அமுதங்களால் நிறைந்தேன்…
2௦
மதிய உணவு உண்ணும் நிகழ்வில்.. சக்தி திணறி போனாள்.. லிங்கா எது செய்தாலும் மற்ற எல்லோருக்கும் விளையாட்டாய் தெரிவது, அவளுக்கு மட்டும் தவறாக தெரிந்தது.
லிங்காவை, சக்திக்கு ஊட்டி விட சொல்லி எல்லா சிறுசுகளும் கலாட்டா செய்ய… ஸ்வீட்.. என இலையில் லட்டு இருக்க.. அதை எடுக்காது.. விரல்களில் வழியும் பால் பாயசத்தை எடுத்துக் கொண்டு சக்தியின் உதடுருகே சென்றான்.. லிங்கா.
எல்லோரும் கத்த தொடங்கினர்.. குசும்பு குரல்கள் வேறு.. “லிங்கா இங்க என்ன நடக்குது… நாங்க ஸ்வீட் கொடுக்க சொன்னோம்… இங்க என்ன நடக்குது… இப்போவே விழுந்திட்டியே டா…” என நான்கு பேர் கத்த… இன்னும் இன்னும் சத்தம் வர… சக்திக்கு பயம் வந்தது.. தளிர் மேனியும் நடுங்கத் தொடங்கியது… திடமெல்லாம் காணாமல் போனது.. தனியே, அவனிடம் வாய் அடிக்கலாம்.. இப்படி சுற்றி நிற்கும் எல்லோரிடமும் என்ன பேசுவது.. ‘இது வேண்டாம்.. பிடிக்காது…’ என சொல்ல முடியவில்லை… அவளால்.
சின்ன பெண் செய்வதறியாது விழிக்க தொடங்கினாள்… ஒரு இயல்பான நிகழ்வுதான்.. சக்திக்கு, லிங்காவின் பரிமாணத்தில் எல்லாம் வேறாய் தெரிந்தது.. எது நிஜம் என புரியவில்லை.
லிங்காக்கு ஏற்கனவே அவளை, ‘தான்’ படுத்தி வைத்திருக்கிறோம் என தெரிந்தாலும்… ‘அதான் வாய் பேசறாளே.. பார்ப்போம்’ என இவன் அமைதியாக அவளின் உதட்டருகே கையை நீட்டிக் கொண்டு சர்வ நல்லவனாக அமர்ந்திருந்தான்…
சக்தி அப்படியே அழுத்தமாக அமர்ந்திருந்தாள்..
லிங்கா மனதில் ‘எப்போதும் போல அழுத்தக்காரி’ என எண்ணி… “ஹேய்… சும்மா இருங்க க்கா… எல்லோரும். பசங்களா… கத்தாதீங்க…” என சொல்லி.. சக்தியிடம் “ம்… சீக்கிரம் வாய் திற…” என அதட்டி.. தன் விரல்களில் இருந்ததை ஊட்டி விட்டான். சக்தியும் அவன் சொன்னதை பட்டென செய்தாள்.. அவன் கையில் இருந்தது கசப்பா, இனிப்பா என கூட உணரவில்லை அவள்… அவன் சொன்னதை உடனே செய்தாள் அவ்வளவுதான்.
லிங்காக்கு ஊட்ட சொல்ல சட்டென லட்டு எடுத்து அவனுக்கு கொடுத்துவிட்டாள்.. அந்த படபடப்பிலும்.. ஏதோ, அவன் குற்றம் செய்தவன் போல.. விரல்கள் படாமல், அந்த இனிப்பை தன் கணவனுக்கு கொடுத்தாள். லிங்கா முகம் சற்று சுருங்கித்தான் போனது.
‘அப்பா டா…’ எல்லோரும் கலைந்தனர்.. சக்திக்கு அப்படிதான் இருந்தது.
[the_ad id=”6605″]
அதன் பின், சக்தியின் கண்ணில் நீர்.. ஏனென்றே தெரியாமல் வழிய தொடங்க… யாருக்கும் தெரியாமல் கண்ணை துடைத்துக் கொண்டு உண்டாள். லதா இதையெல்லாம் பார்த்திருந்தாள்… ‘ம்.. லவ் மேரேஜ்… ஆனா, அந்த பெண்ண பார்த்தா அப்படி தெரியலையே.. ‘ என யோசனை ஓடிக் கொண்டிருந்தது அவளுக்கு.
இந்த கலாட்டாக்கள் முடிந்து, இதே சிந்தனையில் லதா தன் கணவனிடம் வர.. கணவன் அந்த யாருமில்லா ac ஹாலில்.. ஒரு சேரில் அமர்ந்து இன்னொரு சேரில் கால் வைத்து.. உறங்கும் தன் மகளை, தோள் சாய்த்து அமர்ந்திருந்தான் இலகுவாக.
லதா, அங்கு வரவும்… கணவன்… அவளின் பார்வையையும், நடையையும் வைத்து… அவள் ஏதோ யோசனையுடன் வருகிறாள் என உணர்ந்து கொண்டான்.
இந்த ஒரு வாரமாக ஏதும், கேள்வி கேட்கவில்லை லதா. அதற்கு நேரம் இருந்ததில்லை போல.. எனவே வரும் தன் மனையாளை ஆசையுடன் பார்த்திருந்தான் இளா.
பூச்செண்டை வைத்திருப்பது போல தன் மகளை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த கணவனை பார்த்த படியேதான் லதாவும் வந்தாள். தன் கணவன் அருகில் இன்னொரு சேரில் அமர்ந்தாள்.
இளா “என்ன சந்தேகம்…” என்றான் நேரடியாக…
லதா “கண்டுபிடிச்சிட்டீங்களா…. நிறைய இருக்கு… ம்… அதெல்லாம் இப்போ கேட்கமாட்டேன்…” என்றாள் சிரித்தபடி.
இளா “அப்பா டா, நான் ப்ரீ… “ என்றான் இலகுவாக.
லதா, அம்முவை வாங்க.. அவளிடம் கொடுத்தவன் “நாம வீட்டுக்கு போய் ரெடியாகிட்டு வரலாம்… கொஞ்சம் இரு அப்பா கிட்ட சொல்லிட்டு வரேன்” என கிளம்பினான் தன் தந்தையை பார்க்க இளா.
லதா, அமர்ந்திருந்தாள் தன் மகளுடன்.
காவ்யா இப்போதுதான் லதாவின், கண்ணிலேயே படுகிறாள். அவளும் தன் அண்ணியின் அருகில் வரவும் லதா “என்ன, உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் சாப்பிட்டாங்களா…” என்றாள்.
காவ்யா “ஆமாம் அண்ணி, இப்போதான் ரூம் போறாங்க.. அனுப்பிட்டு வரேன்” என அமர்ந்தாள்.
இப்போது லிங்கா, சக்தியோடு அங்கு ஹாலுக்கு வர.. இருவர் அமர்ந்திருப்பதை பார்த்து, தானும் அருகில் சென்றான் சக்தியை கூட்டிக் கொண்டு.
லதா “வாங்க லிங்கா, வா சக்தி” என்றாள். லிங்கா தலையசைத்து.. தன் அண்ணியிடம் இருந்து அம்முவை வாங்கினான்.. தன் தோளில் போட்டுக் கொண்டான்.. வந்ததும் வாங்கி தோளில் போட்டுக் கொண்டான், சக்தி பார்த்திருந்தாள்.
காவ்யாவும், லதாவை தொடர்ந்து அழைத்து.. அமர இடம் காட்டினாள்.. லதா “என்ன சக்தி, என்ன சொல்றார் என் கொழுந்தனார்…” என்றாள்.
சக்தி அமர்ந்தாள். லிங்கா, அம்முவை வைத்துக் கொண்டு… சக்தியின் பதிலை எதிர்பார்ப்பவன் போல, தன் மனைவியை பார்த்துக் கொண்டே நின்றான். அமர்ந்தால் பிள்ளை, எழுவாளோ என நின்றான்.
சக்தி ஒன்றுமில்லை என்பதாக தலையசைத்தாள்.. அதை பார்த்து அமைதியாவிட்டான். ஆனால், இப்போது காவ்யா அருகில் இருக்கவும்.. லிங்கா அவளிடம் ஆரம்பித்தான்.
காவ்யாவிடம் “என்ன பாப்பா.. அரவிந்த் வீட்டில் யாரையும் காணோம்… உன் மேக்கப் இல்லா முகத்தை பார்த்துட்டாங்களோ…” என்றான்.. இத்தனை நாள் விட்டிருந்த கேலி பேச்சை கை கொண்டு.
காவ்யா முறைத்தாள்… “ம்…. அப்போ நீ அப்படியே தாடியோட வர வேண்டியது தானே… எதுக்கு பார்லர் போயிட்டு வந்த… ம்… இவர் அப்படியே நல்லவர்…. என்னை சொல்ல வேண்டியது… “ என அவனை கொஞ்சம் பிராண்டிவிட்டே… தன் வீடு பற்றி சொன்னாள்.
[the_ad id=”6605″]
“அவங்க எல்லோரும் சாப்பிட்டு ரூம்க்கு ரெஸ்ட் எடுக்க போயிருக்காங்க… “ என்றாள் இன்னும் முறுக்கிய படியே…
லிங்கா “ஹா…. ஹா…. ப்பா, எத வேணா பேசலாம் காவ்யாகிட்ட… மேக்கப் பத்தி மட்டும் பேச கூடாது….” என ஏதோ சொல்ல…
காவ்யா… “நீ அத பத்தி பேசாத…. காலையில் பார்த்தேன் உன்னை… கண்ணாடி முன்னதானே நின்ன… இதில் என்னை சொல்ற..” என அவளும் சிறு பிள்ளையாய் முறுக்கிய படி.. லிங்காவிடம் சண்டைக்கு போக…
லதா “என்ன காவ்யா… லிங்கா, சும்மா சொல்றார்…” என சொல்லி அவளை அமைதியாக்க பார்க்க..
லிங்கா “ம்… சரி… சரி பொங்காத… பாப்பா… “ என அவன் சொல்ல…
காவ்யா “டேய்.. பாப்பா… சொல்லாத டா…” என்றாள். மீண்டும் காவ்யா ஏதோ சொல்ல வர, லதா அவளின் கை பிடித்து அமைதியாக்கினாள்.
சக்தி இதை எல்லாம்… ஏதோ புது படம் பார்ப்பது போல கண் விரித்து பார்த்திருந்தாள்.. லிங்கா, சக்தியை பார்த்து… “ம்… இங்க இரு சக்தி… நான் அப்பாவ பார்த்துட்டு வரேன்” என சொல்லி நகர்ந்தான்.
அடுத்து என்ன, அங்கே பெண்களின் கச்சேரி கலைகட்ட தொடங்கியது. சக்தி முதலில் தயங்கி தயங்கி பேசினாலும்… லதாவின் கலகலப்பில்.. தடையற்று பேச தொடங்கினாள்.
அங்கே அப்பாவிடம் இளா… நான் சென்று ஆறு மணிக்கு வருகிறேன் என பேசிக் கொண்டிருக்க… இப்போது, லிங்காவும் வந்தான்… “அப்பா இப்போ நான் சக்தி வீட்டுக்கு போகனுமா… இல்ல நம்ம வீட்டுக்கு வந்திடவா.. என்னோட டிரஸ் அங்கதான் இருக்கு.. சக்தியும் பார்லர் போகணுமாம்…” என்றான் கேள்வியாய்…
மூர்த்தி “டேய் இதெல்லாம் எனக்கு என்ன தெரியும்.. இரு உங்க அம்மாகிட்ட கேட்டு சொல்றேன்” என்றார்.
பசங்க இருவரும் அங்கேயே அமர்ந்து ஏதோ கதை பேசினர்..
மூர்த்தி காமாட்சியிடம் “லிங்கா கேட்கிறான்..” என சொல்லி அவன் சொல்லியதை சொல்லி கேட்க…
காமாட்சி “ம்… இருங்க…” என சொல்லி மருமகளை அழைத்தார்.
தன் மருமகளிடம் இதனை சொல்ல, லதாவும் “ம்… சரி அத்த, சக்தி பார்லர் போக போகுது…. லிங்காவ, சக்திய பார்லர்ல விட சொல்லிட்டு… வீட்டுக்கு வர சொல்லிடலாம்… நான் சரஸ் சித்தி, கிட்ட சொல்லிடுறேன்… நீங்க லிங்கா கிட்ட சொல்லிடுங்க… சக்தி என் கூடதான் இருக்கா… நான் சொல்லிக்கிறேன்” என சொல்லி லதா, சரஸ்வதி சித்தியை தேடி சென்றாள்.
அழகான சங்கிலி தொடர்… யாரும் எங்கும் விடுபடாமல்.. எல்லோரையும் அரவனைக்கு தொடர்.. சில சமயம்.. இதில் முட்டல் மோதல் வரும்தான். ஆனால், அதெல்லாம் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும் தானே.
இதே போல காமாட்சி தன் மகனிடம் சொல்ல… லலிதா, சரஸ்வதியிடம் சொல்லியிருந்தாள்.
சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கவே மணி மூன்று ஆக.. சக்தி வீட்டுக்கு சென்று அங்கிருந்து பார்லர் செல்ல வேண்டும். எனவே, லிங்கா சக்தியை அழைத்துக் கொண்டு கிளம்பினான். சக்தி மேக்கப் முடித்து நேராக மண்டபம் வர ஏற்பாடு.
லிங்கா சக்தியுடன் காரில் செல்லும் போது, முன்போல் வம்பிழுக்க கூடாது என எண்ணினான்.. ஆனாலும், அந்த அமைதி அவனுக்கு பிடிக்கவில்லை. அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது.. ஒரு குறுகுறுப்பு… எப்படி அந்த அவசரத்திலும்… பதறாம.. என் இதழில் படாமல்.. தன் விரல்களை எடுத்துக் கொண்டாள்… ம்… சமர்த்துதான்…. செம… இல்ல, லிங்கா… கஷ்ட்டப் பட போற டா….’ என மனதில் நினைத்தக் கொண்டான், முகம் கலையானது..
அவளாக ஏதும் பேசமாட்டாள் என உணர்ந்து, அவளிடம் பேச்சுக் கொடுத்தான் “சக்தி, ஏன் அமைதியா இருக்க ஏதாவது பேசு… “ என்றான். வாயே திறக்கவில்லை சக்தி. அவள் அங்கு.. அண்ணன் தங்கைக்குள் நடந்ததை.. எண்ணியபடியே வந்தாள்.
லிங்கா அவளை பற்றி அறிய… “ஊட்டில… ஏன் போய் படிக்கிற…” என்றான் கேள்வியாக.
சக்திக்கு அவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என இருந்தது… ஆனால் அவன் அக்கறையாக கேட்பதாக தெரியவில்லை… ஏனோ தானோவென கேட்பதாக தெரிந்தது அவளுக்கு.. இன்னும் நம்பவில்லை சக்தி, அவனை. எனவே அமைதியாக இருந்தாள்..
லிங்காக்கு ஏதோ போலானது.. காரில் பாட்டு ஒன்றை போட்டுவிட்டு, அமைதியாக வண்டி ஓட்டினான்.
“மகராஜனோடு ராணி வந்து சேறும்….
இந்த ராஜயோகம் காலம் தோறும் வாழும்…” என அது தன் கடமையை செய்ய…
லிங்கா, அவளின் அமைதியில் மனதில் அப்பட்டமாக அடிவாங்கினான். ‘எப்படி இந்த ஒரு நாளில் என்னை… இவள் இப்படி படுத்தலாம்… அவளையே சுத்தி சுத்தி வர வைக்கிறா… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லடி உனக்கு…’ என செல்ல கோவம் கூட தன்னவள் மேல்.. ஆனாலும் ‘யார் யாரோ.. என்னை எப்படி எல்லாமோ அடிச்சாங்க… என் பெண்டாட்டி… நீ, அடிக்க கூடாத… லிங்கா ஸ்டாரங்… சக்தி.’ என ஏதோ அவளிடம் சொல்லுவது போல அவளை பார்த்தான். அவள் இன்னமும் இருக்கமாகத்தான் இருந்தாள்.
சக்திக்கு அவனின் இந்த அமைதியும் ஏதோ போல் இருந்தது… தலை வலிக்க தொடங்கியது… ‘அய்யோ… ரொம்ப நினைக்கிறேனோ.. அவர பத்தி… விடு சக்தி… சக்தி கூல்…’ என தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
இருவரும் சக்தியின் வீட்டுக்கு வந்தனர். சக்தி, தேவையான திங்க்ஸ் எடுத்து வர… அவளை, அந்த புகழ் பெற்ற பார்லரில் இறக்கிவிட்டான்.. லிங்கா.
அவளின் தோழிகளும் உடனிருந்தனர். இறங்கியவள்… லிங்காவிடம் பொறுப்பாக விடை பெற்றாள். லிங்காக்கு மனதில் ‘நம்மை மதிக்கிறா…’ என தோன்றியது.
ஆறு மணிக்கு வரவேற்பு இனிதாக தொடங்கியது… லிங்கா தன் குடும்பத்துடன் வர… சக்தியும் சரியான நேரத்தில் மண்டபம் வந்தாள்.
நேர்த்தியான ‘விவாகா’ பட்டு… கட்டி, மின்னும் வைர மாலை அணிந்து வந்தாள்… பார்த்துடன் லிங்காக்கு மூச்சடைத்து.. சக்தி, சற்று கூடுதலான நிறம்தான்.. அதுவும் பிங்க்… என்பதான நிறம்.. கையின் விரல் நுனி எல்லாம் பிங்க் வண்ணம்தான் அவளுக்கு. எனவே, அழகான கோல்டன் நிற புடவை அவளுக்கு பாந்தமாக பொருந்தி இருந்தது. ஒரே ஒரு ஹாரம், நீண்ட தோடு.. முழங்கை வரை… முழுவதும் மெகந்தி. ஏதோ தேவலோக மங்கை என வந்தாள் சக்தி. லிங்கா அடர் மெரூன் வண்ண ஷெர்வானியில் நின்றான்.
சரியான நேரத்திற்கு.. தம்பதிகள்.. அங்கு அமைத்திருந்த மேடையில் நின்றனர்.
ஒவ்வொருவராக வந்தனர்.. லிங்காவின் சென்னை நண்பர்கள்.. மற்றும் உள்ளூர் நண்பர்கள்.. என வர தொடங்க… கலாட்டாவாக இருந்தது. அந்த இடம்.
சக்திக்கும் நிறைய தோழிகள்.. அவர்களும் தத்தமது குடும்பத்துடன் வந்திருந்தனர்.
அத்தோடு நிறைய சொந்தம் லிங்காக்கு.. ‘பெரியப்பா.. அண்ணா.. மாமா…’ என அனைத்து உறவையும் இனிமையாக சொல்லித்தந்தான் சக்திக்கு. புரியவில்லை என்றாலும் கேட்டுக் கொண்டாள்.
[the_ad id=”6605″]
அந்த மினிஸ்டர் வந்தார் ஆர்பாட்டமாய்.. இரு வீட்டாரின் அழைப்பு.. ஆம், இளா சென்று அழைத்திருந்தான்.. தாமோதரனுடன். எனவே, பொறுப்பாக.. கெத்து காட்டாமல் வந்தார்.
லிங்காவின் முகம் அவரை பார்த்ததும் சற்று.. கடுகடுத்ததோ…. இல்லை அது நம் பிரம்மையோ… அப்படிதான் போல. அவர் வாழ்த்த வரவும்.. இனிமையாக வரவேற்றான் லிங்கா. உள்ளுக்குள் ஏதோ ஒன்று கனன்று கொண்டிருந்தது.
இப்படி நிறைய vipகள்… மூர்த்தி எல்லோருக்கும் ஒரே விதமான மதிப்பு தந்தார். அவரின் நட்புகளும் வந்திருந்தது. விழா சரியான நேரத்திற்கு முடிந்தது.
தம்பதிகள் உணவு உண்ண சென்றனர்.. அழகாக(தாளி) பெரிய தட்டு வைத்து பரிமாறினார்… நார்த் இந்தியன் உணவு வகை… சௌத் இந்தியன் உணவு வகை என எல்லாம் இருந்தது.
ஸ்வீட் வகைகளில் ரசகுல்லா… இருந்தது. சக்தியின், கண்களில் அந்த ரசகுல்லா மீது மட்டுமே இருந்தது. அதை ஏதோ போல் பார்த்திருந்தாள். திக் திக் நிமிடங்கள் என்பது போல சக்திக்கு இந்த நொடி இருக்க… லிங்கா, அதை அழகாக ஒதுக்கினான். கண்ணில் பார்த்ததும் ஒதுக்கிவிட்டான். ஒரு நொடி கூட அதை கூடுதலாக பார்க்கவில்லை அவன். அந்த கிண்ணத்தை எடுத்து தனியே வைத்து விட்டான் லிங்கா.
எப்போது.. யாருக்கு… எங்கு.. உள்ளம் கொள்ளை போகும் என தெரியாதே.. இப்போதும் யாருக்கு அது நடந்தது என தெரியவில்லை. ஆனால், இந்த நிகழ்வு… சக்தியின் கண்களிலும் பட்டது. அப்படி ஒரு ஆனந்தம் அவளுக்கு… அது ஒரு சின்ன செய்கை.. ஆனால், அந்த பெண்ணின் மனதில்.. ஏதோ நம்பிக்கையை தந்தது.. ஒரு சந்தோஷத்தை தந்தது.. வார்த்தையால் சொல்லி விளங்க வைக்க முடியாத ஒரு நிலையை.. ஒரு உணர்வை.. தந்தது.
இத்தனைக்கும் அவளுக்கு அந்த ட்ரீமி பற்றி தெரியாது.. முழுதாக.. ஆனால், ஏதோ அந்த புகைப்படம் ஒரு தாக்கத்தை தந்திருக்கிறது என உணர்ந்தாள்.
சக்தி இத்தனை நேரம் இருந்த இயல்புடன்.. சிறு நம்பிக்கையும் கண்ணில் தெரிய, லிங்காவை திரும்பி பார்த்தாள்.
லிங்கா, சலனமே இல்லாமல்.. இப்போது உணவு மட்டுமே முக்கியம் என்பது போல.. அந்த பன்னீர் டிக்காவை ருசித்துக் கொண்டிருந்தான். சக்திக்கு லேசாக சிரிப்பு வந்தது ‘என்ன வெர்ஷன்.. டா… நீ’ என தோன்றியது.
லிங்கா கவனித்தான் போல, அவளின் பார்வையை. இப்போது உடனே தன் மனைவியிடம் ரகசிய குரலில் “என்ன… பார்வை, ஏதோ மாதிரி பார்க்கிற…“ என்றான்.. ரகசிய காதலனாக.
சக்தி லேசாக சிரித்தாள்.. அழகான சிவந்த கன்னங்கள் இப்போது இயற்கையாக வெட்கத்தில் சிவக்க… தலை குனித்து கொண்டாள். லிங்கா எதிர்பார்த்த, வெட்க முகம்… இப்போது ரகசிய காதலனின் கைகள் குறுகுறுக்க… சுற்றுபுறம் மறந்தான் லிங்கா… தன் இடது கை விரலால்… லேசாக அவளின் கன்னத்தை ஒரு விரலால் பட்டும் படாமல் அளந்தான்.. பட்டென கையை தட்டி விட்டு, உண்டாள் சக்தி. லிங்காவின் முகத்தில் புன்னகை உறைந்தது.