பிரகாஷோட அம்மாவையெல்லாம் இன்னுமும் நாக்கு மேல பல்லைப் போட்டு பேச விட்டுருக்கா பாருங்க சாலா, அது தான் அவ செய்யற பெரிய தப்பு.
அட அறிவுகெட்ட சக்கு (மாமியார் பதவி எல்லாம் இனி கிடையாது சாலா பொறுத்தவரை), நீங்க இப்பவும் சொத்தை எனக்கு கொடுக்கலை உங்க குலக் கொழுந்துக்கு தான் குடுக்கறீங்கன்னு சொல்லி அவங்க மேற்கொண்டு பேச முடியாதபடி நல்லா வாயை கிழுச்சு விட்டுருக்கணும்.
அவ சொத்து கேட்டாளா இல்லை பிரகாஷாக்கு கொடுக்க கூடாதுன்னு சண்டை போட்டாளா? உங்க வீட்டுக்காரர் எடுத்த முடிவு தானே இது? நாராயணன் அவரோட தேவைக்கு வீட்டை விற்காத வரைக்கும் எத்தனை காலம் கழிச்சும், பேரப்பிள்ளைகளுக்கு சட்டப்படி உரிமை கேட்க வழி இருக்கு. வேணும்னா உன் யோக்கிய பையனை case போட்டு அப்பன் கிட்ட இருந்து சொத்து வாங்கிக்க சொல்லு.
உன் பையன் சாலா நகையை உங்க தேவைக்கு எத்தனை தடவை அடகு வெச்சுருப்பான். அதுக்கு மட்டும் உரிமை இருந்துதா உன் பையனுக்கு. அதைக்கூட அவ கேட்ட பின்ன தான் திருப்பி கொடுத்தான் அந்த அயோக்கியன்.
இதையெல்லாம் சாலா, -"உன்னோட பொறுக்கி பையன் கிட்ட நான் ஜீவனாம்சம் கூட வாங்கலை. இந்த சொத்து என் மகனுக்காக வாங்கறது நான் முறைப்படி வந்து இந்த வீட்டுல குப்பை கொட்டுனதுக்கான அடையாளம் அவ்வளவு தான்ன்னு"-நெஞ்சுல ஈட்டி ஏத்துற மாதிரி சொல்லி புரிய வெச்சுருக்கணும்.
இந்த பாண்டியம்மா, சித்ராக்கெல்லாம் இன்னும் என்ன தான் வேணுமோ.
சித்ராக்கு "தமக்கை வாழ்வை காத்த தியாகி"-ன்னு பாராட்டி ஒரு சால்வையை போத்தி வீட்டுக்கு அனுப்பி வைம்மா சாலா. அப்பாவாச்சு அவளோட பேராசை அடங்குதான்னு பார்ப்போம்.
முக்கியமா பிரகாஷ் வந்து தன் பூப்படைந்த மகளை பார்க்க வருவதற்கு முன் சாலா அஞ்சு கிட்ட பொதுவா சொல்லி வைக்கணும். நாற்பது வயது கடந்த சில/பல ஆடவர்களின் பொறுக்கித்தனத்தை பற்றி.
இது நான் பிரகாஷ் பெற்ற மகளைத் தப்பா பார்க்க வாய்ப்பிருக்கு என்ற பொருளில் சொல்லலை. மத்திய வயதில் உள்ள பிரகாஷ் போன்றவர்கள் தங்கள் அனுபவத்தால் அவர்களுடைய கேவலமான சபல புத்தியை அழகாக முகமூடி அணிந்து மறைக்க வல்லவர்கள். அப்பன் செஞ்சது எந்த விதத்திலும் மகளை பாதிக்காமல் இருக்க ஒரு எச்சரிக்கை செயலா சொன்னேன்.