Take care sis.manasa santhoshama vatchukkonga ellamey ini nallathey nadakkum'கங்கையின் சங்கமம்' கதையை தொடர்ந்து எழுத முடியாமல் இடையிலேயே நிறுத்தும்படி ஆகிவிட்டது. தயவு செய்து எல்லோரும் என்னை மன்னிக்கவும்! அதுக்கு காரணம் எனக்கு கருச் சிதைவு ஏற்பட்டதால் தான். இதை இங்கே அனுதாபத்திற்காக சொல்லவில்லை. நான் கதையை தொடராமல் இருந்ததற்கு காரணம் என்னுடைய சோம்பேறித்தனமோ அலட்சிய போக்கோ இல்லை என்று சொல்வதற்காக தான் சொல்கிறேன். மனமும் உடலும் அதிலிருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் தேவைப்பட்டது, மீண்டும் அதற்காக மன்னிப்பு கேட்டு விடுகிறேன்.
இப்போ ஏன் இங்கே வந்தேன்னா, கதையை திரும்பவும் தொடரப் போகிறேன்! யாரை எல்லாம் tag செய்யணும் அல்லது யாரையாவது tag செய்ய வேண்டுமா? தயவு செய்து கமெண்டில் சொல்லுங்க.
இவ்வளவு நாள் எனக்காக காத்திருந்த, உள்பெட்டியில் மெசேஜ் அனுப்பிய அத்தனை பேருக்கும் நன்றிகள் பல! உங்க பொறுமையை இவ்வளவு நாள் சோதித்ததுக்காக மீதியுள்ள கதையை மொத்தமாக ஒரே நாளில் அல்லது இரண்டே நாளில் பதிவேற்றப் போகிறேன். விருப்பமுள்ளவர்கள் படிச்சுடுங்க கதையை எப்போ தொடங்கலாம் அதையும் நீங்களே சொல்லுங்க!
அன்புடன்
அனுஶ்ரீ