கொல்லை துளசி எல்லை கடந்தால் 29-1 “விழி” மூன்றாவது முறையாக அலர்விழியை ஒருவன் ஏலம் விட, சிந்தனையிலிருந்தவளின் காதில் எபியின் விளிப்பு எட்டவில்லை. எழுந்து வந்தவன், “என்ன பண்ற டி?” தோளை பிடித்து உலுக்கவும் “என்ன மனோ? ஏதாவது வேணுமா?” என்று இயல்புக்கு வந்தவளின் பார்வையில் விழுந்தது, காபித் தூள் கலந்த தோசை மாவு. “என்ன ஆச்சு? கவனத்தை எங்கேயோ வச்சுகிட்டு அடுப்பங்கரையில நின்னா அது ஆபத்தில முடியும் விழி!” “ப்ச்! […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 28 தலைகள் இரண்டும் ஒன்றாய் ஒட்டிப் பிறந்த இரட்டையரை நல்ல முறையில் பிரித்து மாதம் ஒன்றாகியிருக்க, இன்று, ஒன்றாய்த் தூக்கி வரப்பட்டப் பிள்ளைகள் தனித்தனியே அவரவர் இருக்கையில். ஒருவனின் தனிப்பட்டத் திறமையோ உழைப்போ இல்லை. நூறு கைதேர்ந்த மருத்துவர்களும் செவிலியரும் காட்டிய அன்பினாலும் அக்கறையினாலும் பிள்ளைகள் இருவருக்கும் புதுவாழ்வு புலர்ந்தது. “சொன்ன மாதிரியே சாதிச்சு காட்டிட்டீங்க தம்பி! எப்போ… என்ன வேணும்னாலும் தயங்காமக் கேளுங்க தம்பி. என் […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 27_2(cont..) இலக்கியாவின் இருப்பிடம் வந்து அக்கடா என்று கால் நீட்டி அமர, பயணச் சீட்டு வந்ததற்கான அறிகுறி வந்தது கைப்பேசியில். பிரவீனுக்கு மட்டுமே பயணச் சீட்டிருந்தது. “நீ இலக்கியாவோட இருந்துட்டு நாளைக்கு வா.” என்ற செய்தி இவளுக்கானது. எபிக்கு அழைப்பு விடுக்க அவன் எடுத்தானில்லை. இலக்கியாவிடம் பேசி வந்தவள், பிரவீன் கைப்பேசிக்குப் பயணச் சீட்டை அனுப்பி, “நீங்க நியூ ஜெர்ஸிக்கு வந்துட்டு போக வேண்டாம் டாக்.. டிக்கெட் […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 27_2 “மனோ..?” “சொல்லு விழி.. என்ன இந்நேரம்? சாப்டாச்சா?” வாரத்தின் இரண்டாம் நாளே ‘மிஸ் யூ’ கூற அலர்விழி தன்னை கைப்பேசியில் அழைத்திருக்க மாட்டாள் என்று தெரியும். இருந்தும் மதிய வேளையில் அழைக்க வேண்டுமென்றால் விஷயம் இருக்கவேண்டுமே.. “மனோ..” மீண்டும் இழுத்தாள். அவள் தயங்கக் காரணம் இருந்தது. அவள் கூற இருக்கும் விடயத்தைக் கூறியபின் இவன் தொனி இப்படி இருக்காதே! “என்ன டீ இவ்வளவு […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 27 மூன்று வாரப் பிரிவு இன்றோடு முடிந்துவிடும். காணொளியில் கண்டிருந்தாலோ.. கண்சொக்கி இமை மூடும்வரை ஆசை தீரப் பேசி இருந்தாலோ இவ்வளவு தாக்கம் இருந்திருக்குமா தெரியவில்லை. இது இரண்டுமே நடவாது போகவே பிரிவின் தாக்கம் அதிகம் இருவரிடமும். “மிஸ். அலர்விலி.. வாட்ஸ் கோயிங் ஆன்?” வேறு யார்? ஷிவானியேதான்! மீட்டிங்கிங்கில் அமர்ந்து கொண்டு கனவு கண்டால்? இன்று வருவான். விமான நிலையம் செல்லாம்! என்ற ஆசை […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 26 “மூணே வாரம் தானே..”, பெண்ணவளின் அடங்க மறுத்த தலைமுடியை வருடிக்கொண்டே கேட்க, “ம்ம்ம்..”, என்றாள் அலர்விழி, சிவந்த மூக்கை உறிஞ்சிக்கொண்டே. “கிளம்பற நேரம் என்னது இது.. குட்டி குழந்த மாதிரி கண்ண கசக்கிட்டு?”, கேட்டுக்கொண்டே பனித்த இமைகள் இரண்டிற்கும் இடம் பெயர்ந்து மனோவின் விரல் வருடல். மூக்கை உறிஞ்சிக் கொண்டே, “மிஸ் பண்ணுவேன் மனோ”, என்றாள் பெண். அடுத்த நான்கு மணி […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 25_2 கடலூர்: அலர்விழியோடு பேசி முடித்தபின், பெண்ணை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆவல் பெற்றவர்களுக்கு என்றால்.. பாட்டிக்கோ, அவளைப் பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கம். சௌந்தர்யா பெற்றாலும் மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்த அன்னை இவர் தானே. சகுந்தலா பாட்டிக்கு முதுமையின் நோவுகள் அவ்வப்போது எட்டிப்பார்க்க, பேத்தியைக் காணவேண்டும் என்ற தவிப்பு அதிகமானது. ‘கண் மூடும் முன் பார்த்துவிட மாட்டோமா?’ என்ற தவிப்பு! உடலில் வலிகள் பல! அதிலும் […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 25_1 வானம் எங்கும் வண்ண தீப்பொறி மழை. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஆயிரம் கண்களும், கைப்பேசி கேமிராக்களும். ஜூலை 4, அமெரிக்கர் தங்கள் சுதந்திர தினத்தை வெகு விமர்சியாக வான வேடிக்கை மூலம் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அன்றைய இரவு நேர வான வேடிக்கையை வேடிக்கை பார்க்கவென்றே ஜனம் குவியும். ஜன நெரிசல் அலர்விழிக்கு வேண்டாம் என்று நினைத்தானோ.. இல்லை அவளின் அலாஸ்கா கப்பல் பயணம் முன் அதைப் […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 24 (cont..) தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவனும் கிளம்ப, இருவருமாக வசந்த காலத்தின் அழகைப் பருக ஆரம்பித்தனர். பல வகை மலர்களில்.. அதன் நிறங்களில் தன்னை தொலைத்தாள். தோட்டம் முழுவதும் பூத்துக் குலுங்கிய மெக்னோலியாவில் மெய் மறந்தாள். அவள் அளவிற்கு அவன் அதில் லயித்துப் போகவில்லை என்றாலும் கூட்டிக் கொண்டு ஒவ்வோரு இடமாகச் சுற்றினான். “ஏன் மனோ ரொம்ப போர் அடிக்குதா? உங்களுக்கு போதும்ன்னா வீட்டுக்கு போலாம் […]
Readmoreகொல்லை துளசி எல்லை கடந்தால் 24 கடும் குளிர் நீங்கி பனி மெல்ல மெல்ல உருகவும் வெள்ளை சட்டையை நீக்கி, அதன் பச்சையில் வண்ண பூ போட்ட சட்டைக்கு பாஸ்டன் நகரம் மாறிக் கொண்டிருந்தது. பனியில்லை என்றாலும், சூரிய ஒளி இருந்தாலும், திறந்திருந்த கம்பியில்லா ஜன்னல் வழி தன்னை தீண்டிக் கொண்டிருந்த மிதமான குளிர் மனதிற்கு இதமாகத்தான் இருந்தது அலர்விழிக்கு. வந்து சில வாரங்களிலேயே ஈஸ்டர் என்று மூன்று நாள் விடுப்பு கிடைக்கவும் […]
Readmore