என் காதல் கனா 23
ஆர்கன் அருகில் இருந்த போர்ட்லாண்ட் விமான நிலையத்திலிருந்து பிலடெல்பியாவிற்கு ஆறு மணி நேரம் பயணம். தன் தாய் தந்தையுடனும் சுஜியுடனும் தன் தமையன் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானான் சதீஷ்.
விமான நிலையம் சென்று இமிகிரேஷன் முடித்து விமானத்தில் ஏறி அமரும் வரையில் வேறு எந்த வித நினைவுகளும் சதீஷ்க்கு எழவில்லை.அவன் தாயுடன் சுஜி அமர்ந்து கொண்டிருந்தாள். சதீஷ் அவனது தந்தையுடன் பின் இருக்கையில் அமர்ந்திருந்தான்.
சுஜி அவ்வப்போது அவனது தாயுடன் பேசிக் கொள்வதும் சில நேரம் கையுடன் கொண்டு வந்திருந்த ஆங்கில நாவலை பிரித்து படிக்கத் துவங்குவதும் என தனது விமான பயணத்தை தொடர்ந்தாள்.
சுஜியைக் காணும் போதெல்லாம் சதீஷிற்கு விவேக்கின் ஒட்டுதல் இல்லாத சம்பாஷனை நினைவுகளில் அலையடித்தது. “இவன் என்ன சுஜி புராணமா பாடுவான்? இப்போ என்னடான்னா பட்டும்படாம நடந்துக்கறான்?” என்ற கவலை மேலோங்கியது.
எவ்வளவு முயன்றும் விவேக்கின் பேச்சுகளில் இருந்து விடுவித்துக் கொள்ள இயலவில்லை. அதே நேரம் சுஜியும் செலவழிக்கும் நேரம் மனதிற்கு மகிழ்வூட்டுவதாக இருந்தது. முடிந்த மட்டில் அந்த ஆறு மணி நேரப் பயணத்தை இரண்டு படங்கள், மணீ ஹெயிஸ்ட் ஒரு சீசன் என்னும் அளவு சுருக்கிக் கொண்டிருந்தான்.
பிலடெல்பியா சென்று சேரும் பொழுது நேரம் மதியத்தை நெருங்கிவிட்டிருந்தது. கிஷோர் தன் குடும்பத்தினரை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்தான். “டேய் எப்படிடா இருக்க?” என தமையனை கட்டிப் பிடித்தும், தாய் தந்தையரின் காலில் விழுந்து வணங்கியும் தன் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டான் கிஷோர்.
சுஜியிடமும் நட்பாக புன்னகை செய்த கிஷோர், “ஹலோ சுஜி வெல்கம். வெல்கம்.” என சிரிப்புடன் கைகளை நீட்டி வெள்ளந்தியாக வரவேற்ற கிஷோரை சுஜிக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவள் மனமோ அதே நேரம் “இந்த உர்ராங்குட்டானுக்கு இப்படி ஒரு நல்ல பிஹேவியர்ஸ் தெரிஞ்சா அண்ணனா?” என அந்தக் கேள்வி ஓடவும் சட்டென அருகில் நின்றிருந்த சதீஷை திரும்பி பார்த்தாள்.
தன் அண்ணனின் வரவேற்பை கண்டதும் சுஜி நிச்சயமாக தன்பக்கம் திரும்புவாள் என எண்ணியிருந்தான் சதீஷ். அதேபோலவே சுஜியின் கண்கள் அவன் எங்கே எனத் தேடி உலாவுவதை கண்டதும் சின்ன சிரிப்புடன் அதை எதிர்கொண்டான்.
தாய் தந்தையரின் காதில் விழாத வண்ணம் சுஜியின் அருகில் மெல்ல குனிந்து, “ஒரு பெட் டாக் இருந்தா இப்படி தான் உள்ள வந்துமே மேல விழுந்து பிராண்டும். அப்பறம் நம்மளை கண்டுக்காது.. அது மாதிரி தான் இதுவும்” என சிரிக்காமல் மொழிந்தவன்,
“இவனுக்கு இப்படி ஒரு நல்லவன் அண்ணனான்னு தானே யோசிச்ச?” என சஜியின் எண்ணவோட்டத்தையும் கணித்திருந்தான். உடனே அவன் கூறியதை ஏற்றுக் கொண்டால், சதீஷ் அதிகமாக அலட்டிக் கொள்வான் என்று நினைத்தவள். “சே சே உங்க அம்மா எவ்வளவு நல்லாஆஆ வளர்த்தி இருக்காங்கனு பெருமையா நினைச்சுட்டு இருந்தேன்” என வேண்டுமென்றே அந்த நல்லவை கொஞ்சம் அழுத்தி இழுத்து கூறினாள்.
[the_ad id=”6605″]
சதீஷ் மறுமொழி கூறாமல் சிரிப்புடன் விலகிக் கொண்டான். அனைவரும் சகஜமாக பேசிக் கொண்டே கிஷோரின் வீட்டை வந்து அடைந்திருந்தனர். வீடு அவ்வளவு பெரிதாக எல்லாம் இருக்கவில்லை. ஒரு ஹால், ஒரு படுக்கையறை அதனுடன் ஒட்டிய குளியலறை, கிச்சனெட் என மேலைநாடுகளில் அழைக்கப்படும் சிறிய அளவிலான கிச்சன், ஹாலில் இருந்து ஒரு சிறிய பால்கனி.
கிஷோர் வீட்டை முடிந்தமட்டிலும் தூய்மையாக வைக்க எண்ணியதும், கடைசி நிமிஷத்தில் சுத்தப்படுத்த முயற்சித்திருக்கிறான் என்பதும் அப்பட்டமாக தெரிந்தது. “சாரி.. சாரி..வீடு நீட்டா தான் வச்சிருப்பேன். நீங்க வரேன்னு சொன்னதாலே எக்சைட்மென்ட் நிறைய திங்ஸ் வாங்க வெளியே போயிட்டேன். கிளீன் பண்ண டைம் இல்ல. அம் ரியலி சாரி” என சொல்லிக் கொண்டே பொருட்களை ஒழுங்குபடுத்தினான்.
சுஜியும் பரவலாகக் கிடந்த பொருட்களை கொஞ்சமாக சீராக்கினாள். சதீஷின் அன்னையும் உடன் சேர்ந்து கொள்ள, மூவருமாக வீட்டைத் தூய்மையாக்கினர். வேலை முடித்து பெண்கள் இருவரும் பால்கனியில் சென்று அமர்ந்தனர். இதற்குள் கிஷோர் அவர்களுக்கு டீ தயாரித்து கொணர்ந்து கொடுத்தான்.
பருகியபடியே அந்த ஏரியாவை பற்றியும், அங்கே பார்க்க வேண்டிய சில முக்கியமான இடங்களைப் பற்றியும் சுஜியிடம் நிறுத்தாமல் கிஷோர் பேசிக்கொண்டிருக்க, சுஜியின் கண்களோ சதீஷ் எங்கே எங்கே என்பதிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
பத்தடி தூரத்தில் அவன் நின்றிருந்தால் சுஜியின் மனம் தானாக சமாதானம் அடைந்திருந்தது. சிறிது நேரம் கண் பார்வை படும் இடங்களில் அவன் இல்லை எனும் பொழுது மனம் பாரமானது. சட்டென அவன் எதிர் பாட்டவுடன் திரும்ப நிதானமானது. இப்படி அவன் இருக்கும் இடம் பொருத்து தன் அமைதி சீர்குலைவடை சுஜி அப்பட்டமாக உணர்ந்தாள்.
சுஜியின் எண்ணவோட்டம் பற்றி சற்றும் அறிந்திராத சதீஷ், சதீஷ் ஹாலின் சுவற்றில் மாட்டியிருந்த அந்த பெரிய தொலைக்காட்சியில் பேஸ்பால் பார்க்க ஆவலுடன் அமர்ந்து விட்டிருந்தான்.
பெரியவர்கள் இருவரும் கிஷோருடன் அடுத்த நாள் மணப்பெண்ணை காண சந்திக்கச் செல்லும் ஏற்பாடுகளில் மூழ்கியிருக்க, சுஜி அங்கே நிற்பதாக வேண்டாமா என ஒருவித குழப்பத்தில் நின்றிருந்தாள். அவர்கள் குடித்து முடித்து இருந்த டீ கோப்பைகளை எடுத்துக்கொண்டு கிச்சன் செல்லும் சாக்கில் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
கோப்பையை கிச்சனில் அமையப் பெற்றிருந்த இந்த சிறிய சிங்கில் வைத்து கழுவி கொண்டிருக்க பின்னால் அரவம் கேட்டது. சதீஷ் தான் வந்திருப்பான் என சுஜி அறிந்த போதும் உடனே சட்டென்று திரும்பி விடவில்லை. திரும்பாமலேயே நின்றிருந்தாள்.
தொண்டையை மெல்ல செருமிக் கொண்டவன், “சுஜி உங்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றான்.
“கேளு”
“உனக்கு இங்க எல்லாம் கம்ஃப்ர்டபிலா தானே இருக்கு? அம்மா அப்பப்போ இப்படித்தான். உனக்கு எங்க கூட இருக்கிறது ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே? என வினவினான்.
சுஜிக்கு இவன் என்ன இப்படி கேட்கிறான் என்றே தோன்றியது. நான் மகிழ்ச்சியாக இருப்பது அவன் கண்களுக்குத் தெரியவில்லையா என்ன? என நினைத்தாள். சதீஷின் கேள்விக்கு எதுவும் பதில் சொல்லாமல் சுஜி நின்றிருக்க,
“உனக்கு ஏதாவது தேவைப்பட்டா என்கிட்ட சொல்லு. பீல் கான்ஸ்டபிள்”
“நான் அப்படியெல்லாம் நினைக்கவே இல்ல. நீ இப்படி வந்து சொல்றதுதான், நீ தனியா நீ தனி நாங்கலாம் ஒரு குடும்பம் அப்படிங்கிற ஒரு பீலிங் எனக்கு வருது” என எதற்காக கோப்படுகிறோம் என்று தெரியாமலேயே கோபம் எழுந்தது.
“நா என்ன பேசினாலும், அது தப்பா தான் போகுது. நிஜமாவே உனக்கு அனீஸியா இருக்கோ என்னவோன்னு தான் கேட்க வந்தேன்.. ஐம் சாரி” என முகம் சற்றே வாட்டம் கண்டுவிட சதீஷ் மொழிந்தது கேட்டு சுஜிக்கு மனம் சமன்பட்டது.
“ஐ டோண்ட் ஹேவ் எனி பிராப்ளம். ஐ அம் ஹாப்பி சதீஷ்” என்றவள், அவன் இன்னமும் சிரிக்காதது கண்டு, “அப்படி ஏதாவது இருந்தா, சுத்தி எவளோ பேர் இருந்தாலும், உன்கிட்ட வந்து “சதீஷ், ஐ ஃபீல் அனீஸி. என்னை காப்பாத்துன்னு அப்படின்னு சொல்லிடறேன்” என சுஜி சிரிப்புடன் அடுத்த கேள்வி கேட்ட பிறகே சதீஷ் படபடப்பு சற்று குறைந்திருந்தது.
அவன் இதழ்களுடன் சேர்ந்து கண்களும் புன்னகை பூத்தன. அவனது வழக்கமான சிறிய ராயல் சல்யூட்டை செய்துவிட்டு, திரும்பச் சென்று ஹாலில் அமர்ந்து கொண்டான்.
கண்கள் தொலைக்காட்சியை வெரித்தாலும், மனம் சிந்தனை வயப்பட்டிருந்தது. அவனது அன்னை சட்டென முடிவெடுக்கக் கூடியவர். அது அவனது வீட்டில் பழகிப்போன ஒன்று என்பதால் அவனுக்குப் பெரிதாகப் படவில்லை.
ஆனால் முன் பின் சம்பந்தமில்லாத சுஜியை தன்னுடன் வற்புறுத்தி அழைத்து வந்துவிட்டார்களோ? அவளும் பிடித்தம் இல்லாமல் சம்மதம் சொல்லி கடமைக்காக தன் அன்னையுடன் நட்பாக பழகும் குடும்பத்தை இழந்து விடக்கூடாது என்ற கடனுக்காக வந்து இருக்கிறாளோ? என்ற ஐயம் சதீஷ்க்கு நிறையவே ஏற்பட்டிருந்தது
[the_ad id=”6605″]
ஏனென்றால் இந்த ஏழு மணிநேர விமானப் பயணத்தின் பொழுது சுஜி ஒருமுறைகூட சதீஷ் எங்கே இருக்கிறான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என கண்டுகொள்ளவே இல்லை. அவனது ஈகோ அந்த இடத்தில் சீண்டப் பட்டிருந்தது.
“ஏன் ஒரு தடவை திரும்பிப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சா என்ன குறைந்தா போயிடுவா?” என சம்பந்தமே இல்லாமல் மனசாட்சி இவனிடம் கேள்வி கேட்டு குடையத் தொடங்கி இருந்தது. இந்த வீட்டிற்கு வந்த பிறகும் அதே நிலைதான். அவ்வப்போது பார்ப்பது போலத் தோன்றும், இவன் பார்க்கும் சமயம் அவள் வேலையில் மூழ்கியிருப்பாள்.
அதனால் அவ்விடம் விட்டு சீக்கிரம் அகன்று போய்விடத் தோன்றும். அப்போதும் அவள் பாட்டில் அவன் அன்னையுடன் சென்று பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இயல்பாக நடந்து கொண்டிருந்தாள். இவனை சிறிது கூட கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றியது.
அதனாலேயே அவளிடம் தானாகவே வந்து பேசி “நானும் இருக்கிறேன் இங்கே தான். என்கிட்ட கொஞ்சம் பேசு” என வலுவில் சென்று இவனாகவே பேசியிருந்தான். சுஜி திரும்ப பால்கனி சென்ற போது அங்கே அப்போதும் நாளைய நிகழ்ச்சிக்கான பேச்சுகள் தொடர்ந்து கொண்டிருந்தன.
“கிஷோர், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போய் நான் சொல்ற திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துரு” என அடுத்த நாள் பெண் பார்க்க போகும் பொழுது எடுத்துச் செல்லவேண்டிய பொருட்களை பட்டியலிட்டு கிஷோரிடம் நீட்டினார் அவனது அன்னை.
“ஆப்பிள் இரண்டு கிலோ, மாதுளம் பழம் 2 கிலோ, ஆரஞ்சு ரெண்டு கிலோ, டிரை ஃப்ரூட்ஸ் மிக்செட், ஒரு கிலோ முந்திரி ஸ்வீட், காஜு கத்லி ஒரு கிலோ. “ என பட்டியலை வாசித்த கிஷோர், “சும்மா ஃபார்மலாதான் பார்க்க போறோம். எதுக்கும்மா இவளோ கொண்டு போனும்?” சற்றே தயங்கினான்.
“நாளைக்கு தானே பொண்ணு பார்க்க போறோம். அதுக்குள்ள நிச்சயதார்த்தம் பண்ண போற மாதிரி எதுக்கு இவ்வளவு? அந்தப் பொண்ணுக்கு என்ன பிடிக்காமல் போயிருச்சுனா?” என்ற ஒருவித பயத்திலேயே இருந்தான் கிஷோர்.
ஆனால் அவனது அன்னை அப்படி லேசாக விட்டுவிடவில்லை. “முத முறையா அந்த பொண்ணை நாங்க நேர்ல பாக்க போறோம். அப்பயெல்லாம் கையை வீசிட்டு போக முடியாது. அந்த பொண்ணுக்கு உன்ன பிடிக்கலைன்னு சொன்னாலும் இதெல்லாம் கையில் கொடுத்து, நல்லா சாப்பிட்டுட்டு மனசை தேத்திக்கிட்டு வேற உனக்கு பிடிச்ச பையனா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ. அப்படின்னு சொல்லிட்டு வந்துருவேன். நீ அதனால செலவுக்கு பயப்படாம போயி அந்த லிஸ்டில் இருக்கிறது எல்லாம் வாங்கிட்டு வா” என மகனை அனுப்பி வைத்தார்.
கிஷோர் வேறு வழியில்லாமல் சதீஷுடன் சென்று அன்னை கொடுத்திருந்த லிஸ்ட் படி பொருட்களை வாங்கி வந்திருந்தான். “ கிஷோர் இங்க மல்லிகைப்பூ பந்து எங்காவது கிடைக்குமா?” என வீடு திரும்பியதுமே வினவிய தாயை முறைத்தான் சதீஷ்.
“மா படுத்தாத மா.. மல்லிகை பூவெல்லாம் கிடைக்காது.” என பட்டென மொழிந்தான். அவன் அன்னை அதை சட்டை செய்யவே யில்லை.
“டே கிஷோர். நீ கிருஷ்ணர் படத்துக்கு மாலை தொடுக்க ஒரு பெரிய பெரிய ரோஸ் வாங்கி கொடுப்பியே, அந்த மாதிரி ரோஸ் இருந்தால் அதையும் சேர்த்து வாங்கிட்டு வந்துரு” என்றான் தன் பெரிய மகனிடம்.
“அம்மா அது நான் எங்கேயும் வாங்கிட்டு வரலை. கீழ இருக்குற கார்டென்ல பூக்கற பூ அது. நீ ரொம்ப நச்சுவியேன்னு ரெண்டு மூனு பூ பறிச்சுத் தருவேன்.”
“சரிடா.. அதே மாதிரி பத்து நல்ல ரோசா பார்த்து பறிச்சுட்டு வா.”
“எதுக்குமா?அவனா இருக்கப் போக நீ சொல்லறதெல்லாம் செய்யறான். ஆனாலும் நீ ரொம்பத்தான் படுத்தறமா” என சதீஷ் மொழிந்தான்.
“அவனோட வருங்கால பொண்டாட்டிக்குங்கவும் எப்படி ஓடி ஓடி வேலை செய்யறான். நாளைக்கு நீயும் உனக்கு ஒருத்தி வர்றப்போ இப்படி தான் ஓடுவடா.. நான் பார்க்கத்தானே போறேன்” என சிரிப்புடன் சொன்னார் சதீஷின் அன்னை.
சுஜியின் முகத்தை சட்டென ஏறிட்டவனுக்கு அவள் சில நொடிப் பொழுது சதீஷின் கண்களை சந்தித்தவள், அதில் தோன்றிய மகிழ்சியும், சிரிப்பும் மின்சாரம் போலத் தாக்க, முகத்தை வெளியே திருப்பிக் கொண்டாள். சதீஷ் அடுத்து பதில் சொல்லும் முன்னர், “சுஜி” வாய் வரை வந்து விட்ட வார்த்தைகளை சொல்லிவிடும் முன்னர் சதீஷின் தந்தை தன் கைப்பேசியில் ஒரு யூடியூப் வீடியோவுடன் சதீஷின் பார்வையை மறைந்திருந்தார்.
“இதான் அந்த பூ கட்டற டெக்னிக். உன் அம்மா ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்தா. அதை ட்ரை பண்ணி பார்க்க போறான்னு நினைக்கிறேன்” என அவன் முகத்துக்கு நேரே கைப்பேசியை நீட்டியிருந்தார்.
“இந்த அப்பாவுக்கு ஐஃபோன் வாங்கிக் குடுத்தது எவளோ தப்பு.. சரியா அவ ஃபேஸ் ரியாக்ஷன் பார்க்கறதுக்கு முன்னாடி, ஃபோனை நீட்டியிருக்கார்””என மனதினுள் தன் தந்தையை திட்டியவன்,
“போங்க. போங்க.. உங்க ரெண்டு பேர்த்துக்கும் வேற வேலையில்ல.” என கைபேசியை பாராமல் திரும்ப தொலைக்காட்சியில் ஐக்கியமானான்.
“உன்னையும் புது பொண்ணையும் வச்சு தான் எல்லா டெஸ்டும் பண்ண போறா” என தன் சிரித்துக் கொண்டே தன் மனைவியை வம்பிழுத்தார். இந்த சம்பாஷணை எதிலுமே கலந்து கொள்ளாமல் அமைதியாக வெளிப்பக்கம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் சுஜி.
மனம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது. “அம்மா அப்படி சொன்னதும் எதுக்கு என்னைத் திரும்பிப் பார்க்கற? அப்போ உனக்கும் இந்த ஸ்பார்க் வைப்பேரஷன் இதெல்லம் இருக்குன்னு தானே அர்த்தம்? அப்பறம் எதுக்கு விவேக்குக்காக நாம கவலைப்படனும்?” என்று நினைத்தாள்.
முகத்தில் மோதிய குளிர்ந்த காற்று மனதை இதமாக்கியது. இந்த மனமகிழ்ச்சியும் நிறைய நேரம் நீடிக்கவில்லை. “இதெல்லாம் பண்ணிட்டு நாளைக்கு என் ஃப்ரெண்டு முக்கியம்னு டயலாக் பேசிப் பாரு.. உன் மண்டையில் அடிச்சு “ அப்பறம் ஏண்டா என்னைப் பார்த்த அன்னைக்குன்னு” கேட்பேன். “ என இருவேறான உணர்வுகள் மனதை அக்கிரமிக்க, சுஜியின் கவனத்தை சதீஷின் அன்னையின் குரல் கலைத்தது.
“ஏம்மா சுஜி. நாளைக்கு புடவை கட்டறதா சொன்னியே? என்ன கலர் சுஜி?” என்றவர், “என்ன கலர் ரோஸ் அப்படின்னு கேட்டு அந்த பொண்ணுக்கும் சேர்த்து ரோஸ் வாங்கிட்டு வந்துரு கிஷோர்” எனக் கூறினார்.
சதீஷ் தன் அண்ணனுடன் சென்று பொருட்களை வாங்கி வந்தான். பத்மாவதி அதிலிருந்து ரோஜா பூக்களை மட்டும் தனியே எடுத்து சென்று பால்கனியில் கால்நீட்டி அமர்ந்துகொண்டு பூத்தொடுக்க ஆரம்பித்தார்.
[the_ad id=”6605″]
அவருடன் சென்று சுஜியும் ஒத்தாசை செய்வதற்காக உடன் அமர்ந்தாள். இரண்டு பெரிய தட்டு கொண்டு வரச் சொன்னார். “இந்த பூ இதழ்களை பிச்சி தனித்தனியா உருட்டி என் கைல குடு சுஜி” என மொழியை அதற்கு தகுந்தார் போல சுஜியும் செய்து முடித்தாள்.
யூடியூபில் தான் முன்னர் பார்த்துக்கொண்டிருந்த ரோஜா பூக்களை வைத்து செண்டு தயாரிக்கும் முறைப்படி பூக்களை வாகாக மடித்து உருட்டி உருட்டி கட்ட துவங்கினார். மெதுவாகத்தான் செய்தார் எனினும் சிறிது நேரத்தில் அழகிய சிறிய பூச்செண்டு உருவாகியிருந்தது.
கல்யாண பெண்ணிற்கு என நல்ல அடர்ந்த சிவப்புநிற ரோஜாக்களில் இதழ்களை தனியே பிரித்து அவற்றை மடித்து பூமாலை போல தொடுத்திருந்தார். “ப்ஃபிட்ஜில வச்சிரு” என சுஜியிடம் கொடுத்தார்.
அதேபோன்று சுஜிக்கு அவள் எடுத்து வந்திருந்த அடர் பிங்க் நிற பட்டுப் புடவைக்கு ஏற்றவாறு அவளுக்கும் பூச்செண்டு தொடுத்து கொடுத்திருந்தார். “எனக்கு எதுக்கு ஆன்ட்டி? ரொம்ப நேரமா உட்கார்ந்து முதுகு வலிக்கும்” என சுஜி மென்மையாக மறுத்தாள்.
“பரவால்ல சுஜி.. ஆசையா செய்யறா.. விடேன்” என பதிலழித்த சதீஷின் தந்தை, “அவளுக்கு எப்போதுமே தனக்கு பொண்ணுங்க இல்லைன்னு ரொம்ப ஏக்கம். விதவிதமா டிரஸ் எடுக்க முடியல, ஸ்டைலா தலை பின்னி பூ வைத்து அழகு பார்க்க முடியல அப்படின்னு எப்பவுமே வருத்தப்படுவா” என தன் மனைவியின் அருகில் சென்று கீழே அமர்ந்தார்.
“அதனாலேயே சதீஷ்க்கு மூணு வயசு வரைக்கும் பொண்ணு டிரஸ் தான் போட்டு போட்டு விடுவா. தலை பின்னி பூ வச்சி பொட்டு வச்சு, அது ஆம்பள பையன் அப்படி என்கிறது நிறைய பேருக்கு தெரியாது. அப்புறம் பெரிசாக பெரிசாக தான் அதெல்லாம் குறிச்சுக்கிட்டா” என சொல்லி நகைக்க, அந்தச் சிரிப்பில் பத்மாவும் சேர்ந்து கொண்டார்.
“விடு அது ஏதோ ஆசையா செய்யறா செய்யட்டுமே” என சதீஷின் தந்தை மொழியை அவர் கூறிய செய்தியைக் கேட்ட சுஜிக்கு சிரிப்பாக இருந்தது. இவையெல்லாம் சதீஷின் காதுகளில் விழுகின்றனவா என அவனைத் திரும்பிப் பார்க்க, அவனோ ஒரு கொலை வெறிப் பார்வையை தன் தந்தை மேலும் நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்து கட்டிக்கொண்டிருந்த சுஜியின் மீதும் வீசினான்.
“டோட்டல் டேமேஜ் பண்ணியாச்சு!நிம்மதியா இருங்க இரண்டு பேரும்” என சத்தமாக சொன்னவன் சுஜியின் கண்களை சில நொடிகள் இமைக்காமல் பார்த்த பின் திரும்பி தொலைக்காட்சியை நோக்கி அமர்ந்துகொண்டான். அன்றைய மாலைப் பொழுது மிகவும் இனிமையாக கழிந்து போனது.