காதல் 17:
காலையில் எழுந்து விட்டாலும் வெறித்தப் பார்வையோடு படுக்கையில் அமர்ந்திருந்தான் ராஜ் நந்தன். அதைக் கண்ட மதுரவசனி ,
“என்னாச்சு.. உங்களுக்கு ஒருவாரமா நல்லா தானே இருந்தீங்க…. ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு..?” எனக் கவலையாகக் கேட்க
‘சே… என்னோட கவலையை இவளை பாதிக்க விடறேன்.. அவ சந்தோஷமா இருக்கனும்…’ என்று நினைத்தவன் நொடிப்பொழுதில் புன்னகையைப் பூசி,
“ஒன்னுமில்ல… சும்மா டயர்டா இருந்துச்சு… நீதான் என்னை நைட்ல தூங்க விட மாட்றியே…?” எனக் குறைபட
அவனை விடாமல் முறைத்தவள் அப்படியே பேசாமல் நிற்க
“என்ன முறைப்பு… அப்படி பார்க்கிற..?” என்றபோதும் அவள் அவனை அப்படி விடாமல் பார்க்க அவளை வேகமாக இழுத்தணைத்தவன் அவள் முகம் முழுவதும் முத்தமிட, அவள் அவனின் அணைப்பில் சாய்ந்த வண்ணமே,
“உங்களை முதல் தடவ பார்த்தப்போவே உங்க மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சவ நான்.. உங்க முகம் பார்த்து உங்க உணர்வுகளை எனக்குப் படிக்கத் தெரியும்.. சோ பாடகரா மட்டும் இருங்க.. நடிகரா இருக்காதிங்க… எப்பவும் இப்படி செஞ்சு என்னை திசைத் திருப்பாதிங்க..
சும்மா எல்லாம் எனக்குத் தெரியும்னு திமிர் காட்டக் கூடாது… எங்கிட்ட இறங்கிப் போகறதுல என்ன ஈகோ…?” எனக் காட்டமாகப் பேச
அவளின் கைப்பிடித்தவன், “ரொம்பத் திட்டுறே என்னை…. ஆனா நீ சொன்ன எதுவும் காரணமில்ல… நீ என்னை முதல் தடவையேப் புரிஞ்சிட்டு விட்டுக்கொடுக்கல.. என்னோட கண்ணு சொல்ற செய்தியைப் படிக்கத் தெரிஞ்சதால தான் நீ பாசாகி எனக்குப் பொண்டாட்டியா இருக்கடி….” என்று கொஞ்ச
அவள் அப்போதும் முறைக்க,
“ஊப்ஸ்… உனக்குத் தான் டி பிடிவாதம் திமிர் எல்லாம் என்னை விட ஜாஸ்தி… எல்லாத்திலயும் எனக்கு ஈக்குவள் தான் நீ… இப்ப என்ன… உங்கிட்டச் சொல்லி உன்னைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான்… இன்னிக்கு தீபன் பர்த்டே..” என்றான் எந்த வித உணர்ச்சியும் காட்டாத பாவத்தில்.
அவன் சொன்னது சில நொடிகள் அவளுக்குப் புரியவில்லை. புரிந்தப் போது கணவனின் மன நிலைப் புரிந்தது.அவனைப் பாவமாகப் பார்க்க
“கஷ்டமா தான் இருக்கு… இந்த நாளை மறக்க முடியல.. ஒருவேளை இனி வரப்போற வருஷங்கள் மாத்தலாம்.. ஆனா இன்னிக்கு இந்த வீட்டுல இருக்க நிமிஷம் எல்லாமே கண்முன்னாடி வந்து போகுது… ரொம்ப ரொம்ப…….. வலிக்குது மது……….. ஆனா இன்னொரு தடவ இவங்களைப் பிரியற சக்தி எனக்கில்ல மது…. ஆனாலும் என்னோடத் தன்மானத்தையும் இழந்திட்டு என்னால் எதுவும் செய்ய முடியாது… ஏன்னா எனக்கே எனக்குன்னு இருக்கறது அதுதான்…” என்றவனின் தோள் சாய்ந்தவளின் தலைமுடியை ஒதுக்கியவன்,
“நீயும் எனக்கே எனக்கு தான்… உஸ்ஸ்… நானும் நார்மலா இருக்க ட்ரை செய்றேன்… பட்…. இந்த ஒரு வாரம் நார்மலா இருந்தேன்… இந்த நாள் பழசைக் கிளறி…. ரத்தம் வராத குறைதான்.. வெளியே போய் எங்க என்னோட கஷ்டத்தை அதோட வலியை அவங்கக் கிட்ட காட்டிடுவேனோன்னு பயமா இருக்கு… அது மட்டுமில்லாம தீபனோட பிறந்த நாள் அவனுக்கு ஸ்பெஷல் தானே.. அது என்னால கெடக் கூடாது..” என்று சொன்னவன் கணவனின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் ஒற்றியவள் ,
“சூப்பருங்க நீங்க…. என் நந்துன்னா நந்துதான்… ஒன்னும் ஆகாது… நம்மோட எண்ணங்கள் வைஃபை போலவாம்.. நல்லா கனெக்ட் ஆகுமாம்.. யாரையும் காயப்படுத்தக் கூடாதுங்கற உங்க எண்ணம் கண்டிப்பா பலிக்கும்.. சோ நீங்க கவலைப்படாம போங்க.. யார்க்கிட்டையும் எதையும் காட்டிக்காதீங்க….” என்ற மனைவியை ஆதுரமாய்ப் பார்த்தவன்
“இதுக்குத் தான் பொண்டாட்டித் தேவைன்னு சொல்றது… மதும்மா…” என்றவன் அவளைக் கிறக்கத்துடன் அழைத்து அவள் இதழ் நோக்கிக் குனிய,
அவளோ வாயை மூடிக் கொண்டு குளியறைக்குள் புகுந்தவள் வாந்தி எடுத்தாள். சத்தம் கேட்டு பதறிப்போய் வந்தவனின் கரங்களில் வலு இல்லாமல் அவள் சரிய, அவளைத் தூக்கியவன் படுக்கையில் கிடத்தி தண்ணீர் தர
“என்னடா மதும்மா…ஓகேவா..?” எனக் கேட்க
அவன் மடியில் தலையை சாய்த்தவள், “ஒன்னுமில்ல.. உங்களை மாதிரியே உங்க புள்ளையும் படுத்துறான் என்னை… ஆமா பொண்ணு வேண்டாமா.. பையன் தான் வேணுமா? என வினவ
“என்ன குழந்தையா இருந்தா என்ன.... எனக்கு இரண்டுமே ஈக்குவள் தான் டா… ஏன்னா அது என்னோட குழந்தை இல்லையா..?.. எதுனாலும் ஒகே தான்.. நல்லபடியா என்னோடப் பொண்டாட்டியைப் படுத்தி எடுக்காமப் பொறந்தா சரிதான்..” என்று சொன்ன கணவனை நெருங்கியவள்,
“பார்டா…. எப்பவும் என் பிள்ளை தான் முக்கியம்னு சொல்லிட்டு இருப்பிங்க.. இப்ப என்ன என் மேல அக்கறை…?”
அவள் உதடுகளைத் தன் கையால் வருடியவன் , “உன்னை.. உன் மேல அக்கறை இல்லையா… எனக்கு…?… கோவிலுக்குப் போனா நமக்கு ஒரு அமைதி கிடைக்கும்.. கடவுள் இருக்காரு இல்லை அது இரண்டாம் பட்சம்… எந்த ஒரு விஷயமும் நாம செஞ்சாதானே நடக்குது.. அப்போ இவ்வளவு பெரிய உலகத்தை கடவுள்னு ஒருத்தர் ஆட்டி வைக்கிறார்னு தான் எனக்குத் தோணும்.. கடவுள் கிட்ட நம்மை ஒப்படைச்சப் பின்னாடி ஒரு பாதுகாப்பு கிடைக்கும் மது… அதனாலேயே நான் கோவிலுக்குப் போவேன்… எல்லாத்தையும் மறக்க…. அப்படி நான் எல்லாத்தையும் மறக்கறது உங்கிட்ட தான்.. நாட் ஜஸ்ட் செக்ஸ்… நீ என்னை அணைச்சிக்கிட்டாலே போதும்… அது தர நிம்மதி.. பார்வையால் நீ எனக்குத் தர சப்போர்ட்….ம்ம்ம்……..ம்…….து…” என்றவனை அவள் முடிக்க விடாமல் அவன் இதழ்களைத் தம் இதழ்களால் சிறை செய்தாள்.
முத்தங்கள் முடிவுற்ற பின்னே அவன் அவள் முகம் பார்க்கையில் அவள் கண்கள் கலங்கி இருக்க,
“ஏய்.. என்ன மதும்மா…. ஏன் அழற….. நான் தான் இன்னிக்கு ரொம்ப ஓவரா போயிட்டேன்..” எனச் சொல்ல
“நீங்க என்னைக்குத் தான் ஓவர் இல்லை…. எதுல குறைச்சலா இருந்திருக்கிங்க…. என்னால உங்க அளவுக்குக் காதலிக்க முடியல… இவ்வளவு காதலை என்னால தாங்கவே முடியல…. பயமா கூட இருக்கு… இந்த காதல் எப்பவும் கூடவே இருக்கனும்னு..” என உணர்ச்சி வசப்பட்டு பேச
அவள் கன்னமெங்கும் அழுந்த முத்தமிட்டு ,
“அது நான் உயிரோட இருக்கவரை இருக்கும்… சும்மா இப்படி லூசாட்டம் உளறக்கூடாது… நீ ரெஸ்ட் எடு நான் கீழப் போறேன்….” என்றவனின் கைப்பிடித்தவள்,
“ நானும் வரேன்…பசிக்குது…” என
“நான் சாப்பாட்டை எடுத்து வரேன் ..”
“ப்ச்… ரூமல இருந்தா ஒரு மாதிரி இருக்கும்…. நானும் வரேன்… இப்ப பரவாயில்ல..”
“உன்னை… இம்சை… படுத்துற நீ… பிடிவாதம் ஜாஸ்தி டி உனக்கு.. வா..” என அதட்டலாய் சொல்லி விட்டு அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றான் .
அங்கு சென்று பார்த்தால் பிறந்த நாள் என்பதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. சாப்பாட்டில் கூட எந்த விஷேசமும் இல்லை. எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக அனைவரும் உணவுண்ண, வைரம் தட்டைத் தூக்கிக் கொண்டு ராஜாவிடம் வந்து நிற்க,
“இருங்கம்மா… மது சாப்பிடட்டும்…. இப்ப தான் வாமிட் செஞ்சா… அவ சாப்பிட்டப் பின்னாடி சாப்பிடுறேன்…” எனச் சொன்னான்.
அவரும், “என்னடா மதும்மா… வாந்தியா… இதெல்லாம் சரியாப் போயிடும்.… நான் சூடா இட்லி தரேன் உனக்கு எடுத்துட்டு வந்து…” என்றவர் சுட சுட அப்போது சுட்ட இட்லிகளை எடுத்து வந்து மருமகளுக்குப் பரிமாறினார்.
ராஜாவின் முகமோ யோசனையில் சுருங்கிப் போனது. சாப்பிட வந்து அமர்ந்த ராஜ தீபனோ எப்பவும் போல் பழைய உடையில் இருக்க,
“அப்புறம் இன்னிக்கு என்ன ப்ரோகிராம்டா உனக்கு..?” என ராஜா கேட்க
தீபனோ, “இன்னிக்கு ஷர்மா சார் கூட லன்ச் இருக்கு.. ஆடிட்டரை பார்க்கனும்டா… வேற எதுவும் இல்லை..” எனச் சொன்னான்.
ராஜாவுக்கு எதுவும் புரியவில்லை. இவன் பிறந்த நாளுக்கு என்ன திட்டம் எனக் கேட்டால் இவனோ அலுவல்களைப் பற்றியல்லவா பேசுகிறான்..? அனைவரின் முகமும் சாதாரணமாகவே இருந்தது, மதுவோ மசக்கையிலும் அவள் மன்னவனின் அன்பிலும் மயங்கிப் போன காரணத்தால் இது எல்லாம் அவள் கருத்தில் பதியவில்லை. ஏனோ வெறுங்கையோடு வாழ்த்தவும் ராஜாவுக்கு மனமில்லை. அதனால் வாழ்த்தவும் இல்லை.
ராஜாவுக்கு ஒரு ரெகார்டிங் இருப்பதால் சாப்பிட்ட உடனே அவன் கிளம்பிச் சென்றான். அங்கே அவன் பாடி முடித்தப் பின் தனது அபார்ட்மெண்டுக்குச் செல்ல சொல்ல, ரகுவும் அவ்வாறே செய்தான்.
ராஜாவின் முகத்தில் அத்தனை தீவிரமான யோசனை இருக்க,
“என்னடா…என் முகத்தையே பார்க்கிற ரகு,..?”
“இல்லண்ணா….அது..அ…. நாம வாங்கின ஹோட்டல ஃபுட் ஃபெஸ்ட் வைக்கிறதைப் பத்தி ஜி.எம் பேசனும்னு சொன்னார்.. அதான்… உங்க கிட்ட சொல்லிட்டு…” எனத் திணறினான். பின்னே எதாவது பேசினால் எரிமலையாய் அவன் வெடிப்பானே..
“அப்ப பேசாம.. என்ன ஈர வெங்காயத்துக்கு என்னைப் பார்க்கிற… போ..
பேசு…. அதை உன் பொறுப்பில தானே விட்டிருக்கேன்… சும்மா….
ஏன் டா நிக்கிற. வந்தோமா செய்தியைச் சொன்னோமான்னு இருக்க வேண்டாமா…? போய் ஜிஎம்ட பேசி…எ ன்னவாச்சும் செய்… என்னைத் தனியா விடு..” எனக் கத்த
காரணம் தெரியாவிட்டாலும் ராஜா ஏதோ மனக்கலக்கத்தில் உள்ளான் என்பது இத்தனை ஆண்டுகள் உடனிருந்த ரகுவுக்குப் புரிந்து போனது.
‘இன்னிக்கு என்ன.. அண்ணாவுக்கு இப்படி கோவம் வருது….’ என யோசித்தவனின் மூளையில் அன்றைய நாள் என்ன நாள் என்பதில் நினைவில் வர,
“ஒஹ்.. அதான் அண்ணா.. இப்படி இருக்கிறாரா… வழக்கமா இருக்கறது தான்.. சாயங்காலம் சரியாகிடுவார்… இப்பத் தொந்தரவு செய்ய வேண்டாம்..” என்று மனதில் நினைத்தவன் கிளம்பி வேலையைப் பார்க்கச் சென்றான்.
ராஜாவுக்கு மனம் நிலைக்கொள்ளாமல் தவிக்க, உடனே கீர்த்திக்குப் போன் செய்தான்.
“கீதும்மா…”
“என்ன அண்ணா..?”
“ஏன் டா.. இன்னிக்கு யாரும் தீபனுக்கு விஷ் செய்யல…?”
“ஓஹ்.. இன்னிக்கு அவன் பர்த்டேல…. மறந்துட்டேன் ..” எனச் சொல்ல
“ப்ச்… அவன் அண்ணன் தானே.. எப்படி மறப்ப நீ..?” என அதட்ட
“இல்லண்ணா.. அவனே மறந்து போயிருப்பான்….”
“என்ன…??”
“ஆமாண்ணா….நீ அவன் பிறந்த நாள் அன்னிக்கு தானே போன… அதனால் அவன் கொண்டாடுறதே இல்லை.. அப்படியே சில வருஷம் ஆனதும் நாங்களும் மறந்துட்டோம்… நான் கூட என் பர்த்டேவை பெருசா கொண்டாடுறது இல்லண்ணா… அம்மாவுக்கு என் பிறந்த நாளோ இல்லை… தீபன் பிறந்த நாளோ ஞாபகத்துல இருக்காதுண்ணா.. அவங்க எப்பவும் உன் நினைவா தான் இருப்பாங்க… தீபனும் அவன் செஞ்சத் தப்பால தான் நீங்க வீட்டை விட்டுப் போகக் காரணமாயிட்டோம்னு ரொம்ப மாறிட்டான்.. முன்ன மாதிரி சிரிப்பே கிடையாது.. பிஸீனஸ் பிஸீனஸ்னு அப்படியே சின்சியர் சிகாமணி ஆகிட்டான்…” எனப் புலம்ப
காலையில் எழுந்து விட்டாலும் வெறித்தப் பார்வையோடு படுக்கையில் அமர்ந்திருந்தான் ராஜ் நந்தன். அதைக் கண்ட மதுரவசனி ,
“என்னாச்சு.. உங்களுக்கு ஒருவாரமா நல்லா தானே இருந்தீங்க…. ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு..?” எனக் கவலையாகக் கேட்க
‘சே… என்னோட கவலையை இவளை பாதிக்க விடறேன்.. அவ சந்தோஷமா இருக்கனும்…’ என்று நினைத்தவன் நொடிப்பொழுதில் புன்னகையைப் பூசி,
“ஒன்னுமில்ல… சும்மா டயர்டா இருந்துச்சு… நீதான் என்னை நைட்ல தூங்க விட மாட்றியே…?” எனக் குறைபட
அவனை விடாமல் முறைத்தவள் அப்படியே பேசாமல் நிற்க
“என்ன முறைப்பு… அப்படி பார்க்கிற..?” என்றபோதும் அவள் அவனை அப்படி விடாமல் பார்க்க அவளை வேகமாக இழுத்தணைத்தவன் அவள் முகம் முழுவதும் முத்தமிட, அவள் அவனின் அணைப்பில் சாய்ந்த வண்ணமே,
“உங்களை முதல் தடவ பார்த்தப்போவே உங்க மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சவ நான்.. உங்க முகம் பார்த்து உங்க உணர்வுகளை எனக்குப் படிக்கத் தெரியும்.. சோ பாடகரா மட்டும் இருங்க.. நடிகரா இருக்காதிங்க… எப்பவும் இப்படி செஞ்சு என்னை திசைத் திருப்பாதிங்க..
சும்மா எல்லாம் எனக்குத் தெரியும்னு திமிர் காட்டக் கூடாது… எங்கிட்ட இறங்கிப் போகறதுல என்ன ஈகோ…?” எனக் காட்டமாகப் பேச
அவளின் கைப்பிடித்தவன், “ரொம்பத் திட்டுறே என்னை…. ஆனா நீ சொன்ன எதுவும் காரணமில்ல… நீ என்னை முதல் தடவையேப் புரிஞ்சிட்டு விட்டுக்கொடுக்கல.. என்னோட கண்ணு சொல்ற செய்தியைப் படிக்கத் தெரிஞ்சதால தான் நீ பாசாகி எனக்குப் பொண்டாட்டியா இருக்கடி….” என்று கொஞ்ச
அவள் அப்போதும் முறைக்க,
“ஊப்ஸ்… உனக்குத் தான் டி பிடிவாதம் திமிர் எல்லாம் என்னை விட ஜாஸ்தி… எல்லாத்திலயும் எனக்கு ஈக்குவள் தான் நீ… இப்ப என்ன… உங்கிட்டச் சொல்லி உன்னைக் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான்… இன்னிக்கு தீபன் பர்த்டே..” என்றான் எந்த வித உணர்ச்சியும் காட்டாத பாவத்தில்.
அவன் சொன்னது சில நொடிகள் அவளுக்குப் புரியவில்லை. புரிந்தப் போது கணவனின் மன நிலைப் புரிந்தது.அவனைப் பாவமாகப் பார்க்க
“கஷ்டமா தான் இருக்கு… இந்த நாளை மறக்க முடியல.. ஒருவேளை இனி வரப்போற வருஷங்கள் மாத்தலாம்.. ஆனா இன்னிக்கு இந்த வீட்டுல இருக்க நிமிஷம் எல்லாமே கண்முன்னாடி வந்து போகுது… ரொம்ப ரொம்ப…….. வலிக்குது மது……….. ஆனா இன்னொரு தடவ இவங்களைப் பிரியற சக்தி எனக்கில்ல மது…. ஆனாலும் என்னோடத் தன்மானத்தையும் இழந்திட்டு என்னால் எதுவும் செய்ய முடியாது… ஏன்னா எனக்கே எனக்குன்னு இருக்கறது அதுதான்…” என்றவனின் தோள் சாய்ந்தவளின் தலைமுடியை ஒதுக்கியவன்,
“நீயும் எனக்கே எனக்கு தான்… உஸ்ஸ்… நானும் நார்மலா இருக்க ட்ரை செய்றேன்… பட்…. இந்த ஒரு வாரம் நார்மலா இருந்தேன்… இந்த நாள் பழசைக் கிளறி…. ரத்தம் வராத குறைதான்.. வெளியே போய் எங்க என்னோட கஷ்டத்தை அதோட வலியை அவங்கக் கிட்ட காட்டிடுவேனோன்னு பயமா இருக்கு… அது மட்டுமில்லாம தீபனோட பிறந்த நாள் அவனுக்கு ஸ்பெஷல் தானே.. அது என்னால கெடக் கூடாது..” என்று சொன்னவன் கணவனின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் ஒற்றியவள் ,
“சூப்பருங்க நீங்க…. என் நந்துன்னா நந்துதான்… ஒன்னும் ஆகாது… நம்மோட எண்ணங்கள் வைஃபை போலவாம்.. நல்லா கனெக்ட் ஆகுமாம்.. யாரையும் காயப்படுத்தக் கூடாதுங்கற உங்க எண்ணம் கண்டிப்பா பலிக்கும்.. சோ நீங்க கவலைப்படாம போங்க.. யார்க்கிட்டையும் எதையும் காட்டிக்காதீங்க….” என்ற மனைவியை ஆதுரமாய்ப் பார்த்தவன்
“இதுக்குத் தான் பொண்டாட்டித் தேவைன்னு சொல்றது… மதும்மா…” என்றவன் அவளைக் கிறக்கத்துடன் அழைத்து அவள் இதழ் நோக்கிக் குனிய,
அவளோ வாயை மூடிக் கொண்டு குளியறைக்குள் புகுந்தவள் வாந்தி எடுத்தாள். சத்தம் கேட்டு பதறிப்போய் வந்தவனின் கரங்களில் வலு இல்லாமல் அவள் சரிய, அவளைத் தூக்கியவன் படுக்கையில் கிடத்தி தண்ணீர் தர
“என்னடா மதும்மா…ஓகேவா..?” எனக் கேட்க
அவன் மடியில் தலையை சாய்த்தவள், “ஒன்னுமில்ல.. உங்களை மாதிரியே உங்க புள்ளையும் படுத்துறான் என்னை… ஆமா பொண்ணு வேண்டாமா.. பையன் தான் வேணுமா? என வினவ
“என்ன குழந்தையா இருந்தா என்ன.... எனக்கு இரண்டுமே ஈக்குவள் தான் டா… ஏன்னா அது என்னோட குழந்தை இல்லையா..?.. எதுனாலும் ஒகே தான்.. நல்லபடியா என்னோடப் பொண்டாட்டியைப் படுத்தி எடுக்காமப் பொறந்தா சரிதான்..” என்று சொன்ன கணவனை நெருங்கியவள்,
“பார்டா…. எப்பவும் என் பிள்ளை தான் முக்கியம்னு சொல்லிட்டு இருப்பிங்க.. இப்ப என்ன என் மேல அக்கறை…?”
அவள் உதடுகளைத் தன் கையால் வருடியவன் , “உன்னை.. உன் மேல அக்கறை இல்லையா… எனக்கு…?… கோவிலுக்குப் போனா நமக்கு ஒரு அமைதி கிடைக்கும்.. கடவுள் இருக்காரு இல்லை அது இரண்டாம் பட்சம்… எந்த ஒரு விஷயமும் நாம செஞ்சாதானே நடக்குது.. அப்போ இவ்வளவு பெரிய உலகத்தை கடவுள்னு ஒருத்தர் ஆட்டி வைக்கிறார்னு தான் எனக்குத் தோணும்.. கடவுள் கிட்ட நம்மை ஒப்படைச்சப் பின்னாடி ஒரு பாதுகாப்பு கிடைக்கும் மது… அதனாலேயே நான் கோவிலுக்குப் போவேன்… எல்லாத்தையும் மறக்க…. அப்படி நான் எல்லாத்தையும் மறக்கறது உங்கிட்ட தான்.. நாட் ஜஸ்ட் செக்ஸ்… நீ என்னை அணைச்சிக்கிட்டாலே போதும்… அது தர நிம்மதி.. பார்வையால் நீ எனக்குத் தர சப்போர்ட்….ம்ம்ம்……..ம்…….து…” என்றவனை அவள் முடிக்க விடாமல் அவன் இதழ்களைத் தம் இதழ்களால் சிறை செய்தாள்.
முத்தங்கள் முடிவுற்ற பின்னே அவன் அவள் முகம் பார்க்கையில் அவள் கண்கள் கலங்கி இருக்க,
“ஏய்.. என்ன மதும்மா…. ஏன் அழற….. நான் தான் இன்னிக்கு ரொம்ப ஓவரா போயிட்டேன்..” எனச் சொல்ல
“நீங்க என்னைக்குத் தான் ஓவர் இல்லை…. எதுல குறைச்சலா இருந்திருக்கிங்க…. என்னால உங்க அளவுக்குக் காதலிக்க முடியல… இவ்வளவு காதலை என்னால தாங்கவே முடியல…. பயமா கூட இருக்கு… இந்த காதல் எப்பவும் கூடவே இருக்கனும்னு..” என உணர்ச்சி வசப்பட்டு பேச
அவள் கன்னமெங்கும் அழுந்த முத்தமிட்டு ,
“அது நான் உயிரோட இருக்கவரை இருக்கும்… சும்மா இப்படி லூசாட்டம் உளறக்கூடாது… நீ ரெஸ்ட் எடு நான் கீழப் போறேன்….” என்றவனின் கைப்பிடித்தவள்,
“ நானும் வரேன்…பசிக்குது…” என
“நான் சாப்பாட்டை எடுத்து வரேன் ..”
“ப்ச்… ரூமல இருந்தா ஒரு மாதிரி இருக்கும்…. நானும் வரேன்… இப்ப பரவாயில்ல..”
“உன்னை… இம்சை… படுத்துற நீ… பிடிவாதம் ஜாஸ்தி டி உனக்கு.. வா..” என அதட்டலாய் சொல்லி விட்டு அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்றான் .
அங்கு சென்று பார்த்தால் பிறந்த நாள் என்பதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. சாப்பாட்டில் கூட எந்த விஷேசமும் இல்லை. எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக அனைவரும் உணவுண்ண, வைரம் தட்டைத் தூக்கிக் கொண்டு ராஜாவிடம் வந்து நிற்க,
“இருங்கம்மா… மது சாப்பிடட்டும்…. இப்ப தான் வாமிட் செஞ்சா… அவ சாப்பிட்டப் பின்னாடி சாப்பிடுறேன்…” எனச் சொன்னான்.
அவரும், “என்னடா மதும்மா… வாந்தியா… இதெல்லாம் சரியாப் போயிடும்.… நான் சூடா இட்லி தரேன் உனக்கு எடுத்துட்டு வந்து…” என்றவர் சுட சுட அப்போது சுட்ட இட்லிகளை எடுத்து வந்து மருமகளுக்குப் பரிமாறினார்.
ராஜாவின் முகமோ யோசனையில் சுருங்கிப் போனது. சாப்பிட வந்து அமர்ந்த ராஜ தீபனோ எப்பவும் போல் பழைய உடையில் இருக்க,
“அப்புறம் இன்னிக்கு என்ன ப்ரோகிராம்டா உனக்கு..?” என ராஜா கேட்க
தீபனோ, “இன்னிக்கு ஷர்மா சார் கூட லன்ச் இருக்கு.. ஆடிட்டரை பார்க்கனும்டா… வேற எதுவும் இல்லை..” எனச் சொன்னான்.
ராஜாவுக்கு எதுவும் புரியவில்லை. இவன் பிறந்த நாளுக்கு என்ன திட்டம் எனக் கேட்டால் இவனோ அலுவல்களைப் பற்றியல்லவா பேசுகிறான்..? அனைவரின் முகமும் சாதாரணமாகவே இருந்தது, மதுவோ மசக்கையிலும் அவள் மன்னவனின் அன்பிலும் மயங்கிப் போன காரணத்தால் இது எல்லாம் அவள் கருத்தில் பதியவில்லை. ஏனோ வெறுங்கையோடு வாழ்த்தவும் ராஜாவுக்கு மனமில்லை. அதனால் வாழ்த்தவும் இல்லை.
ராஜாவுக்கு ஒரு ரெகார்டிங் இருப்பதால் சாப்பிட்ட உடனே அவன் கிளம்பிச் சென்றான். அங்கே அவன் பாடி முடித்தப் பின் தனது அபார்ட்மெண்டுக்குச் செல்ல சொல்ல, ரகுவும் அவ்வாறே செய்தான்.
ராஜாவின் முகத்தில் அத்தனை தீவிரமான யோசனை இருக்க,
“என்னடா…என் முகத்தையே பார்க்கிற ரகு,..?”
“இல்லண்ணா….அது..அ…. நாம வாங்கின ஹோட்டல ஃபுட் ஃபெஸ்ட் வைக்கிறதைப் பத்தி ஜி.எம் பேசனும்னு சொன்னார்.. அதான்… உங்க கிட்ட சொல்லிட்டு…” எனத் திணறினான். பின்னே எதாவது பேசினால் எரிமலையாய் அவன் வெடிப்பானே..
“அப்ப பேசாம.. என்ன ஈர வெங்காயத்துக்கு என்னைப் பார்க்கிற… போ..
பேசு…. அதை உன் பொறுப்பில தானே விட்டிருக்கேன்… சும்மா….
ஏன் டா நிக்கிற. வந்தோமா செய்தியைச் சொன்னோமான்னு இருக்க வேண்டாமா…? போய் ஜிஎம்ட பேசி…எ ன்னவாச்சும் செய்… என்னைத் தனியா விடு..” எனக் கத்த
காரணம் தெரியாவிட்டாலும் ராஜா ஏதோ மனக்கலக்கத்தில் உள்ளான் என்பது இத்தனை ஆண்டுகள் உடனிருந்த ரகுவுக்குப் புரிந்து போனது.
‘இன்னிக்கு என்ன.. அண்ணாவுக்கு இப்படி கோவம் வருது….’ என யோசித்தவனின் மூளையில் அன்றைய நாள் என்ன நாள் என்பதில் நினைவில் வர,
“ஒஹ்.. அதான் அண்ணா.. இப்படி இருக்கிறாரா… வழக்கமா இருக்கறது தான்.. சாயங்காலம் சரியாகிடுவார்… இப்பத் தொந்தரவு செய்ய வேண்டாம்..” என்று மனதில் நினைத்தவன் கிளம்பி வேலையைப் பார்க்கச் சென்றான்.
ராஜாவுக்கு மனம் நிலைக்கொள்ளாமல் தவிக்க, உடனே கீர்த்திக்குப் போன் செய்தான்.
“கீதும்மா…”
“என்ன அண்ணா..?”
“ஏன் டா.. இன்னிக்கு யாரும் தீபனுக்கு விஷ் செய்யல…?”
“ஓஹ்.. இன்னிக்கு அவன் பர்த்டேல…. மறந்துட்டேன் ..” எனச் சொல்ல
“ப்ச்… அவன் அண்ணன் தானே.. எப்படி மறப்ப நீ..?” என அதட்ட
“இல்லண்ணா.. அவனே மறந்து போயிருப்பான்….”
“என்ன…??”
“ஆமாண்ணா….நீ அவன் பிறந்த நாள் அன்னிக்கு தானே போன… அதனால் அவன் கொண்டாடுறதே இல்லை.. அப்படியே சில வருஷம் ஆனதும் நாங்களும் மறந்துட்டோம்… நான் கூட என் பர்த்டேவை பெருசா கொண்டாடுறது இல்லண்ணா… அம்மாவுக்கு என் பிறந்த நாளோ இல்லை… தீபன் பிறந்த நாளோ ஞாபகத்துல இருக்காதுண்ணா.. அவங்க எப்பவும் உன் நினைவா தான் இருப்பாங்க… தீபனும் அவன் செஞ்சத் தப்பால தான் நீங்க வீட்டை விட்டுப் போகக் காரணமாயிட்டோம்னு ரொம்ப மாறிட்டான்.. முன்ன மாதிரி சிரிப்பே கிடையாது.. பிஸீனஸ் பிஸீனஸ்னு அப்படியே சின்சியர் சிகாமணி ஆகிட்டான்…” எனப் புலம்ப