Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மீள்வேனோ மூழ்கிடுவேனோ 7

Advertisement

எல்லாரையும் போல இவனும் வீட்டுப் பெண்கள் கிட்ட மட்டும் தான் குடும்ப மானம் கௌரவத்தை கொடுத்து வச்சிருப்பான் போல?

மான்சிக்கு திருமணத்துக்கு பின் அவ்வளவு எளிதா வாழ்க்கை செல்லாதோ...இவன் மனைவிய கஷ்டப்படுத்த மாட்டான்னு நினைச்சேன்...அப்படி இருக்க மாட்டானோ?
 
பொண்ணு பார்க்க வருகிற மாப்பிள்ள வீட்டாற இடம் பொண்ணு வீட்டுக்காரங்க தன்மையாகவும் பணிவா தான் நடந்து கொள்வார்கள். ஏனா மகள் வாழப் போற வீடு என்று.துளசிப்போல முறையற்ற வாழ்க்கை வாழ்கிறவள் உடைய மகள்க்கு அதேப்போல வாழத்தான் கேப்பாங்க. ஆனால் இங்க செல்வமும் செல்வாக்கும் உள்ள ஒழுக்கமான மாப்பிள்ளைக்கு கேக்கும் போது நவீன் மற்றும் மானசி பணிவாக இருப்பது என்னப் பெரிய அதிசியம் வைதேகி. துளசியால் வைதேகி தான் துன்பபட்டாங்க ஆனால் அவங்களே சும்மா இருக்காங்க. இங்கு சர்வா தான் மானசிக்கு கஷ்டம் கொடுப்பான் போல.
 
யார்ரா அது ... சூரியநாராயணன் கூட வந்தது... அவருக்கு ஏன் மான்சி பயப்படணும். சர்வாவுக்கு மான்சியோட அழகு தெரிஞ்ச அளவுக்கு இன்னும் மனசு தெரியல.. அதோட அவன் வாழ்க்கையை தொடங்கினா நிச்சயம் அதில் மான்சியை காயப்படுத்திடுவான்னு நல்லா தெரியுது...

நவீன் நல்ல சகோதரன்னு ப்ரூப் பண்ணிட்டான்... அவ அக்காவை எந்த கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டானோ அதை பார்த்துட்டான்... இனியாவது அவன் நிம்மதியா இருந்தா சரி
 
Top