வாவ்! என் உணர்வுகளை சொல்ல வார்த்தையே இல்லை தோழி. என் மனக்கண்ணில் நான் கற்பனை செய்யும் கதாபாத்திரங்களை அப்படியே உள்வாங்கி அதை கவிதை மாலையாய் கோர்க்கும் உங்கள் புரிதலில் நெகிழ்கிறேன் நட்பே.உற்ற நேரத்தில்
உதவிய தருணம்
உருமாறிய தோழமை
உறவாக சேர்ந்திட....
உருக்குலைந்த நேரத்தில்
உறவாக இல்லாமல்
உயிர் தோழனாக
உடன் நின்று தேற்றிட....
உண்மைகள் தெரிந்ததும்
உள்ளுக்குள் இருந்த
உறுத்தல் எல்லாம் மறைய
உணர்வுகள் வென்றிட....
உரிமை உடையவன்
உனை அறியாது
உன்னை அலைக்கழிக்க
உணர்ந்து கொள்ள
உடனே வா
உயிரே உறவே...
தருண் குணாதிசம் பற்றிய வரிகள் .. //உண்மைகள் தெரிந்து.ம்....// மெய்சிலிர்க்க வைக்கிறது.