இறுதி வரை casual-லா போன கதைக்கு epilogue-ஐ கருத்துச்செறிவா கொடுத்துட்டீங்க. அநேகமா
கதாபாத்திரங்களின் குணாதிசயங்களுக்கு பொருத்தமா தான் அவை இருந்தது.
இருந்தாலும் என்னோட பார்வையில், நான் அறிந்த வரையில் சிலது misleading-ஆ தோணிச்சு. அதை மட்டும் குறிப்பிட விரும்பறேன். அது உங்கள் எழுத்திலோ/கருத்திலோ குறை காண்பிக்க இல்லை.
ஒரு fact அப்படியே போய் சேரணும் என்பதற்கு தான்.
'யாக்ஷிகா'- என்னும் சொல் பற்றி. அந்த வார்த்தை கொண்டுள்ள ஒலிகள் மற்றும் மன்னர் பேசும் வசனம் இதை வைத்து அந்த பெயரை நீங்க தமிழ் சொல்லில்லை என்ற அர்த்தத்தோடு தான் கையாண்டிருக்கீங்கன்னு புரிஞ்சுக்கறேன். அதனால அதை
வடமொழிச் சொல்லா தான் கையாண்டிருக்கீங்க அப்படித்தானே.
(தெளிவு படுத்திக்கணுமில்லை)
அப்படியிருப்பின் 'யாக்ஷிகா'- என்ற சொல்லுக்கு மன்னர் சொன்ன அர்த்தம் தவறு.
'Chariot'- நாம 'ch'- ஐ எப்படி உச்சரிப்போமோ அப்படி உச்சரிச்சா தான் அவன் சொல்லற யாசகம் என்ற பொருள் வரும். சுப்ரஜா சொன்ன பெயர் மீனாக்ஷி,லக்ஷமி போன்ற பெயர்களில் வரும் ஒலி. அப்ப அதற்கு சரியான பொருள் வெற்றிகளை/புகழை அடையும் தேவதை என்று தான் பொருள்.
இந்த கதையில் ஜயராமன் தொடங்கி ஷ்ருதி ஆயுஷ் போன்ற பல மாற்று மொழி பெயர்கள் வந்தாலும் lead pair(hero) and their children அவங்க மூலமா மட்டும் தமிழ் பெயர்களின் அழகை எடுத்து சொல்ல முனைந்த தங்களது முயற்சி நல்ல விஷயம் தான் . ஆனால் அதற்காக அந்த சொல்லுக்கு தவறான பொருளை மன்னர் சொல்லறது எப்படி சரியாகும்?
ஒன்னு வேணா சொல்லலாம் அர்த்தம் தெரியாமல் சுப்ரஜா அந்த பெயரை வைக்க ஆசைப்பட்டுருக்கக் கூடாது. அதனால தான் அவளால மன்னருக்கு சரியான பதில் சொல்ல முடியலை.
அப்புறம் மன்னர் குழந்தைங்க வளர்ந்து தமிழக பாடத்திட்டத்தின் படி படிச்சாங்களா இல்லை எட்டாம் வகுப்பு வரை ஆங்கலேயர் விட்டுச் சென்ற தமிழகத்தில் மட்டுமே இன்றும் தொடரும் Matriculation வழிப் பாடத்திட்டத்தின் வழியா தான் படிச்சாங்களான்னும் சொல்லியிருக்கலாம்.
//As we all know Matriculation,CBSE,ICSE all provide almost same syllabus for a particular standard. (Yet with the same text-book syllabus for Tamizh differs.)
The way of questioning-exam pattern only differs. You may be aware of.this fact that Matriculation has 2 papers for each subject which is quite lengthy to.complete in 2 and 1/2 hours and the final 10th exam being conducted for 1100 marks including science practicals. If I am not wrong that's the reason 10th std public exam is no more following the standard Matriculation pattern now. So Matriculation mode of education is neither lighter nor easier than CBSE//-
அதனால அந்த கருத்தும் எனக்கு misguiding-ஆ பட்டது. அதுவே அவன் தாய்மொழி மூலமா கல்வி பயிலட்டும்ன்னு சொல்லியிருந்தா அது ஒரு நல்ல சிந்தனையா இருந்துருக்கும்.