பூலோக சொர்க்கம், கடவுளின் நாடு, நறுமணத்தை கொண்ட பூமி என்று பல சிறப்புகள் கொண்ட அழகிய நாடு தான் கேரளா. வாழும் போதே சொர்க்கத்தில் இருக்கும் ஒரு சூழல் கொண்ட கேரளாவின், கிளிமானூர் இன்னும் ஊரில் தான் கதையின் தொடக்கம்.
உலகில் எங்கு சென்றாலும் இந்தியனை காணலாம் அதே போல் இந்தியாவில் எங்கு சென்றாலும் தமிழனை காணலாம். அதே போல் தான் பத்து வருடம் முன் சங்கரன் குடும்பம் வேலை காரணமாக இங்கே கிளிமானூரில் குடி வந்தனர்.
சங்கரன், ஆரம்பத்தில் சாதாரண கிளெர்காக துடங்கிய அவரது வாழ்க்கை தற்பொழுது கிளிமானூரில் இருக்கும் முக்கிய வங்கியின் மேலாளராக தன்னோட உழைப்பால் உயர்ந்து இருக்கிறார். அவரது மனைவி செல்வி. குடும்ப தலைவி சற்று பிடிவாதம் அதிகம்.
இவர்களுக்கு இரு மகள்கள். மூத்தவள் ப்ரியங்கா, இருபத்தி ஆறு வயதாகும் அழகிய அம்மாவின் இளவரசி. கடை குட்டி கல்பனா, பத்தொன்பது வயதாகும் பருவ பெண்.
இது தான் பா நம்முடைய நாயகியின் குடும்பம். அவர்களை பற்றி கதையின் போக்கில் காணலாம்.
கன்னியாகுமாரி, முக்கடல் சங்கமம் ஆகும் இந்தியாவின் கடை கோடி மாவட்டம். குளச்சல் என்னும் கடற்கரை நகரை தனது பூர்விகமாக கொண்டு இயங்குகிற மித்ரா கார்மெண்ட்ஸ் என்ற இம்போர்ட் எஸ்போட் கம்பெனியின் சொந்தக்காரன் தான் நமது ஹீரோ.
விஸ்வமித்ரன் வான்மதி தம்பதியரின் தவப்புதல்வர்கள் தான் கார்த்திக், ராகவ்.
கார்த்திக், இருபத்தி எட்டு வயதாகும் இளம் சிங்கம். தந்தையின் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் மூன்று வருடன் முன் முழு பொறுப்பை ஏற்று கொண்டு கன்னியாகுமரியில் மட்டுமே இருந்த அவர்களது நிறுவனத்தை இன்று இம்போர்ட் எஸ்போட் கம்பெனியாக உலகின் எல்லா இடத்திலும் கம்பனியின் பிரென்ச் வைத்து இருக்கான்.
இளையவன் ராகவ் இருபத்தி ஆறு வயது. அண்ணன் இருக்க பயமேன் என்று ஊரை ஜாலியாக சுற்றி கொண்டு இருக்கான்.
அடுத்து, சங்கமித்ரா விஸ்வமித்ரனின் ஒரே தங்கை.கணவன் சரில்லாமல் ஒரு நாள் குடித்து விட்டு வண்டி ஒட்டி கொண்டு வர அவனை எமன் வலை விரித்து அவனின் உயிரை எடுத்து கொண்டார். அவர் சாகும் போது சங்கமித்ரா ஏழு மாதம் கருவை சுமந்து கொண்டு இருந்தாள். அன்று முதல் இன்று வரை அவளை பார்த்து கொள்ளுவது விஷ்வமித்ரன் தான். சங்கமித்ராவிற்கு ஒரே மகள் ரோஷினி, இருபத்தி மூன்று வயதாகும் அழகு பேதை.
இது தான் நம்முடைய நாயகனின் குடும்பம். இதில் யாரு யாருக்கு ஜோடி எல்லாம் கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த இரண்டு குடும்பத்தில் நடக்க போகும் காதல் கல்யாணம் தேடல் ஊடல் அதை பற்றி தான் கதை. ரொம்ப சாதாரணமானா கதை தான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமால் ஒருவர் மேல் வருவது தான் உண்மையான காதல். பிரதிபலன் எதிர்பார்த்து ஒருவர் மேல் அன்பு கொண்டால் அது வியாபாரம் மட்டுமே.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னவனை தாய் போல் சுமப்பவள் தான் நம் நாயகி.
*******************************************************************************************
ஹாய் எல்லாருக்கும் வணக்கம். இது என்னோட முதல் கதை. எனக்கு எழுத எல்லாம் தெரியாதுங்க எதோ ஆசையில் எழுத போறேன். உங்க எல்லாரோட சப்போர்ட் கண்டிப்பா வேண்டும். உங்க கருத்து அது எதுவா இருந்தாலும் பரவாயில்லை கண்டிப்பா சொல்லுங்க அப்ப தான் என்னோட தவறை மாற்றி கொள்ள முடியும்.
புது வருடம் தொடங்கியதும் என்னோட கதையை ஸ்டார்ட் பண்றேன்.
நன்றி
என்றும் அனைவரின் நலம் விரும்பும் லஷ்மி,
Attachments
Last edited: