வருண் தன்னை விட ஆறு மாசம் சின்னவன் என்பதால் வர்ஷாவுக்கு அவன் எண்ணம் புரியல
அடேய் வருண் உன்னை எல்லாம் இந்த வீட்டில் ஒருத்தரும் மனுஷனா கூட மதிக்கலையே
ஊர் முழுக்க மாப்பிள்ளை தேடுவாங்க ஆனால் உன்னை பார்த்தால் யாருக்கும் மாப்பிள்ளை மாதிரி தெரியலையே
ஒரே வீட்டில் இருந்து கிட்டு ஒருத்தன் மூனு வருஷமா பார்க்கிறதை ஒருத்தி கண்டுபிடிக்கல
இதுல செந்துரா எப்போவாவது வருவா அப்பவும் தம்பி கூட மட்டும் தான் இருப்பாள் இவளுக்கு எங்க வம்சிய புரிய போகுது
இவ்வளவு நாள் அவங்க இரண்டு பேரையும் பிரிச்சு வச்சது கொஞ்சம் கூட உறுத்தல ஆனால் பெண் சாபம் என்று சொன்னவுடன் வீட்டுக்கு கூட்டிட்டு வர போறாங்களாம் என்ன ஒரு சுயநலம்
இவங்க முடிவு எடுத்தால் அவங்க இரண்டு பேரும் சம்மதிப்பாங்களா நல்லா குடும்பமே மூக்கு உடை பட போகுது