தம்பதிகள் மனம் விட்டு
தன் எண்ணங்களை
தயக்கமில்லாமல் பகிர்ந்து
தன்னிலை விளக்கி விட்டால்
துன்பம் ஏதும் இல்லை....
தாம்பத்தியம் இது தானே.....
தாங்கும் மனைவியும்
தாங்கிக் கொள்ள கணவனும்
தோழமையோடு இருந்து விட்டால்
தீராத மோகம்
திகட்ட திகட்ட காதல்.....
தித்திக்கும் குடும்பம்.....
பறக்க சிறகுகள் இருக்கிறது என்று பறந்து கொண்டே இருக்க முடியாது இளைப்பாற கூடும் வேண்டும் என்பதை ரொம்ப அருமையாக சொல்லி உள்ளீர்கள் சிஸ்டர். இன்றைய எபி ரெண்டும் ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. எத்தனை தூரம் சென்றாலும் எத்தனை உயரம் பறந்தாலும் திரும்ப நமது கூடு அடையவேண்டும். அந்த கூட்டுக்குள் இருக்கும் மகிழ்ச்சி தான் நிரந்தரம்.