அத்தியாயம் – 6 இயற்கை இயற்கை….. ஆம் அது தான் அனைத்து வாழ்வாதாரங்களுக்கும் அடிப்படை. நம் மனதில் எத்தனை பெரிய துயர் இருந்தாலும் அவற்றையெல்லாம் எளிதில் நீக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்தது இயற்கை. மனிதன் தனது உச்சக்கட்ட வளர்ச்சியாகக் கருதக்கூடிய அறிவியலின் மூலம் விளக்க முடியாத கேள்விகளுக்குக் கூறும் பதில்தான் இயற்கை. உதாரணமாக, பறவைகள் ஏன் தங்களது இன்னிசையால் நம்மை மகிழ்விக்க வேண்டும் ? இவ்வுலகில் பல்வேறு உயிரினங்கள் ஏன் உயிர் வாழ வேண்டும் அவற்றால் […]
Readmoreஅத்தியாயம் – 5 கிரகம் : பூமி நாம் அனைவரும் பல நேரங்களில், பல இடங்களில் இந்தச் சூழ்நிலையைச் சந்தித்திருப்போம். அதாவது, நாம் அறிந்த செய்திகளைக் கொண்டு நமது அறிவால் ஒரு கோட்டையைக் கட்டி வைத்திருப்போம். அப்படிப்பட்ட கோட்டையின் அடித்தளம், திடீரென்று ஒரு புதைகுழியாக மாறினால், அந்த மொத்த கோட்டையுமே சரிந்துவிடும். நந்தினியின் செமினார்–ஐ கவனித்துவிட்டு வந்த ஆதித்யனும் தற்போது தன் மனக்கோட்டை சரிந்த நிலையில் தான் இருந்தான். முதலில் ஆரியன் நந்தினியைப் பற்றிக் கூறியபோது, […]
Readmoreஅத்தியாயம் – 4 படபடவென்று இதயம் அடித்துக் கொண்டிருந்தது. காட்சிகள் மாறினாலும், காலங்கள் மாறினாலும், கதை மாந்தர்கள் மாறினாலும், மாறாமல் இருப்பது அந்த மலர்களின் குதூகலமான குரல்களே…… தங்களுக்குள் பேசிக் கொண்டும், தாங்கள் இருக்கும் இடத்தில் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டும் காலத்தைக் கழிக்கின்றன… ஆனால், தற்போது அவைகள் இருப்பது ஒரு பெரிய பூங்காவனத்தில். அங்கே இருந்த ஒரு நீர்ச்சுனையைச் சுற்றி செடிகளும் மரங்களும் அழகாக செறிந்து நிறைந்திருந்தன. அங்கிருந்த ஒரு கல் மேடையில் அழகான இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். […]
Readmoreஅத்தியாயம் – 3 மாற்றம் இந்த உலகிலே மிகவும் வருந்தக்கூடிய விஷயம் என்னவென்றால், நாம் ஒரு சரியான பாதையில் சென்று கொண்டிருப்போம். ஆனால், அது திடீரென ஒரு வித்தியாசமான பாதையாக, புதுமையான வழியாக, யாருமே பயன்படுத்தாத மார்க்கமாக இருந்தால் சாதாரண பார்வையாளர்களுக்கு அது ஓர் அர்த்தமற்ற விஷயமாகவே தோன்றும். இதற்கான முதன்மை காரணம், நமது மனித மனது தான். நம்மில் பலர் ‘மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும்’ என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் யோசிப்போம். ஆனால், அதே […]
Readmoreஅத்தியாயம் – 2 பரந்து பட்ட வானம்… அதில் சின்னஞ்சிறு நட்சத்திரங்கள்…வெகு தூரத்தில் உள்ள கோள்கள் என்று குறிப்பிட வேண்டுமோ ? என்ன ஒரு அதிசயம்!!… அதிகாலை நேரத்தில் எப்படி வானத்தில் விண்மீன்கள் தெரியும்? இந்த யோசனைகளுக்கு இடையே ஒரு புதிய இடத்திற்குள் நுழைய, அந்த இடமே அழகிற்கு ஊற்று போல் காட்சியளித்தது. வண்ண மலர்கள் கண்ணசைத்துத் தங்களுக்குள் பேசிக்கொள்வது போல் இருந்தது. முடிவில்லாப் பாதையில் இலக்கில்லாமல் செல்வது போல் இருந்தது. தூரத்தில் ஒரு சிறுவனும் சிறுமியும் […]
Readmoreஅத்தியாயம் – 1 பரிணாம வளர்ச்சி பிரபஞ்சம்… இந்த ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கியிருக்கும் இரகசியங்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவை. இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகியிருக்கும் என்பது குறித்து பல்வேறு கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமான இரண்டு கோட்பாடுகள், Steady state theory மற்றும் Big Bang theory. முந்தையது, “இந்தப் பிரபஞ்சம் இருந்தது; இருக்கின்றது; எதிர்காலத்திலும் இருக்கும்” என்று கூறியது. ஆனால், பிந்தையது, “இந்தப் பிரபஞ்சம் ஒரு பெரு வெடிப்பால் உருவாகியது” என்று கூறியது. பல […]
Readmore