ஹாய் பவித்ரா மேடம்,
சிங்கி்ள் பேரண்ட் குழந்தை வளர்ப்பு இன்னைக்கு நிறைய இடத்துல இருக்குற ஒரு விஷயம். இந்த கதையோட போக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வெவ்வேறு பரிமாணங்கள்ல தன்னை ஈடுபடுத்திக்கிற கார்த்திகேயன் ஒரு பக்கம்னா, இசையோட தன்னை மூழ்கடிக்கிற ஆனந்தன் ஒரு பக்கம், கடமையே கண்ணா வாழ்ந்த ரேவதி ஒரு பக்கம்னா, புத்தகங்கள், ஆர்ஜே, சமூக சேவைன்னு தன்னை வெளிப்படுத்திக்கிற வாரிதி ஒரு பக்கம். சூப்பர். பல குணாதியசியங்களோட இருக்குற கேரக்டர்கள இந்த கதையில நான் பார்க்கிறேன். பொதுவாகவே உங்க கதைகள்ல ரொம்ப நேர்மறையான மனிதர்களையே நான் பார்க்கிறேன். எதிர்மறை குணாதியம் கொண்ட மனிதர்களையும்(கார்த்திகேசயன் மனைவி, அவுங்க பெரியம்மா, பாட்டி, தாத்தா) அப்படியே லேசா காட்டுறீங்க. ஒவ்வொரு சீனும் சூப்பர். இதுல யதார்த்தத்தையும் காட்டுறீங்க. அடுத்தடுத்த எபிசோடிற்காக வெயிட்டிங்.