா, ஆபீஸ் போயிட்டு இப்போதான் வந்தான்… நான் ஈவ்னிங் போறேன்.. எல்லாம் நாங்க பார்த்திக்கிறோம்.. ஒன்னுமாகாது… நிம்மதியா இரு…” என்றார் உடையாத குரலில்… தந்தையாய், தனையனை தேற்றினார்.
இன்னும் உடைந்தான்.. இளா. அப்போதும் “போனஸ்… சம்பளம்… எப்படிப்பா..” என்றான்.
“ஷ்…” என்றார் சிரித்தவராய்…
“லிங்கா od எடுத்திருக்கான்.. பார்த்திருக்கலாம்… எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்… நீ ரெஸ்ட் மட்டும் எடுத்து வீடு வா..” என்றார்.
காவ்யா.. தீபக்.. இருவரும் வந்தனர்.. தீபக் “என்னப்பா.. ப்பீவரா.. என்னாச்சு ப்பா..” என்றான்.
“அப்பா… விழுந்திட்டேன்… டா.. அம்மு.. எங்க” என்றான்.
“அம்மு… சித்தப்பா கிட்ட.. அவதான் உங்களை எழுப்பினா.. நான் கூட்டி வரேன்” என சொல்லி கிளம்பிவிட்டான் வெளியே.
காவ்யா, என்ன சொல்லுவது என தெரியாமால் “ஏன் ண்ணா, இப்படி.. தைரியமா இருண்ணா… “ என்றாள். கண்மூடி திறந்தான் அண்ணன்.
அண்ணனின் கை பற்றிக் கொண்டாள் “அண்ணிய, நீ நினைக்கவே இல்லையா ண்ணா… பாவம் அவங்க… அழ கூட முடியாம உட்கார்ந்திருக்காங்க… பாப்பாவ.. தீபக்க யாரையுமே அவங்க பார்க்கல..” என்றாள். கண்களை மூடிக் கொண்டான் இளா.. வேறு பேசவில்லை.
காவ்யா “தூங்கம் வருதா.. தூங்கு ண்ணா..” என சொல்லி வெளியே வந்தாள்.
அப்போது தீபக், அம்முவை எடுத்து வந்தான். தானே தூக்கி வைத்துக் கொண்டு.. தன் அப்பாவிடம் காண்பிக்க.. அது தாவியது தந்தையை நோக்கி.. தீபக்கினால் பிடிக்க முடியவில்லை.
காமாட்சி “தம்பி.. தம்பி..” என சொல்லி அம்முவை கைகளில் வாங்கிக் கொண்டார்.
“ப்பா.. ப்பா…. “ என கால்களை உதைக்க…
காமாட்சி “அம்மு என்னால பிடிக்க முடியலை.. தங்கம்…. தீபக், அத்தைய கூப்பிடு.. எப்படி திமிரா பாரு…” என்றார். அதற்குள், இளா எழுந்து தன் மகளை, தன் மற்றொரு.. கைகளில் வாங்கிக் கொண்டான்.
அதுவும் “ப்பா… உ…ஊ..” என அவனின் கைகளை தொட.. இளா, என்ற மனிதன் தன் முட்டாள் தனத்தை நினைத்து.. நூறாவது முறையாக குற்ற உணர்ச்சி கொண்டான்.
தன் மகளுக்கு பதிலே சொல்ல முடியவில்லை.. திடம், உறுதி.. என்பதெல்லாம் அவனிடமிருந்து, நேற்று இரவே விடை பெற்று.. சென்றுவிட்டது போல… இன்று உடைந்து.. நொந்து… ஒன்றுமில்லா மனிதாக இருந்தான் இளங்கோ.
காமாட்சி, மகனை.. பேத்தியுடன் விட்டு, தன் மருமகளின் அருகில் வந்தார்.. லலிதா, காலையில் வந்து பார்த்ததுடன் சரி, அதன்பின் உள்ளே வரவில்லை. எனவே, தன் மருமகளின் “ஏதோ, மனசு சரியில்லாம பண்ணிகிட்டான்.. நீ போய் பாரும்மா… போ.. ” என்றார்.
அங்கிருந்த லிங்கா “ஆமாம், சின்ன பையன்.. பாரு… விடு, அவங்கள.. இது அவங்க விஷையம்.. நீ விடு அவங்கள… சும்மா, பையன்னா… சப்போர்ட் பண்ணுவியா..” என்றான் கோவமாக.
அதற்குள் “இரு லிங்கா. கண்டிப்பா அத்த, நான் பேசறேன்… நான் போய் குளிச்சிட்டு வரேன்… என் முகமே சரியில்ல.. நான் வீட்டுக்கு போயிட்டு வரேன்.. நான் இங்க இருந்துக்கிறேன்… நீங்க நான் வந்ததும் கிளம்புங்க..“ என்றாள்.. எதுவுமே நடக்காத பாவமாக.
மீண்டும் இப்போது லிங்காவை பார்த்து “எங்க அப்பா.. அம்மாவுக்காவது, இப்போ சொல்லலாமா..” என்றாள்.
“அண்ணி.. சாரி சொல்லுங்க.. இல்ல, நானே பேசறேன்” என்றவன் போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
ஆம், லிங்கா.. யாருக்கும் இளாவின் விஷயத்தை சொல்ல கூடாது என சொல்லியிருந்தான்.. இன்னும் GMக்கு கூட தெரியாது.
முதலில் காவ்யாவிடம்தான் சொன்னான்.. “இங்க நடக்கறது.. மாப்பிள்ளை வீட்டுக்கு தெரியக் கூடாது.. நாங்க சொல்ற வரைக்கும்” என்றான் அவளிடம்.
தன் குடும்பத்திடம் “யாரும் ஏதும் இப்போதிக்கு சொல்லாதீங்க.. “ என்றான்.
[the_ad id=”6605″]
இப்போதுதான் காவ்யா, பசங்க… எல்லாம் மருத்துவமனைக்கு வந்தார்கள்.. அதுவரை மூவரும் வீட்டில்தான் இருந்தனர்.
வேலையாட்கள் வருவதால் பிரச்சனையில்லை.. பிள்ளைகளை பார்த்துக் கொண்டு காவ்யா, சமாளித்தாள், அங்கேயே.
வேலையாட்களிடமும் “அப்பா, அம்மா விழாவிற்கு போயிருக்காங்க.. அண்ணனுக்கு, உடம்பு சரியில்ல அண்ணி.. செக் செய்ய ஹோஸ்பிட்டல் போயிருக்காங்க..” என மேலோட்டமாக சொல்ல செய்தான்.
நேற்று இரவு.. லிங்கா, தன் காரெடுத்து வந்து, மருத்துவமனையில் சேர்க்கவும்.. போதிய மருத்துவர்கள் கொண்டு உடனேயே இளங்கோவை காப்பாற்றினார்..
ரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தது.. நரம்புகள்.. ஒன்றிரண்டில் சேதம்.. பெரிதாக எதுவும் ஆகாததால்.. நல்ல பதிலாகவே சொன்னார்கள் மருத்துவர்கள்.
விடிய காலையிலேயே விழித்து விட்டான் இளா. திடமான மனிதன், எனவே.. நன்றாக அவனின் உடல் ஒத்துழைக்க.. மருத்துவர்களின் மருந்தும் வேலை செய்ய.. மீண்டான் இளா.
அதிகாலையில், மயக்கம் அரைகுறையாக தெளிந்திருந்தது இளாக்கு.. நர்ஸ் பார்த்து விட்டு.. டாக்டரிடம் சென்றார். மருத்துவர் வந்து பரிசோதித்து.. “ஒவ்வொருத்தரா.. போய் பாருங்க… காலையில் ரூமுக்கு ஷிபிட் பண்ணிடு வாங்க…” என்றார்..
முதல் ஆளாய் உள்ளே வந்தது லிங்காதான். அப்போதே லிங்கா, பல்லை கடித்துக் கொண்டு.. கத்த தொடங்கிவிட்டான். அந்த icu… வார்டிலேயே… சத்தம்.. இல்லை, குமறல்… ஆற்றாமை.. தன் அண்ணனை.. அந்த கோலத்தில் பார்த்ததுடன் எழுந்த… சொல்ல முடியா நடுக்கம். அதுவும்.. அண்ணி என ஒரு பெண் அமர்ந்திருந்த கோலம்… என எல்லாம் சேர்ந்தது, “ஏன் டா, இப்படி பண்ணின.. எதுவா இருந்தாலும் சொல்ல மாட்டியா.. குழந்தைங்க இருக்கிற வீடு குடிக்காதன்னு.. சொன்ன.. இப்படி மட்டும் பண்ணலாமா… என்னடா உன் நியாயம்…
அப்படியே நிம்மதியா போயிடலாம்ன்னு பார்க்கிற… திமிரு டா உனக்கு.. எல்லாம் அப்பா கொடுத்தார்.. கேட்கறதுக்கு முன்னாடியே… எல்லாம். எப்போதும் நீ நினைத்தது போலவே நடக்கணும்.. இல்லன்னா.. இப்படிதான் பண்ணுவ… யாரை பத்தியும் கவலை பட மாட்ட…
ரொம்ப தப்பு பண்ணிட்ட டா… அங்க வெளிய ஒருத்தங்க.. இருக்காங்கல்ல.. அவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு மட்டும் யோசிச்சிக்கோ..” என கோர்வையாக லிங்கா பேச.. பேச… வார்த்தைகள் ஏதும் இல்லாமல்.. கண்ணில் கண்ணீர் வழிய படுத்திருந்தான் இளா.
ரொம்ப நேரமாகியும் வெளி வராத லிங்கத்தை.. உள்ளே உள்ள நர்ஸ்.. பார்த்தார் அவன் சத்தமில்லாமல் ஏதோ பேசுவது தெரியவும் அப்போதே லிங்காவிடம் “சார்.. என்ன சார்.. என்னாச்சு.. “ என்றார்.
அவரிடம் “ஒன்னுமில்லங்க.. சும்மா… நீ பிழைச்சது… எவ்வளோ பெரிய விழையம்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்றான் நக்கலாக.
அவன் முக பாவனையை படித்த நர்ஸ்.. “சர், அவர் லேசான மயக்கத்தில் தான், இருப்பார்… அத்தோட.. ரொம்ப வீக்காவும் இருக்கார்.. நீங்க எதுவும்.. பேசிடாதீங்க… வாங்க சார்.. காலையில் பார்த்துக்கலாம்” என்றார்.
ஆம், நோயாளிகளை.. ஏதும் நெகட்டிவாக சொல்லி அவர்களின் மனம் தளர்ந்து விட கூடாது என மருத்துவர்கள்.. பெரும்பாலும் விசிட்டர்ஸ்சை அனுபதிப்பதில்லை.. கிர்ட்டிகள் நேரங்களில்.
அதன் பின் வலிக்காக மருந்து கொடுத்து.. மயக்க நிலையில் இருந்தான்.. இளா. அதைதான், மதியம் அம்முவை விட்டு கலைக்க செய்தான் லிங்கா.
@#@#@#@#@#@#@#@
லிங்கா, அலுவலகம் சென்று பார்த்து விட்டு வந்தான். GM சொன்ன யோசனையை இப்போதிக்கு செய்தான்.. வேறு சிந்திக்க முடியவில்லை.. முதலில் இவர்களை பார்போம் என தோன்றியது லிங்கத்திற்கு.
செந்தில் “ஏன் சர், வரல..” என கேட்க..
லிங்கம் “அவனுக்கு BP ஏறி போச்சு.. ஹாஸ்பிட்டல் போயிருக்கான், வயசாகிடுச்சுல்ல… அதான்… நீங்க, நான் சொல்றத செய்ங்க… பாங்க்கில் odக்கு ஏற்பாடு பண்ணுங்க… நாளைக்கு.. சம்பளம் போனஸ் போட்டிடலாம்..” என்றான் அலட்டா குரலில்.
GMக்கு எப்படி இளாவை கேட்காமல் செய்வது.. இவர் பொறுப்பில் இல்லையே என ஒரு எண்ணம்.. எனவே தடுமாறினார்.. லிங்கா, அவரின் யோசனையை பார்த்து ரகசிய குரலில் “ஏன் செந்தில் சார்… எங்களுக்கு தெரியாம.. எங்கையாவது பணம் வைச்சிருக்கீங்களா.. சொல்லுங்க எடுத்து கொடுத்திடலாம்…” என்றான் சிரியாமல்.. பதறாமல்.
ஐயோ… பதறி போனார் செந்தில் “ஐயோ, தம்பி.. லிங்கா… ஏன் இப்படி..” என்றார்.
“அப்புறம் ரொம்ப யோசிச்சா… போங்க.. நாங்க கையெழுத்து போட்டாலும் செல்லும்… போங்க..” என்றான்.. அவனின் குரலும், செயலும்.. இது விளையாட்டா.. இல்லை நிஜமா.. என புரியாத நிலையிலேயே சொன்னதை செய்ய போனார் செந்தில்.
அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து.. அந்த சரக்கு நிலை குறித்தும் தெரிந்து கொண்டான் லிங்கா பொறுப்பாக..
செந்திலுக்கு… ஏதோ புரிந்தது.. ‘என்னமோ, இளங்கோக்கு சரியில்லை’ என புரிந்தது. அமைதியாக லிங்காக்கு எல்லாவற்றையும் விளக்கினார்.
மதியம் கிளம்பும் போதுதான் மெல்ல லிங்காவின், மூட் நன்றாக இருக்கிறதா என பார்த்து “ஏன், தம்பி.. அண்ணனுக்கு என்ன ஆச்சு” என்றார்.
தலையை கூட நிமிர்த்தாமல் லிங்கா “அவனுக்கே என்ன.. நல்லா இருக்கான்.. கொஞ்சம் BP ஏறி போச்சு…” என்றான்.
இவர் “ம்..நேத்தே நினைச்சேன்.. ஏதோ, இத்தோட போனதே…” என சொல்ல..
லிங்கா “எப்படி ஏறிச்ச்சின்னு கேளுங்க…” என்றான் ஆசுவாசமாக.
[the_ad id=”6605″]
செந்திலுக்கு ஏதோ இருக்கிறது என தோன்ற.. “முழுசா சொல்லுப்பா… என்னாச்சு…” என்றார்.
“ம்… கையை வெட்டிகிட்டான், டமிட்… ப்பூள்… “ என தன் சேரில் சாய்ந்து அமர்ந்து சொன்னான்.
“என்னாச்சு… எப்போ” என்றார் பரபரப்பாக.
“நைட்… நான் பார்த்ததால இப்போ உயிரோட இருக்கான்… ஏதோ நல்ல நேரம்.. பார்த்தோம்…” என கண்களை மூடிக் கொண்டான்.
பின் விட்டம் பார்த்து பேசினான் “போங்க சார்.. என்ன இப்போ, சமாளிக்க முடியாத.. நம்மால. கடன் வாங்கிக்கலாம்.. யார் இவன இவ்ளோ பெருசா செய்ய சொன்னா.. இப்போ பாருங்க..” என புலம்பினான்.
செந்திலுக்கு சற்று நேரம் பேச்சு வரவில்லை… அவரின் நிலை பார்த்து “ஈவ்னிங் வந்து பாருங்க.. யாருக்கும் சொல்ல வேண்டாம்… நம்மாலே பார்த்துக்கலாம்.. “ என்றான் சுதாரித்தவனாக.
மையமாக தலையசைத்தார் மனிதர். அதன் பின்தான், லிங்கா.. நேரே மருத்துவமனை வந்தான்.
#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$#$
இப்போது தன் அண்ணியின் பெற்றோருக்கு அழைத்து சொல்லியிருந்தான் ‘உடல்நலம் சரியில்லை.. மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறோம்.. இளாவை’ என பொதுவாக சொன்னான்.
போன் பேசி முடித்து.. நின்றிருந்தான் வராண்டாவில்.. காலையில் ஏதோ பெயருக்கு உண்டு வந்தான். இப்போது பசி காதடைத்தது.. வீட்டுக்கு செல்லும் வரை.. சமாளிக்க முடியுமாக தோன்றவில்லை… ஏதாவது வயிற்றில் போட்டால்தான் சமாளிக்க முடியும் என தோன்ற… கேண்டீன் சென்றான். சப்பாத்தி வாங்கிக் கொண்டு.. அமர்ந்தான் அங்கு. ஏதோ யோசனை.. எங்கோ பார்த்தபடி மென்று கொண்டிருந்தான் அதனை.
தாமோதரனின் உதவியாளர் அங்கு ஏதோ உண்டு கொண்டிருந்தார் போல… லிங்காவை பார்த்து அருகில் வந்தார் “சர்… நல்லா இருக்கீங்களா…” என்றார்.
லிங்கத்திற்கு அடையாளமே தெரியவில்லை.. “ம்.. நீங்க” என்றான்.
“தாமு அண்ணன்.. டிரைவர் சார் நான்” என்றார். பின் தானே “அண்ணனுக்கு சுகர் இருக்காம் சார்.. நீங்க இடிச்ச போதுதான் தெரிஞ்சது… இப்போ அதுக்குதான் டாக்டர பார்க்க வந்திருக்கோம்…” என்றார்.
இடிச்சது என சொல்லவும் லிங்காவிற்கு நினைவு வந்தது.. அதனை தொடர்ந்து ட்ரீமியும் வந்தாள்தான்… வந்தாள்.. இவன் உள் செல்லவில்லை சுதாரித்து “ம்… இப்போ நல்லா இருக்காறா.. கால் பராவாயில்லையா” என்றான் பார்மலாக.
“அது சரியா போச்சுங்க… இப்போ.. சுகர்தான், அதுக்கு டாக்டர பார்க்க வந்திருக்கோம்..” என்றார்.
“ம்…” என பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும். அதன்பின் தாமோதரன் அழைக்க.. “சரிங்க.. அய்யா வந்துட்டாரு போல, வரேங்க…” என சொல்லி கிளம்பினார் டிரைவர்.
அதையெல்லாம் பெரிதாக எடுக்கவில்லை லிங்கம்… மீண்டும் அதே வெறித்த பார்வையுடன்.. காய்ந்த சப்பாத்தியை மெல்ல தொடங்கினான்.