
கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை கதைக்களம் பரபரப்புடனும், சுவாரஸ்யத்துடனும், நெகிழ்ச்சியுடனும் ரசிக்க வைத்தது

.
விஷ்வமித்ரன் வீரமும் விவேகமும் கொண்ட இந்திய ராணுவ விமானபடையின் ஒரு அமைப்பின் வீர நாயகன். இரண்டு வயதில் தாயை இழந்து தாயுமானவரான தந்தையின் வளர்ப்பில் கண்ணியமும், திறமையும் நிறைவுற வளர்க்கப்பட்டவன். தந்தையின் பாரம்பரிய தொழிலான சிற்பக்கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். தன் வாழ்க்கையே இவன் சிற்பமாக செதுக்க வேண்டிய நிலையில் விதி கண்ணாமூச்சி ஆட்டத்தை ஏற்படுத்தி தத்தளிக்க வைத்து ரணத்தை ஏற்படுத்திவிட்டது. மனம் கவர்ந்த மங்கையை அதிரடியாய் கரம் பிடித்தாலும் அவளுக்கான கனவை நிறைவேற்ற ஒரு நல்ல கணவனாய் உறுதுணையாக இருந்த நிகழ்வுகள் நெகிழ்ச்சியை கொடுத்தது. தன் உயிரானவளுக்காக உயிர் இருந்தும் தவமாய் மறைந்து வாழ்ந்தவையெல்லாம் நரக வேதனைகள் 

தேவகன்யா 



விடாமுயற்சியும் விவேகமும் நிறைந்த அழகு நங்கை. தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் சகோதரனின் பாதுகாப்பில் சிறகு விரித்து லட்சியத்தை அடையும் இலக்கோடு தன்னை மேம்படுத்திக் கொண்டு எதையும் துணிவுடன் மெருகேற்றி கொண்டவை அழகு.தாயின் கட்டாயத்தில் தனக்கானவனை திருமண பந்தத்தில் ஏற்று கொண்டாலும் உண்மையில் மங்கையின் அகம் நுழைந்தவன் அவள் ஐய்யனார் கணவன் மட்டுமே

.விதியின் கோரத்தில் கணவன் மறைந்ததாக காட்டப்பட்ட கண்கட்டு வித்தையில் சிக்கி தன் கனவை மறந்து தன் கணவன் மற்றும் மாமனாரின் கனவு தொழிலை தன் சிரம் மேல் ஏற்று முன்னேற்ற பாதையில் வெற்றியை நிலைநிறுத்தி பெண் அரசியாய் மனதை நெகிழவும் கலங்கவும் வைத்தாள்.
தேவகன்யாவிஷ்வா மனம் கவர்ந்தவளை மணந்தாலும் அவளுக்கான கனவை அடைய, அவளுடைய மனதையும் வென்று மனம் நிறைந்த காதலுடன் சேரும் நாட்களை எதிர்நோக்கி இருந்த சமயத்தில் தன் உயிரானவளின் உயிர் காத்து உயிரை பனையமாக்கி விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து உயிரானவளை தேடி வரும் பொழுது தன்னவளின் நிலையை கண்டு கலங்கி அவளுக்காக எதையும் செய்ய துணிந்து தன்னை மறைத்து வாழ்ந்தது மட்டுமல்லாமல் அவளை மீட்க தன் உயிரில் தனக்கே தெரியாமல் நடந்த துரோகத்தால் உருவான பிள்ளையை அவளுக்கு சுவாசமாக்கி மீட்டெடுத்த நிகழ்வுகள் என்ன சொல்ல உணர்ச்சியில் தத்தளிக்க வைத்தது. இறுதியில் கன்யாவின் கனவை நிறைவேற்றி ஆத்ம காதலனாய் ஆருயிர் கணவனாய் அவளகம் வென்ற நாயகனாய் எங்களையும் கவர்ந்தான்



.
கன்யா எவ்வளவு தான் வீர பெண்ணாய் வலம் வந்தாலும் தன்னவனை நினைத்து உயிர் வலியில் தினமும் தவித்த பொழுதுகள் மனதை ரணமாக்கியது. தன் உயிரானவன் மீண்டும் தன் முன் தோன்றிய பொழுது மகிழ்ச்சியையும் தாண்டிய மனதை துடிக்கச் செய்யும் குழந்தைகள் பற்றிய உண்மை நிலையை அறிந்து செயலற்று நின்ற தருணங்கள் மிகுந்த வலியை கொடுத்தது. வலி, ஏமாற்றம் என அனைத்தும் இருந்தாலும் குழந்தைகளை எங்கும் வெறுக்காமல் தானே உயிராய் சுமந்த குழந்தைகளாய் பாவித்து அன்னையாய் மடிதாங்கிய நிகழ்வுகள் அவள் மீது மதிப்பை ஏற்படுத்தியது. தன் கனவை மீண்டும் புதுப்பித்து தன் நீண்ட நாள் லட்சியத்தை கணவன் மற்றும் உறவினர்களின் உறுதுணையுடன் அடைந்து வெற்றிவாகை சூடியது மட்டுமல்லாமல் கணவனுடன் நிறைவான வாழ்வை அழகாக மலர செய்தாள் 




.
தருண் கோபி -நிர்மலா தேவி 

.
கோபி :நல்ல ஆண்மகன் தன் பெற்றவளுக்கு, இன்னொரு தந்தை தங்கைக்கு
., விஷ்வாவிற்கு சிறந்த நண்பனாகவும் அவனை அனுசரித்து தங்கையின் வாழ்வில் துணை நின்றவன். முதல் சந்திப்பிலே மனம் கவரந்து அனைத்து விதத்திலும் துணையாக தாங்கி நின்ற பெண்வளை மனம் முடித்து சிறப்புடன் வாழ்வது அழகு.
நிர்மலா :தாய் தந்தையின்றி கடமையாய் வளர்த்த தாத்தா சிவநேசன் வளர்ப்பில் கிடைக்காத அன்பை ரங்கராஜன் குடும்பத்தில் பெற்று விஷ்வாவிற்கு சிறந்த தோழியாய் தங்கையாய் உறுதுணையாகி மனம் கவர்ந்தாள். மனம் விருப்பிய கோபியுடான வாழ்வை ரம்யமாக வாழ்வது அழகு.
இருவரும் இதே புரிதலுடன் அன்புடன் வாழ வாழ்த்துக்கள்
.
அவினாஷ் -மகிழ்மொழி
அவினாஷ் :சிறந்த மருத்துவன், விஷ்வா மற்றும் கன்யாவிற்கு இன்னொரு வளர்ந்த பிள்ளையாய் உறுதுணையாக நின்று மனம் நெகிழவைத்தான். தவறான புரிதலை கொண்டு அகம் நுழைந்தவளை வதைத்து பிறகு தெளிந்து அவளுக்காக அனைத்துமாய் மாறி கரம் சேர்ந்தது மகிழ்ச்சி
.
மகிழ் : அழகான வசந்த கூட்டுக்குள் சுதந்திர பறவையாய் வலம் வந்தவள் வாழ்வில் கொடூரர்கள் மூலம் அனைத்து உறவுகளையும் இழந்து இவள் தவித்து நின்ற தருணங்கள் மிகவும் கலங்க செய்தது 
.நண்பர்கள் உறவாய் மாறி இவளை மீட்டெடுத்து அரணாய் நின்று பாதுகாத்தது அழகு.அவினாஷ் உடனான மனக்கசப்பை மறந்து புரிந்துணர்வுடன் திருமண பந்தத்தில் காதலுடன் மகிழ்ந்து வாழ்வது அழகு.
இருவரும் என்றும் எப்பொழுதும் இதே காதலுடன் வாழ வாழ்த்துக்கள்



உமா :கணவரை இழந்து தன் பிள்ளைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து அவர்களின் முன்னேற்றத்திற்காக தன்னை மெழுகாய் உருக்கி வாழ்ந்தவர். மருமகளுடனான இவரது போக்கு ஆரம்பத்தில் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் காலத்தின் பிடியில் புரிந்துணர்வுடன் இன்னொரு மகளாய் அரவணைத்து உயர்ந்துவிட்டார்

.
மேகநாதன்: அனைத்து விதத்திலும் தன் அண்ணன் குடும்பத்திற்கு பக்கபலமாக இருந்து பல இழப்புகளை மீறி பிள்ளைகளை முன்னேற்றப் பாதையில் செல்ல உறுதுணை புரிந்தார்.
சாந்தா -வேணு : என்ன சொல்ல தான் பெற்ற மகளின் செயலால் துடிதுடித்து கதறிய பொழுதும், அவளை இழந்து இவர்கள் நொடிந்தாலும் விஷ்வா மற்றும் கன்யாவிற்கு நியாயம் செய்து அமைதி படுத்தினர்.
கிஷோர், அமன்: கலகலப்பும், உண்மையான அன்பும் மேன்மையான நட்பும் கொண்ட நல்லுள்ளங்கள். மகிழ்மொழி உடன் இவர்களது நட்பு மிக அழகு.
வாழ்க்கையில் பல இழப்புகளையும், வலிகளை கொண்ட நம் மூன்று காதல் ஜோடிகளும் உறவு எனும் பாலத்தில் நட்புடன் தூய அன்புடன் ஒன்றிணைந்து என்றும் வசந்தத்தை போற்றுவார்கள் என்று நம்புகிறோம்.@Shambavi Chandran போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி
Last edited:
