என் காதல் கனா 26
சுபாஷினி அத்தோடு தன் பேச்சை நிறுத்தியிருக்கவில்லை. “இப்போ இவங்க கூட வந்திருக்காளே ஒருத்தி, அவ யாரா இருக்கும்?” என சுஜி யாரென தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொப்பளித்தது. தன்னுடன் பழகிய நான்கு வருடங்களில் இப்படி ஒருத்தியின் பெயரை சதீஷ் ஒருமூறை கூட உச்சரித்ததில்லை.
அப்படியிருக்க இவ்வளவு உரிமையுடன் சதீஷின் கைகளைப் பற்றி இழுத்துச் சென்றவள் யாராக இருக்கும் என தெரிந்து கொள்ள நினைத்தாள்.
“நமக்கு எதுக்கு அதெல்லாம் சுபா. அதுதான் ஃபேமிலி பிரண்டோட பொண்ணுன்னு சொன்னாங்களே” என்றி சொன்ன மதுமிதாவிற்கு நல்லவேளையாக இவள் நிஷாவின் திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்ற அபசகுண பேச்சில்லாமல் வேறு பேசுகிறாளே என்ற சிறு திருப்தி உண்டானது.
“எனக்கு பார்த்தா அப்படி தெரியல மது. ஒருவேளை அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்களோ என்னமோ?”
“பண்ணா பண்ணிட்டு போட்டும். அதனால் என்ன?” என கூறிய மதுமிதா, இம்முறை தன் எரிச்சலை மறைக்கவெல்லாம் நினைக்கவில்லை. “இந்த பாரு சுபா உனக்கு விஷால் கூட கல்யாணம் ஆயிருச்சு. அதை முதல்ல மனசுல நல்லா பதிய வச்சுக்கோ. எல்லார் வாழ்க்கையிலும் ஒரு பாஸ்ட் இருக்கத்தான் செய்யும். அதுக்காக அதையே நினைத்து யாரும் பீல் பண்ணிட்டு இருக்க மாட்டாங்க”
“நான் பீல் எல்லாம் பண்ணல மது. சதீஷோட தப்பான குணம் தெரியாம அந்த பொண்ணு எங்க அவள வந்து லவ் பண்ணியிருப்பாளோ அப்படிங்கிற ஒரு பயத்துல தான் பேசினேன்” என சமாளிக்க முனைந்தாள்.
“சுபா நான் திரும்பவும் சொல்றேன். இங்க இருக்கற யாருக்கும் மெச்சூரிட்டி இல்லாம கிடையாது. அவங்களுக்கு எது நல்லது கெட்டதுன்னு தெரியும். இங்க கொஞ்சம் இம்மெச்சூர்டா இப்போதைக்கு நீதான் நடந்துக்கற.”
“ஐய்யோ. நான் யார் வாழ்க்கையும் கெடுக்க நினைக்லை மது. அந்த பொண்ணு ஏமாந்திடக் கூடாதேன்னு தான்.”
“அதெல்லாம் அவங்க பிரச்சனை. அதுவும் இல்லாம இந்தியாவிலிருந்து காலேஜ் படிச்சு முடிச்சுட்டு இங்க ஹையர் ஸ்டுடீஸ்காக வந்து இருக்க ஒரு பொண்ணு கண்டிப்பா ஒன்னும் தெரியாத அப்பாவியால்லாம் இருக்க மாட்டா. எனக்கு அந்த பொண்ணைப் பார்த்தா போல்டா தான் தெரியுது”
“அப்படியா தெரியுது?” என நம்பமுடியாமல் வினவினாள் சுபா. அவளுக்கு சுஜியின் அமைதியான அழகும், அந்த பளீர் நிறமும், செதுக்கின முகமும் கண் முன் வந்து போயின. அதை விடவும், சதீஷை அவள் கைப்பிடித்து இழுத்துச் சென்ற விதம் சுபாவிற்கு நிறைய உறுத்தியது.
தான் அவனோடு இல்லையென்றாலும் சதீஷ் நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்து விடுவானோ என்ற எக்ஸ் லவருக்கே உரிய இயல்பான கோபமும் ஆத்திரமும் அவளை பிடித்துக் கொண்டது.
“போல்டாக இருக்கா. பார்த்தவரைக்கும் டீசண்டா பேசுறா. சதீஷை சமாதானப்படுத்தி எந்த பிரச்சனையும் வராம கீழே கூட்டிட்டு போயிட்டா.”
“அவனும் அவ பேச்சை கேட்டு கீழே போனானே. அப்ப அங்க ரெண்டு பேத்துக்கு என்னமோ இருக்குன்னு தானே அர்த்தம்” என மீண்டும் சிறுபிள்ளைப் போல் விட்ட இடத்தில் வந்து நின்றிருந்தாள்.
“இருந்தா இருந்துட்டு போகட்டும். உனக்கென்ன வந்தது அதனால? உன்னை ஏண்டா கூட்டிட்டு வந்தோம்னு இருக்கு. நீ யோசிக்கற போக்கே சரியில்லை சுபா. உனக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சு. அவன் யாரயோ லவ் பண்ணிட்டு போறான். கல்யாணம் பண்ணறான். பண்ணாம போறான். உனக்கென்ன?” என மதுமிதா காட்டமாக மொழிந்திருந்தாள்.
[the_ad id=”6605″]
“எனக்கு பொறாமையெல்லாம் இல்ல மது. அவன் எல்லாம் ஒரு மனுஷனஆ? அவனை எந்த பெண்ணாவது லவ் பண்ணுவாளா? சிடுமூஞ்சி. அவனுக்கு கொஞ்சம் கூட பொண்ணுங்க மனசு என்னன்னு தெரியாது மது” என்றாள் சுபா.
“ நீ முன்ன சொன்ன கதைக்கும் இதுக்கும் எவளோ முரணா இருக்கு பாரு. முதல்ல அவன் உன்னை நாலு வருஷம் லவ் பண்ணான்னு சொன்ன. அப்புறம் பொண்ணு கேட்க வந்த போ வீட்ல உங்க அப்பா அம்மாகிட்ட வந்து பேசவே இல்ல பொண்ணு கேட்க வரலைன்னு சொன்ன. அப்படின்னா என்ன அர்த்தம் நீயும் அவன லவ் பண்ணி இருக்கேன்னு தானே அர்த்தம்” என கொக்கிப் போட்டாள் மதுமிதா.
சுஜிக்கு “சபாஷ்” சொல்லத் தோன்றியது.
“அது.. அது வந்து” என சுபாஷினி தன் வார்த்தைகளால் தானே மாட்டிக் கொண்டதை உணர்ந்து நிலைமையை சரியாக சட்டென தன் கோபம் முழுவதையும் சதீஷ் மீது இறக்கினாள்.
“திரும்பத் திரும்ப ஒருத்தன் பின்னாலையே சுத்தி வந்து என்ன கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டுட்டே இருந்தா நான் என்ன சொல்லுவேன்? அந்த எங்க அப்பா அம்மா கிட்ட பேசுன்னு சொன்னேன். ஆனா அவன் பேசவே இல்லையே. பயந்தாங்கோளி. அவனுக்கெல்லாம் எந்த பொண்ணு செட்டாகாது” என திரும்ப திரும்ப சதீஷ் பற்றி தாழ்வாகவே பேசிக்கொண்டே இருந்தாள் சுபா.
சுஜிக்கு அதற்கு மேல் கேட்டுக்கொண்டிருக்க பொறுமை இருக்கவில்லை. சட்டென தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவள், நேரே அந்தப் புதர் மலர்ச்செடிகள் மூடப்பட்டு இந்த இடத்தை சென்றடைந்தாள். சுஜியை சற்றும் எதிர்பாராத இருவரும் பேச்சை நிறுத்திவிட, சுஜி மையமாக இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.
“என்ன பத்தி தான், ஐ மீன், எங்கள பத்தி தான் பயங்கர டிஸ்கஷன் போயிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். மே ஐ ஜாயின் யூ” என சொல்லிக் கொண்டே மதுமதியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
“என்ன சுபா தெரியணும் உங்களுக்கு, சுத்தி சுத்தி பேசி மதுமிதாவ டென்ஷனாக்கிட்டு இருக்கீங்க. டைரக்டா என்கிட்ட கேளுங்க? என்ன தெரியணும்” என சிரிப்புடன் துவங்கினாள் சுஜி. முகத்தில் நக்கலான ஒரு சிரிப்பு, கண்களில் பளபளப்பு, அடுத்து ஏதேணும் பேசினால் உன் குரல்வளையை கடித்தாலும் ஆச்சர்யப்படாதே என்பது போன்ற தோன்றம்.
தன் இரை அசைவதற்காகக் காத்திருக்கும் பெண் புலி போல் சற்றும் அசையாமல், சுபாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுஜி. சுஜியின் இந்த தைரியமான பேச்சு, சுபாவை சற்றே ஆட்டம் காண வைத்திருந்தது. மதுமிதா ஏதேணும் உடஹ்வி செய்வாளோ என அவளை சுபா பார்க்க, மதுவோ, ஒரு சிறிய ஆச்சர்யம் கலந்த சிரிப்புடன் சுஜியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்கா உங்களுக்கு, ஃப்ரெண்ட்ஸ் பேசிட்டு இருக்கோம், நீங்களா வந்து உட்கார்ந்ததும் இல்லாம, என்கிட்ட கேள்வி வேற கேட்கறீங்க?””என தானும் கோபக்காரி தான் என்பதை மெய்பிக்க எண்ணி படபடத்தாள் சுபா.
சுஜிக்கு சென்னையில் அவளது அத்தை, ராமனாதன் மாமாவின் மனைவி லலிதாவின் நியாபகம் வந்தது. அவரும் சுபாவைப் போன்றவர் தான். தன் மேல் இருக்கும் தவற்றை மறைக்க அத்தனை பாடுபடுவார். அது அடுத்தவருக்கும் தெரியும். குட்டு உடைந்து விட்டது என்னும் நேரம் ஏதாவது கோபமாகப் பேசி அவ்விடம் விட்டு நகர்ந்து விடுவார். இதைப் பலமுறை கண்டிருந்த சுஜிக்கு மெல்ல சிரிப்பு தான் வந்தது.
“சரி ஒ.கே.. நீங்க போங்க.. நான் இந்த மதுமிதா சிஸ் கிட்ட கொஞ்சம் பேசிட்டு வர்றேன்.. உங்களுக்கு ஏதும் வேலை இருக்க மது? கேன் ஐ டாக் டு யு ஃபார் சம்டைம்?” என நக்கலாக வினவினாள்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நாங்க சும்மா ஃபிரண்ட்ஸ். நாங்க பேசிக்கிட்டு இருக்கோம். அனாவசியமா உள்ள நுழைஞ்சு பேசிட்டு.. வா மது உள்ளே போலாம்” என சுபா எழுந்து கொண்டாள்.
மதுமிதாவிற்கு சுஜியை மிகவும் பிடித்திருந்தது. “நீ போ.. நான் கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்” என சொல்லிவிட சுபாஷினிக்கு என்ன செய்வது என்று தெரியாவில்லை. “இந்த சுஜி, சதீஷோட லவ்வரா இருக்கும் பட்சத்தில அவன் என்னைப் பத்தியும், நான் தான் அவனை விட்டுட்டு யு.எஸ் மாப்பிள்ளைன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்துட்ட விஷயம் எல்லாமே சொல்லியிருப்பனோ என அச்சம் கொண்டாள் சுபாஷினி.
எங்கே தான் இல்லாத சமயம் தன்னைப் பற்றி உண்மையான விஷயங்களை சுஜி, மதுவிடம் ஒப்பித்து விடுவாளோ? இதுவரையில் தான் சொல்லிய அத்தனையும் பொய் என்று ஆகிவிடுமே என்ற கவலையால் உள்ளே செல்லாது அங்கேயே திரும்பவும் அமர்ந்துகொண்டாள் சுபாஷினி. அவள் முகம் சிவப்பதையும். அடுத்து என்ன சொல்லி சுஜியின் வாயை அடைக்கலாம் என்று தெரியாமல், அங்கிருந்து போய்விடவும் முடியாமல் மலங்க மலங்க பார்ப்பதையும் கண்டு சற்றே பாவமாக இருந்தது சுஜிக்கு.
ஆனால் தான் செய்த தவறுக்காக மற்றவரின் மீது பழி சுமத்துவதும், தன்னுடைய ஆதாயத்திற்காக சம்பந்தமே இல்லாமல் ஒருவரது திருமணத்தை நிறுத்தி விடலாமா என்பது வரை யோசிப்பதும் எந்த வகையில் நியாயம் என்று சுஜிக்கு விளங்கவில்லை.
அதை மதுமிதாவிடம் சற்றே தெளிவுபடுத்த எண்ணிய சுஜி, “ மதுவிதா உங்களுக்கு நீங்க மிடில் பர்சன். உங்களுக்கு ஓரளவு அவங்க பேசுவதெல்லாம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன். உங்களுக்கு ஏதாவது தெரியணும் இருக்கா?” என நேரடியாகவே மதுமிதாவிடம் வினவ சுபாஷினி சற்று திணறித்தான் போனாள்.
[the_ad id=”6605″]
“என்ன மாதிரி பொண்ணு இவ? அவளப் பத்தி பேசறன்னு தெரிஞ்சும், சம்பந்தமே இல்லாம உள்ள வந்து, என்ன தெரியணும் கேளுங்க, நானே சொல்றேன் அப்படின்னு எவ்ளோ போல்டா பேசுறா?” என மனதிற்குள் படபடப்புடன் அமர்ந்திருந்தாள்.
“இந்த கல்யாணத்தை நிறுத்திடலாமான்னு எல்லாம் ஏதோ பேச்சு அடிபட்ட மாதிரி இருந்துச்சு சுபா, சொல்லுங்க, என்ன பிரச்சனை, தெரிஞ்சுக்கலாம்.”
“ இல்ல அதெல்லாம் ஒன்னும் இல்லயே.. நாங்க நிஷா பத்தி பேசல. வேற ஒரு பிரிண்ட் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்.” என நிலைமையை சமாளிக்க வேண்டி சுபாஷினி மொழிந்தாள்.
ஆனால் மாற்றி மாற்றி பேசி குழப்பத்தை உண்டு செய்து கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாக விளங்கிய மதுமிதாவிற்கு, விஷயத்தை இன்னதுதான் என தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதை சுஜி தானே சொல்ல முன்வந்திருக்கும் போது அதை ஊக்குவிற்கவும் செய்தாள்.
“நான் சொல்லறேன் சுஜி. சுபாவுக்கு உங்களுக்கும் சதீஷ்க்கும் நடுவுல ஏதாவது இருக்கான்னு தெரிஞ்சுக்கனும். சதீஷ் அவளை ஏமாத்தி, கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லி, நாலு வருஷம் லவ் பண்ணிட்டு, விட்டுட்டு போயிட்டாரு..கரெக்டா சுபா. அப்படித்தான் இதுவரைக்கும் என்கிட்ட சொல்லி இருக்க” என ஒரு பன்ச் வைத்து கேள்வி கேட்டிருந்தாள் மதுமிதா.
சுபாஷினி பதில் சொல்லாமல் மையமாக தலையை மட்டும் அசைத்தாள். எப்பொழுதும் ஒரு காதல் முறிவு என்று வரும்பொழுது தனக்கு உண்டான நியாயத்தையும் தன் எண்ண ஓட்டங்களையும் மட்டுமே தன் சம்பந்தப்பட்ட நண்பர்களிடமும் புதிதாக கிடைத்திருந்த உறவுகளிடமும் சொல்வது மனித மனதின் இயல்பு. இதிலிருந்து சற்றும் விலகாத சுபாஷினி, தன் கோபத்தை அவன் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தை, அவன் மீது அவதூறு சொல்வதன் மூலம் தன் கோபத்தை தணித்துக் கொள்ளப் பார்த்தாள்.
அதனால் திருமணம் முடித்து, அமெரிக்கா வந்ததும் அக்கம்பக்கத்தினர் என தெரிந்த பழகிப்போன நான்கு இந்திய குடும்பங்களிடமும் முக்கியமாக நிஷா மற்றும் மதுமிதா விடமும் தன் கடந்த காலம் என்று அவள் சதீசை பற்றி இவற்றையெல்லாம் சொல்லி இருந்தாள்.
சுபா அமைதியாக அமர்ந்திருக்க, மதுமிதா பேசினாள். “ சுபாவுக்கு பதிலா நானே உங்ககிட்ட நேரா கேட்கிறேன். உங்களுக்கும் சதீஷ்க்கும் நடுவுல ஏதாவதா? ஆர் யூ என்ன ரிலேஷன்ஷிப்? என்றாள் மதுமிதா. சுபாவோ சுஜி என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று ஆர்வமாக அவளிடம் கவனத்தைக் குவித்திருந்தாள்.
சுஜியின் மனம் வேகவேகமாக கணக்கிட்டது. இப்ப என்கிட்ட இல்ல நானும் சதீஷும் பிரண்ட்ஸ் மட்டும் தான் அப்படின்னு சொன்னா, சுபாவை நான் இவளோ தூரம் பேசினதுக்கு அர்த்தமே இல்லாம போயிடும். அதை ஒரு பெரிய அட்வான்டேஜ் எடுத்துக்குவா.”
“ அவளோட வாயை அடைக்க, ஆமா நாங்க ரெண்டு பேர் உயிருக்கு உயிரா லவ் பண்றோம் அப்படின்னு சொன்னா எதுவும் தப்பில்லை. இதனால இப்போ ஏதாவது பிரச்சினை வர போகுதா என்ன? ஒன்னும் இல்ல? அப்பறமா இந்த மதுமிதாகிட்ட தனியா பேசி இன்னது விஷயம்னு விளக்கிடலாம். அவ கொஞ்சம் நல்ல மாதிரியா தெரியறா. புரிஞ்சுக்குவா” என தீர்மானித்தாள் சுஜி.
“நானும் சதீஷும் ஒரு எட்டு மாசமா பழகுறோம். எஸ் வி லவ் ஈச் அதர். இது பெரியவங்களுக்கு ஓரளவு . அதனாலதான் அவங்க வீட்டு முக்கியமான பங்க்ஷன் என்னையும் வர சொல்லி கூட்டிட்டு வந்து இருக்காங்க. இதிலிருந்தே அவங்களுக்குத் தெரியும் நீங்க தெரிஞ்சுக்கலாம்.” என மேம்போக்காக முடித்திருந்தாள்.
“கங்கிராஜுலேசன்” என மொழிந்த மதுமிதா கையை நீட்ட, சுஜி மெதுவாக குலுக்கினாள் சுபாஷினி. எந்த ஒரு மறுமொழியும் சொல்லிவிடவில்லை. சுஜியிடம் அடுத்து வாய் திறக்கவே பயமாக இருந்தது.
சுஜியின் போதாத வேளையோ என்னவோ, பெண்கள் மூவரும் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்ததை நடைபயில சென்ற நிஷாவும் கிஷோரும் அந்த மலர் புதிர்களுக்கு பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருந்தனர். அதிலும் முன்னர் நடந்த எந்த சம்பாஷணையை கேளாமல் சுஜியின் வார்த்தைகள் மட்டுமே இருவரும் கேட்டிருந்தனர்.
செடிகளை கடந்து அவர்கள் பார்த்துவிடா வண்ணம் சுற்றிக்கொண்டு நடந்த நிஷாவும் கிஷோரும், அந்த நிமிடம் சதீஷ் பற்றியும் சுஜியை பற்றியும் தான் பேசிக் கொண்டிருந்தனர். அதுவரையிலும் பொதுவான விஷயங்களையும், வேலை நண்பர்கள் என்று பேசிய கிஷோருக்கு, புதிதாக விவாதிக்க முக்கிய விஷயம் அகப்பட்ட மகிழ்ச்சி.
“தெரியும் எனக்கு..இவன் இந்த மாதிரி ஏதாவது ஒன்னு பண்ணியிருப்பான்னு” என்றே துவங்கினான் நிஷாவிடம்.
“ஏன்? எதனால் அப்படி சொல்றீங்க கிஷோர்? அந்த பொண்ணு நல்லா பொண்ணா தானே தெரியுற?”
“அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு தான். ஆனா எனக்கு இவனை நினைச்சாதான் பயமா இருக்கு. இவனுக்கு ஆல்ரெடி காலேஜ்ல நாலு வருஷம் ஒரு அஃபேர் இருந்துச்சுன்னு சொல்லுவான். ரொம்ப சின்சியரா லவ் பண்றாங்கன்னு நினைச்சேன்.”
“ஓ.. அப்பறம் என்னாச்சு”
“நான் அந்த டைம்ல யு.எஸ் வந்துட்டதுனால அந்த பொண்ணு என்ன ஆனா? ஏன் பிரேக்கப் ஆச்சுன்னு முழுசா தெரிஞ்சுக்க முடியலை. அப்பா அம்மா ஃபோன்ல சொல்லுவாங்க. அவளோ தான்.”
“ஜெனியூனா ஏதாச்சும் ரீசன் இருக்கலாம் கிஷோர். நீங்க சதீஷ்கிட்ட பேசியிருக்கீங்களா இதைப் பத்தி?”
“இவனும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டான். அந்த பொண்ணு ஃபோட்டோ கூட எங்கிட்ட காட்டினதில்ல. அவளோ சீக்ரெட்டா மெயின்டெயின் பண்ணுவான். பிரேக் கப்னு கேள்விபட்டு இவங்கிட்ட விசாரிச்சேன் நிஷு” என உரிமையாக நிஷாவை நிஷூவாக்கியிருந்தான்.
“ கேட்டேன்.. அந்த லவ் பிரேக்கப் ஆனது நல்லதுங்கற மாதிரி பதில் சொன்னான். அவ இல்லாம இருக்கறது சந்தோஷமா இருக்கு அப்படின்னு சொன்னான். சரி ஓகே லவ் ஃபெயிலியர்ல இருக்கான் கொஞ்ச நாள்ல சரியாயிடும் நினைச்சேன். இந்த பொண்ணு என்னடான்னா எட்டு மாசமா நாங்க லவ் பண்றேம்னு சொல்றா. இதுல எது உண்மையான எனக்கு தெரியலையே? இப்ப நான் என்ன பண்ணட்டும்? ஏண்டா சதீஷ் இப்படி என்னைப் படுத்தற?” என படு சீரியஸாக கிஷோர் மொழிய, நிஷா கலகலவெனச் சிரித்தாள்.
“கிஷோர் யு ஆர் டூ ஸ்வீட்.. உங்க தம்பி சின்ன பப்பா இல்லா.. எவ்ரிபடி நோஸ் வாட் தே ஆர் டூயிங்க்.. சோ, இவளோ டென்ஷனாலாம் பேசாதீங்க. பாருங்க, இது அவங்க பர்சனல் விஷயம், சோ, நம்மகிட்ட வர்றேப்போ, நீ என்ன நினைக்கறன்னு கேட்கறப்போ நாம பதில் சொன்னாப் போதும். ப்ளீஸ் இதெல்லாம் பெருசுபடுத்தாதீங்க” என “நாம்”, “நம்ம” என்றே பேசிய நிஷாவை கிஷோருக்கு மிகவும் பிடித்திருந்தது.
“மோர் ஓவர் அவங்க ரெண்டு பேருமே அடல்ட்ஸ். என்ன பண்றாங்கன்னு அவங்களுக்கு தெரியும். அந்த பொண்ணு புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னாலும் அது உங்க தம்பியோட முடிவு. அதுல ஒன்னும் தப்பில்லையே.”
[the_ad id=”6605″]
“அப்படியில்லை, முன்னாடி இருந்த லவ் என்னாச்சுன்னு தெரியலை. இது ஏதோ 8 மாச பழக்கம்லாம் எப்படி வாழ்க்கைக்கு ஒத்துவரும்?”
“அப்படி பார்த்தா, என்னை நீங்க 5, 6 தடவை வீடியோ கால்ல தான் பார்த்திருக்கீங்க. 2 தடவை தான் நேர்ல மீட் பண்ணியிருக்கோம். எங்கூட உங்க லைஃப் எப்படி செட்டாகும்?”
“அய்யோ நான் உன்னை எதும் சொல்லலை நிஷா. மோரெவர், எனக்கு உங்கூட பேச ரொம்ப கம்ஃப்ர்டபிளா தான் இருக்கு. ரொம்ப நாள் நீ பழக்கப்பட்டவ மாதிரி தெரியற. ரியலி..” என்றான் உணர்ச்சி மிகுதியாக.
“அதே தானே உங்க தம்பிக்கும். அந்தப் பொண்ணை 8 மாசமா லவ் பண்ணா ஒண்ணும் தப்பில்லையே. முன்னால ஒருத்திய லவ் பண்ணா? அதுக்காக கல்யாணமே பண்ணிக்காம போயிடனுமா? என்ன கேட்டா நீங்க இந்த விஷயத்தை பெரிசு படுத்தாம அப்படியே விட்டுடனும்.”
“அப்படியில்லை. சதீஷ் சின்ன பையன்..”
“ கிஷோர் இவ்ளோ வருஷம் அமெரிக்காவிலிருந்து இருக்கீங்க. அமெரிக்கா உங்களுக்கு எதுவுமே சொல்லித் தரலையா?”
“எத்தனை வருஷம் அமெரிக்காவில் இருந்தாலும் என் தம்பிக்கு நான் அண்ணன் தானே? அடுத்தவங்க விஷயத்துல வேணா தலையிடாம இருக்கலாம். இது என் சொந்த தம்பியோட விஷயம்”
“கிஷோர் சொந்த தம்பினாலும் இந்த மாதிரி விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பது தான் நமக்கு மரியாதை. சோ அவனா வந்து உங்க கிட்ட ஏதாவது சொல்லி ஹெல்ப் கேட்டா அப்போ கண்டிப்பா தயங்காம அதை பண்ணுங்க. அப்ப அட்வைஸ் சொல்லுங்க. இப்ப சம்பந்தமே இல்லாம உள்ள பூந்து எதைப்பற்றியும் பேச வேண்டாம் ஓகேவா?” என நிஷா கராராக சொல்லியிருந்தாள்.
யோசித்து பார்த்த பொழுது கிஷோரும் அவள் சொல்வது சரி என்றே தோன்றியது அவர்களுக்குள்ளான விஷயங்களை அவர்களே முடிவெடுத்துக் கொள்ளட்டும். அதிலும் சதீஷ் பற்றி கேட்கவே வேண்டாம். தனக்கு ஒன்று வேண்டும் என்றால் அதை எப்பாடுபட்டாலும் அடைந்து கொள்ளவே முயற்சிப்பான் என்பதும்,
அதேசமயம் ஒரு விஷயம் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால் என்ன செய்தாலும் அதை அவனிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பதும், கிஷோர் அறிந்த விஷயமே. அவனாக மனம் மாறும் வரையில் அடுத்தவரின் எண்ணங்களுக்கு அவன் செவிசாய்க்க மாட்டான். இது கிஷோருக்கு தெரிந்திருந்த குணமே அதனால் வேறு எவரிடமும் பேச வேண்டும் என்று தோன்றவில்லை.
அதேநேரம் விவேக்கிடம் கேட்டால் விஷயம் தெரியும் என மனதிற்குள் ஒரு பட்சி சொல்லிக்கொண்டே இருந்தது. “விவேக் சதீஷோட பெஸ்ட் ஃப்ரெண்ட். என்னை விடவும் விவேக் தான் சதீஷ்க்கு க்ளோஸ். வீட்டுக்குப் போனதும் விவேக்ட்ட பேசறேன்” என நிஷாவிடம் கூறினான் கிஷோர்.
“நீங்க உங்க தம்பி பத்தி பேசறதை ஒருவேளை விவேக் சதீஷ்கிட்ட சொல்லிட்டா? “நோ நோ விவேக் அப்படி எல்லாம் இல்ல. அவன் எனக்கும் ஒரு தம்பி மாதிரிதான். வெரி ஜெனுயீன் பர்சன். நான் விசாரிச்சேன்னு சொல்லாதன்னு சொன்னா அவளோ சீக்கரம் சொல்லமாட்டான். நான் விவேக்கை நம்பறேன்”
“ஓ.. வெரி இன்ண்டிரெஸ்டிங்க்..” என நிஷா மொழிய, கிஷோர் அவர்களது பால்ய கால கதைகளைப் பற்றி சொல்லத் துவங்கினான்.