உணர்ச்சிகரமான பதிவு சரண்யா???.பீரோவில் இருந்த பணம்,நகை திருடியதோடு உண்டியல்ல இருந்த பணம்,அவசரத்துக்கு அடுப்புட்ட வச்ச பணம் வரைக்கும் திருடிட்டு கதவை நிறுத்தி வச்சுட்டு போயிருக்கறதை பார்த்தா தெரிஞ்சவங்க வேலையா தான் இருக்கும்னு தோனுது????
வீடெல்லாம் சாமான் இறைஞ்சு கிடக்கு,பீரோவ கவுத்து போட்டுருக்கானுங்க எப்படி அக்கம்பக்கம் சத்தம் கேட்காம இருந்துச்சு???.சிறுக சிறுக சேர்த்த பணமும் போய்ட்டு பொண்ணு கல்யாணம் நின்னுடுமோங்கற அதிர்ச்சியில் சோமநாதனுக்கு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு????.
உங்க உடன் பிறப்பா இருந்தா இதை எல்லாம் பார்த்துக்க மாட்டேனா என்ற யமுனாவின் பேச்சும், கல்யாணம் கண்டிப்பா நடக்கும் அதை நினைச்சு கவலைப்படாதீங்க என்ற கதிரின் ஆறுதலான சொல்லுமே சோமநாதன் குணமாகி வர காரணம்????.
தாமரை கூப்பிட்டா கதிருக்கு வராமல் இருக்க மனசிருக்குமா???,நீ கூப்பிடு நான் வரேன் என கதிர் தன் மனதை வெளிப்படுத்த,அவன் மனதை புரிந்து கொண்டவளின் மனமும் அவனோடு சென்று விட்டது???.பணத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாத யமுனாவின் குடும்பத்தில் மருமகளாக செல்ல தாமரை கொடுத்து வைத்திருக்க வேண்டும்????.