Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-14

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-14
“என்ன மாமா“ போனில் கேட்டாள் சுந்தரி

“மாடிக்கு வாடி சீக்கீரம் யாருக்கும் தெரியாம“. சரி மாமா.

மொட்டை மாடியில் காத்திருந்தான் பூவரசன், கதவை திறந்து. மாமா என்று ஓடி வந்தாள் சுந்தரி , பூவரசன் அவளை தூக்கி சுத்தினான். அவர்களுக்கு சின்ன வயசு ஞாபகம் வந்தது.
“ஹப்பா கொஞ்சம் வெயிட் போட்டுட்ட பொம்மி. “

“ம்ம், சரி வா டாங்க் பின்னாடி உட்காரலாம். “ இருவரும் அங்கே அமர்ந்தார்கள். பொம்மி கையை காட்டு.
“சூப்பரா இருக்குடி“.
“மாமா இங்க பாரு, உன் பெயரு பூவா ன்னு மெகந்தி போட்டிருக்கேன். “

“ஏய் இந்த புடவையும் அழகா இருக்குடி. இன்னிக்கு நீ தேவதை போல இருக்க,உனக்கு அவ்வளவு சந்தோஷமாடி மாமாவ கட்டிக்க“.

“ம்ம் எத்தனை நாள் ஆசை மாமா. உன் கூட வாழனும் , உனக்கு அதெல்லாம் புரியாது மாமா , அது என் டீரிம்“.
“உனக்கு என்னடா வேனும் மாமா கிட்ட கேளு.என் பொண்டாட்டிக்கு
எதுவும் வாங்கித் தரல என்ன கிப்ட் வேணும் பொம்மி. “

மாமா எல்லாமே என் பெயரல தான் எழுதிருக்க, எனக்காக தான் எல்லாம் செய்யற வேற என்ன இருக்கு. நான் கல்யாணம் முடிச்சு சேலம் பிரபா ஆஸ்பிட்டல்ல ஜாயின் பண்ணனும்.
“ஒரு வாரம் கழிச்சி சேரு பொம்மி , நிறைய விருந்துக்கெல்லாம் போனோம். “
“மாமா ஹனிமூன் எங்கே போறோம்“.

“அது என்ன பிரண்ட் ஊட்டிக்கு புக் செஞ்சிருக்கான், நான்தான் தூரமா வேணாம் சொன்னேன்,டு மன்த் அப்பறம் சிம்லா போலாம்டா.
“நிஜமாவா“ ,
“எதுக்குடி இப்படி கண்ணை விரிச்சி கேட்கிற,நானே உள்ள போயிடுவேன் போல இருக்கு. “
“இல்ல சாமியாருக்கு இந்த ஆசையெல்லாம் இருக்கா. “

ஏய், பூவரசன் போன் ஓலிக்க எடுத்து பார்த்தான் லோகு கால் செய்திருந்தான். சரி நீ கிளம்பு மாமாவுக்கு வேல இருக்கு என்றான். சுந்தரி கிளம்ப அவள் கையை பிடித்து இழுத்து கண்ணத்தில் அழுத்தி முத்தமிட்டான். அழகாக இருக்கடி ஜில்லு , சொல்லி விடுவித்தான் . அவன் செய்கையில் தன்னை மறந்து நின்றாள். சீக்கீரம் போ தேடுவாங்க சரி மாமா என்று கிளம்பினாள்.

பூவரசன் மாடியிலிருந்து பின்பக்கம் இறங்கி வர அவன் சித்தியும் பவியும் பேசிக்கொண்டிருந்தார்கள். “ என்ன பவி முதல்ல உன்னையதான் பரிசம் போடறதா இருந்தது. இப்ப சுந்தரியா. நீ ஏமாந்துட்ட போ, உன் மாமா சொத்து எவ்வளவு தெரியுமா. உனக்கு எப்படி தெரியும் உன் தங்கச்சிக்கு தான் எல்லா அத்துப்படி. இப்படி அந்த பையன கட்டிக்கன. நான் அன்னிக்கு வரலை இல்லனா விட்டுருக்க மாட்டேன். “

“அய்யோ பாட்டி, இந்த சுந்தரி எங்கிட்ட மாமாவ விட்டுக்கொடுன்னு அழுறா அதான் நம்ம தங்கச்சிக்காக விட்டுத் தந்தேன். இப்ப என் வீட்டுக்கார்ருக்கு எங்க அவ்வளவு சொத்து இருக்கு. “

“கேட்டு வாங்கு உன் மாமாக்கிட்ட, கொடுப்பான்.
“மாமா கொடுக்கும் ஆனா சொத்து அவ பெயரல தான் இருக்கு, அவ ஒத்துக்க மாட்டா. “
இவர்கள் பேச்சை கேட்டு கொண்டே மாடியிலிருந்து இறங்கினான் பூவரசன்

மறுநாள் காலை 6.30 மணிக்கு முகூர்த்தம் ஆரம்பித்தது. அனைவரும் வந்து கொண்டிருந்தார்கள். ஐய்யர் மந்திரம் ஓத மேளம் தாளங்கள் இசைக்க பெண்ணை அழைத்து வந்தாள் பவி. அந்த பக்கம் பவியின் பையன் கையை பிடித்து வர. ரோஸ் நிற பட்டில் தங்க நகைகள் அணிந்து வெட்கச் சிவப்பு முகத்தில் இருக்க, தன் மணாளனின் பக்கத்தில் அமர்ந்தாள். அவள் வருவதை முதலிலே பார்த்துவிட்டான் பூவரசன்.

பொண்ணுக்கு பாத பூஜைக்கு அம்மாவும் , அப்பாவும் வாங்க சொன்னவுடன் நிமிர்ந்து பார்த்தான் பூவரசு சண்முக வேலன் பொண்ணின் அருகில் வர. கோபம் கொண்டான் .
உங்களை யாரு அழைச்சா இங்க வந்தீங்க. அவர் பின்னாடி சரவனபாண்டி, சண்முக பாண்டி நின்றிருந்தார்கள்.

தம்பி பூவரசு இப்படியெல்லாம் பேச கூடாது ஊர் பெரியவர் சொல்ல.
இல்ல பெரியப்பா நான் பத்திரிக்கையே வைக்கலையே அதான் கேட்டேன்.
“கூப்பிட்டாங்க நாங்க வந்தோம்“- சண்முகவேலு.

“நான்தான் எங்க அப்பாவுக்கு பத்திரிக்கை வைச்சி கூப்பிட்டேன்“ என்று சுந்தரி சொல்ல அதிர்ச்சியா அவளை பார்த்தான்.

“என்னமா சுந்தரி உன் மாமாகிட்ட சொல்லலையா நக்கலாக“ துரைபாண்டி கேட்க,
“அவள் காதில் மெதுவாக பல்லை கடித்து என்னடி உன் பெயர சொல்லுறான்“.
முழித்துக்கொண்டிருந்தாள் சுந்தரி. ஐய்யர் டைம் ஆயிடுது சீக்கீரம் அம்மாவ கூட்டுட்டு வாங்க சொல்ல.

ஆனந்தவல்லி பூவரசனை பார்த்தாள்,“போய் நில்லுக்கா உன் பொண்ணு அவருக்கே உரிமை இருக்க சொல்ல உனக்கு இல்லையா“

சுந்தரி பாத பூஜை செய்ய, இங்கே பூவரசன் அவனின் பெரியப்பா, பெரியம்மாவுக்கு செய்தான்.
என்ன சுந்தரி ஹாப்பியா , உங்க அப்பாவே வந்திட்டாரு, அதான் உன் முகம் பிரகாசமா இருக்கு சரவணபாண்டி சொல்ல.

போங்க மாமா என்று வெட்கப்பட்டாள். இதை பார்த்து பூவரசன் வியப்பாக பார்க்க.
கெட்டிமேளம் கெட்டிமேளம் சொல்ல தாலி பூவரசனிடம் நீட்டப்பட்டது. தாலியை எடுக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தான் பூவரசன்.

என்ன அமைதியாக இருக்கிறான் எல்லோரும் பார்க்க, சுந்தரி தலையை திருப்பி மாமா என்று அழைத்தாள். அவன் அனல் கக்கும் பார்வை பார்க்க , அவள் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.

அவள் அழுவதை பார்த்து தாலியை கட்டினான். அனைவரும் அட்சதை தூவி ஆசிர்வாதித்தன. ஆனந்தவல்லிக்கு கண்கள் கலங்கிவிட்டது.
அடப்பாவி வாழ்க்கையில சந்தோஷமான தருணம் இப்படி கதிக்கலங்க வச்சிட்டியேடா மாமா என்று மனதில் நினைத்தாள் சுந்தரி.

மணமேடை மணமக்கள் சுற்ற பெண்ணின் கையை பிடிக்கவில்லை பூவரசன், சுந்தரி தான் இறுக்க கையை பிடித்திருந்தாள். முதல்ல அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்க சொல்ல. அவன் அக்கா காலில் விழுந்தான் பூவரசன் , சுந்தரி சண்முகவேலு காலில் விழுந்தாள்.

“என் மகளுக்கு சீர் வீடும், நிலமும் எழுதிருக்கேன் இந்தாம்மா பத்திரம் வாங்கிக்கோ“. சுந்தரி பூவரசனை பார்க்க அவளை முறைத்துக் கொண்டே இருந்தான். இங்க யாரும் ஓண்ணும் இல்லாதது இல்லை எதுவும் வேண்டாம் பூவரசன் சொல்லிக்கொண்டு இருக்கும்போது சுந்தரி அந்த பத்திரத்தை வாங்கினாள்.

“அப்புறம் பொம்மி, இது உன் புருஷனுக்கு சொல்லி தன் கழுத்திலிருந்த பத்து பவுன் தங்க சங்கிலி புலி நகத்தோட கழிட்டி சுந்தரியிடம் கொடுத்தார். சின்ன வயசில இது எனக்கு வேணும் அடம்பிடிப்பான் உன் புருஷன். அவனுக்காக பத்திரமா வச்சிருந்தேன்.
சரிப்பா சுந்தரி சொல்ல, தன் மகளின் நெற்றியில் முத்தமிட்டான் சண்முகவேலு. மற்ற சடங்குகள் நடந்தது.

அன்று இரவு பண்னைவீட்டில் பவி, மற்றும் உறவு பெண்கள் சிலர் சுந்தரியை அலங்காரித்து கொண்டிருந்தனர். பார்த்து “எங்க அண்ணன் மனச நோகாம அவர் சொல்லறத செய் புரியுதா. “

அம்மா , பாட்டியிடம் சென்றாள், “அம்மா இந்த பர்ஸ்ட் நைட் வேணாம்மா இன்னோரு நாள் வச்சிக்கலாம். உன் தம்பி என்னைய தாளிச்சிடுவான். நான் போகமாட்டேன். “
“ஏய் அன்னைக்கே குறிச்சது மாத்த முடியாது. என்னவோ புதுசா பார்க்கிறவ மாதிரி அவனபத்தி தெரியாதா. “

“மம்மி , உன் பொண்ணு இன்னிக்கு பண்ண கூத்துக்கு வச்சி செய்வான்ம்மா , எனக்கு கொரனா சொல்லி ஆஸ்பிட்டல்ல சேர்த்திடு மா பீளிஸ். பாட்டி நீயாவது சொல்லேன். “

“கோவமோ, பாசமோ புருஷன் உன்கிட்ட மட்டும் தான் காண்பிப்பான், அதுதான் தாம்பத்யம் சுந்தரி, அவன் கோவத்தை குறைக்க பாரு, இத அவனால் ஜீர்னிக்க முடியில“-பாட்டி.

சரி என்று தலையை ஆட்டி ரூமிற்குள் சென்றாள்.மற்ற அனைவரும் பெரியவீட்டுக்கு சென்றார்கள், முதலிலே சொல்லிவிட்டான் பூவரசன் முதலிரவு பண்னை வீட்டில் என்று.

கதவை பூட்டி உள்ளே சென்றாள். பூவரசன் கட்டிலில் கண்னை மூடி உட்கார்திருந்தான். ஹய்யா தூங்கிட்டானா , இப்படியே போய் கிஸ் அடிச்சா எப்படியிருக்கும் என்ன அழகாக இருக்கான் என் மாமன். ஐய்யோ, பத்தாவதுல தந்ததுக்கே செம அடி வாங்கினேன் . இப்ப செஞ்சேன் செத்தேன்.மெல்ல தயங்கிக் தயங்கி தொண்டையை செருமி பூவா என்று அழைத்தாள்.

கண்னை திறந்து அவளை பார்த்து எழுந்து நின்றான். பாலை அவனிடம் கொடுத்து காலில் விழுந்தாள். பாலை டெபிளில் வைத்து அவளை தோள் தொட்டு தூக்கினான்.

கீழே குனிந்த அவள் முகத்தை கையால் நிமிர்த்தி , “உங்கப்பாவுக்கு ஏன் பத்திரிக்கை வச்ச. “

ஆரம்பிச்சிட்டான்யா , மாட்டனோம் சுந்தரி மைன்ட் வாய்சில் பேச.

“அவன் யாருடி உன்னைய பொம்மிண்ணு கூப்பிட. “
“எங்க அப்பாரு மாமா. “
என்னது, அப்பா என்ற பெயருக்கு அர்த்தம் தெரியுமான்னு கேட்டவ, எங்க மாமா முகத்தில எல்லாம் பார்க்கிறேன் சொன்னியேடி.

“சரி அதவிடு அவன் உனக்கு மாமன்னா, நான் யாரு. “

“அந்த மாமா பவி வீட்டுக்காரு, இந்த மாமா என் வீட்டுக்காரு. “

ஏய் மவளே உன்ன, வேட்டிய காலால் தூக்கி மடிச்சி கட்டி, விளையாடுறீயா, உன் அப்பன் எங்க அம்மாவ மாமி சொல்லுறான், சரவண எங்க அக்காவ அத்தையின்னு சொல்லுறான், அந்த துரைப்பாண்டி உன்னைய சுந்தரின்னு பேர்விட்டு கூப்பிடுறான்.

என்னடி குடும்பம் ஓண்ணு சேர்ந்திட்டிங்களோ. அப்ப நான் மட்டும் தனி.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Top