Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் - 34 (முடிவுரை)

Advertisement

இது முதல் கதையா ..?இந்த போட்டியில் எழுதும் முதல் கதையா ...?அல்லது....இன்னும் ஒரு கதையும் எழுதுறீங்களா? ...எனக்கு என்னவோ அப்படி தான் தோணுது ?
கதையின் கருவை தேர்ந்து எடுத்து விதத்தைப்பாத்தாலும்,கதையின் நகர்வு,வார்த்தையாடல்கள்,அனைத்தும் ஒரு சிறந்த எழுத்தாளராய் இருக்க சான்ஸ் நிறைய இருக்கு ?
நான் உங்கள் கதையை படித்து இருக்கவில்லை என்று தான் தோணுது ..இந்த போட்டி முடிவுகள் வந்ததுக்கப்புறம் நானும் உங்களுடன் ஒரு வாசகியா தொடருவேன் ?உங்களை காண ஆவலுடன் நாமும் ஜி?

நிஐமா நிகில நினைத்து பரிதாபம் தான் வருது ,இவன் இதிலிருந்து வெளிய வந்து இருக்கணும் .....சரி தீப்தியிடம் உண்மையை சொல்லி இரண்டு அடியை வாங்கி ?தன்னுடைய வாழ்க்கையை சரிசெஞ்சு இருக்கலாம் ஆனால் அவன் திருந்தலை .....எனக்கென்னவொ அவன் திருந்துற மாதிரியும் இல்லை ....இப்படியும் சிலர் ..?.

ஷ்யாம் ஒரு ஹீரோ தான் ....அனுவை இந்தளவுக்கு கொண்டு வந்ததும் அவன்தானே...அவளின் தெளிவு தான் இப்போ நல்லா தெரியுதே ...
இருவருக்கும் பழைய கசடுகள் எங்கயோ ஒரு ஓரத்தில் இருந்தாலும் அதையும் தாண்டி அவர்களின் அன்பு தான் ஜெயிச்சுருச்சே....அப்புறம் என்ன?
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
போட்டில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ?❤️
 
Nice story! முதல் கதை வெற்றிக்கரமாக முடித்ததற்கும், முதல் கதையே வெற்றியின் சிகரத்தை தொடவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நட்பே???
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம் என்றென்றும்???
 
#TNWContestwriters
#078
#மௌனத்தின்மறுபக்கம்
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்..
இந்த எழுத்தாளருக்கு இது முதல் கதையாம் நம்ப முடியவில்லை... அவ்வளவு உணர்வு பூர்வமான கனமான கதைக்களம்... அதிகமான பயத்துடனும் மனபாரத்துடனும் படித்தேன் கதையை ?
ஷ்யாம்.. அனாமிகா... இவர்களின் காதலும்.. அனாமிகாவின் தடுமாற்றமும்.. குற்ற உணர்ச்சியும்... பயமும்.. கதை..
நிகில் மல்ஹித்ரா... இவனை நினைத்தால் கோபம் வருகிறது ஆதங்கமும் வருகிறது பாவமாகவும் இருக்கிறது ? கிடைத்த அழகான வாழ்வை தொலைத்து விட்டு எதை தேடி அலைகிறான் ? ஷியாம் இவனை பற்றி தன் மனைவியிடம் கூறுவது சரிதான்.. ஷ்யாம்.. அப்பப்பா என்ன மனிதன் இவன் ? காதல் கொண்ட மனைவியின் மேல் இவன் கொண்டுள்ள காதலும் பாசமும் அவளின் தவறுகளையும் மறக்கவும் மன்னிக்கவும் செய்கிறது.. சராசரி மனிதனாக இவனின் ஆதங்கமும் கோபமும் மிகச் சரியே... அனாமிகாவின் மன தடுமாற்றத்திற்கான காரணமும்... எது அவளின் நிலை மாறச் செய்தது என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. நிகில் மல்ஹோத்ரா வின் மேல் இவள் கொண்ட அபிமானம் ஒரு காரணம் என்றாலும் இவள் நிலை இறங்க எது காரணமாக இருந்தது... அதேபோல் நிகில் மல்ஹோத்ராவிடம் தீப்தி கேட்ட கேள்வி எனக்குள்ளும் இருக்கிறது அதற்கான விடை கிடைக்கவில்லை... இது அவரவரின் மனநிலைக்கு ஏற்றவாறு முடிவு செய்து கொள்ள வேண்டும் எனில் என்னால் அனாமிகாவை முழுவதுமாக சந்தேகம் கொள்ள முடியவில்லை...DID SHE DO IT என்று கேட்டால் நான் NO என்று தான் கூறுவேன்... அப்படித்தான் என்னால் அனாமிகாவை நினைக்க முடிகிறது... வெகு சுவாரசியமாகும் விறுவிறுப்பாகவும் தெளிந்த எழுத்து நறையோடும் உணர்ச்சிகளின் குவியலாகும் நகர்ந்தது கதை.. நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ???
இதை சொல்லலாமா என்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக என் ஓட்டு இந்த கதைக்கு இருக்கிறது ???
Good luck dear ??
❤️
 
Intha story ku enna comment panna nu theriyala yenna enaku konjam kooda puriyala. Anu nikhil relationship pathi enaku oru thelivum kudukkala. Anu doctor kita pesum pothu avanga ellai thandatha mathi pesura but nikhil kooda erukum pothu vera mathi feel aguthu. Nikhil pesum pothu avanga physical relationship erukura mathi pesuran Avan kiss pannapothu adithal nu solluti udane un vai than no solluthu but unnoda body language enaku sathagama than pathil solluthunu solluran avalum athuku ethuvum sollamal erukiral innoru epi la Avan touch panna aruvaruppa feel panra mathi katturinga IPO itha Nan enna mathi eduthukirathu ethuku ivlo kulabbam . Mumbai incident enna nu sollave illa oru velai adi vilunthathu Anga vaithu than enru ninaikiren. Anu ivala pathi enna sollurathu thirunthunala illaya nu last varai puriyave illa. Anu bold ah nikhil relationship vendam nu decision edukave illa. Nikhil kita last ah pesum pothu kooda strong ah avana marukkala Avan kita aluthu than kariyam sathikiral avanum ivaloda kannirai parthu un life la Vara maten nu poitan. Aduthu friend ranju kita pesum pothu aluthu than aval kitayum anuthabathai sampathikiral apuram last ah shyam kita pesum pothum aluthu kite than nama serunthu valalam nu sollura. Anu alugai ya ayuthama vache thannoda thavarugal la erunthu thappikira mathi than erukirathe thavira aval thirunthuna mathi enaku personal la feel agala. Anu and shyam ku oru epi ya vathu vachurukalam. Story full ah Anu nikhil relationship pathi mattum than erunthuchu. Anu shyam ivanga anbaya purithalayo oru epi la kooda sollala. Anu ranju convo nikhil relationship pathi than pesuranga Anu doctor convo athe than Anu nikhil convo athe than Anu shyam convo athe than final epi kooda flight la Anu shyam pesurathu same relationship pathi mattum than. Ipdi Ella epilayum itha pathi mattum pesi Anu shyam onnu serunthangala illaya nu story mudichutinga. Competition ku nenga intha story select panni eruka koodathu becoz intha concept romba sensitive anathu ivlo pages la ivlo words la mudikanum nu rules kulla adakka mudiyathu athanal intha story mudivu manasula pathiyave illa . Story full ah Anu nikhil relationship pathi padichitu last oru epi la Anu shyam santhoshama valkira mathi sonnal epdi engalala accept panna mudiyum . 33 episode la Anu shyam rendu perum alugai vethanai kastam kulabbam stress kobam nu negatives ah story poikitu erukum pothu switch pota mathi ore epi la happy ah erukura mathi finish panna readers mindset epdi change agum athuvum ivlo sensitive vana vishayathula. Atleast last epi yathu full Anu and shyam mattum erunthal kooda satisfy agi erukum athukum illama nikhil kondu vanthu Anu va rasikira mathi scene vachu last varai Anu nikhil relationship apdiyethan erukura mathi than feel aguthu athuvum Anu avana parthathu shyam kedayama use panni thanna save pannikural last epi la Anu nikhil la strong ah avan kankala nera pathu bold Kai kuluki erukalam . Unnoda parvaiyo thodukaiyo enna salana paduthathu nu strong ah katti erukalam. Anu nikhil kita bold ah pesura mathi scene vachurukalam becoz story layum sari readers comment sari Ella epi yum Anu strong ah No sollave illa nu solluringa last epi la yavathu solli erunthal nalla erunthu erukum romba varusham kalithu meet pannum pothu shyam pinnadi ninnuthan avana samalikra mathi than katturinga. Award vangura alavuku business panra but nikhil mattum straight ah avan thanaku yarume illa just third person than nu kattura mathi scene vachirukanum. Last Vara anu nikhil vendam nu mudivu edukave illa avanga relationship apdiye erukura mathi feel aguthu. Last 10 epi Anu and shyam relationship kaga mattum eluthi erukanum avanga intha problem la erunthu epdi veliya varanga ithe ellam maranthu epdi adutha kattathuku life move panranga nu detail katti erunthal nanraga erunthu erukum. Bocoz shyam Anu voda mananilai epdi erukunu purinchukama bedroom la onna erunthathai ninachu oru mathi feel pannuvan physical relationship avoid panna than mukiyama Avan velinadu ku odi porathe IPO shyam ku Anu kuda oru eyalbana thampathya valkai vala mudinchutha nu enaku puriyala. Mumbai incident enna nu theriyamal ennal Anu shyam relationship accept panna mudiyala. Anu nikhil part kuraithu vitu Anu shyam part innum athigam erunthu erukalam
 
நிகில்
இவன் திருத்த முடியாத அளவிற்கு மோசமானவனா எனக்கு தெரியல. இவனோட எண்ணம் எப்படி இருக்கிறது என்றால் இழுத்து மூடி ஆடை அணிகிறவங்க எல்லாம் நல்லவங்க‌ நாகரிக ஆடை அணிகிறவங்க எல்லாம் தப்பானவங்க என்று உறுதியாக நினைக்கிறான். நிகில்க்கு அனு மேல் காதல் இல்லை ஒரு வகையான ஈர்ப்பு தான் .அதற்கு காரணம் அனுவோட கண்ணியமான ஆடை அலங்காரம் இல்லாத முகம் இரண்டாவது ஷ்யாம் மேல் இருக்க காதல் இது தான் அவனை தடம் மாறி வைத்தது. இதை மூன்று இடத்தில் நீங்கள் தான் சொல்லிருக்கிங்க.முதல் அவ கிட்ட பேச ஆரம்பிக்கிறதும் எல்லா பெண்களும் நாகரிகமா ஆடை அணியும் போது இவ மட்டும் தொள தொள சுடி போட்டு துப்பட்டா ஒழுங்காக அணிந்து ஜடை பின்னி‌ முகத்திலும் எந்தவித ஒப்பனையும் இல்லாத முகம் தான் காரணம் சொல்லி இருந்திருந்திங்க அடுத்து தீப்தி மேனாமினுக்கி மயக்கினால் கேட்கும் போதும் அவளோட இந்த வெளித்தோற்றம் பற்றி சிந்திப்பான் அடுத்து கடைசி பகுதில் ஷ்யாம் அவனோட அல்ட்ரா மாடர்ன் உலகத்தில் நீ மட்டும் வித்தியாசமாக இருந்தது தான் என்று சொல்வான். வாழ்க்கைக்கு வெளித்தோற்றம் முக்கியம் இல்லை மனசு தான் முக்கியம் என்று புரிய வைத்தால் போதும் கண்டிப்பாக திருந்திவிடுவான். நிகில் க்கு அனு தான் ஷ்யாம் மேல் பாசமாக இருக்கிறா ஆனால் ஷ்யாம் க்கு இவள் மேல் பாசமே இல்லை என்று ஆரம்பத்தில் இவன் நினைக்கிறதா ஒரு காட்சி இருக்கும். அவள் மேல் பாசமே இல்லாத ஷ்யாம்காக ஏன் இப்படி உருகுறான்னு ஒரு கோபம் வரும்.நாம இவள் மேல் பாசம் வைத்தால் ஷ்யாம் விட்டுட்டு தன் கூட வந்து விடுவாள் என்ற எண்ணம் ஆனால் கடைசி வரை அவன் அறியாத விஷயம் ஷ்யாம் என்கிற தாய் பறவையோட பாதுகாப்பான கூட்டுகுள்ள தான் அனு என்கிற சின்ன பறவை குஞ்சு பாதுகாப்பா இருக்குன்னு தெரியவில்லை. அனு ஷ்யாம் பற்றி பேசும் போது எல்லாம் அவ எந்த அளவுக்கு அவனை காதலிக்கிறாள் என்று சொல்வாளே தவிர‌ ஷ்யாம் காதல் பற்றி சொல்லமாட்டாள் இவனோட பழக்கம் வேண்டாம் என்று‌ சொல்லும் போதும் அவளால் ஷ்யாம் இல்லாமல் வாழ முடியாது. என்று சொல்வாள் இவள பிடிக்காத ஷ்யாம்காக இவ மேல உயிராக இருக்க என்ன வேண்டாம் என்று ஒரு வீம்பு அவன் கிட்ட இருந்துகிட்டே இருக்கும். இவனுக்கு அவ மேல ஆழமான காதல் எல்லாம் இல்லை ஏன்னா அனுவோட ரகசியமாக தான் வாழ நினைச்சான் கௌரவமான அடையாளம் கொடுக்கணும் என்று நினைக்கவே இல்லை. அவன் தீப்தி விட்டு பிரியணும்ன்னு நினைக்கவில்லை‌. அவனுக்கு தீப்தி கிட்ட அன்பு இருக்கு அதை தீப்தி நினைத்தால் காதலா மாற்றலாம். நிகில் கிட்ட எந்த கெட்ட பழக்கம் இல்லை இவனோட துறையில இருக்குறவங்க எவ்வளோ தப்பு செய்யும் போதும் கண்ணியமாக தான் இருக்கிறான். நிகில் தாய் இல்லாமல் தந்தை கிட்ட வளர்ந்தவன். தாய் என்கிற பெண்ணோட அன்பு அனுபவித்தது இல்லை. தீப்தியும்‌ அவளோட வேலையில் தான் அதிகம் கவனம் செலுத்துறாள்‌ இதுதான்‌ வாழ்க்கை என்று அவன்‌ நினைச்சிகிட்டு இருக்கும் அதை எல்லாம் மாற்றி அமைக்கிறது அனு‌ ஷ்யாம் அன்னோன்யமான குடும்ப வாழ்க்கை அவன் எண்ணத்தை மாற்றுது அதுவும் தீப்தி அவன் மேல் அன்பாக இல்லை ஷ்யாம் அனு மேல் அன்பாக இல்லை அப்போ நாங்க ரெண்டு பேரும் ஒன்றாக சேர்ந்தால் என்ன எண்ணம். ஒரு பெண்ணோட அன்பு எப்படி இருக்கும் என்று அனு ஷ்யாம் மேல் காட்டியதை பார்த்து தான் தெரிஞ்சுகிட்டான். ஷ்யாம் மேல் வந்த பொறாமை தான் அனு கிட்ட நெருங்க வைத்தது. கடைசியும் உனக்கு மட்டும் ஏன் இவ்வளவு‌ அன்பு கிடைக்குதுன்னு பொறாமையாக பார்த்துட்டே போவான். நிகில்க்கு தேவை அன்பு தான் அனு இல்லை அது தீப்தி கிட்ட இருந்து கிடைத்தாலும் அவன் மாறிடுவான். நிகில் ஒழுக்கான ஆடை அணிந்து புருஷனோட அளவுக்கு அதிகமான அன்பில் வாழ்ந்துகிட்ட இருக்கும் போதே உன்னோட தப்பான உறவில் இருந்தால் ஆனால் தீப்தி மாடரனாக இருந்தாலும் உன்னோட அன்பு கிடைக்காத போதும் உன்னை தவிர வேற ஒருத்தனை எப்போதும் நினைக்காதவ நீதான் ஷ்யாம் விட அதிர்ஷ்டசாலி உன்னை பார்த்து தான் அவன் பொறாமை படணும்டா லூசு பயலே. நிகில் திருத்த 💯% வாய்ப்பு இருக்கு . அவன் அப்பா மேல் அன்பு இருக்கு மகன் ரிஷி மேல் அன்பு இருக்கு கண்டிப்பாக தீப்தி மேல் அன்பு இருக்கு அவளை மடியில் உட்கார வைத்து பேசுற அந்த காட்சி அவ்வளவு அழகாக இருந்துச்சு. அனு ஷ்யாம் முக்கியமானவங்க என்றால் நீங்கள் அவங்களுக்கு மட்டும் தான் தீர்வு கொடுத்து கதை முடிச்சு இருக்கணும் தீப்தி நிகில் ஜோடிக்கு தேவையில்லாத முடிவு கொடுத்து இருக்கீங்க.
 
அனு நிகில் இரண்டு பேரும் ஒரே தவறை தான் செய்து இருக்காங்க. ஆனால் அவர்களுக்கான நியாயம் மட்டும் வேற எப்படி ஏற்று கொள்ள முடியும்.
அனு அன்பை வாரி வழங்க கூடிய அப்பா அம்மா அண்ணன் மாமா அத்தை எல்லாம் இருக்க குடும்பம் உயிராக நேசிக்கிற புருஷன் எல்லாவற்றிலும் துணையாக இருந்து நல்லவழி காட்டுற தோழி அவ கேட்டு கிடைக்காதது எதுவும் இல்லை இப்படி வாழ்ந்துகிட்ட இருக்க அனு தடம் புரண்டால் திருந்தி விடுவாள்.
நிகில் தாய் இல்லாதவன் அப்பா அன்பாக இருந்தாலும் வேலையில் அதிக நேரம் செலவிட முடியாது கூட பிறந்தவங்க இல்ல மனைவி தீப்தி அவளோட வேலையில் தான் கவனம் இருக்கிறாள். தோழியாக இருந்த தீப்தி மனைவி ஆன பிறகு தோழமை மறந்துவிட்டாள். இப்படி எந்த வித விதத்திலும் அன்போ அரவணைப்பு கிடைக்காத நிகில் அதை வெளியில் தேடுனான் அது வீட்டிலே கிடைத்தால் திருத்த மாட்டானா.‌
அனு தப்பு செய்கிறாள் என்று தெரிந்ததும் அவ தோழியும் புருஷனும் சேர்ந்து அவள் திருத்த வாய்ப்பு கொடுத்து திருத்துறாங்க அவள் பக்கத்தையும் மனசு விட்டு பேச வைக்கிறாங்க இவளுக்கு இவ்வளவு வாய்ப்பு கொடுத்துட்டு நிகில்க்கு அவன் பக்கத்தை சொல்ல கூட வாய்ப்பு கொடுக்கல. ஓட்டல் ரூம்ல அவன் என்ன சொல்ல வரான் என்று அவ கேட்கவே இல்லை அவன் அப்பா கிட்ட பேச வரான் அவரும் கேட்கவே இல்லை கடைசி எபி சில வருடங்கள் என்று எழுதி இருக்கிங்க அதை ஒரு ஐந்து வருடம் என்று வச்சுகிட்டாலும் இரண்டு வருடத்திற்கு முன்பு தான் விவாகரத்து கிடைத்ததாக எழுதி இருக்கிங்க தீப்தி உண்மை தெரிந்து உடனே விவாகரத்து முடிவு பண்ணிட்டா ஆனால் நிகில் விவாகரத்து கொடுக்காமல் அவ கிட்ட பேச தான் முயற்சி பண்ணி இருக்கிறான் ஆனால் யாருமே அவனுக்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை. கடைசி எபில அனுவை கடந்து வர முயற்சி செய்கிறான் முடியல.‌ தீப்தி கிட்ட பேச முயற்சி செய்கிறான் சொன்னீங்க தீப்தி ஒரு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் அனுவை கடந்து வந்திருவான். அனுவுக்கு கொடுத்த மாதிரி ஒரு வாய்ப்பை நிகில் க்கு கொடுத்தால் கண்டிப்பாய் திருந்துவான். நிகில் தீப்தி க்கு இன்னோரு கதை எழுதி அவங்க ஒன்று சேருகிற மாதிரி காட்டினால் நன்றாக இருக்கும் . அனுவை விட தீப்தி நிகில் அருமையான குடும்ப வாழ்க்கைக்கு தகுதியானவர்கள் தான். நிச்சயம் இவங்களுக்கு தனியாக ஒரு கதை எழுதுங்க
 
முதலில் வாழ்த்துக்கள் டியர்.
மிக அருமையான கதை. நல்லா எழுதி இருக்கீங்க. உங்க எழுத்தின் செறிவு அபாரம்.
எந்த இடத்திலும் தடுமாற்றம் இல்லாமல் ஒரு flow ல அழகா கதையை முடிச்சுட்டிங்க.
வித்தியாசமான முயற்சி.
அதை நல்ல முறையில் நேர்மறையான விதத்தில் எல்லோருக்கும் புரிய வச்சுட்டிங்க.
நீங்க தொடர்ந்து எழுதவும்.
 
Top