உன்னில் சிக்க வைக்கிற II -20
அசோக்கின் அழைப்பை கட் செய்துவிட்டு... தன் படுக்கையிலிருந்து எழுந்தான் இனியன்... பால்கனி கதவை திறந்து அந்த சென்னை மாநகரின் காலைவேளை பனியை ரசித்து டீயை பருகினான்... பழைய ஹெர்ஸ்டைல் மாற்றியமைத்திருந்தான்... அவசரக் குளியல் ஒன்று போட்டுவிட்டு தன் டீஷர்டை , ப்ளூ நிற ஜீன்ஸை உடுத்திக்கொண்டு கதவை தாழிட்டு கீழே இறங்கினான்..
கீழ் ப்ளாட்டிலிருந்து கீதா மாமி.. ஹாய் இனியா.. ஞாயிற்றுக்கிழமை கூட ஆபிஸா..
ஆமாம் மாமி.. ஒரு சின்ன ஹோர்க் இருக்கு..
இனியா எங்கதம்பிக்கு வேலை கேட்டிருந்தேனே..
வரச்சொல்லுங்க மாமி.. கண்டிப்பா போட்டுத்தரேன்..
ரொம்ப தாங்க்ஸ் இனியா.. அவர்களுடன் பேசிக்கொண்டே தன் வண்டியை எடுத்தான்..
ஹாய் இனிமாமா என்று எதிர்வீட்டு மூன்று வயது ஏஞ்சல், பந்தை கையில் எடுத்துக்கொண்டு இனியன் அருகில் வழிமறைத்து நின்றது..
ஸாரி பேபி... உனக்கு தர மறந்துட்டேன்.. தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து சாக்லெட்டை எடுத்து கீழே குனிந்து கொடுத்தான்..
அவனின் கண்ணத்தில் முத்தமிட்டு , கையிலிருந்த சாக்கியை பிடுங்கிக்கொண்டு ஓடியது...
அவளை பார்த்து சிரித்தபடியே வண்டியை ஸ்டார்ட் செய்தான் இனியன்..
செல் ஒலிக்க ப்ளூடூத்தை ஆன் செய்து சொல்லுங்க பாய் என்றான்.
அந்த பக்கம் பாய்.. இனியா கரெக்டா சித்தூர் பார்டர்ல சரக்கை லாக் பண்ணி வச்சிருக்கானுங்க ,அங்கிருந்த செக்கிங் போலீஸாம்..
எதுக்காம்..
ஏதோ இல்லீகல் பிஸினஸ்.. கஞ்சா இருக்குமோ டவுட்... சீக்கிரம் போகனும் இனியா.. இல்ல சீஸ் பண்ணிடுவாங்க..
ட்ரைவர் பேசினான்னா..
ம்ம்ம்... அவன் சொன்ன விஷியம்தான் இது.. ஏதோ அரைமணி நேரம்தான் டைமிருக்காம்...
5 லட்சம் கேட்கிறாங்க.. கொடுத்துட்டா லாரியை அனுப்பிடுவாங்களாம்.. நாம்ம நாற்பது லட்சம் மதிப்புள்ள பட்டு, கோர்ட் ஷூட் அனுப்பியிருக்கோம் இனியா... இது கோவாலிருந்து வெளிநாட்டிற்கு போகுதுடா..
வண்டியை நிறுத்திவிட்டு , பாயின் வீட்டிற்குள் நுழைந்தான் இனியன்..
பாய் சோபாவில் உட்கார்ந்துக்கொண்டு இனியனிடம் பேசிக்கொண்டிருக்க, அவரின் பக்கத்தில் உட்கார்ந்தான்..
அவனை அச்சரியமாக பார்த்துவிட்டு போனை கட் செய்தார்..
ட்ரைவருக்கு போன் போடுங்க பாய்..
சரிப்பா.. கால் செய்ய, அங்கே லாரி ஓட்டிச்சென்ற ட்ரைவர் ராகுல் போனை எடுத்தான்...
பாய் இவங்க ரொம்ப அவசரப்படுத்துறாங்க... ஜீ பே மூலமா அனுப்பிச்சொல்லுறாங்க பாய்.. அவரின் போனை வாங்கினான் இனியன் ராகுல் உன்னுடைய வாட்ஸ் அப்ல ஒரு வீடியோ அனுப்பிருக்கேன் பார்த்துட்டு படம் எப்படியிருக்கு சொல்லுறீயா..
ஸார்..
பாரு.. பார்த்துட்டு சொல்லு..
என்னடா அனுப்பிருக்க பாய், இனியனிடம் கேட்டார்..அவருக்கு செல்லில் வீடியோவை காட்டினான்.. அதில் ராகுலின் மனைவி, இரண்டு குழந்தைகளின் பக்கத்தில் கத்தியோடு இருந்தனர் இனியனின் செக்குயூரிட்டி..
ஏன்டா இனியா இப்படி... பாய் கேட்பதற்குள்.. இனியனுக்கு போன் வந்தது ராகுலிடமிருந்து..
ஸார்.. என்னை மன்னிச்சிடுங்க ஸார் இனிமே இந்த தப்பு செய்ய மாட்டேன்.. என் பிரண்டு பேச்சை கேட்டு இப்படி செஞ்சிட்டேன் ஸார்...
எப்படி என் வண்டியில கஞ்சா வந்தது..
நாங்கதான் ஸார் வச்சோம்... என் குழந்தைகளை எதுவும் செய்யாதீங்க.. வாய் குளற ,தப்பு தான் ஸார்
அழுதுக்கொண்டே ராகுல் பேசினான்...
ஒரு மணிநேரத்தில பாபு அங்க வருவான் அவன்கிட்ட சரக்கை ஒப்படைச்சிட்டு நீ கார்ல வா.. அப்ப விடுறேன் உன் பொண்டாட்டி பிள்ளைகளை போனை கட் செய்தான்...
எப்படிடா கண்டுபிடிச்ச... இனியனை கட்டியனைத்தார் பாய்.
அங்க செக்கிங் கிடையாது பாய்... நம்ம வண்டியில இவ்வளவு மதிப்புள்ள சரக்கு போதுன்னு ட்ரைவருக்கு மட்டும்தான் தெரியும்.. அதுவும் லூஸூ பசங்க ஜீ பே யாராவது போட சொல்லுவாங்களா... இவன் ஃபிரண்டுதான் போலீஸா கெட் அப் போட்டிருக்கானுங்க..
மச்சான்னு சொல்லியபடி உள்ளே நுழைத்தான் அசோக்..
கஸ்டடியில வச்சிட்டு வந்திருக்கேன்..
அசோக் சாப்பாடெல்லாம் வாங்கிகொடுத்தீயா, குழந்தைகளுக்கு தேவையானது..
எல்லாம் ரெடி பண்ணிட்டுதான் வந்திருக்கேன் மச்சான்... எப்படி ஏமாத்திருக்கான் பாருடா..
அவனுக்கு பணத்தாசை காட்டியிருக்கான் அவனுடைய ஃபிரண்டு..
இனியா... பப்பு கிட்ட பேசினீயா... பாய் விசாரிக்க.
தன் தலையை கவிழ்ந்து அமைதியாக இருந்தான் இனியன்...
டேய் அவன் உன் மகன்டா,
அவளுக்கும் மகன்தான் பாய்... சொல்லிக்கொண்டே எழுந்தான், சரி நான் கிளம்புறேன் பாய்..
இருடா என் கையால சாப்பிட்டு போ.. பிரியாணி செய்றேன் என்று பாய் எழுந்து கிச்சனுக்கு சென்றார்..
....
இரவு 10 மணிக்கு காசிமேடு கடற்கரையோரம்.. இரவில் அலைகளின் இரைச்சல், ஆட்கள் யாருமில்லாத நேரம்... நிலவை பார்த்து மல்லாந்து படுத்திருந்தான் இனியன்..
அண்ணா.. சாப்பாடு, மீன் வறுத்து எடுத்துட்டு வந்திருக்கேன், சாப்பிட வாங்க.. நின்றிருந்த போட் மேல் கூடையை வைத்தான். ஒரு தட்டில் சாப்பாடு வைத்து இனியனிடம் கொடுத்தான் முத்து, அங்கிருக்கும் குப்பத்தில் வசிப்பவன்.. பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து அவன் கையில் கொடுத்து இனியன் சாப்பிட ..
மீன் வைச்சிக்கோண்ணா , முத்து எடுத்து தட்டில் வைத்தான்.
முடிக்கும் தருவாயில்... மூன்று படகிலிருந்து பத்துப்பேர் இறங்கினர்..
பேட்டரி லைட் வெளிச்சத்தில் தூரத்திலிருந்து பார்த்து இனியன் அருகில் வந்தனர்..
டேய் இனியன் அண்ணா வந்திருக்காரு ஒருவன் கத்த...அவர்களை நிமிர்ந்து பார்த்தான் இனியன்..
வாடா முருகேஸ்.. பிள்ளைங்க நல்லாயிருக்காங்கல..
உங்க புண்ணியத்தில எல்லோரும் நல்லாயிருக்காங்க அண்ணா.. சரி தண்ணீ சரக்கு வச்சிருக்கீயா..
இனியனை சுற்றி அவர்கள் உட்கார..
டேய்.. ஸாருக்கு லைட்டா கொடுடா இன்னொருவன் சொல்ல..
அண்ணி திட்டமாட்டாங்களா...
அவனிடமிருந்து பாட்டிலை வாங்கி மொட மொட என குடித்தான் இனியன்..
யாருடா அண்ணி.. எழுந்து தன் கோட்டை தூக்கி முதுகில் போட்டான்..
அண்ணா...
அப்படியாரும் இல்லடா... ஆசை ஆசையா வாழ்ந்தேன் கழிற்றி விட்டுபோயிட்டா..
“ தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆச தீர வாடி நீ
உன்ன நெனச்சொன்னும்… உருகல போடி
சோகத்தில் ஒண்ணும்… வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுரனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே”….
அனைவரும் அவனிடம் சேர்ந்து ஆடினர்...
தூரத்தில் தனது காரை நிறுத்திவிட்டு நடந்துவந்தான் மோகன்... தனது செல்லை உயிர்பித்து தேனை அழைத்தான்..
என்னடா சென்னைக்கு போயிட்டியா..
ம்ம்... உனக்கு ஒரு உன்மை சொல்லனும் நினைச்சேன்.. அதுக்கு இதுதான் சரியான டைமுனு தோனுது... மாமா கலெக்டர் வேலைக்கு போகல, ரீசைன் செஞ்சிட்டாரு..
உளராத மோகன்..
நம்பல சரி வீடியோ காலுக்கு வா... குடிச்சிட்டு குப்பத்து பசங்களோடு டான்ஸ் ஆடிட்டு இருக்காரு பாரு.. அவளுக்கு காட்டினான்..
உற்று தன்னவனை பார்த்தாள் தேனு.. கண்கள் கலங்க, மோகன் என்று கேவினாள்..
சரி வைக்கிறேன்..
...
அருகே செல்லாமல் போனில் இனியனை கூப்பிட்டான்.. இனியன் டிஸ்பிளேவில் மோகன் நம்பர் என்று தெரிந்து போனை கட் செய்தான்..
மறுபடியும் மூன்று முறை இனியனை அழைத்தான்..
அண்ணா ஏதாவது முக்கியமான விஷியமா இருக்கபோது அட்டன் செய்யுங்க முத்து சொல்ல..
போனை ஆன் செய்தான் இனியன்.. ம்ம் சொல்லு மோகன், எனக்கு போன் செய்யக்கூடாது சொல்லியிருக்கனே..
சும்மாதான் செஞ்சேன் மாமா.. எங்கேயிருக்கீங்க.
நானா.. நான் அமெரிக்கால இருக்கேன் மோகன்.. ரொம்ப பிஸியாயிருக்கேன் அப்பறம் பேசவாடா..
நானும் அமெரிக்காவுல தான் இருக்கேன் மாமா.. நீங்க எவ்வளவு பிஸின்னு எனக்கே தெரியுதே..
இனியன் பின்னாடி திரும்பி பார்த்தான்.. வாங்க மாமா எழுந்திருங்க வீட்டுக்கு போகலாம்.. அவனை கைதூக்கி எழுப்பினான் மோகன்..
அமைதியாக நடந்து மோகன் பின்னாடியே சென்றான்
இருவரும் காருக்குள் உட்கார்ந்தனர்.. காரை மோகன் ஒட்ட..
அமைதியாகவே உட்கார்ந்து வந்தான் இனியன்.. ஒரு பக்கம் மோகன் முன்னாடி தண்ணீயை போட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி வந்தது..
நீ எதுக்கு என்னை பார்க்க வந்தே மோகன்.. யாரும் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்..
நீங்க வேணாம் எங்க வீட்டுக்கு வராத இருங்க.. ஆனா எங்க மாமாவீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு உரிமையில்லை மாமா..
ப்ளாட்டில் காரை நிறுத்தினான் மோகன்.. இருவரும் வீட்டை திறந்து உள்ளே வந்தனர்.. ஃபேனை ஆன் செய்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தான் இனியன்..
சரி வா நான் ட்ரைன் ஏத்தி விடுறேன்.. ஊருக்கு போய் முதல்ல படிக்க பாரு..
கீழேயிறங்கி போய் தன் லக்கேஜை எடுத்துவந்தான்.. என்னடா சொல்லிட்டேன் இருக்கேன் போய் பேக்கா எடுத்துட்டுவர..
ம்ம்.. இனிமே இங்கதான் தங்குவேன்.. ஏன்னா சென்னையிலதான் எனக்கு மெடிக்கல் கிடைச்சிருக்கு..
மெடிக்கலா கிடைச்சிருக்கு தன் மகனைபோல நினைத்தல்லவா இருந்தான் அவனை உச்சி முகுர்ந்தான் இனியன்...
வா ஹாஸ்ட்டல்ல சேர்த்துவிடுறேன்.. இங்கிருந்தா நீ கெட்டு போயிடுவ.
அதெல்லாம் நான் பார்த்துக்குவேன் எனக்கு பசிக்குது.. ஏதாவது செஞ்சிதாங்க.. மாமா..
உடனே எழுந்து கிச்சனுக்கு போனான்.. மாவை எடுத்துதோசையை ஊற்றி அதில் இட்லி பொடியை வைத்து எடுத்துவந்தான்..
தன்னை ஃபிரஷ் செய்துக்கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தான் மோகன்..
அவன் கையில் ப்ளேட்டை கொடுத்துவிட்டு சாப்பிடு என்றான்..
மோகன் தோசையை பியத்து வாயில் வைக்கும் அழகை பார்த்தபடியே இருந்தான் இனியன்.. வேற எதுவும் அவனிடம் கேட்கவில்லை.. ஊரில் இருப்பவர்களை பற்றி விசாரிக்கவில்லை.. மோகன் கையை கையை கழுவி விட்டு சோபாவில் உட்கார்ந்தான்..
மோகன்.. இங்க உனக்கு செட்டாகுதுடா.. நான் நல்ல ஹாஸ்டலா சேர்த்துவிடுறேன்.. மறுபடியும் ஆரம்பித்தான்..
செல்லை நோன்டிக்கொண்டிருந்தான் மோகன்.
டேய் என்னை ஏன்டா புரிஞ்சிக்க மாட்டிறீங்க.. தனியா என்னை நிம்மதியா இருக்கவிடுங்க.. எனக்கு எந்த உறவும் வேணாம்.. பழைய இனியன் இஸ் பேக்..
என் அக்காகூட ஏன் வாழலைன்னு பேசவரல... உங்களுக்கும் உங்க பொண்டாட்டிக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் அது உங்க பர்சனல்.. நான் என் மாமாவீட்டுக்கு வந்திருக்கேன்...
ரொம்ப டயர்டா இருக்கு மாமா, தூக்கம் வருது.. நான் ரூமிற்கு போறேன், ரூமிற்குச் சென்று கதவை அடைத்தான்.. பிறகு வீடியோகாலில் இருந்த பப்புவை பார்த்தான், என்னடா உங்க அப்பாவ பார்த்தீயா..
ம்ம்... மாமா, அப்பா பேசவேயில்ல..
நீ பார்க்கனும் மட்டும்தானே சொன்ன.
ஆமாம் என்று தலையை ஆட்டினான்.. அவனிடமிருந்து போனை வாங்கினாள் ரேனுகா, மோகன் இனியாவ பார்த்துக்கோடா, அதுக்குதான் உன்னை அனுப்பி வைச்சிருக்கேன்..
எல்லாம் எனக்கு தெரியும்மா.. தேனுக்கா வரப்போது பப்புவ தூங்கவைங்க.
----உன்னில் சிக்க வைக்கிற
அசோக்கின் அழைப்பை கட் செய்துவிட்டு... தன் படுக்கையிலிருந்து எழுந்தான் இனியன்... பால்கனி கதவை திறந்து அந்த சென்னை மாநகரின் காலைவேளை பனியை ரசித்து டீயை பருகினான்... பழைய ஹெர்ஸ்டைல் மாற்றியமைத்திருந்தான்... அவசரக் குளியல் ஒன்று போட்டுவிட்டு தன் டீஷர்டை , ப்ளூ நிற ஜீன்ஸை உடுத்திக்கொண்டு கதவை தாழிட்டு கீழே இறங்கினான்..
கீழ் ப்ளாட்டிலிருந்து கீதா மாமி.. ஹாய் இனியா.. ஞாயிற்றுக்கிழமை கூட ஆபிஸா..
ஆமாம் மாமி.. ஒரு சின்ன ஹோர்க் இருக்கு..
இனியா எங்கதம்பிக்கு வேலை கேட்டிருந்தேனே..
வரச்சொல்லுங்க மாமி.. கண்டிப்பா போட்டுத்தரேன்..
ரொம்ப தாங்க்ஸ் இனியா.. அவர்களுடன் பேசிக்கொண்டே தன் வண்டியை எடுத்தான்..
ஹாய் இனிமாமா என்று எதிர்வீட்டு மூன்று வயது ஏஞ்சல், பந்தை கையில் எடுத்துக்கொண்டு இனியன் அருகில் வழிமறைத்து நின்றது..
ஸாரி பேபி... உனக்கு தர மறந்துட்டேன்.. தன் பேன்ட் பாக்கெட்டிலிருந்து சாக்லெட்டை எடுத்து கீழே குனிந்து கொடுத்தான்..
அவனின் கண்ணத்தில் முத்தமிட்டு , கையிலிருந்த சாக்கியை பிடுங்கிக்கொண்டு ஓடியது...
அவளை பார்த்து சிரித்தபடியே வண்டியை ஸ்டார்ட் செய்தான் இனியன்..
செல் ஒலிக்க ப்ளூடூத்தை ஆன் செய்து சொல்லுங்க பாய் என்றான்.
அந்த பக்கம் பாய்.. இனியா கரெக்டா சித்தூர் பார்டர்ல சரக்கை லாக் பண்ணி வச்சிருக்கானுங்க ,அங்கிருந்த செக்கிங் போலீஸாம்..
எதுக்காம்..
ஏதோ இல்லீகல் பிஸினஸ்.. கஞ்சா இருக்குமோ டவுட்... சீக்கிரம் போகனும் இனியா.. இல்ல சீஸ் பண்ணிடுவாங்க..
ட்ரைவர் பேசினான்னா..
ம்ம்ம்... அவன் சொன்ன விஷியம்தான் இது.. ஏதோ அரைமணி நேரம்தான் டைமிருக்காம்...
5 லட்சம் கேட்கிறாங்க.. கொடுத்துட்டா லாரியை அனுப்பிடுவாங்களாம்.. நாம்ம நாற்பது லட்சம் மதிப்புள்ள பட்டு, கோர்ட் ஷூட் அனுப்பியிருக்கோம் இனியா... இது கோவாலிருந்து வெளிநாட்டிற்கு போகுதுடா..
வண்டியை நிறுத்திவிட்டு , பாயின் வீட்டிற்குள் நுழைந்தான் இனியன்..
பாய் சோபாவில் உட்கார்ந்துக்கொண்டு இனியனிடம் பேசிக்கொண்டிருக்க, அவரின் பக்கத்தில் உட்கார்ந்தான்..
அவனை அச்சரியமாக பார்த்துவிட்டு போனை கட் செய்தார்..
ட்ரைவருக்கு போன் போடுங்க பாய்..
சரிப்பா.. கால் செய்ய, அங்கே லாரி ஓட்டிச்சென்ற ட்ரைவர் ராகுல் போனை எடுத்தான்...
பாய் இவங்க ரொம்ப அவசரப்படுத்துறாங்க... ஜீ பே மூலமா அனுப்பிச்சொல்லுறாங்க பாய்.. அவரின் போனை வாங்கினான் இனியன் ராகுல் உன்னுடைய வாட்ஸ் அப்ல ஒரு வீடியோ அனுப்பிருக்கேன் பார்த்துட்டு படம் எப்படியிருக்கு சொல்லுறீயா..
ஸார்..
பாரு.. பார்த்துட்டு சொல்லு..
என்னடா அனுப்பிருக்க பாய், இனியனிடம் கேட்டார்..அவருக்கு செல்லில் வீடியோவை காட்டினான்.. அதில் ராகுலின் மனைவி, இரண்டு குழந்தைகளின் பக்கத்தில் கத்தியோடு இருந்தனர் இனியனின் செக்குயூரிட்டி..
ஏன்டா இனியா இப்படி... பாய் கேட்பதற்குள்.. இனியனுக்கு போன் வந்தது ராகுலிடமிருந்து..
ஸார்.. என்னை மன்னிச்சிடுங்க ஸார் இனிமே இந்த தப்பு செய்ய மாட்டேன்.. என் பிரண்டு பேச்சை கேட்டு இப்படி செஞ்சிட்டேன் ஸார்...
எப்படி என் வண்டியில கஞ்சா வந்தது..
நாங்கதான் ஸார் வச்சோம்... என் குழந்தைகளை எதுவும் செய்யாதீங்க.. வாய் குளற ,தப்பு தான் ஸார்
அழுதுக்கொண்டே ராகுல் பேசினான்...
ஒரு மணிநேரத்தில பாபு அங்க வருவான் அவன்கிட்ட சரக்கை ஒப்படைச்சிட்டு நீ கார்ல வா.. அப்ப விடுறேன் உன் பொண்டாட்டி பிள்ளைகளை போனை கட் செய்தான்...
எப்படிடா கண்டுபிடிச்ச... இனியனை கட்டியனைத்தார் பாய்.
அங்க செக்கிங் கிடையாது பாய்... நம்ம வண்டியில இவ்வளவு மதிப்புள்ள சரக்கு போதுன்னு ட்ரைவருக்கு மட்டும்தான் தெரியும்.. அதுவும் லூஸூ பசங்க ஜீ பே யாராவது போட சொல்லுவாங்களா... இவன் ஃபிரண்டுதான் போலீஸா கெட் அப் போட்டிருக்கானுங்க..
மச்சான்னு சொல்லியபடி உள்ளே நுழைத்தான் அசோக்..
கஸ்டடியில வச்சிட்டு வந்திருக்கேன்..
அசோக் சாப்பாடெல்லாம் வாங்கிகொடுத்தீயா, குழந்தைகளுக்கு தேவையானது..
எல்லாம் ரெடி பண்ணிட்டுதான் வந்திருக்கேன் மச்சான்... எப்படி ஏமாத்திருக்கான் பாருடா..
அவனுக்கு பணத்தாசை காட்டியிருக்கான் அவனுடைய ஃபிரண்டு..
இனியா... பப்பு கிட்ட பேசினீயா... பாய் விசாரிக்க.
தன் தலையை கவிழ்ந்து அமைதியாக இருந்தான் இனியன்...
டேய் அவன் உன் மகன்டா,
அவளுக்கும் மகன்தான் பாய்... சொல்லிக்கொண்டே எழுந்தான், சரி நான் கிளம்புறேன் பாய்..
இருடா என் கையால சாப்பிட்டு போ.. பிரியாணி செய்றேன் என்று பாய் எழுந்து கிச்சனுக்கு சென்றார்..
....
இரவு 10 மணிக்கு காசிமேடு கடற்கரையோரம்.. இரவில் அலைகளின் இரைச்சல், ஆட்கள் யாருமில்லாத நேரம்... நிலவை பார்த்து மல்லாந்து படுத்திருந்தான் இனியன்..
அண்ணா.. சாப்பாடு, மீன் வறுத்து எடுத்துட்டு வந்திருக்கேன், சாப்பிட வாங்க.. நின்றிருந்த போட் மேல் கூடையை வைத்தான். ஒரு தட்டில் சாப்பாடு வைத்து இனியனிடம் கொடுத்தான் முத்து, அங்கிருக்கும் குப்பத்தில் வசிப்பவன்.. பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து அவன் கையில் கொடுத்து இனியன் சாப்பிட ..
மீன் வைச்சிக்கோண்ணா , முத்து எடுத்து தட்டில் வைத்தான்.
முடிக்கும் தருவாயில்... மூன்று படகிலிருந்து பத்துப்பேர் இறங்கினர்..
பேட்டரி லைட் வெளிச்சத்தில் தூரத்திலிருந்து பார்த்து இனியன் அருகில் வந்தனர்..
டேய் இனியன் அண்ணா வந்திருக்காரு ஒருவன் கத்த...அவர்களை நிமிர்ந்து பார்த்தான் இனியன்..
வாடா முருகேஸ்.. பிள்ளைங்க நல்லாயிருக்காங்கல..
உங்க புண்ணியத்தில எல்லோரும் நல்லாயிருக்காங்க அண்ணா.. சரி தண்ணீ சரக்கு வச்சிருக்கீயா..
இனியனை சுற்றி அவர்கள் உட்கார..
டேய்.. ஸாருக்கு லைட்டா கொடுடா இன்னொருவன் சொல்ல..
அண்ணி திட்டமாட்டாங்களா...
அவனிடமிருந்து பாட்டிலை வாங்கி மொட மொட என குடித்தான் இனியன்..
யாருடா அண்ணி.. எழுந்து தன் கோட்டை தூக்கி முதுகில் போட்டான்..
அண்ணா...
அப்படியாரும் இல்லடா... ஆசை ஆசையா வாழ்ந்தேன் கழிற்றி விட்டுபோயிட்டா..
“ தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆச தீர வாடி நீ
உன்ன நெனச்சொன்னும்… உருகல போடி
சோகத்தில் ஒண்ணும்… வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுரனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே”….
அனைவரும் அவனிடம் சேர்ந்து ஆடினர்...
தூரத்தில் தனது காரை நிறுத்திவிட்டு நடந்துவந்தான் மோகன்... தனது செல்லை உயிர்பித்து தேனை அழைத்தான்..
என்னடா சென்னைக்கு போயிட்டியா..
ம்ம்... உனக்கு ஒரு உன்மை சொல்லனும் நினைச்சேன்.. அதுக்கு இதுதான் சரியான டைமுனு தோனுது... மாமா கலெக்டர் வேலைக்கு போகல, ரீசைன் செஞ்சிட்டாரு..
உளராத மோகன்..
நம்பல சரி வீடியோ காலுக்கு வா... குடிச்சிட்டு குப்பத்து பசங்களோடு டான்ஸ் ஆடிட்டு இருக்காரு பாரு.. அவளுக்கு காட்டினான்..
உற்று தன்னவனை பார்த்தாள் தேனு.. கண்கள் கலங்க, மோகன் என்று கேவினாள்..
சரி வைக்கிறேன்..
...
அருகே செல்லாமல் போனில் இனியனை கூப்பிட்டான்.. இனியன் டிஸ்பிளேவில் மோகன் நம்பர் என்று தெரிந்து போனை கட் செய்தான்..
மறுபடியும் மூன்று முறை இனியனை அழைத்தான்..
அண்ணா ஏதாவது முக்கியமான விஷியமா இருக்கபோது அட்டன் செய்யுங்க முத்து சொல்ல..
போனை ஆன் செய்தான் இனியன்.. ம்ம் சொல்லு மோகன், எனக்கு போன் செய்யக்கூடாது சொல்லியிருக்கனே..
சும்மாதான் செஞ்சேன் மாமா.. எங்கேயிருக்கீங்க.
நானா.. நான் அமெரிக்கால இருக்கேன் மோகன்.. ரொம்ப பிஸியாயிருக்கேன் அப்பறம் பேசவாடா..
நானும் அமெரிக்காவுல தான் இருக்கேன் மாமா.. நீங்க எவ்வளவு பிஸின்னு எனக்கே தெரியுதே..
இனியன் பின்னாடி திரும்பி பார்த்தான்.. வாங்க மாமா எழுந்திருங்க வீட்டுக்கு போகலாம்.. அவனை கைதூக்கி எழுப்பினான் மோகன்..
அமைதியாக நடந்து மோகன் பின்னாடியே சென்றான்
இருவரும் காருக்குள் உட்கார்ந்தனர்.. காரை மோகன் ஒட்ட..
அமைதியாகவே உட்கார்ந்து வந்தான் இனியன்.. ஒரு பக்கம் மோகன் முன்னாடி தண்ணீயை போட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி வந்தது..
நீ எதுக்கு என்னை பார்க்க வந்தே மோகன்.. யாரும் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்..
நீங்க வேணாம் எங்க வீட்டுக்கு வராத இருங்க.. ஆனா எங்க மாமாவீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு உரிமையில்லை மாமா..
ப்ளாட்டில் காரை நிறுத்தினான் மோகன்.. இருவரும் வீட்டை திறந்து உள்ளே வந்தனர்.. ஃபேனை ஆன் செய்துவிட்டு சோபாவில் உட்கார்ந்தான் இனியன்..
சரி வா நான் ட்ரைன் ஏத்தி விடுறேன்.. ஊருக்கு போய் முதல்ல படிக்க பாரு..
கீழேயிறங்கி போய் தன் லக்கேஜை எடுத்துவந்தான்.. என்னடா சொல்லிட்டேன் இருக்கேன் போய் பேக்கா எடுத்துட்டுவர..
ம்ம்.. இனிமே இங்கதான் தங்குவேன்.. ஏன்னா சென்னையிலதான் எனக்கு மெடிக்கல் கிடைச்சிருக்கு..
மெடிக்கலா கிடைச்சிருக்கு தன் மகனைபோல நினைத்தல்லவா இருந்தான் அவனை உச்சி முகுர்ந்தான் இனியன்...
வா ஹாஸ்ட்டல்ல சேர்த்துவிடுறேன்.. இங்கிருந்தா நீ கெட்டு போயிடுவ.
அதெல்லாம் நான் பார்த்துக்குவேன் எனக்கு பசிக்குது.. ஏதாவது செஞ்சிதாங்க.. மாமா..
உடனே எழுந்து கிச்சனுக்கு போனான்.. மாவை எடுத்துதோசையை ஊற்றி அதில் இட்லி பொடியை வைத்து எடுத்துவந்தான்..
தன்னை ஃபிரஷ் செய்துக்கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தான் மோகன்..
அவன் கையில் ப்ளேட்டை கொடுத்துவிட்டு சாப்பிடு என்றான்..
மோகன் தோசையை பியத்து வாயில் வைக்கும் அழகை பார்த்தபடியே இருந்தான் இனியன்.. வேற எதுவும் அவனிடம் கேட்கவில்லை.. ஊரில் இருப்பவர்களை பற்றி விசாரிக்கவில்லை.. மோகன் கையை கையை கழுவி விட்டு சோபாவில் உட்கார்ந்தான்..
மோகன்.. இங்க உனக்கு செட்டாகுதுடா.. நான் நல்ல ஹாஸ்டலா சேர்த்துவிடுறேன்.. மறுபடியும் ஆரம்பித்தான்..
செல்லை நோன்டிக்கொண்டிருந்தான் மோகன்.
டேய் என்னை ஏன்டா புரிஞ்சிக்க மாட்டிறீங்க.. தனியா என்னை நிம்மதியா இருக்கவிடுங்க.. எனக்கு எந்த உறவும் வேணாம்.. பழைய இனியன் இஸ் பேக்..
என் அக்காகூட ஏன் வாழலைன்னு பேசவரல... உங்களுக்கும் உங்க பொண்டாட்டிக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் அது உங்க பர்சனல்.. நான் என் மாமாவீட்டுக்கு வந்திருக்கேன்...
ரொம்ப டயர்டா இருக்கு மாமா, தூக்கம் வருது.. நான் ரூமிற்கு போறேன், ரூமிற்குச் சென்று கதவை அடைத்தான்.. பிறகு வீடியோகாலில் இருந்த பப்புவை பார்த்தான், என்னடா உங்க அப்பாவ பார்த்தீயா..
ம்ம்... மாமா, அப்பா பேசவேயில்ல..
நீ பார்க்கனும் மட்டும்தானே சொன்ன.
ஆமாம் என்று தலையை ஆட்டினான்.. அவனிடமிருந்து போனை வாங்கினாள் ரேனுகா, மோகன் இனியாவ பார்த்துக்கோடா, அதுக்குதான் உன்னை அனுப்பி வைச்சிருக்கேன்..
எல்லாம் எனக்கு தெரியும்மா.. தேனுக்கா வரப்போது பப்புவ தூங்கவைங்க.
----உன்னில் சிக்க வைக்கிற