காதலியோட எட்டு வருட தவ வாழ்க்கைய எண்ணி உருகி போற காதலன் ஊரார் வீட்டார் சம்மதம் தங்களோட காதலுக்கு கிடைச்சதும் ஊருக்கு பெட்டிய கட்டிட்டார்
இந்த அளவுக்கு காதல் இருக்கிறவன் ஏன் வேற பொண்ணை கல்யாணம் செஞ்சு அவளை கர்ப்பம் ஆக்கணும்
கர்ப்பிணிய மழையில் அடிச்சு துரத்தி இருக்கான் இப்போ வரை அதை நினைச்சு எந்த உறுத்தலும் இல்லை சரண்யாவுக்கு குழந்தை பிறந்த விஷயமும் இவங்க வீட்டுக்கு தெரியும்
ஒரு வேளை வெற்றிக்கு அதை பத்தி எதுவும் சொல்லலையோ என்ன வேணா இருக்கட்டும் கர்ப்பிணி பெண் கிட்ட மிருகதனமா நடந்ததுக்காகவே இவனை என்ன செஞ்சாலும் தகும்
கர்ப்பிணி பொண்டாட்டிய அடிச்சு துரத்திட்டு அதை பத்தி கவலை படாத இவன் ஒரு சாக்கடை அடுத்தவ புருஷனுக்கு அலையுற அந்த அபி ஒரு கழிசடை இந்த இரண்டும் தான் பொருத்தமாக இருக்கு
சரண்யா ஒரு தேவதை வீட்டுல உள்ளவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தா முடியல தனியா வந்துட்டா அருமையான முடிவு
தனியா இருக்கோமே என்று வருத்த படாத சரண் பேபி கை கால் விளங்காத உன் அம்மாவால் வீட்டு வேலை செய்ய முடியாது உனக்கு நான் அவிச்சு கொட்டணுமா என்று உன் அண்ணி சீக்கிரம் அடிச்சு துரத்திடுவா உன் அக்காவும் கண்டுக்க மாட்டா உன் வீட்டு வாசல்ல தான் வந்து நிற்பாங்க
நல்ல தோழி சரியான நேரத்தில் நம்பிக்கை கொடுத்து அவளுக்கு புதுசா ஒரு வாழ்க்கையும் அமைச்சு கொடுத்துட்டா
சரண்யா வெற்றி ஒன்னு சேருவாங்களா இல்லை சரண் தன்னோட பிள்ளைங்களை படிக்க வச்சு நல்ல நிலைக்கு கொண்டு வந்து வளர்ந்து இந்த கொஞ்சும் கிளிகள் தான் கதாநாயகியா வருவாங்களா
இந்த கொஞ்சும் கிளிகள் இரண்டு பேரையும் சேர்த்து வைக்குமா இல்லை வளர்ந்து வந்து வெற்றிக்கு பாடம் புகட்டுமா
இரண்டாவது என்றால் நல்லா இருக்கும் ஏன்னா சரண் கூட இந்த வெற்றியை சேர்த்து வச்சு பார்க்கணும் என்றால் ரொம்ப கேவலமா இருக்கு
அபிராமியை காதலித்து, சரண்யாவை கல்யாணம் செய்து, நான்கு மாத கர்பிணியை இரவில் துரத்தி விட்ட இந்த வெற்றியென்றவன் சரண்யாவின் வாழ்க்கையில் தேவையில்லைத் தானே?
இவன் அஜிதாவின், விஜிதாவின் வாழ்க்கையில் வரவும் தகுதியில்லாதவன் என்னைப் பொறுத்தவரை