ஷோபா..வாழ்த்துகள்.. மிக அருமையான எழுத்து.படிப்பவர்களின் உணர்ச்சியுடன் கதையில் ஆழ்ந்து போக வைத்து விட்டீர்கள்.
First 3 ud படிச்சுட்டு கதையின் போக்கு கொஞ்சம் பிடிபட்டவுடன் தொடர பயந்து விட்டு விட்டேன்.
பிறகு fb பார்த்து கோமல் மூர்த்தி சாரை பார்த்ததில் இருந்து தொடர ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு பதிவும் கல்வெட்டில் செதுக்கியது போல மூர்த்தி சர் அண்ட் துளசியின் வாழ்க்கை கண் முன்னே விரிகிறது.
துளசியின் பயம்,அழுகை,வேதனை,மூர்த்தி சாரை பார்த்த பின் அவளின் காதல்,கொஞ்சல், அவள் வித விதமாக அழைக்கும் மூர்த்தி சார் ரொம்பவும் அருமை.
மூர்த்தி சார் பரட்டையாய் கோமலை பார்த்து தன் துளசியாய் அவளை மாற்றி அவளின் தாசனாக மாறிப்போவது அற்புதம்.
சத்யன் நட்பின் அழகு.செல்வம் அருமை தம்பி...மணி குடும்பத்தின் கோடாரி...
மணி திரும்பி வந்ததில் இருந்து மறுபடியும் பக்...பக்..னு ஆகி போச்சு..அதும் லாஸ்ட் 3 பதிவுகள்..இதயம் வெளியே எகிற வைத்து விட்டீர்கள்..
படிக்கவும் பயம்..படிக்காமல் இருக்கவும் முடியல...துளசிக்கு என்ன நடந்ததுன்னு தெரியல..ஆனால் அவள் உயிரோடு இருக்கணும் என்றே தோன்றியது..
சினிமாவில் ஒரு மகாநதி என்றால் நாவல்களில் செம்புலம் சேர்ந்த நீர் தான் மனதில் தோன்றும்.
மிக அருமையா எழுதி உள்ளீர்கள்.மனமார்ந்த வாழ்த்துக்கள்.