சூப்பர் ஆராதனா, இதுல நீங்க சொல்லியிருக்கிற பல நிகழ்வுகளை நாங்க அனுபவச்சு இருக்கோம். உடல்ரீதியான கருவாச்சி, கருப்பி அப்படின்னு கேலி பண்றது சிறு வயசுல கஷ்டமா இருக்கும். கல்யாண வயசுல அதுவே நம்மைப் பத்தி பலர் விமர்சனம் பண்றதுக்கு காரணமா இருக்கும். பெண்கள் எவ்வளவு படிச்சாலும் வேலைக்கு போனாலும் கருப்பா சாதாரணமா இருந்தா இந்த சமூகம், நம்ம சுத்தி இருக்குற உறவுகள் நம்மை ஒருபடி கீழ இறக்கித்தான் பேசும். இது எல்லாத்தையும் கடந்து கல்யாணம் நடந்து அங்க புருஷனும் புருஷன் வீட்டு ஆளுங்களும் இப்படி பேசுனா ரொம்பவே கஷ்டமாக இருக்கும். இது சுமாராக இருக்கிற பல பெண்கள் வாழ்க்கையில நடக்கிற விஷயம். ரொம்ப ரொம்ப அருமையாக சொல்லியிருக்கீங்க. நான் இந்த கதையை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். இரசிக்கிறேன். இந்த மாதிரி சாதாரண அழகோட இருக்கிற பெண்களோட பிரச்சினைகளையும் எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க.