அலை – 11
அறையினுள் வந்த தம்பதிகளை அதிர்ச்சியோடு பார்த்தவன் தன்னிருக்கையில் இருந்து தன்னைப்போல் எழுந்து நின்றதை கவனிக்கவில்லை.
ரிஷியை பார்த்ததும் யோசனையில் புருவத்தை சுழித்த நேத்ராவின் பெற்றோர் அவனை நெருகியதும் தான் தன்னை உணர்ந்தான் ரிஷி. சுதாரித்து தன்னிருக்கையில் அமர்ந்து,
“வாங்க...” என அமர்த்தலாக அழைத்தவன் அவர்களை எதிர் இருக்கையில் அமரும்படி காண்பித்தான்.
ரிஷியின் மாமா என்ற அழைப்பு அவர்களை எட்டினாலும் அதை கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை .
வேண்டாம் வேண்டாம் என நினைத்தாலும் கேட்காதே என உள்ளம் உரைத்தாலும் தன்னை மீறி கேட்டேவிட்டான்.
“நேத்ரா உங்களோட டாட்டரா?...” சந்தேகமில்லை என்றாலும் வாய்வார்த்தையாக கேட்க அவனின் உள்மனம் விரும்பியது.
“ஆமா, நேத்ரா எங்க பொண்ணுதான். என்ன விஷயமா எங்களை வர சொன்னீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?...”
நேத்ராவின் தாய் ஆண்டாள் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட ரிஷிக்கு என்னவோ போல் ஆகிற்று.
அவர்களின் அந்நியபார்வையில் நொடியில் தன்னுடைய ஆர்வமான முகபாவனையை மாற்றி நிமிர்வாக கம்பீரமாக அமர்ந்தவன் கண்களில் என்கிட்டயேவா? என்பதை அவர்களை பார்த்தவன்,
“விஷயம் இருக்கு....” என்றவன் நடந்ததை விவரிக்க ஆண்டாளின் முகத்தில் கொஞ்சமும் மாற்றமின்றி கேட்டுக்கொண்டிருந்தார்.
“வாரத்துல நாலு நாள் உங்க பொண்ணு மேல கம்ப்ளைன்ட் வராம இருந்தா தான் ஆச்சர்யம். உங்க பொண்ணை கொஞ்சம் வார்ன் பண்ணி வைங்க. அதுதான் அவங்க ப்யூச்சர்க்கு நல்லது...”
மேலும் என்ன சொல்லியிருப்பானோ என்னவோ அதன் மேல் அவனை பேச விடாமல் கை நீட்டி தடுத்த நேத்ராவின் தந்தை பாலகிருஷ்ணன்,
“எங்க பொண்ணு ப்யூச்சர் பத்தி நீங்க அக்கறைப்பட்டதுக்கு ரொம்பவே நன்றி ஸார். நாங்க எங்க பொண்ணை பார்க்கலாமா?...” என பட்டுக்கத்தரித்ததை பேச பொங்கிய மனதை அடக்கினான் ரிஷி.
“பெரிய மகாராணியை தான் பெத்துவச்சிருக்காங்க. பொண்ணை சொன்னா பொறுக்கலை போல...” உள்ளுக்குள் சுறுசுறுவென்று ஏறிய கோவத்தை கட்டியவன்,
“இப்போ வந்துடுவாங்க...” ஏற்கனவே அவர்கள் வந்ததும் நேத்ராவை அழைத்துவரும் படி ராசுவிடம் சொல்லியே இருந்தான். வேண்டுமென்றே பேசாமல் அமைதிகாத்தான்.
அவனது அமைதி தங்களை ஒன்றும் செய்யாது என்பதை போல ஆண்டாளும், பாலகிருஷ்ணனும் தங்களுக்குள் முணுமுணுவென ஏதோ பேசியபடி இருந்தனர்.
“இப்ப தெரியுது. பொண்ணு ஏன் சண்டிராணியா யாரையும் மதிக்காம திமிரா இருக்கான்னு. இவங்களே இப்படி இருக்கும் போது நாம எதுக்கு இறங்கிப்போகனும்....”
பார்வையில் கெத்தை கொண்டுவந்தவன் அவர்களாக தன்னிடம் எதையும் கேட்க போவதில்லை என நினைத்து மீண்டும் அவர்களிடம் தங்களுடைய ஊருக்கு நேத்ரா வந்ததையும் அவள் வந்த விதத்தையும் பற்றி குறிப்பிட அவர்கள் முகத்தில் வந்துபோன ஒருநொடி அதிர்ச்சியை திருப்தியாக ரசித்தான்.
நொடியில் அதை மறைத்துக்கொண்டு அதற்கென்ன என்ற பாவனையை காட்ட சத்தியமாக நொந்தே போனான்.
“என்ன குடும்பம்டா இது? பொண்ணு ப்ராடு பண்ணி தெரியாத ஊருக்கு போனதை பத்தி சொல்லிட்டு இருக்கேன் கல்லுசிலையாட்டம் கம்முன்னு இருக்குறாங்க?...” அவர்களை கூர்பார்வையோடு பார்த்தபடி எண்ணியவன்,
“பொம்பளைப்புள்ளை ஊர்விட்டு ஊர் போய் ரா தங்கிட்டு வந்திருக்கான்னு சொல்றேன் அசராம இருக்கிறதை பாரேன்...” அவனால் தாளவே முடியவில்லை.
இப்படி வரவைத்துவிட்டாளே என்று தலைகுனிந்து வருந்த வேண்டாம், ஆனால் ஒரு அதிர்ச்சி, ஒரு பதட்டம், ஒரு கவலை, இதில் ஏதாவது ஒரு உணர்ச்சியையாவது அவர்கள் காட்டவேண்டும் என்ற எதிர்பார்த்த மனதிற்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது அவர்களின் அமைதி.
“கிருஷ்ணன் உனக்கு மாமா முறையாகுது. அவனை எப்போ பார்த்தாலும் எங்க பார்த்தலும் மரியாதையா பேசனும்...” துரைச்சாமியின் குரல் செவியில் ஒலிக்க,
“மரியாதையா நான் பேசினாலும் அதுக்கான பதில் மரியாதையை குடுக்கனும்னு அவருக்கு தெரியலையே கிரான்பா, அவருக்கு சொல்லி வளர்க்கலையா நீங்க?...”
அதற்குள் அவனின் அறைக்கதவை நாசுக்காக தட்டி அனுமதி வாங்கியபடி நேத்ரா வந்துவிட அவளை திமிராக பார்த்தவனின் விழிகளில் ஒருவித சொந்தமும் உரிமையும் சொல்லாமல் கொள்ளாமல் வந்தமர்ந்தது.
“தக்காளி இன்னைக்கு இவ்வளோ ப்ரைட்டா வந்துருக்கா. ஹ்ம் இந்த டார்க் க்ரீன் சுடி ரொம்ப ஆப்டா இருக்கு இவளுக்கு. ஆனாலும் அவ பேரன்ட்ஸ பார்த்து கொஞ்சமாச்சும் ஜெர்க் ஆகறாளா?...” என மனம் போன போக்கில் நிமிடத்தில் கணக்கிட்டு விட்டு,
“கெத்துடா ரிஷி. போதும் அவளை பார்த்தது. சும்மாவே கைல பிடிக்கமுடியாது. நாம வழியிறது தெரிஞ்சா தலைமேல உட்கார்ந்து முடியை பிடிச்சு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிடுவா...”
அதை நினைக்கையிலேயே தங்கள் ஊர் கோவிலில் ஒருவனின் தலையை பிடித்து ஆட்டியதும் அவனின் மனைவி நேத்ராவை வாரியதும் நினைவில் வர ரிஷியின் இதழ்கடையில் ஒரு முறுவல் பூக்க துடித்தது.
அடக்கிவிட்டு அவளையும் அவள் பெற்றோரையும் பார்த்தவன்,
“இதோ உங்க பொண்ணு. நீங்களே நான் சொன்னது எல்லாம் உண்மையா என்னன்னு விசாரிச்சுக்கோங்க...” சொல்லிவிட்டு அந்த சுழல்நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர,
“நாங்க விசாரிக்கிறது இருக்கட்டும். இதை சொல்லத்தான் எங்களை இங்க வரவழைச்சீங்களா? அந்த ஊர்க்கு போறதை பத்தி எங்கள்ட்ட சொல்லிட்டு எங்க பர்மிஷனோட தான் போனா...” ஆண்டாளின் பேச்சில் அதிர்ந்த ரிஷி,
“ஓகே, ஊருக்கு போனது உங்க பர்மிஷனோட. அதுக்கு எதுக்கு ஹாஸ்டல் வார்டன்கிட்ட அவங்களே கால் பண்ணி பேரன்ட்ஸ் மாதிரி பேசிருக்காங்க? அதுவும் உங்க பர்மிஷனா?...”
அவனுக்கு பதில் சொல்ல முனைந்த ஆண்டாளை தடுத்தவன்,
“இங்க மொபைல் யூஸ் பண்ணக்கூடாதுன்றது எங்க காலேஜ் ரூல்ஸ். அதை கொஞ்சமும் மதிக்காம உங்க பொண்ணு மொபைல் வச்சு யூஸ் பன்றாங்க. பொண்ணை முதல்ல கண்டிச்சு வைங்க...”
“ஒரு கம்ப்ளைன்ட் வந்தா விசாரிக்கிறவங்ககிட்ட மரியாதையா நடக்க பேச சொல்லிகொடுங்க. க்ளாஸ் கட்டடிக்கிறது, லெக்சரர்ஸ், ஹாஸ்டல்ல இருக்கிற மத்த ஸ்டூடன்ஸ்னு யாரு என்னனு பார்க்காம எல்லார்க்கிட்டையும் வம்பு பன்றாங்க...”
“கூப்பிட்டு கேட்ட என்கிட்டையே ஆர்க்யூ பன்றாங்க. ஒரு டிஸிப்ளின் இல்லை. பெரியவங்கன்ற ரெஸ்பெக்ட் குடுக்கிறதில்லை. எப்பவும் ஏதாவது செஞ்சுவச்சிட்டே இருக்காங்க...” கடுப்பில் பொரிந்து தள்ளிவிட்டான் ரிஷி.
அனைத்தையும் கேட்ட ஆண்டாள் எழுந்துவிட்டார் உடன் பாலகிருஷ்ணனும்.
“ஓகே ஸார், இப்போ என்ன என் நேத்ராவை நான் கண்டிக்கனும் அவ்வளோ தானே?...”
“அதை நாங்க பார்த்துக்கறோம். எங்க பொண்ணு காரணமில்லாம யாரையும் எதிர்த்தோ மரியாதை இல்லாமலோ பேசமாட்டா. அப்படியே பேசிருந்தா கூட ஏதாவது காரணம் இருந்திருக்கும்...”
ஆண்டாளின் பேச்சில் திகைத்த ரிஷி இவ்வளவு சொல்லியும் நேத்ராவிடம் இதுவரை எதுவும் வாயை திறந்து பேசாதது பெரும் ஆச்சர்யமாக இருந்தது.
“தென் என்ன சொன்னீங்க? ஹ்ம், டிஸிப்ளின். அதை பத்தி நீங்க சொல்லவேண்டாம். எல்லாம் சரியா இருக்கிற இடத்துல என்பொண்ணு தேவையில்லாம வம்பு வளர்க்க மாட்டா...”
“ம்ஹூம் இது சரிவராது. பேசாம நீங்க அவளை இந்த காலேஜ்ல இருந்து ரிலீவ் பண்ணிடுங்க. நாங்க அவளுக்கு எந்த காலேஜ் சரிப்பட்டு வருதோ அங்க சேர்த்துக்கறோம்...” என்க அசந்தே போனான் ரிஷி.
“ஹைய்யோடா! முதலுக்கே மோசமாகுதேடா ரிஷி. இதென்னடா உனக்கு வந்த சோதனை?...”
ரிஷியின் இதயம் தடதடத்து போனது. நேத்ரா விஷயத்தில் தான் கணிப்பது அனைத்தும் தவறாகவே போவதாக அவனுள் ஒரு பிம்பம் எழ அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவளோ, “உனக்கிது தேவையா?...” என்ற நமுட்டுச்சிரிப்போடு அவனின் அவஸ்தையை வேடிக்கை பார்த்திருந்தாள் மிக சுவாரஸியமாக.
ஆண்டாள் இதைத்தான் செய்வார் என்பது அவளுக்கு முன்னமே தெரியுமே?
நேத்ரா உள்ளே வரும் போது கொஞ்சமும் பயமில்லாமல் என்னைக்கும் போல வந்து நின்றதன் அர்த்தம் ரிஷிக்கு அப்போது விளங்கியது.
“இவளுக்கு முதல்லையே தெரிஞ்சிருக்கு. நாம தான் யோசிக்காம விட்டுட்டோம். இப்போ எப்படி இறங்கி பேச?...” யோசித்தபடி இருந்தவனை,
“அப்போ வேறேதுமில்லையே. நாங்க கிளம்பறோம்...” என பாலகிருஷ்ணன் கூற,
“யோவ் மாமா இப்போதாச்சும் வாயை திறந்தீங்களே?...” ரிஷி நினைக்க மனக்கண்ணில் ஒரு கையில் துப்பாக்கியோடு மறு கையினால் மீசையை நீவியபடி விரைப்பும் முறைப்புமாக துரைச்சாமி தெரிந்தார்.
“அடேய் ரிஷி மரியாதை மரியாதை...” தானே இவ்விடம் ஜெர்க்காகிவிட்டான்.
அறையினுள் வந்த தம்பதிகளை அதிர்ச்சியோடு பார்த்தவன் தன்னிருக்கையில் இருந்து தன்னைப்போல் எழுந்து நின்றதை கவனிக்கவில்லை.
ரிஷியை பார்த்ததும் யோசனையில் புருவத்தை சுழித்த நேத்ராவின் பெற்றோர் அவனை நெருகியதும் தான் தன்னை உணர்ந்தான் ரிஷி. சுதாரித்து தன்னிருக்கையில் அமர்ந்து,
“வாங்க...” என அமர்த்தலாக அழைத்தவன் அவர்களை எதிர் இருக்கையில் அமரும்படி காண்பித்தான்.
ரிஷியின் மாமா என்ற அழைப்பு அவர்களை எட்டினாலும் அதை கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ளவில்லை .
வேண்டாம் வேண்டாம் என நினைத்தாலும் கேட்காதே என உள்ளம் உரைத்தாலும் தன்னை மீறி கேட்டேவிட்டான்.
“நேத்ரா உங்களோட டாட்டரா?...” சந்தேகமில்லை என்றாலும் வாய்வார்த்தையாக கேட்க அவனின் உள்மனம் விரும்பியது.
“ஆமா, நேத்ரா எங்க பொண்ணுதான். என்ன விஷயமா எங்களை வர சொன்னீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?...”
நேத்ராவின் தாய் ஆண்டாள் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட ரிஷிக்கு என்னவோ போல் ஆகிற்று.
அவர்களின் அந்நியபார்வையில் நொடியில் தன்னுடைய ஆர்வமான முகபாவனையை மாற்றி நிமிர்வாக கம்பீரமாக அமர்ந்தவன் கண்களில் என்கிட்டயேவா? என்பதை அவர்களை பார்த்தவன்,
“விஷயம் இருக்கு....” என்றவன் நடந்ததை விவரிக்க ஆண்டாளின் முகத்தில் கொஞ்சமும் மாற்றமின்றி கேட்டுக்கொண்டிருந்தார்.
“வாரத்துல நாலு நாள் உங்க பொண்ணு மேல கம்ப்ளைன்ட் வராம இருந்தா தான் ஆச்சர்யம். உங்க பொண்ணை கொஞ்சம் வார்ன் பண்ணி வைங்க. அதுதான் அவங்க ப்யூச்சர்க்கு நல்லது...”
மேலும் என்ன சொல்லியிருப்பானோ என்னவோ அதன் மேல் அவனை பேச விடாமல் கை நீட்டி தடுத்த நேத்ராவின் தந்தை பாலகிருஷ்ணன்,
“எங்க பொண்ணு ப்யூச்சர் பத்தி நீங்க அக்கறைப்பட்டதுக்கு ரொம்பவே நன்றி ஸார். நாங்க எங்க பொண்ணை பார்க்கலாமா?...” என பட்டுக்கத்தரித்ததை பேச பொங்கிய மனதை அடக்கினான் ரிஷி.
“பெரிய மகாராணியை தான் பெத்துவச்சிருக்காங்க. பொண்ணை சொன்னா பொறுக்கலை போல...” உள்ளுக்குள் சுறுசுறுவென்று ஏறிய கோவத்தை கட்டியவன்,
“இப்போ வந்துடுவாங்க...” ஏற்கனவே அவர்கள் வந்ததும் நேத்ராவை அழைத்துவரும் படி ராசுவிடம் சொல்லியே இருந்தான். வேண்டுமென்றே பேசாமல் அமைதிகாத்தான்.
அவனது அமைதி தங்களை ஒன்றும் செய்யாது என்பதை போல ஆண்டாளும், பாலகிருஷ்ணனும் தங்களுக்குள் முணுமுணுவென ஏதோ பேசியபடி இருந்தனர்.
“இப்ப தெரியுது. பொண்ணு ஏன் சண்டிராணியா யாரையும் மதிக்காம திமிரா இருக்கான்னு. இவங்களே இப்படி இருக்கும் போது நாம எதுக்கு இறங்கிப்போகனும்....”
பார்வையில் கெத்தை கொண்டுவந்தவன் அவர்களாக தன்னிடம் எதையும் கேட்க போவதில்லை என நினைத்து மீண்டும் அவர்களிடம் தங்களுடைய ஊருக்கு நேத்ரா வந்ததையும் அவள் வந்த விதத்தையும் பற்றி குறிப்பிட அவர்கள் முகத்தில் வந்துபோன ஒருநொடி அதிர்ச்சியை திருப்தியாக ரசித்தான்.
நொடியில் அதை மறைத்துக்கொண்டு அதற்கென்ன என்ற பாவனையை காட்ட சத்தியமாக நொந்தே போனான்.
“என்ன குடும்பம்டா இது? பொண்ணு ப்ராடு பண்ணி தெரியாத ஊருக்கு போனதை பத்தி சொல்லிட்டு இருக்கேன் கல்லுசிலையாட்டம் கம்முன்னு இருக்குறாங்க?...” அவர்களை கூர்பார்வையோடு பார்த்தபடி எண்ணியவன்,
“பொம்பளைப்புள்ளை ஊர்விட்டு ஊர் போய் ரா தங்கிட்டு வந்திருக்கான்னு சொல்றேன் அசராம இருக்கிறதை பாரேன்...” அவனால் தாளவே முடியவில்லை.
இப்படி வரவைத்துவிட்டாளே என்று தலைகுனிந்து வருந்த வேண்டாம், ஆனால் ஒரு அதிர்ச்சி, ஒரு பதட்டம், ஒரு கவலை, இதில் ஏதாவது ஒரு உணர்ச்சியையாவது அவர்கள் காட்டவேண்டும் என்ற எதிர்பார்த்த மனதிற்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது அவர்களின் அமைதி.
“கிருஷ்ணன் உனக்கு மாமா முறையாகுது. அவனை எப்போ பார்த்தாலும் எங்க பார்த்தலும் மரியாதையா பேசனும்...” துரைச்சாமியின் குரல் செவியில் ஒலிக்க,
“மரியாதையா நான் பேசினாலும் அதுக்கான பதில் மரியாதையை குடுக்கனும்னு அவருக்கு தெரியலையே கிரான்பா, அவருக்கு சொல்லி வளர்க்கலையா நீங்க?...”
அதற்குள் அவனின் அறைக்கதவை நாசுக்காக தட்டி அனுமதி வாங்கியபடி நேத்ரா வந்துவிட அவளை திமிராக பார்த்தவனின் விழிகளில் ஒருவித சொந்தமும் உரிமையும் சொல்லாமல் கொள்ளாமல் வந்தமர்ந்தது.
“தக்காளி இன்னைக்கு இவ்வளோ ப்ரைட்டா வந்துருக்கா. ஹ்ம் இந்த டார்க் க்ரீன் சுடி ரொம்ப ஆப்டா இருக்கு இவளுக்கு. ஆனாலும் அவ பேரன்ட்ஸ பார்த்து கொஞ்சமாச்சும் ஜெர்க் ஆகறாளா?...” என மனம் போன போக்கில் நிமிடத்தில் கணக்கிட்டு விட்டு,
“கெத்துடா ரிஷி. போதும் அவளை பார்த்தது. சும்மாவே கைல பிடிக்கமுடியாது. நாம வழியிறது தெரிஞ்சா தலைமேல உட்கார்ந்து முடியை பிடிச்சு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிடுவா...”
அதை நினைக்கையிலேயே தங்கள் ஊர் கோவிலில் ஒருவனின் தலையை பிடித்து ஆட்டியதும் அவனின் மனைவி நேத்ராவை வாரியதும் நினைவில் வர ரிஷியின் இதழ்கடையில் ஒரு முறுவல் பூக்க துடித்தது.
அடக்கிவிட்டு அவளையும் அவள் பெற்றோரையும் பார்த்தவன்,
“இதோ உங்க பொண்ணு. நீங்களே நான் சொன்னது எல்லாம் உண்மையா என்னன்னு விசாரிச்சுக்கோங்க...” சொல்லிவிட்டு அந்த சுழல்நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர,
“நாங்க விசாரிக்கிறது இருக்கட்டும். இதை சொல்லத்தான் எங்களை இங்க வரவழைச்சீங்களா? அந்த ஊர்க்கு போறதை பத்தி எங்கள்ட்ட சொல்லிட்டு எங்க பர்மிஷனோட தான் போனா...” ஆண்டாளின் பேச்சில் அதிர்ந்த ரிஷி,
“ஓகே, ஊருக்கு போனது உங்க பர்மிஷனோட. அதுக்கு எதுக்கு ஹாஸ்டல் வார்டன்கிட்ட அவங்களே கால் பண்ணி பேரன்ட்ஸ் மாதிரி பேசிருக்காங்க? அதுவும் உங்க பர்மிஷனா?...”
அவனுக்கு பதில் சொல்ல முனைந்த ஆண்டாளை தடுத்தவன்,
“இங்க மொபைல் யூஸ் பண்ணக்கூடாதுன்றது எங்க காலேஜ் ரூல்ஸ். அதை கொஞ்சமும் மதிக்காம உங்க பொண்ணு மொபைல் வச்சு யூஸ் பன்றாங்க. பொண்ணை முதல்ல கண்டிச்சு வைங்க...”
“ஒரு கம்ப்ளைன்ட் வந்தா விசாரிக்கிறவங்ககிட்ட மரியாதையா நடக்க பேச சொல்லிகொடுங்க. க்ளாஸ் கட்டடிக்கிறது, லெக்சரர்ஸ், ஹாஸ்டல்ல இருக்கிற மத்த ஸ்டூடன்ஸ்னு யாரு என்னனு பார்க்காம எல்லார்க்கிட்டையும் வம்பு பன்றாங்க...”
“கூப்பிட்டு கேட்ட என்கிட்டையே ஆர்க்யூ பன்றாங்க. ஒரு டிஸிப்ளின் இல்லை. பெரியவங்கன்ற ரெஸ்பெக்ட் குடுக்கிறதில்லை. எப்பவும் ஏதாவது செஞ்சுவச்சிட்டே இருக்காங்க...” கடுப்பில் பொரிந்து தள்ளிவிட்டான் ரிஷி.
அனைத்தையும் கேட்ட ஆண்டாள் எழுந்துவிட்டார் உடன் பாலகிருஷ்ணனும்.
“ஓகே ஸார், இப்போ என்ன என் நேத்ராவை நான் கண்டிக்கனும் அவ்வளோ தானே?...”
“அதை நாங்க பார்த்துக்கறோம். எங்க பொண்ணு காரணமில்லாம யாரையும் எதிர்த்தோ மரியாதை இல்லாமலோ பேசமாட்டா. அப்படியே பேசிருந்தா கூட ஏதாவது காரணம் இருந்திருக்கும்...”
ஆண்டாளின் பேச்சில் திகைத்த ரிஷி இவ்வளவு சொல்லியும் நேத்ராவிடம் இதுவரை எதுவும் வாயை திறந்து பேசாதது பெரும் ஆச்சர்யமாக இருந்தது.
“தென் என்ன சொன்னீங்க? ஹ்ம், டிஸிப்ளின். அதை பத்தி நீங்க சொல்லவேண்டாம். எல்லாம் சரியா இருக்கிற இடத்துல என்பொண்ணு தேவையில்லாம வம்பு வளர்க்க மாட்டா...”
“ம்ஹூம் இது சரிவராது. பேசாம நீங்க அவளை இந்த காலேஜ்ல இருந்து ரிலீவ் பண்ணிடுங்க. நாங்க அவளுக்கு எந்த காலேஜ் சரிப்பட்டு வருதோ அங்க சேர்த்துக்கறோம்...” என்க அசந்தே போனான் ரிஷி.
“ஹைய்யோடா! முதலுக்கே மோசமாகுதேடா ரிஷி. இதென்னடா உனக்கு வந்த சோதனை?...”
ரிஷியின் இதயம் தடதடத்து போனது. நேத்ரா விஷயத்தில் தான் கணிப்பது அனைத்தும் தவறாகவே போவதாக அவனுள் ஒரு பிம்பம் எழ அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவளோ, “உனக்கிது தேவையா?...” என்ற நமுட்டுச்சிரிப்போடு அவனின் அவஸ்தையை வேடிக்கை பார்த்திருந்தாள் மிக சுவாரஸியமாக.
ஆண்டாள் இதைத்தான் செய்வார் என்பது அவளுக்கு முன்னமே தெரியுமே?
நேத்ரா உள்ளே வரும் போது கொஞ்சமும் பயமில்லாமல் என்னைக்கும் போல வந்து நின்றதன் அர்த்தம் ரிஷிக்கு அப்போது விளங்கியது.
“இவளுக்கு முதல்லையே தெரிஞ்சிருக்கு. நாம தான் யோசிக்காம விட்டுட்டோம். இப்போ எப்படி இறங்கி பேச?...” யோசித்தபடி இருந்தவனை,
“அப்போ வேறேதுமில்லையே. நாங்க கிளம்பறோம்...” என பாலகிருஷ்ணன் கூற,
“யோவ் மாமா இப்போதாச்சும் வாயை திறந்தீங்களே?...” ரிஷி நினைக்க மனக்கண்ணில் ஒரு கையில் துப்பாக்கியோடு மறு கையினால் மீசையை நீவியபடி விரைப்பும் முறைப்புமாக துரைச்சாமி தெரிந்தார்.
“அடேய் ரிஷி மரியாதை மரியாதை...” தானே இவ்விடம் ஜெர்க்காகிவிட்டான்.