மயூ இறந்தது கஷ்டமா இருந்தாலும் அவரோட ராகவ் கூட இப்போவாவது சந்தோசமா இருக்கட்டும்னு மனசை தேத்திக்க தான் வேண்டும். குட்டி மயூ மகளாய் வந்து அப்பா, அம்மாவோடு ஜெகத்தை, அகத்தை மட்டுமல்ல சுகத்தையும் கொடுக்கட்டும்.
இந்த கதையில் இளமை காதலை விட இறந்தும் இறவாமல் வாழும் முதுமை காதல் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. இப்படி வாழ காதலோடு ரொம்ப மன தைரியமும், திடமும் வேண்டும். வித்யா ராகவ், ஜீவா நிலா ஜீவனிலும் நிலைத்து வாழ்வாங்க.
எங்களுக்கு பிடிச்ச இரண்டு பேரையும் போட்டு தள்ளிட்டிங்க
வித்யா மாதிரி எல்லோரையும் நேசிக்கிற அடுத்தவங்களை புரிஞ்சு நடந்துக்கிற தன்னோட விருப்பங்கள் சந்தோஷங்களை விட்டு கொடுக்கிற மனசு எல்லாம் எல்லோருக்கும் இருக்காது
ராகவ் எல்லா விஷயத்திலும் வித்யா பேச்சை கேட்டு நடந்திருந்தா இன்னும் நல்லா வாழ்ந்து இருப்பான்
எனக்கு மயூ, லதா மா மடியில் படுக்கும் போதே தோனுச்சி இப்படி ஆகும்னு.
எவ்வளவு போராட்டங்கள், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள் எல்லா நிலையும் கடந்து நல்லா பேரும் புகழும் அடைந்த பிறகு தன் ராகவன் கூட வாகனம் ஏறி மகிழ்ச்சியாக போயிட்டா மகராசி, யாருக்கும் எந்த ஒரு சிரமமும் கொடுக்காமல்.
நான் உனக்கு இதைப் பண்ணினேன் பதிலுக்கு நீ எனக்கு இதை செய்து தான் ஆகனும்னு உண்மையான காதலோட பிள்ளைகளைப் பெற்ற எந்த ஒரு பெத்தவங்களும் கேட்க மாட்டாங்கன்றதுக்கு வித்யா மயூரியே சிறந்த உதாரணம்.
எனக்கு படிச்சிட்ட பிறகு அதிலிருந்து வெளியில் வரமுடியலை. தொண்டை அடைக்குது.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.