நிழலாடும் நின் நினைவில் - 11

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

இன்னைக்கு எபி படிச்சுட்டு யாரும் என்னோட சண்டைக்கு வரக்கூடாது சொல்லிட்டேன். தருண் மாதிரி பொறுமையைக் கடைப்பிடிக்கணும்.

இது முழுக்க முழுக்க ரம்யாவோட மைண்ட்செட். And, it is just the beginning. ரம்யா முழுசாக சந்திரமுகியாக மாறும் நாள்(எபி) வெகு தொலைவில் இல்லை.

நிழலாடும் நின் நினைவில் - 11

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
இங்கு யார் மேல் குறறம் சொல்ல ,அதித அன்பினால் தான் இந்த கோவம் இருந்தாலும் ரம்யா மனநிலை காலப்போக்கில் மாற்றம் காணும் ,அதற்கு எல்லாம் இவன் விளக்கம் கொடுத்து புரியவைக்க முடியாது,எதற்கும் ரம்யா ஒரு டாக்டரிடம் ஆலோசனை கேட்பது நல்லது .
முதலில் இருவரும் உட்கார்ந்து மனம் விட்டு பேசணும்.
 
தொலைந்துபோன உன் நினைவுகளை
தேடி அலைந்த என் மனம்
தெரிந்த பாதைகளில்கூட
தெரியாத வெறுமை தங்கிட....

தேடலின் தவிப்பு
தினமும் தீயாக
தாய்மை தீண்டினாலும்
தீராத ஏக்கத்தின்
தாகம் தணியாமல்
தவித்திட...

தனிமையின் இரவில்
தூக்கம் கூட
தூரம் நிற்க
தவித்த மனம் வெறுமையில்
துடித்திட....


திசை தெரியாத பயணமாய்
தொடர்கிறது என் நாட்கள்
தேடித் தேடி சோர்கிறது தீண்டும் கண்கள்
தவிர்த்திட....
 
Last edited:
I am totally on Ramya s side. She is 200% correct. அவள் நிலையில் நிற்கும் எந்தப் பெண்ணுக்கும் இப்படிதான் தோன்றும். நீங்க ரம்யாவோட மனநிலையை அப்படியே படம் பிடிச்சு காட்டி இருக்கீங்க. கடைசியில் உங்களுக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சான்னு அவ கேட்கும் போது ரொம்ப பாவமா இருக்கு.

அவளும் ஆரம்பத்தில் இருந்து ஷ்ராவனுக்காக எல்லாமே பார்த்து பார்த்து செய்யறா. அப்படி இருக்கும் போது ஷ்ரவன் அவளிடம் உனக்கு உடம்புக்கு என்ன செய்யுது என்ன வேணும்னு எதாவது கேட்டு இருக்கணும் தானே.
மனைவி மகள்ன்னு வந்த பிறகு தருணுக்குமே நேரம் இல்லை. அதனால் அவள் செய்தது ரொம்ப ரொம்ப சரி.

யதார்த்தத்தை சொல்கிறேன், இதை அவள் செய்யவில்ல என்றால், இப்படி கத்தி தீர்க்கவில்லை என்றால் she will fall into deep depression.

Waiting for shravan and of course the author to do something good for Ramya.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 

Advertisement

Advertisement

Back
Top